கிழக்கின் விவசாயத் துறையில் ஏ.எம்.ஏ. அஸீஸின் சாதனைகள்

0 40

ஏ.ஐ. மரிக்கார்

ஏ.எம்.ஏ.அஸீஸ் யாழ்ப்­பா­ணத்தில் வன்­னர்­பண்­ணை­யி­லுள்ள பாரம்­ப­ரி­ய­மான உயர் குடும்­ப­மொன்றில் 1911 அக்­டோபர் 4ஆம் திகதி பிறந்தார். குழந்தை பரு­வத்­தையும், முழுப் பாட­சாலை நாட்­க­ளையும் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே கழித்தார். அவர் பிர­ப­ல­மான ஹிந்து பாட­சா­லை­களில் கற்று ஒரு சிறந்த மாண­வ­ராகத் திகழ்ந்தார். நவம்பர் 24, 1973 இல் அவர் இறை­யடி சேர்ந்தார்.

டாக்டர் அஸீஸின் பாரம்­ப­ரி­யத்தை, பனிப்­பா­றையைப் போன்­றது என நான் சில வேளை­களில் நினைத்­த­துண்டு. காணக்­கூ­டி­யது மிகச்­சி­றிய அள­வா­யினும் அவர் பற்­றிய ஆழ­மான பெரும் பகுதி வர­லாற்றில் மூழ்­கி­யுள்­ளது. இது நீண்ட காலத்தைச் செல­விட்டு முறை­யான ஆய்­வுகள் மூலம் கவ­ன­மாக வெளிக் கொண­ர­வேண்­டிய ஒன்­றாகும். டாக்டர் அஸீஸின் வாழ்க்­கை­யையும் காலத்­தையும் நாம் திரும்பிப் பார்க்­கும்­போது, ஒரு செனட்­ட­ராக அவ­ரது மதி­நுட்­பத்­து­ட­னான முதிர்ந்த அர­சியல் தலை­மைத்­துவம், முஸ்­லிம்­களின் கல்வி மேம்­பாட்­டுக்­கான அர்ப்­ப­ணிப்­பு­ட­னான அவ­ரது பங்­க­ளிப்பு மற்றும் முஸ்லிம் சமு­தா­யத்தின் மேம்­பாட்­டுக்­கா­கவும் சீர்­தி­ருத்தம் தொடர்­பா­கவும் அவர் மேற்­கொண்ட அரும் பணிகள் நம் மனக்கண்முன் தோன்றி மறை­கி­றது. இந்தச் சாத­னைகள் அனைத்­துக்கும் சிகரம் வைத்தாற் போல அமை­வது, நாம் கடந்துவந்த காலத்தின் மிகப் பெருமை வாய்ந்த இலங்கை சிவில் சேவைக்குத் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது முஸ்­லி­மாக அவர் விளங்­கி­ய­மையே.

ஒரு தேசா­பி­மா­னி­யா­கவும் உண்­மை­யான ராஜ­தந்­தி­ரி­யா­கவும் செனட்­டிலும் பிற இடங்­க­ளிலும் அவர் ஆற்­றிய உரைகள் அவ­ரது தூர­நோக்கு செயற்­பா­டு­க­ளுக்­கான அடை­யாளச் சின்­னங்­க­ளாகும். காலத்தைக் கடந்த முற்­போக்கு சிந்­த­னை­க­ளு­ட­னான அவ­ரது உரை­க­ளிலும் ஆக்­கங்­க­ளிலும் அவர் என்ன சொன்னார் என்­பதை வாசிப்­பது அதன் வாச­கர்­க­ளுக்கு உத்­வேகம் அளிப்­ப­தாக அமைந்­தது. எனவே, முஸ்லிம் கல்வி தொடர்­பான அவ­ரது பங்­க­ளிப்பு இன்றும் கூட கண்­கூ­டாகக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஸாஹிராக் கல்­லூரி மற்றும் அவர் நிறு­விய இலங்கை முஸ்லிம் புல­மைப்­ப­ரிசில் நிதியம், முஸ்லிம் இளை­ஞர்­களின் பல தலை­மு­றை­யி­னரை ஊக்­கு­வித்து வாழ்க்­கையில் முன்­னே­றிச்­சென்று இலங்கைச் சமு­தா­யத்தில் தமது பங்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் தொடர்ந்தும் செயல்­பட்டு வரு­கின்­றது. அவர் நிறு­விய முஸ்லிம் வாலிபர் இயக்கம் (YMMA) நாடு பூரா­வு­முள்ள முஸ்லிம் இளை­ஞர்­களின் அபி­லா­ஷை­க­ளுக்குப் புத்­து­ணர்ச்சி ஊட்­டி­யுள்­ளது.

