இஸ்ரேலியர்களின் வருகை இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் எச்சரிக்கை

0 45

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டிய இளை­ஞனை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­ய­த­மையை படித்­த­வர்கள் யாரும் அனு­ம­திக்க மாட்­டார்கள். பொலிஸார் செய்த கேவ­ல­மான செய­லா­கவே இதை நான் பார்க்­கின்றேன். அதே­நேரம் இஸ்­ரே­லி­யர்­களின் இலங்­கைக்­கான வரு­கையை அர­சாங்கம் சாதா­ர­ண­மாக நினைக்கக் கூடாது. அது எதிர்­கா­லத்தில் நாட்­டுக்கு பாரிய பாதிப்­பாக அமையும் அபாயம் இருக்­கி­றது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற குற்­றச்­செ­யல்கள் மூலம் ஈட்­டப்­பட்ட விட­யங்கள் தொடர்­பான சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டி­ய­மைக்­காக ருஷ்தி என்ற ஒரு இளைஞர் கைது செய்­யப்­பட்டு இருந்தார். அவர் கைது செய்­யப்­பட்­டது தவ­றல்ல. அவரை உட­ன­டி­யாக நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்து நீதி­மன்ற உத்­த­ரவின் பெயரில் செயல்­பட்­டி­ருந்தால் இந்த விடயம் குறித்து இந்த அளவு பேசப்­பட்­டி­ருக்­காது.

அதிலும் அவரை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பதை படித்­த­வர்கள் யாரும் அனு­ம­திக்க மாட்­டார்கள். பொலிஸார் செய்த ஒரு கேவ­ல­மான செய­லா­கவே இதை நான் பார்க்­கின்றேன். இது அர­சாங்­கத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை எதிர்­கா­லத்தில் உணர்ந்து கொள்­ள­வீர்கள்.
எனவே பொலிஸார் யாரை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வ­தற்கு இதனை செய்­தார்­களோ என தெரி­ய­வில்லை. இவ்­வா­றான செயற்­பா­டு­களை நிறுத்த வேண்டும்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்கு எதி­ராக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அதி­க­மா­கவே பேசி இருக்­கிறார். இந்த சட்­டத்தின் ஊடாக அநி­யா­ய­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் நானும் ஒருவன். இலங்கை வர­லாற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டிருப்­ப­தாக இருந்தால் அது நானா­கவே இருக்கும். ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் எந்த வகை­யிலும் சம்­பந்தம் இல்லை என நான் இன்று நீதி­மன்­றத்தால் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றேன். இதே­போன்று அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, அஹ்னாப் ஜெசீம் போன்ற பல சகோ­த­ரர்கள் இந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள். யாரோ செய்த ஈஸ்டர் தாக்­கு­தலை மறைப்­ப­தற்கு இந்த சட்­டத்தை பயன்­ப­டுத்­தி­னார்கள். இன்றும் கூட இளை­ஞர்கள், உல­மாக்கள் என பலர் இந்த சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை­களில் இருந்து வரு­கி­றார்கள். எனவே அநி­யா­ய­மாக சிறை­களில் இருப்­ப­வர்­களை விடு­தலை செய்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அதே­போன்று இஸ்­ரே­லி­யர்­களின் இலங்­கைக்­கான வரு­கையை அர­சாங்கம் சாதா­ர­ண­மாக நினைக்கக் கூடாது. இவ்­வாறு தான் காஸா­வுக்கும் பலஸ்­தீ­னத்­துக்கும் இஸ்­ரே­லி­யர்கள் சென்று, அவர்­க­ளையே அழித்து வரு­கின்­றார்கள். இஸ்­ரே­லி­யர்­களின், நெதன்­யா­குவின், அமெ­ரிக்­காவின் அடா­வ­டித்­த­னத்தை பார்ப்­ப­தற்கு இன்று யாரும் இல்லை. ஐக்­கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்­கொண்­டி­ருக்­கி­றது.

அவ்­வா­றா­ன­து­தொரு நிலை­மை யில் இஸ்­ரே­லி­யர்கள் இலங்­கைக்கு வந்து வெலி­க­மையில்,கொழும்பில் என மதஸ்­தா­னங்­களை அமைத்தும் சொத்­துக்­களை வாங்­கியும் இலங்­கையில் தமிழ், சிங்­கள முஸ்லிம் மக்கள் மத்­தியில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி பாரிய அநி­யா­யங்­களை செய்து, இந்த நாட்டை குட்டிச்சு வராக்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் அரசாங்கம் இஸ்ரேலியர்களின் வருகையை சாதாரணமாக கருத வேண்டாம். அவர்களைப் பாதுகாப்பதற்காக இங்குள்ள மக்களை தண்டிக்க வேண்டாம். அவர்களைப் பாதுகாப்பது என்பது எமது நாட்டின் எதிர்காலத்தை அழித்து விடுவதற் கான நடவடிக்கையாகும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.