பிள்ளைகளை புரிந்து கொள்வோம்

0 36

ஆயிஷா ஸித்தீக்கா
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

இன்­றைய உலகில் பிள்­ளை­க­ளுக்­கி­டை­யே­யான உள­வியல் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதனால் தற்­கொலை, விரக்தி, மன அழுத்தம் போன்­றவை சமூக சிக்­கல்­க­ளாக உரு­வா­கி­யுள்­ள­மை­யையும் அவ­தா­னிக்­கலாம். இதனை சமூக நோக்­கிலும் உள­வியல் நோக்­கிலும் அவ­தா­னிப்­பது முக்­கி­ய­மாகும். சாதா­ர­ண­மாக பிள்­ளை­களின் பிரச்­சி­னைகள் அவர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அவர்­களை சுற்­றி­யுள்ள மற்­ற­வர்­க­ளுக்கும் சிதம்­பர சக்­க­ர­மாக தான் இருக்கும். அதனை சரி­யாக அணு­கு­வது பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­வர்­களின் கட்­டா­யக்­க­ட­மை­யாகும்.

பிள்­ளைகள் விட­யத்தில் அவர்­களின் பிரச்­சி­னைகள் ஆரம்­பத்தில் அவர்கள் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளா­கவே இனங்­கா­ணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக “படிப்­ப­தில்லை”, “ஒழுக்­க­மாக நடப்­ப­தில்லை”,”செல்­போனை அதிகம் நாடு­கிறார்” போன்ற பல­வ­கை­யான விட­யங்கள் குற்­றச்­சாட்­டு­க­ளாக முன்­வைக்­கப்­பட்­டுக்­கொண்­டே­யி­ருக்­கி­றது. ஆனால் அவை உள­வியல் ரீதி­யாக ஆரா­யப்­பட வேண்­டிய கட்­டாயம் உள்­ளதை மறுப்­ப­தற்­கில்லை. பல பொழு­து­களில் பிள்­ளைகள் மீதான குற்­றச்­சாட்­டு­களில் ஒளிந்­தி­ருக்கும் உள­வியல் குறை­பா­டுகள் அவ­தா­னிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

“ஐந்து விரலும் ஒரு அமைப்பில் இல்லை” என்­பது போல் எல்­லாப்­பிள்­ளையும் ஒன்று போல் இல்லை என்­பதை கட்­டாயம் பெற்­றோர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். பிள்­ளை­களை பொறுத்த வரையில் அவர்கள் எதை உள்­வாங்­கு­கி­றார்­களோ அதையே விம்­ப­மாக்கி வெளி­யி­டு­கி­றார்கள். ஆகவே படங்­களை சரி­யாக உள்­ளிடும் வேலை பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு உண்டு. இந்த உள்­ளீட்டை சரி­செய்யும் உத்தியில் ஒன்று தான் அவர்­களை புரிந்து கொள்ளும் கலை. சரி­யான புரிதல் உள­வியல் ரீதி­யாக அணுக வேண்­டிய ஒன்­றாகும்.

பிள்ளை மன­த­ளவில் பிரச்­சி­னையில் இருக்கும் போது நடத்­தையில் வெளிக்­காட்­டுவர். அவ்­வாறு நடக்கும் போது நாம் அதை அணுகி புரிந்து கொண்டு மேற்­கொண்டு செயற்­பட வேண்டும். பிள்ளை நன்­றாக படிக்­கிறார் ஆனால் வாசிப்­பதில் சிர­மப்­ப­டு­கிறார் என்றால் அது “டிஸ்­லக்­சியா”வாக கூட இருக்­கலாம். அதை அவ­தா­னித்து பெரிய படங்­களை கொண்ட குறு­கிய சொற்­களை கொடுத்து பயிற்சி கொடுத்தல் போன்ற செயல்­களில் ஈடு­பட வேண்டும். இதை விடுத்து பிள்­ளையை வைதல் ஆகா­து.

இவ்­வா­றாக நடத்­தை­களை சரி­யாக அவ­தா­னித்து அணு­கு­வது முக்­கி­ய­மாகும்.
அதிக துடிப்­பாக இருக்கும் பிள்­ளைகள் சுட்­டித்­த­னத்தில் மிஞ்­சி­ய­வ­ராக இருப்பர். இதனால் பலரும் சஞ்­ச­லப்­ப­டுவர். அவர்கள் செல்லும் இட­மெல்லாம் அமர்க்­களம் செய்­வார்கள். இது “ADHD” ஆக கூட இருக்­கலாம்.

கசப்­பான அனு­ப­வங்கள் பதிந்த மனம் (Trauma) அதை தூண்டும் விட­யங்­களை காணும் போது வித்­தி­யா­ச­மாக நடப்­பார்கள். இவை­களை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் உட­லியல் ரீதி­யான கோளா­றுகள் அல்­லது பின்­ன­டை­வு­களும் மனதை பாதிக்கும். ஊட்­டச்­சத்­துகள் குறை­களும் பிள்­ளைகள் நடத்­தையை பாதிக்கும். இதற்கு குழந்­தையை குறை சொல்ல முடி­யாது. உதா­ர­ண­மாக இரும்புச் சத்து குறை­வதால் சோம்பல் நிலை உரு­வாகும். இவ்­வா­றான நிலை­களில் பெற்­றோர்­களின் புரிந்­து­ணர்வு கட்­டா­ய­மாகும்.

இவ்­வா­றாக சரி­யான புரி­தல்கள் சரி­யான அணு­கு­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்­கி­றது.
பிள்ளை வாழ்க்கை வள­மாக இவை அனைத்தும் முக்­கிய சங்­கி­லி­க­ளாகும்.

பொது­வாக பிள்­ளைகள் நாம் எதை வேண்டாம் என்று கூறு­வோமா அதை தான் அதிகம் நாடு­வார்கள். எதற்கு தடை இருக்­கி­றதோ அதை உடைப்­பதே அவர்­க­ளுக்கு வேலை­யாக இருக்கும். இதற்கு “Reverse psychology” என்­பார்கள். அதா­வது தலைகீழ் உள­வியல். உதா­ர­ண­மாக பிள்ளை எட்டு மணிக்கு செல்ல வேண்டும் ஆனால் தயா­ராக தாம­த­மாவார் என்றால் உன்னால் முடியும் என்றால் எட்டு மணிக்கு தயார் ஆகு பார்க்கலாம். அது உன்னால் முடியாது நீ தாமதமாவாய் என்றால், அப்பிள்ளை அதை சவாலாக எடுத்து செய்வார். இதை ஒரு நுட்பமாகவே பயன்படுத்தலாம்.

ஆகவே புரிந்து கொள்ளல் எனும் கலை பிள்ளைகளுக்கு அதிகமாக தேவைப்படும் அத்தியாவசிய விடயமாகும். அதுவும் உளவியல் ரீதியான புரிதல் பிள்ளைகளின் அடைவை மேம்படுத்தும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.