அஸீஸின் பாரம்­ப­ரி­யத்­துக்கு, பெரும்­பாலும் மக்­களால் மறக்­கப்­பட்ட மற்­று­மொரு ஆக்­க­பூர்­வ­மான பக்­கமும் உள்­ளது, அதுதான் கிழக்கு மாகா­ணத்தில் அவர் அறி­மு­கப்­ப­டுத்­திய மாபெரும் விவ­சாய சீர்­தி­ருத்­தத்தம். இதன் பெறு­பே­றாக, அம்­பாறை மாவட்டம் இலங்­கையின் பிர­தான நெற் களஞ்­சி­ய­மாக மாற்­ற­ம­டைந்­தது. இந்த மாபெரும் சீர்­தி­ருத்­தத்தின் பிதா­ம­க­னான அவர், பெரு­ம­ள­வி­லான முஸ்­லிம்கள் வாழ்­கின்ற இப்­ப­கு­தியில் மக்­களின் பொரு­ளா­தார செழிப்­புக்­கான வாயில்­களைத் திறந்­து­விட்டார்.
டாக்டர் அஸீஸ் ஸாஹிராக் கல்­லூ­ரியைப் பொறுப்­பேற்­றி­ருந்த காலத்தில் நான் அங்கு மாண­வ­னாக இருந்தேன். எனது அதிபர் என்ற வகையில் அவரின் உயர்ந்த பண்­பு­களை முன்­பா­கவே தெரிந்­து­கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்­தது. அத்­துடன், அஸீஸ் குடும்­பத்­துடன் எனக்கு நெருக்­க­மான தொடர்­புகள் இருந்த போதிலும், கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்தில் டாக்டர் அஸீஸ் காட்­டிய ஆர்­வத்தில் நான் எப்­போ­துமே அக்­கறை காட்­டி­ய­தில்லை.

ஓலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு பகுதிநேர விரி­வு­ரை­யா­ள­ராக நான் நிய­மனம் பெற்ற பின்பே இது பற்றி தற்­செ­ய­லாக அறிய நேர்ந்­தது.

பொரு­ளா­தார பலம்
அம்­பாறை மாவட்­டத்தில் இங்­கி­னி­யா­கல சேன­நா­யக்க சமுத்­தி­ரத்தின் அதி­க­மான நீர்ப்­பா­ச­னத்தால் வள­மூட்­டப்­படும் 100,000 ஹெக்­டே­ருக்கும் அதி­க­மான பரப்­ப­ள­வி­லான இந்த வயல் நிலங்கள் கிழக்கு மாகா­ணத்தின் நெற் களஞ்­சி­ய­மாக அம்­பாறை மாவட்­டத்தை மாற்­றின. கிட்­டத்­தட்ட முழு­மை­யாக முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மாக இருந்த இந்த நிலங்­களில் உற்­பத்­தி­யான பாரிய அள­வி­லான நெல் இந்த முஸ்லிம் சமூ­கத்தின் பொரு­ளா­தார பலத்தை உறுதி செய­வ­தற்கு ஆதா­ர­மாக இருந்­தது. தேசத்தின் உணவுப் பாது­காப்பு குறித்த விஷ­யங்­களில் நாம் கவனம் செலுத்­தும்­போ­தெல்லாம், வருடா வருடம் நாட்­டிற்கு உண­வ­ளிக்க உத­வி­யதன் மூலம் நாட்­டி­லி­ருந்து பஞ்சம் மற்றும் தீவிர வறு­மையை ஒழிக்க உத­வி­யுள்ள இந்த மக்­களின் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை நன்­றி­யுடன் நினை­வு­கூர வேண்டும். இந்த செயல்­மு­றை­க­ளி­னூ­டாக இந்த மக்கள் தங்கள் பொரு­ளா­தார அந்­தஸ்­தையும் மேம்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த பகு­தியில் வாழும் முஸ்­லிம்கள் ஆரோக்­கி­ய­மான மற்றும் வலு­வான பணப் பரி­மாற்­றங்­களை அனு­ப­வித்து மகிழ்­வ­தையும் நாம் காணலாம். பரந்த அள­வி­லான வீடு மற்றும் மோட்டார் கார்கள், எங்கும் நிறைந்த மோட்டார் சைக்­கிள்கள் என இப்­ப­கு­தியில் கிட்­டத்­தட்ட ஒவ்­வொரு வீட்­டையும் ஆக்­கி­ர­மித்­துள்­ள­தோடு மக்கள் பொது­வாக ஒரு உயர்­தர வாழ்க்­கை­யையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

