கஷோக்ஜியின் உடல் சவூதி துணை தூதுவரின் வீட்டில் எரிக்கப்பட்டது

அல் ஜெஸீராவின் புலனாய்வில் தெரிவிப்பு

0 677

படு­கொலை செய்­யப்­பட்ட சவூதி அரே­பிய ஊட­க­வி­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் உடல் இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூது­வரின் வாசஸ்­த­லத்­தி­லுள்ள பெரி­ய­தொரு அவணில் வைத்து எரிக்­கப்­பட்­டுள்­ளமை அல் ஜெஸீ­ராவின் புல­னாய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று இரவு அல் ஜெஸீ­ராவின் அரபு மொழி அலை­வ­ரி­சையில் ஒளி­ப­ரப்­பப்­பட்ட விவ­ரணப் பட­மொன்றில் சவூதி அரே­பிய கொலைக் குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளரின் கொலை தொடர்­பான விப­ரங்கள் காண்­பிக்­கப்­பட்­டன.

இஸ்­தான்­பூலில் அமைந்­துள்ள சவூதி அரே­பியத் துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளரின் உடல் பாகங்கள் துணைத் தூத­ர­கத்­தி­லி­ருந்து சில நூறு­மீற்­றர்கள் தொலை­வி­லுள்ள சவூதி அரே­பியத் துணைத் தூது­வரின் வாசஸ்­த­லத்­திற்கு கொண்டு செல்ல பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் பைகள் வீட்­டுக்கு வெளியே பொருத்­தப்­படும் பெரிய ரக அவணில் எரிந்த நிலையில் காணப்­ப­டு­வதை துருக்­கிய அதி­கா­ரிகள் அவ­தா­னித்­துள்­ளனர்.

குறித்த அவணைப் பொருத்­திய பணி­யா­ள­ரிடம் அல் ஜெஸீரா நேர்­கா­ணலை மேற்­கொண்­ட­போது சவூதி அரே­பியத் துணைத் தூத­ர­கத்­தி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற அறி­வு­றுத்தல் மற்றும் வெப்ப அளவு குறிப்­புக்­க­ளுக்கு அமை­வாக அது அமைக்­கப்­பட்­ட­தா­கவும், அது ஆழ­மா­கவும், தொடர்ச்­சி­யாக ஆயிரம் பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை பேணப்­படும் வகை­யிலும் அமைக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். குறித்த வெப்­ப­நிலை உலோ­கங்­களை உருக்­கு­வ­தற்குப் போது­மா­னது.

2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 02 ஆந் திகதி வொஷிங்டன் போஸ்ட் பத்தி எழுத்­தா­ள­ரான கஷோக்­கஜியை படு­கொலை செய்த பின்னர் கொலை­யா­ளிகள் குழு­வினால் சுவர்­களில் பூசப்­பட்­டி­ருந்த நிறப்­பூச்­சுக்­களை அகற்­றிய துருக்­கிய விசா­ர­ணை­யார்கள் சுவர்­களில் கஷோக்­ஜியின் இரத்தத் துளிகள் படிந்­தி­ருப்­பதை அவ­தா­னித்­துள்­ளனர்.

அல் ஜெஸீ­ரா­வினால் ஒளி­ப­ரப்­பப்­பட்ட விவ­ரணப் படம் பாது­காப்பு அதி­கா­ரிகள், அர­சி­யல்­வா­திகள் மற்றும் கஷோக்ஜியின் துருக்­கிய நண்­பர்கள் ஆகி­யோ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட நேர்­கா­ணல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரான மொஹமட் பின் சல்­மானை கடு­மை­யாக விமர்­சித்­து­வந்த கஷோக்ஜி தனது துருக்கி நாட்டுக் காத­லி­யான ஹாடிஸ் சென்­ஜிஸை திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்கு ஏது­வாக சில ஆவ­ணங்­களை பெறு­வ­தற்­காக இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்துக்கு 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 02 ஆந் திகதி சென்றார்.

தீவிர சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பாட்டின் கார­ண­மாக கஷோக்கி தமது துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து கொல்­லப்­பட்­ட­மையை சவூதி அரே­பியா ஏற்­றுக்­கொள்­வ­தற்கு முன்­ன­தாக கஷோக்ஜி துணைத் தூத­ர­கத்தை விட்டு உயி­ருடன் வெளி­யே­றி­ய­தாகத் தெரி­வித்து வந்­தது.

மொஹமட் பின் சல்­மானே இக் கொலைக்­கான உத்­த­ரவைப் பிறப்­பித்­த­தாக சீ.ஐ,ஏ தெரி­வித்­தி­ருந்­த­போ­திலும் சவூதி அரே­பியா அதனை மறுத்­துள்­ளது.

கஷோக்­கியின் படு­கொலை தொடர்பில் சவூதி அரே­பியா பதி­னொரு பேர் மீது குற்றம் சுமத்­தி­யுள்ள அதே­வேளை விசா­ர­ணை­களை சவூதி அரே­பி­யாவே மேற்­கொள்ளும் எனவும் சந்­தேக நபர்­களை துருக்­கிக்கு நாடு­க­டத்த முடி­யாது எனவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சவூதி அரே­பிய அரச அதிகாரிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான படுகொலை என இக் கொலை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமைதாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

இக் கொலை தொடர்பான சர்வதேச விசாரணை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூன் மாதம் உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.