இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் – சில ஆலோசனைகள்

0 35

ஆஷிகுல் ஹக்

என்.பி.பி அரசு, ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்­களை அண்­மிக்­கி­றது. அதற்­கி­டையில் இந்த ஆட்­சி­யோடு தொடர்­பான பல்­வேறு சிக்­கல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் நாம் கண்டு வரு­கிறோம். அரசு அண்­மித்து வரும் தேர்­தலில் தோல்­வி­ய­டையப் போகி­றது. என்.பி.பி தான் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை போன்ற கருத்­துக்கள் படிப்­ப­டி­யாக எழும்பத் தொடங்கி உள்­ளன. அத்­தோடு இந்த அரசு சிறு­பான்­மைக்குச் சாத­க­மான அர­சு­மல்ல. அந்த வகையில் அது பழைய அர­சுகள் போன்­ற­துதான் என்ற குரல்­களும் வலுப்­பட்டு எழுந்து வரு­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் இந் நிலை­மை­களை எவ்­வாறு நோக்க வேண்டும் என்­பது பற்­றிய சில அபிப்­பி­ரா­யங்­களே இங்கு தரப்­ப­டு­கின்­றன.

என்.பி.பி அளித்த தேர்தல் வாக்­கு­று­தி­களை அது நிறை­வேற்­றி­யுள்­ளமை, இல்­லாமை என்­ப­வற்­றுக்கு அப்பால் இந்த அர­சிடம் ஒரு நேர்­மை­யான போக்கு காணப்­ப­டு­கி­றதா என்­ப­துவே முதன்­மை­யா­ன­தாகும். தேர்தல் பிர­சார வேகத்தில் நிதா­ன­மின்றிப் பேசு­வது எங்கும் அவ­தா­னிக்கத் தக்க உண்­மை­யாகும். இந்­நி­லையில் அவற்றை மாத்­திரம் வைத்து ஓர் அரசைக் கணிப்­பீடு செய்­வது மிகப் பெரிய தவ­றாகும். இங்கு நாம் அவ­தா­னிக்க வேண்­டிய விட­யங்­களை கீழ்­வ­ரு­மாறு குறிப்­பி­டலாம்:

ஜனா­தி­ப­தியும் அவ­ருக்கு நெருக்­க­மாக உள்ள என்.பி.பியின் அல்­லது ஜே.வி.பியின் தலை­வர்கள் இலஞ்சம், ஊழல் என்­ப­வற்றை விட்டுத் தூர­மா­ன­வர்கள். இனத் தீவிர நிலை இல்­லா­த­வர்கள், இன உணர்வைத் தூண்டி ஆட்­சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலைப்­பாடு அவர்­க­ளிடம் இல்லை. அவர்­க­ளிடம் இனப்­பற்று கிடை­யாது. பௌத்த மதத்­திற்கு அவர்கள் முன்­னு­ரிமை கொடுக்­க­வில்லை என்று நான் கூற­வில்லை. இன உணர்வுத் தீவிரம், அதனைத் தூண்டி ஆட்சி செய்யும் போக்கு அவர்­க­ளிடம் இல்லை என்­றுதான் கூறு­கிறேன். இதுவே எமக்கும் போது­மா­ன­தாகும். இதற்கு மேல் எதிர்­பார்ப்­பது இந் நாட்டின் யதார்த்தம், வர­லாறு அறி­யாத போக்­காகும்.

ஆட்­சியின் நிர்­வாகக் கட்­ட­மைப்பை மாற்­று­வதில் அவர்கள் தீவி­ர­மாக ஈடு­ப­டு­கி­றார்கள். எனவே அதனால் தளம்­பலும் ஓர் அதிர்வும் ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­த­தாகும். பல ராஜி­னா­மாக்கள், இடம் மாறல்கள், சில ஆர்ப்­பாட்­டங்கள் இந்­நி­லையில் தவிர்க்க முடி­யா­த­தாகும்.

