மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது

0 30

நாட்டில் மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் தலை­தூக்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டியின் பின்­னரும் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிற்­பாடும் இன­வாத சூழல் நீர்த்துப் போயி­ருந்த நிலையில் தற்­போது மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞான­சார தேரர் ஆகியோர் இன­வா­தத்தை கையி­லெ­டுத்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்ச்­சுனா எம்.பி. தனது பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்­களைக் கொச்­சைப்­ப­டுத்தும் கருத்­துக்­களை அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்தார். அதே­போன்று பெண்­க­ளையும் இழி­வு­ப­டுத்திப் பேசி­யி­ருந்தார். இவ­ருக்கு சக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­னுக்­குடன் பதி­லடி கொடுத்த போதிலும் அவ­ரது வாயை மூட முடி­ய­வில்லை. இந்­நி­லை­யில்தான் குறித்த உறுப்­பி­னரின் பாரா­ளு­மன்ற உரை­களை நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு சபா­நா­யகர் தடை விதித்­துள்ளார்.

“பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வைத்­தியர் இரா­ம­நாதன் அர்ச்­சு­னா­­வினால் தொடர்ச்­சி­யாக தெரி­விக்­கப்­பட்டு வந்­துள்ள கூற்­றுக்கள் தொடர்­பாக மிக ஆழ­மாக ஆராய்ந்து, அவற்றை பரி­சீ­லித்­ததன் பின்னர் தேசிய ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் ஏற்­படும் அச்­சு­றுத்­தலைக் கருத்திற் கொண்டு சபா­நா­யகர் என்ற வகையில் எனக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள தத்­து­வங்­களின் பிர­காரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்­களில் இடம்­பெறும் பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது அவரின் எந்­த­வொரு கூற்­றையும் செவிப்­புல, கட்­புல மற்றும் சமூக ஊட­கங்­களில் நேர­டி­யாக ஒலி, ஒளி­ப­ரப்புச் செய்­வதை இடை­நி­றுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கட்­ட­ளை­யி­டு­கி­றேன்”­என்று சபா­நா­யகர் ஜகத் விக்­ர­ம­ரத்ன நேற்று அறி­வித்தார்.

“பாரா­ளு­மன்ற உறுப்­பினர் (வைத்­தியர்) இரா­ம­நாதன் அர்ச்­சுனா, தனிப்­பட்ட முறையில் பெண்கள் உட்­பட பல்­வேறு நபர்கள், பல்­வேறு சமூக குழுக்கள் மற்றும் சமயக் குழுக்­களை இலக்கு வைத்து முன்­வைத்­துள்ள பல்­த­ரப்­பட்ட, இழி­வுக்­குட்­ப­டுத்­து­கின்­றதும் அநா­க­ரி­க­மா­னதும் அத்­தோடு கடு­மை­யான சர்ச்­சை­க­ளுக்கு வித்­தி­டு­கின்­ற­து­மான கூற்­றுகள் சம்­பந்­த­மாக பல்­வேறு நபர்கள், பல்­வேறு சமூக அமைப்­புகள் அதேபோல், இந்த உயர் சபையை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சாங்க கட்­சி­யையும் எதிர்க்­கட்­சி­யையும் சேர்ந்த பல மக்கள் பிர­தி­நி­திகள் உட்­பட்ட பல்­வேறு தரப்­பினர் தனிப்­பட்ட முறையில் என்­னிடம் முறைப்­பாடு செய்து அத்­த­கைய கூற்­றுகள் சம்­பந்­த­மாக அவர்­க­ளி­னது கடு­மை­யான அதி­ருப்­தி­யையும் கவ­லை­யையும் வருத்­தத்­தையும் தெரி­வித்­துள்­ளனர், இந்த உயர் சபையின் தலைவர் என்ற வகையில் அத்­த­கைய செயற்­பா­டுகள் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஏற்­க­னவே என்­னிடம் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளார்கள் எனும் விட­யத்தை இச்­ச­பைக்கு அறி­யத்­தர விரும்­பு­கிறேன்” என்றும் சபா­நா­யகர் மேலும் தனது அறி­விப்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். சபா­நா­ய­கரின் இந்த அறி­விப்பு வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

அதே­போன்­றுதான் இஸ்­லாத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் பிணையில் வெளியில் வந்­துள்ள நிலையில் மீண்டும் இன­வாதம் கக்க ஆரம்­பித்­துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரிகள் பற்­றிய விப­ரங்கள் தன்­னிடம் உள்­ள­தா­கவும் அதனை ஜனா­தி­ப­தி­யிடம் மாத்­திரம் சமர்ப்­பிக்க தான் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறி வரு­கிறார். ஏற்­க­னவே சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு முற்­றாக விடு­விக்­கப்­பட்­டுள்ள சில முஸ்லிம் பிர­மு­கர்­களை மீண்டும் இந்த விட­யத்தில் இழுத்­து­வி­டு­வ­தற்கு அவர் முயற்­சிப்­பது தெரி­கி­றது. இது உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை காப்­பாற்­று­வ­தற்கும் அப்­பா­வி­களை மீண்டும் சிறைக்கு அனுப்­பு­வ­தற்கும் தேரர் எடுக்கும் முயற்­சியே அன்றி வேறில்லை. இவர் தற்­போது யாரி­னது தேவைக்­காக இவற்றைப் பேசு­கிறார் என்­பது பற்றி அர­சாங்கம் தேடிப் பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

உண்­மையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஞான­சார தேர­ருக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பரிந்­து­ரைத்­துள்­ளது என்­ப­தையும் இந்த இடத்தில் நினை­வு­ப­டுத்­து­வது பொருத்­த­மா­ன­தாகும். எனினும் கடந்த அர­சாங்­கங்கள் இந்த பரிந்­து­ரையை நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வ­ர­வில்லை. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தற்­போதைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இந்தப் பரிந்­து­ரையை கவ­னத்திற் கொள்ள வேண்டும். அது மாத்­தி­ர­மன்றி கர்­தினால் மல்கம் ரஞ்சித் விடுத்­துள்ள காலக்­கெ­டு­வுக்குள் இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன்­நி­றுத்­தவும் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்­களில் இந்த நாட்டில் அர்ச்­சுனா போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளாலும் ஞானசார தேரர் போன்ற மதகுருக்களாலுமே இனங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் விளைவாகவே பல்வேறு இன, மத வன்முறைகளை இந்த நாடு சந்தித்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகவே சிறுபான்மை மக்கள் தேசிய மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். அந்த வகையில் இந்த அரசாங்கமும் இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது. கடந்த காலங்களைப் போன்று அவர்கள் சுதந்திரமாக வெறுப்பு மற்றும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம். Vidivelli

Leave A Reply

Your email address will not be published.