இந்தப் பிர­தே­சத்தில் பல சிறந்த பாட­சா­லைகள், பல்­கலைக் கழ­கங்­க­ளுக்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­களை அனுப்பி வரு­கின்­றன. அம்­பாறை மாவட்டம் பொறி­யி­ய­லா­ளர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், கணக்­கி­ய­லா­ளர்கள், நிர்­வாக அதி­கா­ரிகள், மருத்­து­வர்கள், ஆசி­ரி­யர்கள், உல­மாக்கள் என தொழில்சார் நிபு­ணர்­க­ளையும் தொழில் முனைவோர், வணி­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் தொடர்ந்து உரு­வாக்கி வரு­கின்­றது.

உண்­மை­யி­லேயே, செழிப்­புக்­கான இந்தப் பாதை, இந்த மக்­களின் கடின உழைப்பின் மூலம் உரு­வான அர்ப்­ப­ணிப்பு, விடா­மு­யற்சி மற்றும் வியர்வை என்­ப­வற்றின் பெறு­பே­றே­யாகும். இந்த விவ­சாய புரட்­சியின் ஆரம்பக் கட்­டங்­களில் இதனைத் திட்­ட­மிட்டு, ஊக்­கு­வித்து, முக்­கிய வளர்ச்சிக் கூறு­களை ஒன்­றி­ணைத்த ஒரு முக்­கிய செயற்­பாட்­டாளர் இதன் பின்­ன­ணியில் இருந்தார், இந்த செயற்­பாட்­டா­ளரின் பங்­க­ளிப்பை நம்மில் பலர் மறந்­து­விட்­டனர். கல்­லூ­ரி­யிலும் பல்­கலைக் கழ­கத்­திலும் எனது சம­கா­லத்­த­வ­ரான மறைந்த எஸ்.எச்.எம்.ஜெமீல் 2007இல் “65 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான பங்­க­ளிப்பு” என்ற தலைப்­பி­லான ஒரு ஆய்வுக் கட்­டு­ரையில் அந்த செயற்­பாட்­டாளர் வேறு யாரு­மல்ல சிறப்­பு­மிக்க ஏ.எம்.ஏ.அஸீஸ் எனக் கோடிட்டுக் காட்­டி­யுள்ளார்.

மூலா­தாரம்
1942ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி கொழும்பு மற்றும் அதன் புற­நகர்ப் பகு­தி­களை ஜப்பான் குண்­டு­வீச்சால் தாக்­கி­ய­போது, டாக்டர் அஸீஸ், சுங்கப் பகு­தியில் ஒரு பொறுப்­பான பத­வியை வகித்து வந்தார். நாடு ஆளு­நரால் போர்க்­கால தயார்­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் தெற்குப் பிர­தேசம் உணவு உற்­பத்­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான கேந்­திர இட­மாகத் தெரிவு செய்­யப்­பட்­டது.
டாக்டர் அஸீஸின் முன்­னோடி முயற்­சி­களை ஜெமீலின் கட்­டு­ரை­யி­லி­ருந்து மேற்­கோ­ளிட்டுக் காட்ட விரும்­பு­கிறேன்,

