இலங்கைக்கான புதிய பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம்.கலீல்

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்தார்

0 29

இலங்­கைக்­கான புதிய பலஸ்­தீ­னத்­தூ­துவர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் தனது நற்­சான்­றிதழ் பத்­தி­ரத்தை கைய­ளித்தார்.
பலஸ்­தீன நாட்­டுக்­கான தூது­வ­ராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் நற்­சான்­றி­தழை கைய­ளித்­த­துடன், அதன் பின்னர் ஜனா­தி­பதியை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்­கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் கடந்த திங்­க­ளன்று இடம்­பெற்ற இந்­நி­கழ்­வின்­போது, நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடு­க­ளுக்­கான தூது­வர்­களும் தங்­க­ளது நற்­சான்­றி­தழை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தனர்.

இதற்­க­மைய, பிரான்ஸ் தூது­வ­ராக ரெமி லம்­பேர்ட்டும், நேபாள தூது­வ­ராக கலா­நிதி பூர்ண பகதூர் நேபா­ளியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வெளி­நாட்­ட­லு­வல்கள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.