அக்குறணையில் தொடரும் வெள்ளம்: பொறியியலாளர்கள் சங்கம் கூறுவது என்ன?
எல்.எம்.ஸுபைர்,
C.Eng.,Ph.D (Yale)
பிங்கா ஓயாவின் துணை ஆறுகளில் இருந்து அக்குறணையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து அக்குறணை பொறியியலாளர்கள் சங்கம் (EAA) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. 1990களின் பிற்பகுதியில் இருந்து ஆற்றின் மேற்பகுதிகளில் கட்டுமானங்களின் அதிகரிப்பு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை கொட்டுதல், ஆற்றின் சமவெளிப்பகுதிகளின் இழப்பு மற்றும் பிங்கா ஓயாவின் வெள்ளநீர் ஊடுருவாத மேற்பரப்புக்கள் போன்றன வெள்ளம் ஏற்பட முக்கிய காரணங்களாகுகின்றன. இங்கு, அக்குறணை பொறியியலாளர்கள் சங்கம் சமீபத்திய வெள்ளக்குறைப்பு நடவடிக்கைகள், அதன் குறைபாடுகள், தற்போதைய சிறந்த வெள்ளக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆற்றின் மறுசீரமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதற்கான கொள்கைகள் என்பனவற்றை முன்மொழிகின்றது.
திடீர் வெள்ளப்பெருக்கின் பிரதான காரணங்கள்:
- நதி மற்றும் அதன் ஓரங்களில் எழுப்பப்படும் தொடர்ச்சியான கட்டுமானம்.
- வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்படும் இடங்களை நிரப்புதல்.
- மண் மற்றும் தாவரங்களுக்குப் பயன்படும் நிலப்பரப்பு நீர் நிலத்தில் ஊடுருவுவதற்குப் பயன்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி வேகமாகக் குறைக்கப்படுதல்.
- திடக்கழிவுகள் மற்றும் கட்டுமான குப்பைகளை ஆற்றில் கொட்டுதல்.
பொல்கொல்ல நீர்தேக்கத்தின் பங்கு
பொல்கொல்ல தடுப்பணையின் தாக்கத்தினால் அக்குறணையில் வெள்ளம் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றை ஆதரிக்கும் எந்த அறிவியல் ஆதாரத்தையும் இதுவரை யாரும் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, ஆதரவாளர்கள் அனுபவக் கதைகளைக் கூறி, அவற்றை காரணங்களாக அல்லாமல் சம்பவங்களாக விளக்குகிறார்கள்.
பொல்கொல்ல ஏன் குறைந்தளவு பங்கை மாத்திரம் வகிக்கின்றது என்பதற்கான வாதங்கள்:
- பொல்கொல்லயின் மேல் தடுப்பணை வாயில்கள் அக்குறணையின் வீதி மட்டத்திலிருந்து சுமார் 10 மீற்றருக்கு கீழே உள்ளன. எனவே, தடுப்பணை வாயில்களை மூடுவதனால், வெள்ளநீர் சாலை மட்டத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்கின்றது.
பொல்கொல்ல தடுப்பணை மீண்டும் நிரப்பப்பட்டால் கட்டுகஸ்தோட்டை, அம்பதென்ன பிரதேசங்களும் அக்குறணை போன்ற தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். - அனைத்து திடீர் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளிலும் அக்குறணை ஆற்றில் உள்ள நீர் கடுகஸ்தோட்டை நோக்கி வேகமாகப் பாய்கிறது. 1980 களில் தடுப்பணை அமைக்கப்பட்ட பின்னர், முதல் 10 ஆண்டுகளில் வெள்ளம் எதுவும் பதிவாகவில்லை. மற்றும், 1990 களில் இருந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் ஒரேயொரு வெள்ளப்பெருக்குச் சம்பவமே பதிவாகியுள்ளது.
- நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிந்துள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். வண்டல் மண் குவிவதால் பாதிப்புகள் ஏற்படும் இருப்பினும் ஆற்றுப்படுகையில் கட்டுமான குப்பைகள், சேறு மற்றும் வீட்டுக் கழிவுகள் குவிந்து கிடப்பது குறித்து கவனம் செலுத்தப்படவோ, அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கவில்லை.
- மேலும், மண்ணை வெட்டிக் குவி க்கும் போது அது சேறாக மாறி அடித்துச்செல்லப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம்
காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் ஊகிக்கின்றார்கள். மழைப்பொழிவு பற்றிய பதிவுகளின் அடிப்படையில் அதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கவுமில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளம் ஏன் குறைக்கப்படவில்லை?
துரதிர்ஷ்டவசமாக தவறான தகவல்கள், தவறான வழிகாட்டுதல்கள், அறிவியல், பொறியியல் புறக்கணிப்பு மற்றும் பொது அறிவு இல்லாமை போன்றவற்றினால் பயனுள்ள வெள்ளக் குறைப்புக் கொள்கைகள் பின்வாங்கப்பட்டுள்ளன. தற்போது,
- அதிகாரிகளினால் பின்பற்றப்படும் விதிமுறைகளில் குறைபாடுகள் உள்ளதுடன் அவர்களின் கண்காணிப்பு, விதிமுறைகளை அமுல்படுத்துவது போன்ற விடயங்களும் மோசமாக உள்ளன.
- பொதுமக்களால் ஆறு மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு நிர்வாகங்களில் பங்கு பெற முடியவில்லை.
- சம்பந்தப்பட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிறரின் பங்கேற்பு, தெளிவான தகவல் பகிர்வுகள் குறைவாக உள்ளன.
