கொவிட்-19 கட்டாய ஜனாஸா எரிப்பு ஐந்தாண்டுகள் பூர்த்தி

நினைவு தின நிகழ்ச்சி

0 29

அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி
ஊடகப் பிரிவு
நினைவு கூரல் நிகழ்ச்சி
ஏற்பாட்டுக் குழு

எவ்­வித விஞ்­ஞான அடிப்­ப­டை­க­ளு­மின்றி அநி­யா­ய­மாக கொவிட் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்டு ஐந்­தாண்­டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்­ட­பத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்­சிகள் நடை­பெற்­றன. இதனை இலங்கை இஸ்­லா­மிய மற்றும் சமூக அமைப்­புக்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா மலே கூட்­ட­மைப்பு, இலங்கை மேமன் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்­னணி, ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாம், சலாமா அமைப்பு உள்­ளிட்ட 15 முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் இணைந்து இந்த நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தது.

மேற்­படி அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு குழுவை அமைத்து, அக்­கு­ழுவின் தலை­வ­ராக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் பஹ்ஜி அவர்­களை நிய­மித்­தது. அத்­துடன் இக்­குழு நினைவு தின நிகழ்வின் தலை­வ­ராக தேசிய சூரா சபையின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் அவர்­களை நிய­மித்­தது.

இந்­நி­கழ்ச்­சியில் உல­மாக்கள், மதத் தலை­வர்கள், எதிர்க்­கட்சித் தலைவர், பிரதி சபா­நா­யகர், கட்சித் தலை­வர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இஸ்­லா­மிய அமைப்­புக்­களின் தலை­வர்கள், நலன் விரும்­பிகள், நாடு பூரா­வி­லு­முள்ள பல சமூ­கங்­க­ளையும் சார்ந்த ஆண் பெண் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் என பலரும் கலந்து கொண்­டனர்.

நிகழ்வின் நோக்­கங்கள்:
வர­லாற்றை நினை­வு­ப­டுத்தல் – முஸ்லிம் சமூ­கத்தின் மீது இழைக்­கப்­பட்ட இந்த அநி­யா­யத்தை மறக்­கவோ, அழிக்­கவோ முடி­யா­த­வாறு நிலை­நாட்டல்.
நினைவு கூரல்:
கட்­டாய தக­னத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை நினைவு கூரல்.
துஆ மற்றும் பிரார்த்­தனை:
கட்­டாய தகனம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கும் மற்றும் ஒட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும், அவர்­களின் குடும்­பங்­க­ளுக்­கா­கவும் சிறப்பு துஆ பிரார்த்­தனை புரிதல்.
தடுப்பு மற்றும் ஆத­ரவு – இந்த நாட்டில் எந்­த­வொரு தனி­ந­ப­ருக்கும் இது­போன்ற சம்­ப­வங்கள் மீண்டும் நிக­ழாமல் தடுக்க நட­வ­டிக்கை எடுக்க அதி­கா­ரி­க­ளுக்கு ஒத்­து­ழைத்தல்.

நினைவு தின நிகழ்­வுகள்:
தலைமை மற்றும் வர­வேற்­பு­ரையை நிகழ்வின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் நிகழ்த்­தி­னார். அதில் அவர்: அடக்­கலாம், தகனம் செய்­யலாம் என்று இரு முறைகள் இருந்தும் எமக்கு அந்த உரிமை கிடைக்­க­வில்லை. இறு­தியில் சுமார் 500 கி.மீ. தூரத்தில் கொண்டு போய் அடக்கம் செய்ய அனு­ம­தித்­தனர். ஆனால் எமது கலா­சா­ரத்தில் (பலர்) தொடர்ந்து 40 நாட்கள் அடக்­கஸ்­தலம் சென்று பிரார்த்­தனை புரிவர். மற்றும் சிலர் வாராந்தம் சென்று தரி­சித்து பிரார்த்­தனை புரிவர். ஆனால் இப்­போது அப்­படி செய்­ய­லாமா என கேள்வி எழுப்­பினார்.

