இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கைதான இளைஞரை புனர்வாழ்வளிக்குமாறு உலமா சபை கூறவில்லை

பலஸ்தீன் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென வலியுறுத்து

0 400
  • பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றை முற்றாக மறுக்கிறது ஜம்இய்­யதுல் உலமா
  • பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எனவும் தெரிவிப்பு

(எஸ்.என்.எம்.சுஹைல்)
இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டி­ய­தற்­காக கைது­செய்­யப்­பட்டு தடு­தது வைக்­கப்­பட்­டுள்ள இளைஞர் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையை மேற்­கோள்­காட்டி பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் புத்­திக மன­துங்க வெளி­யிட்­டி­ருக்கும் கருத்தை உலமா சபை முற்­றாக மறுப்­ப­தாக அதன் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், பலஸ்­தீன விவ­கா­ரத்தில் அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை தெளி­வாக வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் உலமா சபை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் ருஷ்தி புனர்­வாழ்வு அளிக்­கப்­பட வேண்­டி­யவர் என ஜம்இ­ய்­யதுல் உலமா சபை தெரி­வித்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் புத்­திக மன­துங்க பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.
இதன்­போது, பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் குறித்த இளைஞர் உலமா சபையில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்பட்டார். அவர் ஒரு சாதா­ரண முஸ்­லிமின் நிலையைத் தாண்­டிய நிலை இருப்­ப­தா­கவும் அவ­ருக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட வேண்டும் என்று உலமா சபை கூறி­ய­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதன் உண்­மைத்­தன்மை குறித்து விடி­வெள்ளி, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­விடம் வின­வி­ய­போதே, குறித்த வி­ட­யத்தை உலமா சபையின் ஊடகப் பிரிவும் மறுத்­தது.
இது­கு­றித்து உலமா சபையின் ஊட­கப்­பி­ரிவின் செய­லாளர் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், கடந்த 29 ஆம் திகதி நண்­பகல் 12 மணி­ய­ளவில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. இதன்­போது, உலமா சபை­யி­லி­ருந்து மூவரை பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு வரு­மாறு கோரிக்­கை ­வி­டுக்­கப்­பட்­டது.

இந்த கோரிக்­கைக்கு அமை­வாக ஜம்­இய்­யதுல் உல­மாவின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பினர் ஒருவர் உட்­பட மேலும் இரு உலமா சபை தலை­மை­யக பணி­யா­ளர்­களும் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு சென்­றனர்.

அங்கு சென்ற பின்னர், கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ருஸ்தி என்ற இளைஞர் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­ததை அறிய முடிந்­தது.

பதில் பொலிஸ்­மா­அ­திபர் உள்­ளிட்ட மேலும் சில உய­ர­தி­கா­ரிகள் குறித்த கலந்­து­ரை­யா­டலில் இருந்­தனர்.

இது விட­ய­மாக கதைத்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கைது­செய்­யப்பட்ட இளைஞர் உலமா சபை பிர­தி­நி­தி­களின் முன்­னி­லைக்கு அழைத்­து­வ­ரப்­பட்டார். அவ­ருடன் கதைக்­கு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் பணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அவ­ருடன் கதைத்து அவர் பற்­றிய அடிப்­படை தக­வல்கள் பற்றி தெரிந்­து­கொள்ள முடிந்­தது.

அத்­துடன், குறித்த இளைஞர் ருஷ்தி பற்றி மேலும் ஆழ­மாக ஆரா­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் உலமா சபை­யிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.
எழுத்து மூல­மான கோரிக்­கைகள் விடுக்­கப்­ப­டு­மாயின் விசா­ர­ணை­க­ளுக்கு உலமா சபை தம்­மா­லான பங்­க­ளிப்பை வழங்கும் எனவும் இதன்­போது எமது பிர­தி­நி­தி­க­ளினால் பொலிஸ் தலை­மை­யிடம் தெளி­வாக கூறப்­பட்­டது.

பொலிஸ் தலை­மை­யகம் எம்­மிடம் முறை­யாக கோரிக்கை விடுக்கும் பட்­சத்தில் குறித்த இளைஞர் தொடர்பில் ஆராய்ந்து பதி­ல­ளிக்க முடியும் என தெரி­விக்­கப்பட்­டதே தவிர, பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் கூறி­யது குறித்த இளைஞர் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட வேண்­டி­யவர் என்று உலமா சபை பிர­தி­நி­திகள் தெரி­விக்­க­வில்லை.

பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் இந்த கருத்து மிகவும் பிழை­யா­னது. அதனை நாம் கண்­டிக்­கிறோம். இது, விட­ய­மாக நாம் பதில் பொலிஸ்மா அதி­பரின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­வது தொடர்­பாக ஆராய்ந்து வரு­கிறோம்.

குறித்த கூற்று குறித்து பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் விளக்­க­ம­ளிக்க வேண்டும். உலமா சபையின் பெயரை மேற்­கோள்­காட்டி இவ்­வாறு பிழை­யான கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டமை தவ­றா­ன­தாகும் என உலமா சபையின் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.
அத்துடன், பலஸ்தீன விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்தை நிலைப்பாட்டை கூடிய விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் உலமா சபையின் ஊடகப் பிரிவின் செயலாளர் குறிப்பிட்டார்.

இத­னி­டையே, கைது செய்­யப்­பட்ட இளைஞர் குறித்து உலமா சபை நேற்று முன்­தினம் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எந்­த­வொரு நபரும் சட்­டப்­பூர்­வ­மான வழியில், ஜன­நா­யக முறையில் தமது கவ­லை­க­ளையும் கரி­ச­னை­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக கைது செய்­யப்­ப­டு­வதை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இலங்கை எப்­போதும் அனைத்து வித­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கும் எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்­பாக பலஸ்­தீன மக்­களின் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள தொடர்ந்­தேர்ச்­சி­யான வன்­மு­றைக்கு எதி­ராக உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்­னா­திக்கம் கொண்ட சுதந்­திர பலஸ்­தீன நாடொன்றின் உரு­வாக்­கத்தை மீண்டும் இங்கு வலி­யு­றுத்­து­கின்றோம்.

அண்­மையில் பலஸ்­தீ­னத்தில் நடை­பெறும் அத்­து­மீ­றல்­களைக் கண்­டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்­டியை- ‘ஸ்டிக்­கரை’ ஒட்­டி­ய­தற்­காக ஓர் இளைஞன் கைது செய்­யப்­பட்­ட­தாக வெளி­வந்த செய்­திகள் சமூ­கத்தை பெரிதும் கவ­லைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கோ அல்­லது சமூக ஒரு­மைப்­பாட்­டிற்கோ அச்­சு­றுத்­த­லாக இல்­லா­த­வரை, ஜன­நா­யக உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டும் போது அதி­கா­ரிகள் குறித்த உரி­மை­களை உறுதி செய்ய வேண்டும் என்­ப­தையும் ஜம்­இய்யா வலி­யு­றுத்­து­கின்­றது.

நமது பிர­தி­நி­திகள் இந்த கைது சம்­பந்­த­மாக காவல்­து­றை­யி­னரை தொடர்­பு­கொண்­ட­போது, சுவர் ஒட்டி கார­ண­மாக மாத்­தி­ரமே குறித்த இளைஞர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றும் கூடுதல் கார­ணங்கள் உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர். இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ பதி­வு­களை ஜம்­இய்யா கோரி­யுள்­ளது.அவற்றை நமது செயற்­குழு ஆராய்ந்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என்­ப­தையும் இங்கு தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கிறோம்.

நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும் மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம் என உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.