- கடுமையான பொறியியல் மற்றும் அறிவியல் பகுப்பாய்வுகள், தீர்வுகள் மற்றும் கொள்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
சமீபத்தில் முன்மொழியப்பட்ட வெள்ளக் குறைப்பு நடவடிக்கைகள்:
2022 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்திற்குப் பிறகு, (நாளாந்த மழைவீழ்ச்சிப் பதிவு 120 மி.மீ) மாவட்ட செயலாளரின் தலைமையில் அரச அதிகாரிகள் அறிவித்த வெள்ளக் குறைப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
ஆற்றின் அடித்தளத்தில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுதல்.
ஆற்றின் மீது உள்ள சில கட்டுமானங்களை அகற்றுவது.
a.9 கி.மீ. தொலைவிலும் அக்குறணை அடையாளப் பலகைக்கு அருகிலும் உள்ள குறுகிய (மாங்கோஸ் வாட்) பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.
b.10 கி.மீ அருகேயுள்ள நீரெல்ல செல்லும் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.
அக்குறணையில் வெள்ளம் ஏற்படும் வேளையில் பொல்கொல்ல தடுப்பணையின் தடுப்பு வாயில்களைத் திறக்கும் வகையில் எச்சரிக்கை அமைப்பு ஒன்றை அமைத்தல். இவற்றில்,2023 டிசம்பர் மாதத்திற்குள் செயற்படுத்தப்பட்டவை:
1.2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த சில பகுதிகளில் ஆற்றில் வண்டல் மண் அகற்றப்பட்டது.
2.உடைந்திருந்த மாங்கோஸ் வாட் பாலத்தின் மைய பகுதியும் அகற்றப்பட்டது.
முன்மொழியப்பட்ட வெள்ளக் குறைப்பு நடவடிக்கைகள் சிலவற்றை செயற்படுத்திய பிறகு,
எவ்வாறாயினும், இத்தகைய வெள்ளக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 2023 இல் நாளாந்த மழைப்பதிவு 70மி.மீ ஆக இருந்தப்போதிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இது டிசம்பர் 2022 இல் பதிவான 120 மி.மீ நாளாந்த மழைப்பொழிவை விட குறைவாகும்.
மேலும், ஆறு மற்றும் அதன் கரைகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்டுமானங்கள் மற்றும் மண் குவிப்புகள் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களை அதிகரித்துள்ளன.
ஆற்றில் வண்டல் மண் அகழ்வது அடுத்த வெள்ளம் வரும் வரை சில மாதங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும். பெரும்பாலும் கட்டுப்பாடின்றி உருவாக்கப்பட்ட கூடுதலான கட்டுமானங்கள் மண்ணில் நீர் உறிஞ்சுதலை குறைத்து, அதிக வேகத்தில் நீர் ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இதனால் வெள்ள அபாயம் மேலும் மோசமாக்குகின்றது.

பொறியியலாளர்கள் சங்கத்தின் பரிந்துரைகள்
சான்றுகளை மீளாய்வு செய்த பின்னர் அக்குறணை பொறியியலாளர்கள் சங்கம், பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறது:
நிர்வாகச் சிக்கல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்தல்
பிங்கா ஓயா மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சிறந்த தகவலறிந்த நிர்வாகம் காணப்படுவது முக்கிய தேவையாகும்.
ஆறு மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியை பற்றிய விதிகள் மற்றும் ஒழுங்குகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அரச அதிகாரிகள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிலப் பயன்பாட்டு திட்டமிடல் பணியாளர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொது ஈடுபாடு
ஆற்றின் நிர்வாகம், அதன் ஓரங்கள் மற்றும் அதன் நீரூற்றுப் பரப்பு பற்றிய தகவல்கள் பரவலாக கிடைக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், உதாரணமாக (பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்).
மக்கள், மாசுபாடு அத்துடன் சூழலியல் பராமரிப்பையும் கருத்தில் கொண்ட முழுமையான நதி மேலாண்மை
கழுவுதல், குளித்தல் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஆற்றின் பொதுவான அணுகலை மீட்டமைத்து முன்னுரிமை அளித்தல்.
மாசு மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுத்தல் மற்றும் குறைத்தல்.
சூழலியல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உயிரினங்களையும் தாவரங்களையும் பாதுகாத்தல்.
சிறந்த தொழில்நுட்பத் திட்டங்கள் மற்றும் வெளிப்படையான அமுல்படுத்தல்கள்
சிறந்த பொறியியல் மற்றும் அறிவியல் பகுப்பாய்வை வழிநடத்த வேண்டும்.
இப்பகுதியில் இருக்கும் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிர்வாகிகள் இதனைப்பற்றி தமது வாழ்க்கையில் தொடர்ச்சியான அனுபவங்களை கொண்டமையால் இதில் இவர்கள் பங்கேற்க வேண்டும். அப்போது தான் இதனை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியம்.
10. திடமான நீண்டகால பிராந்திய திட்டமிடல் முன்னுரிமை வேண்டும்.
பின் குறிப்பு
ஆறு மற்றும் அதன் துணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் சூழல் மோசமடைந்து வரும் நிலையில், சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேலதிக சேதத்தைத் தடுப்பது அவசியம்.
முன்னதாக செய்யப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை கண்டறிந்து, அதிகாரிகளிடமிருந்து கிடைத்த சட்டவிரோத அனுமதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் செயல்கள் ஆற்றின் நன்மைக்கு எதிராக இருப்பதைத் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பொதுச் சலுகைக்காக குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் ஆற்றை அழிக்கும் செயற்பாடுகள் புத்திசாலியான மேலாண்மையால் பாதிக்கப்படாது.
ஊழலை குறைப்பது போன்ற மேம்படுத்தப்பட்ட நிர்வாகம் இன்றி, எந்த தொழிநுட்பத் தீர்வையும் திறம்பட செயற்படுத்த முடியாது.- Vidivelli