ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மட்டும் கைதுசெய்யப்படவில்லை, கடும்போக்குவாதத்திற்கு போவார் என்கின்ற சந்தேகத்தில் கைதானார்

அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் திட்டவட்டமாக தெரிவிப்பு

0 33

(றிப்தி அலி)
கொம்­பனித் தெரு­வி­லுள்ள சிட்டி சென்­டரில் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்­டி­ய­தற்­காக மாத்­திரம் குறித்த இளைஞர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரான சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.
குறித்த இளைஞர் கடும் போக்­கு­வா­தத்­திற்கு போவார் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தான் கைது செய்­யப்­பட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று (02) புதன்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது கொம்­பனித் தெரு­வி­லுள்ள சிட்டி சென்­டரில் வைத்து நிட்­டம்­பு­வை­யினைச் சேர்ந்த 22 வய­தான ருஷ்தி கைது செய்­யப்­ப­ட்டமை தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர்.
இதற்கு பதில­ளிக்கும் போதே அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

“குறித்த இளை­ஞ­ரு­டைய கைது தொடர்பில் தற்­போது விரி­வான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறித்த விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த பின்னர் இந்த கைது தொடர்­பி­லான முழு உண்மைத் தன்­மையும் வெளி­யாகும்.
தேசிய மக்கள் சக்தி எப்­போதும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. பலஸ்தீன் விட­யத்தில் எமது அர­சாங்கம் இரட்டை வேடம் போட­வில்லை. காஸா உட்­பட உலகில் அநி­யாயம் இடம்­பெறும் மக்­க­ளுக்கு ஆத­ர­வாக நாங்கள் குரல் கொடுப்போம்.

எவ்­வா­றா­யினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவமாகும். இதனால் தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன, மதத்தை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்” என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.