ஸகாத்துல் பித்ர்

0 56

அல்­லாஹ்வின் உத­வியால் புனி­த­மிகு ரமழான் மாதத்தை அடைந்து நாம் தற்­பொ­ழுது அம்­மா­தத்­திற்கு விடை கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளோம். இச்­சந்­தர்ப்­பத்தில் மிக முக்­கி­ய­மான இபாதத் தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­தலாம் என நினைக்­கின்றேன்.
அந்த இபாதத் தான் ஸகாத்துல் பித்ர் அல்­லது ஸத­கத்துல் பிதர் அல்­லது பித்ரா என்று மக்கள் மத்­தியில் அறி­மு­கமாய் இருக்­கக்­கூ­டிய இபாதத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் ரமழான் நோன்பை நம் மீது கட­மை­யாக்கி அந்த நோன்பை மிகப் பேணு­த­லாக நோக்­கு­மாறு நமக்கு வழி­காட்டி இருக்­கின்­றார்கள். நபி(ஸல்) கூறி­னார்கள் பொய்­யான பேச்­சுக்­க­ளையும் மோச­மான செயல்­க­ளையும் விட­வில்­லையோ அவர் பசி­யோடும் தாகத்­தோடும் இருப்­பதில் அல்­லாஹ்­வுக்கு எந்த தேவையும் இல்லை என கூறு­கி­றார்கள்.

இந்த ஹதீஸ் மூலம் நோன்பு நோற்ற ஒருவர் மிகவும் கவ­ன­மா­கவும் பேணு­த­லா­கவும் அந்த நோன்பை பேண வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றார்கள். இருந்­தாலும் மனிதன் பல­வீ­ன­மா­னவன் என்­ப­தனால் தம்மை அறி­யாமல் நோன்பு நேரம் சில தவ­றுகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் அவ்­வா­றான தவ­று­க­ளுக்கு பிரா­யச்­சித்­த­மா­கத்தான் அல்­லது பரி­கா­ர­மாக தான் இந்த ஸகாத்துல் பித்ரை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறி­விக்­கின்­றார்கள் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்துல் பித்ரை பர்­ளாக ஆக்­கி­னார்கள். ஒரு நோன்­பாளி நோன்­போடு இருக்­கின்ற நேரம் செய்த தவ­று­க­ளுக்கு பரி­கா­ர­மா­கவும் ஏழை­க­ளுக்கு உண­வா­கவும் இருக்க வேண்டும் என்­ப­தற்­காக நபி (ஸல்) இவ் இரண்டு நோக்­கங்­க­ளுக்­காக வேண்டி ஸகாத்துல் பித்ரை நம் மீது கட­மை­யாக்கி இருக்­கின்­றார்கள். ஒவ்­வொரு முஸ்லிம் மீதும் கட்­டாய கட­மை­யாக இருக்­கின்­றது. ஒவ்­வொரு முஸ்­லிமும் அவ­ருக்­காக வேண்டி ஸகாத்துல் பித்ரை கொடுக்க வேண்டும். அதே போன்று அவன் குடும்பத் தலை­வ­னாக இருந்தால் அவன் யாருக்­கெல்லாம் செலவு செய்­வது கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளதோ அவர்­க­ளுக்­காக வேண்­டியும் கொடுக்க வேண்­டிய கடமை அவர் மீது உள்­ளது.

உதா­ர­ண­மாக ஒரு குடும்பத் தலைவன் அவ­ரு­டைய மனை­விக்கும் அவ­ரு­டைய பிள்­ளை­க­ளுக்கும் அதா­வது உழைத்துக் கொடுத்து சாப்­பி­டக்­கூ­டிய நிலையில் உள்ள பிள்­ளை­க­ளுக்கு ஸகாத்துல் பித்ரை கொடுக்க வேண்டும்.