“சிவில் சேவை அதி­காரி அஸீஸ் 16 ஏப்ரல் 1942 இல் கல்­முனை உதவி அர­சாங்க அதி­ப­ராகப் பத­வி­யேற்றார். அது இரண்டாம் உலகப் போர் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த கால­மா­கையால் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்­க­ளுக்­கான வெளி­நாட்டு விநி­யோகப் பாதைகள் அனைத்தும் ஜப்­பா­னி­யர்­களால் முடக்­கப்­பட்­டது. அன்­றைய அர­சாங்கம் உள்­நாட்டு உணவு உற்­பத்­தியை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­க­ளையும், முறை­மை­க­ளையும் கண்­டு­பி­டிக்க வேண்­டி­யி­ருந்­தது. மேலும் உண­வுப்­பொ­ருட்­களை, குறிப்­பாக அரி­சியை உற்­பத்தி மேற்­கொள்­வ­தற்­கான குறிப்­பிட்ட உத்­த­ர­வு­க­ளுடன் குறு­கிய அறி­விப்பில் டி.எஸ்.சேன­நா­யக்­க­வினால் அஸீஸ் இட­மாற்றம் செய்­யப்­பட்டார்.”

அஸீஸ் முஸ்­லிம்­க­ளி­னதும் தமி­ழர்­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பைப் பெறக்­கூ­டி­யவர் என்ற கார­ணத்­தி­னா­லேயே சேன­நா­யக்க சிவில் சேவை­யி­லி­ருந்து ஒரு முஸ்­லிமைத் தேர்ந்­தெ­டுத்தார். டாக்டர் அஸீஸ் ஒரு தமிழ் அறிஞர், தமிழில் சர­ள­மாக பேசக்­கூ­டி­யவர், தமிழ் சமூ­கத்­தி­னரால் நன்கு மதிக்­கப்­பட்­டவர் என்­ப­தையும் அவர் அறிந்­தி­ருந்தார். அவர் பத்து நாட்­க­ளுக்குள் கல்­முனை சென்று அவ­ச­ர­கால கச்­சேரி ஒன்­றினை அமைத்தார்.

டாக்டர் அஸீஸின் அதி­கார வரம்­புக்குக் கொண்டு வரப்­பட்ட நிலப்­ப­ரப்பு பரந்த அளவில் இருந்­தது. அது வடக்கில் பட்­டி­ருப்பில் இருந்து தெற்கில் குமண வரை, முழு அம்­பாறை மாவட்­டத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருந்­தது. அர்ப்­ப­ணிப்­புள்ள ஒரு சிவில் சேவை அதி­கா­ரி­யாக டாக்டர் அஸீஸ், உல­கப்­போர்­கால நிலையில், அவ­ச­ர­மா­கவும் அவ­சி­ய­மா­கவும் முக்­கிய உணவுப் பொருட்­களை உற்­பத்தி செய்­வ­தற்­கான முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து உட­ன­டி­யாக நட­வ­டிக்­கையில் இறங்­கினார்.