பாதாள உல­கத்­தோடு மோதி­யமை இன்­னொரு முக்­கிய உண்­மை­யாகும். எவ்­வ­ளவோ அபா­யங்கள் காணப்­பட்டும் அவர்கள் அதனைச் செய்­கி­றார்கள்.
பொரு­ளா­தார ரீதி­யாகக் காணப்­பட்ட பல சிக்­கல்­களை அவிழ்ப்­பதில் தீவி­ர­மாக அவர்கள் ஈடு­ப­டு­கி­றார்கள்.

இவற்­றுக்கு ஆதா­ரங்கள் கூறி நான் விளக்­க­வில்லை. அது அர­சியல் நில­வ­ரத்தை அவ­தா­னிக்கும் நேர்­மை­யான யாரும் ஏற்றுக் கொள்ளும் உண்­மை­யாகும்.
இந்த அரசு ஒரு மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும் என்ற மன­நி­லையில் ஆட்­சிக்கு வந்­தது. அந்த வகையில் பல அர­சியல் சீர்­தி­ருத்­தங்­களை பாரா­ளு­மன்­றத்தில் செய்­தது. பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளது அர­சியல் வாழ்வை மாற்றி அமைக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கி­றது. ஊழல், களவு, சமூக செல்­வங்­களை அநி­யா­ய­மாகப் பயன்­ப­டுத்­தி­யமை போன்­ற­வற்­றிற்கு எதி­ராக வேலை செய்­கி­றது.

இந்தச் செயற்­பா­டுகள் நாட்டில் ஒரு கடு­மை­யான அதிர்வை ஏற்­ப­டுத்­து­வது தவிர்க்க முடி­யா­த­தாகும். அந்த அதிர்­வையே இன்று நாம் எங்கும் காண்­கிறோம்.
கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுதல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தல் என்­ப­தற்குத் தடை­யாக உள்ள கார­ணி­களை இப்­போது அவ­தா­னிப்போம்.

I. சர்­வ­தேச சூழ்­நிலை
சர்­வதேச, பிராந்­திய வல்­ல­ர­சு­களை முழு­மை­யாகப் புறக்­க­ணித்து இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு எதுவும் செய்ய முடி­யாது. மேற்­கு­றிப்­பிட்ட எல்லா சிக்­கல்­க­ளுக்கு பின்­னாலும் சர்­வ­தேச அழுத்­தங்கள் உள்­ளன என்­பது மிகச் தெளி­வான உண்­மை­யாகும்.

II. சீர்கேடுகள் பல ஆண்­டு­க­ளாகத் தொடர்ந்­தமை
இந்­நி­லையில் ஆழ­வே­ரூன்றி விட்­டி­ருப்­பதால் அவற்றை இல­குவில், சிறிய ஒரு காலப் பகு­தியில் களை­வது சாத்­தி­ய­மில்லை.

III. பெரும்­பான்மை சமூக மன­நிலை
பெரும்­பின்­மை­யினர் 30 ஆண்டு கால யுத்­தத்தைக் கண்­டார்கள். நாடு பிரிந்­து­வி­டுமோ என்று பயந்­தார்கள். அவர்­க­ளுக்கு எப்­போதும் சிறு­பான்­மை­யினர் பற்­றிய பயம் உள்­ளது. சிங்­கள இனமும் பௌத்­தமும் இந்த நாட்டில் முழு­மை­யான ஆதிக்க சக்­தி­யாக இருக்க வேண்டும் என்ற மன­நிலை அவர்­க­ளிடம் ஆழ­மாக உள்­ளது.
30 ஆண்டு கால யுத்தம், சிங்­கள முஸ்லிம் இனக் கல­வ­ரங்கள் மிக அதி­க­மாக நிகழ்ந்து வந்­தமை என்­பவை எல்லாம் இத­னையே காட்­டு­கி­றது.
இந்­நி­லையில் எந்த ஒரு அரசும் பெரும்­பான்­மை­யினர் இந்த மன­நி­லையை மதிக்­காது, அதற்கு ஓர­ள­வா­வது இடம் கொடுக்­காது செயற்­ப­டு­வது சாத்­தி­ய­மில்லை.