எப்­போது கொடுப்­பது
இந்த ஸகாத்துல் பிதர் கொடுப்­ப­தா­னது ஷவ்வால் பிறைய தென்­பட்­ட­தி­லி­ருந்து (மஃரிபில் இருந்து) பெருநாள் தொழு­கைக்­காக திட­லுக்குச் செல்­கின்ற வரைக்கும் கொடுப்­ப­துதான் மிக சிறந்த நேர­மாக இருக்­கின்­றது.

அதே­நேரம் தொழு­கைக்குப் பிறகு கொடுப்­பதால் அவை ஸகாதுல் பித்­ரா­வாக அமை­யாது. மாறாக ஸகாத்துல் பித்ரை விட்ட குற்றம் அவர் மீது இருந்து கொண்­டி­ருக்கும். இதனை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும் ஏனென்றால் நம்­மு­டைய ஸகாத்துல் பித்ரை மற்­ற­வ­ரிடம் கொடுத்து விநி­யோ­கிக்­கின்ற நேரத்தில் தொழு­கைக்கு முன் உரி­ய­வ­ரிடம் போய் சென்று விட வேண்டும் என்ற இந்த விட­யத்தை அவர்­க­ளிடம் வலி­யு­றுத்த வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

சிலர் ரமழான் ஆரம்­பத்தில் இருந்து ஸகாத்துல் பித்ரை கொடுக்க ஆரம்­பித்து விடு­வார்கள் அது கூடுமா? என்று கேட்டால் அது கூடாது. நபி (ஸல்) அவர்­களின் வழி­காட்­டல்கள் எப்­படி இருக்­கின்­றது என்று சொன்னால் பெருநாள் தினத்­துக்கு ஒரு நாள் அல்­லது இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் சஹா­பாக்கள் கொடுக்க ஆரம்­பிப்­பார்கள்.
இதனை நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனு­ம­தித்­தி­ருக்­கின்­றார்கள். அவ்­வாறு இல்­லாமல் ரம­ழானில் ஆரம்­பத்­தி­லி­ருந்து கொடுப்­ப­தா­னது நபி (ஸல்) அவர்­களின் வழி­காட்­ட­லாக இருக்க முடி­யாது

எவற்­றி­லி­ருந்து கொடுப்­பது
சகாத்துல் பித்ரை எவற்­றி­லி­ருந்து கொடுப்­பது என்றால் நபி (ஸல்)அவர்­களின் ஹதீஸ்­களை பார்க்­கின்ற போது கோதுமை, பேரீச்சம் பழம் போன்­ற­வற்­றி­லி­ருந்து 1ஸா கொடுக்க வேண்­டு­மென்று வரு­கின்­றது.

அதன் கார­ண­மாக இமாம் மாலிக் இமாம் ஷாபி இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் போன்ற மூன்று அறி­ஞர்­களும் ஏனைய பெரும்­பா­லான உல­மாக்­களும் ஸகாத்துல் பிதர் உண­வா­கத்தான் கொடுக்­கப்­பட வேண்டும் என்று சொல்­லு­கின்­றார்கள் இதற்கு அவர்கள் முன்­வைக்கும் ஆதாரம் என்­ன­வென்றால் அப்பாஸ் (ரலி) அறி­விக்­கின்­றார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்­களின் காலத்தில் உணவில் இருந்து 1 ஸா கொடுத்து வந்தோம் என்று சொல்­லு­கின்­றார்கள் எனவே அந்­தந்த நாட்டில் எந்த உணவு பிர­தான உணவுப் பொரு­ளாக இருக்­கின்­றதோ அதி­லி­ருந்து 1 ஸா கொடுக்க வேண்டும் என மிகப் பெரும்­பா­லான அறி­ஞர்­களின் நிலைப்­பா­டாக உள்­ளது.

இமாம் அபு ஹனீபா போன்ற ஒரு சில அறி­ஞர்கள் ஸகாத்துல் பித்ரை பண­மா­கவும் கொடுக்­கலாம் என்­கின்ற கருத்தை முன்­வைக்­கின்­றார்கள் ஆனால் ஆதா­ரங்­களை வைத்து பார்க்­கின்ற போது உண­வாகக் கொடுப்­ப­துதான் சரி­யான முறை என்­பதை புரிந்து கொள்ள முடி­கின்­றது.