விலை­ம­திப்­பற்ற நேரத்தை வீண­டிக்­காது ஒரு மாதத்­திற்குள், புதிய உப அர­சாங்க அதிபர் கல்­மு­னையில் ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்தார். ஒரு சரி­யான அலு­வ­லகம் இல்­லாத நிலையில் இந்த கூட்டம் கல்­முனை இளைப்­பாறும் இல்­லத்தில் இடம் பெற்­றது. கிட்­டத்­தட்ட 10 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்­டத்தில் அதிக வாதப் பிர­தி­வா­தங்கள் இல்­லாமல் பல ஆக்­க­பூர்­வ­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து, உட­னடி நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு, தரி­சா­கவும் காடா­கவும் கிடந்த அதிக அள­வி­லான அரச காணிகள் துப்­ப­ரவு செய்­வ­தற்­கா­கவும் நெற் சாகு­ப­டிக்­கா­கவும் விநி­யோ­கிக்­கப்­பட்­டது. இந்த நட­வ­டிக்­கையின் முதல் கட்­டத்தில் 12,000க்கும் மேற்­பட்ட ஏக்கர் நிலம் வயல் நில­மா­கி­யது. அந்த நேரத்தில் நீர்ப்­பா­ச­னத்­துக்கோ மனித வசிப்­பி­டங்­க­ளுக்­குகோ நம்­ப­க­மான ஏற்­பாடு எதுவும் இருக்­வில்லை, ஏனெனில் இந்த இடங்கள் காட­டர்ந்­த­தா­கவும், பாழ­டைந்­த­தா­கவும் காணப்­பட்­டதால் சன நட­மாட்டம் மிகக் குறை­வா­கவே இருந்­தது. இதன் விளை­வாக சுற்­றி­யுள்ள பகு­தி­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் அவ­ரது அழைப்­பிற்கு செவி சாய்த்­த­மையால் நில ஒதுக்­கீட்டின் முதல் பய­னா­ளி­க­ளாக அவர்­களே இருந்­தனர். முஸ்லிம் விவ­சா­யிகள் தமது புர­வ­ல­ரான டாக்டர் அஸீஸை கைவிட்­டு­வி­ட­வில்லை. உப அர­சாங்க அதி­ப­ரினால் வழங்­கப்­பட்ட நிதி மற்றும் தொழில்­நுட்ப உதவி மற்றும் மேற்­பார்­வை­யு­ட­னான வழி­காட்­டல்கள் ஆகி­ய­வற்றின் மூலம் அவர்கள் கடு­மை­யாக உழைத்து காடு­க­ளையும் தரிசு நிலங்­க­ளையும் பொன் விளையும் பூமி­யாக மாற்­றினர். இந்த செயல்­முறை, கிழக்கு மாகா­ணத்தில் நெல் உற்­பத்­தியில் ஒரு பாரிய புரட்­சியைத் தோற்­று­வித்­தது.

காடு­களைத் துப்­ப­ரவு செய்­வ­தற்­கா­கவும் நிலத்தைத் தயார் செய்­வ­தற்­கா­கவும் நிதி­யு­தவி மற்றும் அடுத்த சாகு­படி பரு­வத்­திற்­கான விதை நெல் வழங்­கு­வ­தெ­னவும் அக்­கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. பல ஆண்­டு­க­ளாக கைவி­டப்­பட்ட சிறிய குளங்கள் மற்றும் நீர்ப்­பா­சனக் கால்­வாய்கள் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டன. அதி­க­ரித்த உணவு உற்­பத்­தியின் இலக்கை அடைந்து கொள்­வ­தற்­காக உப அர­சாங்க அதி­பரின் வழி­காட்­டலில் பழு­த­டைந்த அனைத்து தொடர்­பு­டைய உட்­கட்­ட­மைப்­பு­களும் வெற்­றி­க­ர­மாகத் திட்­ட­மி­டப்­பட்டு அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன.

டாக்டர் அஸீஸ் நிந்­தவூர், திருக்­கோவில் மற்றும் மல்­வத்த போன்ற இடங்­களில் ஆட்டுப் பண்­ணை­களை ஆரம்­பித்­த­தோடு மரு­த­முனை, சாய்ந்­த­ம­ருது மற்றும் பால­முனை ஆகி­ய­வற்றில் கோழி பண்­ணை­க­ளையும் ஆரம்­பித்து அதற்­கான நிதி­உ­தவி மற்றும் தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­க­ளையும் விவ­சா­யி­க­ளுக்கு வழங்க ஏற்­பாடு செய்தார். இப்­ப­கு­தியில் உள்ள அனைத்து விவ­சாய முயற்­சி­க­ளுக்கும் தொழில்­நுட்பத் தெரிவு மற்றும் நடு­வ­தற்­கான பொருட்கள் என்­ப­வற்றை வழங்­கு­வ­தற்­காக ஒரு மாதிரி விவ­சாய பண்­ணை­யையும் உரு­வாக்­கினார்.

ஒரு நடை­முறை நிர்­வா­கி­யாக, இந்த கூட்­டத்­திற்கு ஒரு வாரம் கழித்து, அனைத்து முனை­க­ளிலும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. நிலங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்டு பணமும் வழங்­கப்­பட்­ட­தோடு நிந்­த­வூரில் 1,000 பணி­யா­ளர்­க­ளுடன் 475 ஏக்கர் மாதிரிப் பண்­ணையும் உரு­வா­கி­யது.