IV. தமது அர­சியல் இருப்­புக்­காக நேர்மை, உண்மை பற்­றிய எந்த எண்­ண­மு­மின்றி எதனைச் செய்­யவும் துணியும் எதிர்க்­கட்­சிகள்.
அர­சி­யலில் பல மூத்த தலை­வர்­களும் அவர்கள் எந்த சமூ­கத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் தமது அர­சியல் இருப்­புக்கு ஒரு பல­மான அச்­சு­றுத்தல் உள்­ளது என உணரத் தலைப்­பட்­டுள்­ளமை இதற்குப் பிர­தா­ன­மான கார­ண­மாகும்.
இவை அனைத்­தையும் கவ­னத்திற் கொண்­டுதான் முஸ்­லிம்கள் தமது அர­சியல் நிலைப்­பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். மேலே விளக்­கப்­பட்ட உண்­மை­களை நோக்­கு­வ­தோடு முஸ்­லிம்கள் கீழ்­வரும் விட­யங்­க­ளையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.
ஏற்­க­னவே ஆட்சி செய்த கட்­சிகள் இனத்­து­வே­ஷத்­தோடு இயங்­கி­ய­மை­யையும் அதனால் உரு­வான இனக் கல­வ­ரங்­க­ளையும் முஸ்லிம் சமூகம் பல்­வேறு தாக்­கு­தல்­க­ளுக்கு உட்­பட்­ட­மை­யையும் மறந்து மீண்டும் அதே கட்­சி­களின் பின்னால் செல்­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

என்.பி.பி இனி இந் நாட்டின் பல­மான அர­சியற் கட்சி. ஆட்­சி­யிலோ அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கவோ அவர்கள் இருக்கப் போகி­றார்கள். இதுவரை முஸ்­லிம்கள் ஜே.வி.பியோடு நெருங்கி உற­வா­ட­வில்லை. அவர்­களின் உள்ளே இருந்து உழைக்­க­வில்லை. என­வேதான் அக்­கட்­சியின் உள்ளே முதிர்ந்த தலை­வர்கள் யாரும் எமக்கு உரு­வா­க­வில்லை. இந் நிலையை மாற்றும் வகையில் இனி முஸ்­லிம்கள் இக்­கட்­சி­யுடன் பய­ணிப்­பது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

முன்னாள் ஆட்சி செய்த கட்­சிகள் முஸ்­லிம்கள் உள்ளே காணப்­படும் பிள­வு­களை இனம் கண்டு அவற்றின் ஊடாக முஸ்­லிம்­களைப் பிரித்து அவர்­க­ளி­னுள்ளே பல சிக்­கல்­களை உரு­வாக்கி விட்­டார்கள். அக் கட்­சிகள் ஆட்­சிக்கு வந்தால் மீண்டும் அத­னையே செய்யப் போகிறது என்பது உணரப்பட வேண்டும்.

சர்வதேச முஸ்லிம் சமூகப் பிரச்­சி­னை­க­ளோடு இலங்கை முஸ்­லிம்கள் ஈடு­பாடு காட்­டு­வது இயல்­பா­ன­தாகும். ஆனால் சிறு­பான்­மை­யாக இருந்து அந்த ஈடு­பாட்டை எவ்­வாறு நாம் காட்டிக் கொள்ள வேண்டும் என்­பது பற்­றிய ஒரு தெளி­வுக்கு நாம் வர வேண்டும். சர்­வ­தேச முஸ்லிம் சமூகப் பிரச்­சி­னை­களின் போது நாம் தெளி­வாக அடுத்த சகோ­தர சமூ­கங்­களின் கணி­ச­மான பங்­க­ளிப்பு இன்றி இயங்­கு­வது பொருத்­த­மற்­ற­தாகும் என்­பது அவற்றில் ஒன்றாகும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்திற் கொண்டு முஸ்லிம் சமூகம் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என வேண்டுகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.