அமைதி , சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு

0 782

அமைதி, சமா­தானம், மற்றும் சக­வாழ்­வுக்­கான தேசிய மாநாடு மேல்­மா­காண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்­மிலின் அழைப்பின் பேரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் சர்­வ­தேச மதத் தலை­வர்­களின் பங்­க­ளிப்­புடன் எதிர்­வரும் 30ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கொழும்பு தாமரை தடாக (நெலும்­பொக்­குன) அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

மூன்று நிக்­கா­யாக்­க­ளி­னதும் மகா­நா­யக்க தேரர்கள், இந்து, கத்­தோ­லிக்க, இஸ்­லா­மிய சம­யங்­களின் ஆன்­மிகத் தலை­வர்­களின் பங்­கேற்­ற­லுடன் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் உட்­பட அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் வெளி­நாட்டுத் தூது­வர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
இந்த தேசிய மாநாட்டில் பிர­தமான அதி­தி­யாக சவூதி அரே­பி­யாவின் உலக முஸ்லிம் லீக் செய­லாளர் நாய­கமும் சர்­வ­தேச முஸ்லிம் அறி­ஞர்கள் சங்கத் தலை­வ­ரு­மான கலா­நிதி முஹம்மத் அப்துல் கரீம் அல்­இஸா கலந்­து­கொள்­கிறார்.

மாநாட்டில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொள்ளும் உலக முஸ்லிம் லீக் செய­லாளர் நாயகம் கலா­நிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல்­இஸா சவூதி அரே­பி­யாவின் முன்னாள் நீதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்­த­வ­ராவார். உல­க­ளா­விய மட்­டத்தில் சமய நல்­லி­ணக்கம், சக­வாழ்வு உறுதி செய்யும் பொருட்டு பாடு­பட்­டு­வரும் சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் பெரும் அனு­ப­வங்­களைக் கொண்ட அறி­ஞ­ராவார்.
மலே­சியா, சிங்­கப்பூர், தாய்­லாந்து ஆபி­ரிக்கா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளிலும் அவர் மேற்­கொண்ட சமய நல்­லி­ணக்க சக­வாழ்­வுக்­கான பணிக்­காக விரு­துகள் பல பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் சமா­தான சக­வாழ்­வுக்கு அவர் ஆற்­றி­ய­வை­க­ளுக்­காக உலகப் புகழ்­பெற்ற கலி­லியோ சர்­வ­தேச விரு­தையும் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

அண்­மைக்­கா­லத்தில் மேலோங்கிக் காணப்­படும் அடிப்­ப­டை­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக உறு­தி­யாக நின்று செயற்­ப­டு­ப­வ­ரு­மாவார்.

முக்­கி­ய­மாக பல்­லின மக்கள் வாழும் நாடு­களில் சக­வாழ்வை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக மிக முக்­கிய பணி­களை முன்­னெ­டுத்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மாநாட்டின் பிர­தான நோக்­கங்­க­ளாக இலங்­கையில் சமயம் மற்றும் இனங்­க­ளுக்­கி­டையே அமைதி, சமா­தானம், சக­வாழ்வு, பொறுமை மற்றும் நம்­பிக்­கையை மேம்­ப­டுத்தல், இலங்­கையில் வாழும் பல்­வேறு மதங்­களைச் சார்ந்­த­வர்கள் சமா­தா­ன­மா­கவும் நல்­லி­ணக்­க­மா­கவும் சக­வாழ்­வோடும் வாழக்­கூ­டிய செய்­தியை உல­க­ளா­விய மட்­டத்­துக்கு எடுத்துச் செல்லல், இலங்­கையில் அனைத்து மதங்­களை சார்ந்­த­வர்­களும் சகல வித­மான அடிப்­ப­டை­வா­தங்­க­ளையும் நிரா­க­ரிக்கும் செய்­தியை உலக மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றுதல், இலங்­கையின் சகல சமூ­கங்­களும் தாய் நாட்டின் கலா­சாரம், சம்­பி­ர­தாயம், பாரம்­ப­ரி­யங்­களை மதித்து அவற்­றினை பாது­காத்­துக்­கொண்டு வாழ்­வ­தற்கு ஊக்­க­ம­ளித்தல், இலங்­கையில் வாழும் அனைத்து மக்­களும் நல்­லி­ணக்­கத்­தோடு வாழும் அமைதி மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களது வாழ்வை இயல்பு நிலைக்குகொண்டு வருதல், பெரும்பான்மை சமூகத்தின் குறிப்பாக பௌத்த மக்களின் மத உணர்வுகளைத் தூண்டாமல் அவர்களது மத அனுஷ்டானங்ளையும் பாரம்பரியங்ளையும் மதித்து அன்னியோன்ய மாக நடந்து கொள்ளல் ஆகிய அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

ஏ.எஸ்.எம். ஜாவித்,
அஷ்ரப் ஏ சமத்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.