இவை யாவும் டாக்டர் அஸீஸின் நேர்த்­தி­யான திட்­ட­மி­ட­லாகும். அவ­ரது பணி ஒரு பாரிய வெற்­றி­யா­கவே கரு­தப்­பட்­டது. புதி­தாக பயி­ரி­டப்­பட்ட நெல் வயல்கள் பெருந்­தொ­கை­யான அறு­வ­டை­களைத் தோற்­று­வித்­தன, மற்றும் போர் காலத்தில் நாடு உணவு பற்­றாக்­கு­றையால் பாதிக்­கப்­பட்ட சம­யத்தில், உப அர­சாங்க அதி­பரின் உணவு உற்­பத்­தி­யா­னது நீண்ட கால வறட்­சிக்குப் பின்­ன­ரான மழை போல் இருந்­தது. அம்­பாறை மாவட்டம் துரித கதியில் நெல் உற்­பத்­தியில் வீறு நடை­போட்டு, கிழக்கின் நெற்களஞ்­சியம் என்ற நற்­பெ­ய­ரையும் பெற்­றது. கௌரவ விவ­சாய அமைச்சர் என்ற வகையில் டி.எஸ். சேன­நா­யக்கா, உப அர­சாங்க அதி­பரின் பெரும் சாத­னைக்கு பாராட்டுத் தெரி­வித்­த­தோடு நாட்டில் பட்­டி­னி­யையும் பஞ்­சத்­தையும் தவிர்ப்­ப­தற்கு உத­வி­ய­தற்­காக தமது நன்­றி­யையும் தெரி­வித்தார்.

அறு­வடை விழா
வெற்­றி­க­ர­மான உணவு உற்­பத்­தியைக் கொண்­டா­டு­வ­தற்­காக உப அர­சாங்க அதிபர் அஸீஸ் 1943ஆம் ஆண்டில் மாதிரி பண்­ணையில் ஒரு அறு­வடை விழாவை ஏற்­பாடு செய்தார். நாட்டில் எங்­குமே நடை­பெற்­றி­ராத ஒரு புதிய அனு­ப­வ­மாக இது இருந்­தது. இதன் பிர­தம அத்­தி­யாக டி.எஸ். சேன­நா­யக்க கலந்­து­கொண்டார். அவ­ரது நம்­பிக்­கைக்­கு­ரிய உப அர­சாங்க அதிபர் அஸீஸ் மற்றும் கல்­முனை மக்­களின் வெற்­றியை வெளிக்­காட்­டு­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மாக இதனைப் பயன்­ப­டுத்த அவர் விரும்­பினார். அது நான்கு சக்­கர வாக­னங்கள் மற்றும் ஆடம்­பர வாக­னங்கள் இல்­லாத காலம். உப அர­சாங்க அதிபர் அஸீஸ் அவ­ரது நிர்­வாக அதி­கா­ரத்தின் கீழ் பரந்த பகு­தியை மேற்­பார்­வை­யிடும் போது மேடு பள்­ள­மான மணல் திட்­டு­களில் பயணம் செய்யும் அசௌ­க­ரியம் மற்றும் சோர்வு ஆகி­ய­வற்றை சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது. அவ­ரது போக்­கு­வ­ரத்து முறை பெரும்­பாலும் மாட்டு வண்­டி­க­ளா­கவும் கால் நடை­யா­க­வுமே இருந்­தது. அவர் அவ­சியம் ஏற்­ப­டும்­போ­தெல்லாம் காடுகள் மற்றும் சம­வெ­ளி­களில் நீண்ட தூரம் கால்­ந­டை­யா­கவே சென்றார். இருப்­பினும் அவர் திரு­வி­ழாவில் அமைச்­சரின் போக்­கு­வ­ரத்­துக்கு வேறு­பட்ட திட்­டத்தை வகுத்­தி­ருந்தார்.