ஸகாத்துல் பித்ரின் அளவு
ஸகாத்துல் பித்ரின் அளவு என்­கின்ற பொழுது ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று 1ஸா என்று வரு­கின்­றது 1 ஸா என்­பது 4 முத்­துக்கள் ஆகும் ஒரு முத்து என்­பது சாதா­ர­ண­மான மனிதர் இரண்டு கைகளால் ஒரு அள்ளு அள்­ளினால் வரு­வது ஒரு முத்து என்று கரு­தப்­படும் இவ்­வாறு நான்கு அள்­ளுகள் அள்­ளு­வது தான் 1ஸா என கரு­தப்­படும். முடி­யு­மா­ன­வர்கள் இந்த அடிப்­ப­டையில் கொடுக்­கலாம். இது அல்­லாமல் நிறு­வையில் கொடுப்­ப­தாக இருந்தால் நவீன கால உல­மாக்­களின் முடி­வு­களின் படி சுமார் 3 கிலோகிராம் கொடுக்க வேண்டும் அதா­வது ஒரு­வ­ருக்கு 3 கிலோகிராம் வீதம் கொடுக்க வேண்டும்.
உதா­ர­ண­மாக ஒரு வீட்டில் கண­வன் மனைவி மூன்று பிள்­ளைகள் மொத்­த­மாக 5 பேர் இருந்தால் அவர்கள் 15 கிலோகிராம் கொடுக்க வேண்டும்.

யாருக்கு கொடுக்க வேண்டும்
யாருக்கு கொடுக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன ஹதீஸின் படி நோன்­பா­ளியின் தவ­றுக்கும் மிஸ்­கின்­களின் உண­வா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
எனவே ஸகாத்துல் பித்ரை பெறக் கூடி­ய­வர்கள் மிஸ்­கின்கள். மிஸ்­கின்கள் என்று சொல்லும் போது பகீ­ர்கள் வரு­வார்கள்.பகீர்கள் என்றால் அறவே வசதி இல்­லா­த­வர்கள். மிஸ்கின் என்றால் வசதி இருக்கும் ஆனால் போதா­த­வர்கள்.

உதா­ர­ண­மாக 500 ரூபாய் வரு­மானம் என்றால் செலவு 700 ரூபா­வாக இருக்கும் இந்த நிலையில் இருப்­பவர் மிஸ்கின் ஆவார். அவ­ருக்­குத்தான் ஸகாத்துல் பித்­ராவை கொடுக்க வேண்டும்

அந்த ஏழை­களில் யாரை முற்­ப­டுத்த வேண்டும் என்றால் நம்­மு­டைய கிரா­மத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு கொடுக்க வேண்டும் ஏழைகள் அடை­யாளம் காண முடி­யாது அல்­லது நாம் வாழ்­கின்ற பிர­தே­சத்தில் ஏழைகள் இல்லை என்று இருந்தால் ஏழைகள் வாழுகின்ற இடங்களில் உள்ள பொறுப்பாளர்களிடம் வழங்கி அவர்கள் அதனை ஒப்படைக்க முடியும் என்பதில் மார்க்கத்தில் எவ்வித தடையும் கிடையாது என்பதை புரிந்து கொண்டு இந்த ஸகாத்துல் பித்ர் என்ற இம்மகத்தான வணக்கத்தை நாம் உரிய நேரத்தில் நிறைவேற்றி நாம் நோன்போடு இருக்கின்ற போது விட்ட தவறுகளுக்கு பரிகாரமாகவும் பெருநாள் தினத்தில் ஏழைகள் சந்தோசமாக சாப்பிடுவதற்கும் இதனை கொடுக்க அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக…

அஷ்ஷெய்க் எஸீம் (இர்பானி)

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.