பலஸ்தீனில் யுத்த நிறுத்தத்திற்காக இலங்கை அழுத்தம் வழங்க வேண்டும்

0 31

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தனது காட்டுமிராண்டித் தனத்தை ஆரம்­பித்­துள்­ளது. சுமார் ஒரு வருட காலத்­துக்கு மேலாக நீடித்த மோதல்கள் கடந்த ஜன­வரி மாதத்தில் முடி­வுக்கு வந்து இரு­த­ரப்பு உடன்­பாட்­டுடன் போர் நிறுத்தமும் அமு­லுக்கு வந்­தது. எனினும் மார்ச் நடுப்­ப­கு­தியில் போர் நிறுத்த உடன்­ப­டிக்­கையை மீறிய இஸ்ரேல் மீண்டும் காஸா மீதான தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. புதிய தாக்­கு­தல்­களில் மாத்­திரம் சுமார் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். காஸா சுகா­தார அமைச்சின் தக­வல்­களின் படி கடந்த ஒரு­வ­ருட காலத்தில் மாத்­திரம் 50 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஒரு லட்­சத்­துக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். புதிய தாக்­கு­தல்கள் ஆரம்­பித்த பிற்­பாடு சுமார் ஒன்­றரை இலட்சம் பலஸ்­தீ­னர்கள் காஸாவில் இருந்து இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். கடந்த 24 மணி­நே­ரத்தில் மாத்­திரம் 38 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். புதிய தாக்­கு­தல்கள் ஆரம்­பித்த பிற்­பாடு ஒரே நாளில் 180 குழந்­தைகள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்க முடி­யா­துள்­ள­தாக வைத்­தி­யர்கள் தெரி­விக்­கின்­றனர். குழந்­தைகள் தமது கண்­முன்னே செத்து மடி­வ­தா­கவும் அவர்கள் கவ­லை­யுடன் குறிப்­பி­டு­கின்­றனர்.

இத­னி­டையே அமெ­ரிக்கா யெமன் மீது தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­துள்­ளது. நேற்று மாத்­திரம் 17 இடங்­களில் அமெ­ரிக்க விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளன. அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்­ற­பிற்­பாடு காஸா தொடர்பில் கடு­மை­யான நிலைப்­பா­டு­களை அவர் எடுத்து வரு­கிறார். குறிப்­பாக காஸாவில் உள்ள மக்­களை வேறு இடங்­களில் குடி­யேற்றி விட்டு காஸாவை சுற்­றுலாத் தல­மாக மாற்­றப்­போ­வ­தாக அவர் தெரி­வித்த கருத்து உலகில் பல நாடு­களை கோபத்­திற்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. காஸாவை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்ள ஹமாஸ் இயக்­கத்தை முற்­றாக இல்­லா­தொ­ழிக்­கப்­போ­வ­தாக அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் சூளுரைத்துள்­ளன.

இப்­பின்­ன­ணியில் தான் காஸா மீதான தாக்­குதல்களை உடன் முடி­வுக்கு கொண்டு வரு­மாறு உல­கெங்­கிலும் மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கக் கூட முடி­யாதவாறு அந்த மக்கள் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளனர். நாம் இங்கே பெரு­நா­ளைக்கு ஆடை எடுப்­ப­தற்­காக அலைந்து திரி­கையில் காஸா மக்கள் கபன் துணி­களை தேடி அலைந்து வரு­கின்­றனர்.

எனவே தான் நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேலின் தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட வேண்டும் என சகல நாடு­களும் கூட்­டாக அழுத்தம் வழங்க வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம். குறிப்­பாக இலங்கை அர­சாங்கம் இந்த தாக்­கு­தல்­களை பகி­ரங்­க­மாக இஸ்­ரே­லி­னதும் அமெ­ரிக்­கா­வி­னதும் பெயர்­கு­றிப்­பிட்டு கண்­டிப்­பதை வேண்டுமென்றே தவிர்த்து வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். சில தினங்­க­ளுக்கு முன்னர் வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்ட உப்­புச்­சப்­பற்ற அறிக்­கையில் மோதலில் ஈடு­பட்­டுள்ள இரு தரப்­பும்­ அ­தனை கைவிட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளது. எனினும் இஸ்ரேல் கடந்த மார்ச் 18 முதல் முன்­னெ­டுத்து வரு­கின்ற காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­கு­தல்­களை கண்­டிப்­ப­தி­லி­ருந்து இலங்கை தவிர்ந்து வரு­வது ஏன் என்ற கேள்­வியை பலரும் எழுப்­பு­கின்­றனர்.

ஆட்­சியில் உள்ள தேசிய மக்கள் கட்சி அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கடந்த காலங்­களில் பலஸ்­தீன விடு­த­லைக்­காக பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­த­வர்கள் என்­பதை நாம் மறந்­து­வி­ட­வில்லை. எனினும் இப்­போது ஆட்­சிக்கு வந்த பிற்­பாடு பலஸ்­தீன போராட்­டத்­துக்­கான தமது ஆத­ரவை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வதற்கு அர­சாங்கம் பின்­வாங்குவது மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது. துர­திஷ்டவச­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்­டினார் என்ற குற்­றச்­சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தும் ஆபத்து உள்­ள­தாக மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். குறித்த இளை­ஞ­ரிடம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்னர் அவர் ஏதேனும் சட்டவிரோத செயல்­களில் ஈடு­பட்டிராவிடின் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர்காலத்தில் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.

புனித ரமழான் மாதத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நாம் பலஸ்தீன மக்களின் நிம்மதியான, சுபீட்சமான வாழ்க்கைக்காக இறைவனை பிரார்த்திப்போம்.
வாசகர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக் – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.