“ஒரு யானை மூலம் இழுத்துச் செல்­லப்­பட்ட ஒரு வண்­டியில் சம­த­ள­மற்ற விவ­சாய வீதி வழி­யாக அமைச்சர் ஐந்து மைலகள்; ஊர்­வ­ல­மாக அழைத்து செல்­லப்­பட்டார், அதனைத் தொடர்ந்த வண்ணம் பெரு­ம­ள­வி­லான மக்­களைச் சுமந்த நூற்­றுக்­க­ணக்­கான அலங்­கா­ரிக்­கப்­பட்ட காளை வண்­டிகள் சென்­றன. இதனை தமது வாழ்­விவில் மறக்­க­மு­டி­யாத மகிழ்ச்­சி­க­ர­மான நிகழ்­வாக அமைச்சர்; நினைவு கூர்ந்­துள்ளார்;.

“1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி காலை 10.45 மணி­ய­ளவில் பார்­வை­யா­ளர்­களால்; முதல் நெற் செடி­களை சடங்கு ரீதி­யாக அறு­வடை செய்­ய­வென கண்­டிய கைவி­னை­ஞரால் செய்­யப்­பட்ட அரி­வாள்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அறு­வடை செய்­யப்­பட்ட முதற்­கட்டு உப அர­சாங்க அதி­ப­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன, பின்னர் அமைச்சர் அதனைக் குற்­றி­யெ­டுத்தார். பின்னர் அவர் ஒரு யானை மீது ஏற்­றப்­பட்டு பண்ணை வழி­யாக ஊர்­வ­ல­மாக அழைத்து செல்­லப்­பட்டார்;. பின்னர் பண்­ணையில் பயிர் செய்­யப்­பட்ட அரிசி மற்றும் இதர உற்­பத்­தி­க­ளி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்ட ஒரு பக­லு­ணவு பரி­ம­றப்­பட்­டது ” (எஸ்.எச்.எம். ஜெமீல்).

அது கால­னித்­துவ கால­மாக இருந்­ததால் நாட்டின் அர­சாங்கத் தலை­வ­ராக பிரிட்டிஷ் கவர்னர் சர் ஆண்ட்ரூ கால்­டிகாட் இருந்தார்;. உப அர­சாங்க அதி­பரின் செயல்­தி­றனால் ஈர்க்­கப்­பட்ட கவர்னர், தனது சொந்த கையெ­ழுத்தில், அவ­ருக்கும் பாரிய அறு­வ­டைக்குக் கார­ண­மா­யி­ருந்த கல்­முனை விவ­சா­யி­க­ளுக்கும்; பாராட்டுத் தெரி­வித்து, கடி­த­மொன்றை அனுப்பி வைத்தார். நாட்டை பஞ்சம் மற்றும் பட்­டி­னியின் வேத­னை­யி­லிந்து தவிர்த்­தமை குறித்து ஆளுநர் மிகவும் நன்­றி­யு­டை­ய­வ­ராக இருந்தார்.

உப அர­சாங்க அதிபர் அஸீ­ஸினால் உரு­வாக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்­டத்தில் விவ­சாயச் செழிப்­புக்­கான வரை­படம் இன்றும் உறு­தி­யாக உள்­ளது. ஒரு சில ஆண்­டு­க­ளுக்கு பின்னர், கல் ஓயா திட்­டத்தின் கீழ் இங்­கி­னி­யா­கல நீர்த்­தேக்கம் இயக்­கப்­பட்ட போது, விவ­சாய சமு­தா­யங்­க­ளுக்கு அதிக அளவு தண்ணீர் கிடைக்­கப்­பெற்­றதால் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அப்பால் அம்­பாறை மாவட்­டத்தில் நெல் வயல்கள் மேலும் புத்­துயிர் பெற்­றன. பயிர் நிலங்­களின்; பரப்­ப­ளவு அதி­வே­க­மாக அதி­க­ரித்­துள்­ள­துடன், இப்­ப­குதி தற்­போது சுமார் 100,000 ஹெக்­டயர் நிலப்­ப­ரப்பில் கிழக்கு மாகாண நெற்­செய்­கையின்; 62 சத­வீ­தத்தை உற்­பத்தி செய்­கி­றது.