அடுத்து “நெருப்பில் குளித்த அடை­யாளம்” கட்­டாயத் தக­னத்தில் எரிக்­கப்­பட்ட முஸ்லிம் ஜனா­ஸாக்­களின் வலியை நினை­வு­கூரும் பாடல் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. இதனை எழுதி இசை­ய­மைத்து இருந்தார் புத்­தளம் எஸ்.ஏ.சீ.பீ. மரிக்கார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித் உரை­யாற்­று­கையில், அநி­யா­யங்­களை நாம் மறந்து விடக் கூடாது. இது சூரா புறூஜில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கோட்­பாடு. பொஸ்­னி­யாவில் போன்று இங்கு தகனம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அவர்­களின் பெயர்கள் பொறிக்­கப்­பட்ட ஒரு நினைவு தூபி அல்­லது இடம் அமைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

தொடர்ந்தும் கவிஞர் றவூப் ஹஸீரின் “ஜனாஸா எரிப்பு” என்ற கவிதை இடம்பெற்றது. அடுத்து களனி பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் முஸ்­லிம்­களின் இறுதிக் கிரியை பற்­றிய பல விட­யங்­களை நான் இப்­போது தான் அறிந்து கொண்டேன். உண்­மையில் ஒரு அன்­புக்­கு­ரி­ய­வ­ருக்­கான இறுதி மரி­யாதை செய்­யப்­ப­டாமல் இருப்­பது அல்­லது தவ­றிப்­போ­வது மிகக் கடி­ன­மான விட­ய­மாகும் எனக் குறிப்­பிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர் ஏ.எம். உமரின் சிங்­கள மொழி­யி­லான “விருதுப்” பாடல் இடம் பெற்­றது. அதனைத் தொடர்ந்து ஜனாஸா எரிப்பு தொடர்­பான வர­லா­றுகள் அடங்­கிய “தீயில் எரிந்த அந்த 333 நாட்­கள்”­என்ற ஆவ­ணப்­படம் திரை­யி­டப்­பட்­டது.

தொடர்ந்தும் முன்னாள் பா.உ. சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் உரை­யாற்­று­கையில், இலங்கை வர­லாற்றில் பல கறுப்புத் தினங்கள் இருக்­கின்­றன. 1983 ஆம் ஆண்டை நாம் ஞாபகம் செய்­வது போலவே இதுவும் மறக்க முடி­யாத ஒரு கறுப்பு நாள் தான். இன்று நான் உயி­ரோடு இருப்­பது அன்று 1983 ல் எமது பக்­கத்து வீட்டு முஸ்லிம் கொழும்பில் அடைக்­கலம் தந்­த­தனால் தான். ஒரு பௌத்த தேரர் பாது­காத்­த­தனால் தான் எமது வீட்டையும் எரிக்கவில்லை. எப்­பொ­ழுதும் ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்­கப்­படும் போது அதற்­காக அடுத்த சமூகங்களும் குரல் கொடுக்க வேண்டும். தனக்கு தனக்கு என்றால் தான் சுழகு படக்கு படக்கு என்குமாம் என்று தமி­ழிலே சொல்­லப்­ப­டு­வது போல. மற்­ற­வர்­க­ளி­னதும் நன்­மையைக் கவ­னிக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

போதகர் சார்லஸ் தோமஸ்­ உரையாற்றுகையில், நாம் எப்­போதும் எமது மதம் மற்றும் கலா­சார உரி­மை­களைப் பாது­காக்கும் நல்­ல­தொரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மட்­டு­மல்­லாமல் பேரா­சி­ரியர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் குறிப்­பிட்டது போல அவ­ருக்கு இப்­போது தான் பல விட­யங்கள் அறியவந்துள்ளது. அவரின் அந்த வார்த்­தையின் மூலம் ஒரு செய்­தியைச் சொல்­கிறார். அதா­வது பல்­லின மக்கள் வாழும் இந்­நாட்டில் நாம் எல்­லோரும் எமது மார்க்க விட­யங்­களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பொறி­மு­றையை உரு­வாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். அடுத்து ஆங்­கில மொழி மூல கவி­தை­யொன்றை சப்னம் முஸம்மில் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­னரின் அனு­ப­வங்­களும், மனக் கவ­லை­களும் அடங்­கிய ஒரு காணொளி ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. அடுத்து துஆப் பிரார்த்தனையை அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தினார்.
இறுதியாக அஷ்-ஷைக் எம்.எச்.எம்.புர்ஹான் பஹ்ஜியின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் முடிவுற்றன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.