காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பளிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 876

இம்­மாத ஆரம்­பத்தில் இந்­தியப் படை­யி­னரை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலை தொடர்ந்து நாடு முழு­வ­திலும் காஷ்மீர் மக்­க­ளுக்கு எதி­ராக மோற்­கொள்­ளப்­படும் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் கும்­பல்­களால் மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து அவர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளிக்­கு­மாறு இந்­திய உச்ச நீதி­மன்றம் அதி­கா­ரி­களைப் பணித்­துள்­ளது.

இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்ள 10 மாநி­லங்­க­ளுக்கும், மத்­திய அர­சுக்கும் உச்ச நீதி­மன்றம் அறி­வித்தல் வழங்­கி­யுள்­ள­தாக என்.டி.ரி.வி. தெரி­வித்­துள்­ளது.

புல்­வாமா தாக்­கு­த­லுக்கு இந்­திய அர­சாங்கம் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்­டி­யுள்ள நிலையில் இஸ்­லா­மாபாத் அதனை மறுத்­துள்­ளது.

அதனை நிரூ­பிக்க முடி­யு­மாயின் நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பாகிஸ்தான் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வி­லுள்ள பல்­வேறு கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மான காஷ்மீர் மாண­வர்கள் விலக்­கப்­பட்­டுள்­ள­தோடு, சில கல்­லூ­ரிகள் காஷ்மீர் மாண­வர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­மாட்­டார்கள் என அறி­வித்­துள்ள நிலையில், தாக்­கு­தலைத் தொடர்ந்து காஷ்­மீரைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என கடந்த வியா­ழக்­கி­ழமை அதி­கா­ரிகள் மறுத்­தி­ருந்­தனர்.

குற்றம் சுமத்­தப்­ப­டு­வது போன்று காஷ்மீர் மாண­வர்கள் எவ்­வித பாதிப்­பி­னையும் எதிர்­நோக்­க­வில்லை.

புல்­வாமா தாக்­குதல் தொடர்பில் நாட்டு மக்கள் கொதித்துப் போயுள்­ளனர்.

ஆனால் எந்த காஷ்மீர் மாண­வரும் தாக்­கு­தலின் பின்னர் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­க­வில்லை என இந்­தி­யாவின் மனி­த­வள அபி­வி­ருத்தி யூனியன் அமைச்சர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்­த­தாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

கடந்த வாரம் இந்­தி­யாவின் வட­கி­ழக்கு மாநி­ல­மான மேக்­ஹா­ல­யாவின் ஆளுநர் ததா­கத்தா ரோய் காஷ்மீர் பொருட்­களை முற்­றாகப் புறக்­க­ணிக்க வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார்.

அவ­ரது கூற்று பல்­வேறு அர­சியல் மட்­டங்­க­ளிலும் விமர்­ச­னங்­களைத் தோற்­று­வித்­த­தோடு, ரோய் தான்தோன்றித்தனமாக தனது அரசியலமைப்பு ரீதியான பதவியைத் துஷ்பிரயோகம் செய்வதாக அரசியல் வாதிகள் விமர்சித்திருந்தனர்.

இதனிடையே கும்ப லொன்று காஷ்மீர் மாணவர்களை தாக்கும் காணொலியொன்று சமூகவலைத் தளங் களில் வேகமாகப் பரவி வருகின்றது.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.