டாக்டர் அஸீ­ஸினால் வழங்­கப்­பட்ட இந்த முன்­னோடி முயற்­சியும் பார­பட்­ச­மற்ற சேவையும் வர­லாற்றில் பதி­யப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். இது அம்­பாறை மாவட்ட மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் இந்த புகழ்­பெற்ற நிர்­வா­கியால் நிறை­வேற்­றப்­பட்ட மிகச் சிறந்த பங்­க­ளிப்­பு­களில் ஒன்­றாகும். ஒரு முன்­மா­திரி; சிவில் சேவை அதி­கா­ரி­யான இவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ கட­மைகள் தனது நாட்டின் மீதான அபி­மா­னத்­துடன் ஒன்­றி­ணைந்­த­தாகும்.

பாராட்­டுக்கள்
ஒலி­வி­லுக்­கான எனது பயணம் எப்­போதும் ஹப­ரண, பொலன்­ன­றுவை மற்றும் மட்­டக்­க­ளப்பு வழி ஊடா­கவே இருந்­தது. நான் ஹப­ர­ணையில் பொலன்­ன­றுவை வீதிக்கு திரும்­பிதும், மினே­ரி­யா­வுக்கு இட்­டுச்­செல்லும் கம்­பீ­ர­மான ஹப­ரண காட்­டுக்குள் நுழைவேன். பின்னர் காட்டின் மத்­தியில் ஒரு சிறு சமுத்­தித்தை ஒத்த மினே­ரியா நீர்த்­தேக்­கத்தை கடந்து செல்வேன். நாட்­டுக்­காக ஏரா­ள­மான நெல்லை உற்­பத்தி செய்யும் ஆயிரக் கணக்கான ஹெக்டயர் பசுமையான வயல் நிலங்கள் அதனை சூழ்ந்து காணப்படுகின்றது. பின்னர் நான் பரந்த அளவிலான வயல்; நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கும் கிரிதல மற்றும் பராக்கிரம சமுத்திரத்தைத் தாண்டிச் செல்வேன். இந்தப் பிராந்தியமானது வட மத்திய மாகாணத்தின் ஒரு பெரிய நெற் களஞ்சியமாக மாறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உணவு உற்பத்தியை துரிதப்படுத்தும் பணியை நிறைவேற்ற டாக்டர் அஸீஸ் நியமிக்கப்ட்ட அதே வேளையில், டி.எஸ். சேனநாயக்க, மற்றொரு பிரபலமான சிவில் சேவை அதிகாரியான சி.பீ.டி. சில்வாவை பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் சாகுபடியை அதிகரிக்கும் பணிக்கு நியமித்தார். டாக்டர் அஸீஸ் மற்றும் சி.பீ.டீ. சில்வா ஆகிய இருவரும் சிவில் சேவைத் தேர்வில் ஒரே காலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வாகும். தகுதிகாண் பட்டியலில் டாக்டர் அஸீஸ் 2ஆம் இடத்திலும் சி.பீ.டி. சில்வா 8வது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேளாண்மைக்கு அப்பால், டாக்டர் அஸீஸ் மாவட்டத்தில் கல்வி ரீதியாகப் பின்தங்கிய முஸ்லிம்களுக்காகப் பல நிறுவனங்களை ஏற்படுத்தினார். கவிஞர் அப்துல் காதர் லெப்பை மற்றும் சுவாமி விபுலானந்தா ஆகியோர் இதனை ஊக்குவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம் பிரதேசங்களில் இப்போது டாக்டர் அஸீஸின் பெயர் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. ஒருவேளை, கல்வியியலாளர், சிறந்த தொழில்சார் நிர்வாகி மற்றும் ஒரு தேசாபிமானி; எனப் பன்முகங்கொண்ட இந்த பண்புள்ள மாமனிதரின் சாதனைகள் பதியப்பட்ட வரலாற்றில் மட்டும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கலாம்.

(நீர்கொழும்பைத் தாயகமாகக் கொண்ட ஏ.ஐ. மரிக்கார், அஸீஸ் காலத்து ஸாஹிராக் கல்லூரியில் ஒரு மாணவர் ஆவார். 1965இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் முன்னணி வங்கியாளராகவும் இஸ்லாமிய வங்கியியலில் நிபுணராகவும் ஒரு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்)

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.