உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : தகவல் இருப்பின் ஞானசார தேரர் பாதுகாப்பு தரப்பிடம் வழங்கலாம்

அரசாங்கம் தெரிவிப்பு; கிழக்கு அடிப்படைவாத குழு குறித்து அவதானம்

0 29

(எம்.மனோ­சித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் அல்­லது தேசிய பாது­காப்பு தொடர்பில் முக்­கிய தக­வல்­களை அறிந்­தி­ருந்தால் அவை தொடர்பில் புல­னாய்­வுப்­பி­ரி­வுக்கு அறி­விக்க வேண்­டி­யது ஞான­சார தேரரின் கட­மை­யாகும். அதனை விடுத்து ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களில் அவை தொடர்பில் கூறிக் கொண்­டி­ருப்­பது பொருத்­த­மற்­றது என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

அத்­துடன், கிழக்கு மாகா­ணத்தில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழு தொடர்­பாக அர­சாங்கம் கூடு­த­லான கவ­னத்தை செலுத்தி வரு­கி­றது. அர­சாங்க புல­னாய்வுப் பிரி­வினர் இது­வி­ட­ய­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். விசா­ர­ணை­களை தொடர்ந்து அந்த குழு­வுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது­வி­ட­ய­மாக பாது­காப்பு தரப்­பினர் விழிப்­புடன் செயற்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் தெரி­வித்தார்.
அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்­றைய தினம் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது, ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அமைச்­ச­ரவை பேச்­சாளர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
கிழக்கில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுவைப் பற்­றிய கூடுதல் விவ­ரங்­களை வெளிக்­கொ­ணர காவல்­துறை புல­னாய்வுத் துறையும் பாது­காப்புப் படை­யி­னரும் தீவி­ர­மாகச் செயல்­பட்டு வரு­கின்­றனர்.

புல­னாய்­வுத்­து­றையின் ஊடாக அர­சாங்கம் மத அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தக­வல்­களை பாரா­ளு­மன்­றத்­திலும் பாரா­ளு­மன்­றத்­துக்­குள்ளும் வெளி­யிலும் வெளிப்­ப­டுத்­தி­யது. எம்­மிடம் தேர்ச்­சி­பெற்ற புல­னாய்வுப் பிரி­வினர் இருக்­கின்­றனர். தேவை ஏற்­படின் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நேரத்தில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­துடன், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் அல்­லது தேசிய பாது­காப்பு தொடர்பில் முக்­கிய தக­வல்­களை அறிந்­தி­ருந்தால் அவை தொடர்பில் புல­னாய்­வுப்­பி­ரி­வுக்கு அறி­விக்க வேண்­டி­யது ஞான­சார தேரரின் கட­மை­யாகும். விசா­ர­ணைகள் ஜனா­தி­ப­தியால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ப­வை­யல்ல. அவை பொலிஸ் மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­படும்.

ஞான­சார தேர­ருக்கு புல­னாய்வுப் பிரிவில் உள்­ள­வர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிடமுள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும். வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.