காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

0 13

ஜெனி­வாவை மைய­மாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்­திர சர்­வ­தேச விசா­ரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியா­ழக்­கி­ழமை) அன்று இஸ்­ரேலின் இன­அ­ழிப்பு நட­வ­டிக்கை தொடர்­பாக புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. “மனி­தனால் தாங்­கி­கொள்ள கூடி­யதை காட்­டிலும் கொடூ­ர­மா­னது: அக்­டோபர் 2023 முதல் இஸ்­ரேலின் நிறு­வ­ன­ம­ய­மான பாலியல், இனப்­பெ­ருக்கம் மற்றும் பிற வடி­வங்­க­ளி­லான பாலினம் சார்ந்த வன்­மு­றைகள்” என்று தலைப்­பி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தில் பெண்கள் மற்றும் ஆண்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யான, தீவி­ர­மான, பர­வ­லான பாலி­யல்-­பா­லினம் சார்ந்த குற்­றங்கள் நடை­பெ­று­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காஸாவின் கருத்­த­ரித்தல் மையங்­களை திட்­ட­மிட்டு தாக்கி அழிப்­பது, கர்ப்பம், பிர­சவம், பிறந்த குழந்­தை­களை பரா­ம­ரிக்க தேவைப்­படும் மருத்­துவ உப­க­ர­ணங்­களை தடுப்­பது போன்ற கொடூர நட­வ­டிக்­கை­களின் மூலம் இன­வெறி இஸ்ரேல் பலஸ்­தீன மக்கள் மீது இனப்­ப­டு­கொ­லையை மேற்­கொண்டு வரு­வதை அவ்­வ­றிக்கை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த வன்­மு­றை­களை அதி­க­ள­விலும் நிறு­வ­ன­ம­ய­மா­கவும் அரங்­கேற்­று­வதன் மூலம் பலஸ்­தீ­னத்தை சீர்­கு­லைக்­கவும், தனது பிடியை வலுப்­ப­டுத்­தவும் இஸ்ரேல் முயற்­சிக்­கி­றது. போர்க்­குற்றம் மற்றும் இன­அ­ழிப்­புக்­கான தண்­ட­னை­க­ளி­லி­ருந்து இஸ்ரேல் தப்­பித்து வரு­வது பலஸ்­தீன மக்கள் மீதான இத்­தாக்­கு­தல்­களை நிறு­வ­ன­ம­ய­மாக நடத்த முடி­வதை அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

அக்­டோபர் 7, 2023-லிருந்து இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களால் காஸாவில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­மிகள், பெண்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இஸ்­ரேலின் தாக்­கு­தலால் கர்ப்ப காலத்தில் ஏற்­படும் மர­ணங்கள், பிர­சவ சிக்­கல்கள் மற்றும் கடு­மை­யான உடல் மற்றும் உள­வியல் பாதிப்­புகள் அதி­க­ரித்­துள்­ள­தாக அறிக்கை கூறு­கி­றது. இதனால் காஸாவில் பெண்­களின் விகி­தாச்­சாரம் பெரி­ய­ளவில் குறைந்­துள்­ளது.

காஸாவில் கருத்­த­ரித்தல் மையங்கள், இன்­விட்ரோ மையங்கள் உள்­ளிட்ட சுகா­தார மையங்­களை இஸ்ரேல் குறி­வைத்து தாக்கி அழித்­து­விட்­டது. மேலும், காஸா­வி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு தடை விதிப்­பதன் மூலம் பெண்­களை புற்­றுநோய் போன்ற தீவி­ர­மான நோய்­க­ளுக்கு பலி­யாக்­கு­கி­றது. இவை பெண்­களின் இனப்­பெ­ருக்க திற­னி­லேயே மிகப்­பெ­ரி­ய­ளவில் பாதிப்பை உண்­டாக்­கு­கின்­றன.

மற்­றொ­ரு­புறம், இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தாலும் மேற்­கு­க­ரையில் குடி­ய­மர்த்­தப்­பட்­டி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­க­ளாலும் பலஸ்­தீன மக்கள் பாலியல் வன்­கொ­டுமை, நிர்­வா­ணப்­ப­டுத்­துதல், அவ­மா­னப்­ப­டுத்­துதல், துன்­பு­றுத்­துதல் போன்­ற­வற்­றிற்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். இவை­ய­னைத்தும் கைது, விசா­ரணை, சிறை அல்­லது நாடு­க­டத்­தும்­போது நிகழ்­கி­றது. பலஸ்­தீன மக்­களை இழி­வுப்­ப­டுத்­தவும் பய­மு­றுத்­தவும் இத்­த­கைய சித்­தி­ர­வதை செய்­யப்­படும் காணொ­ளி­களை இணை­யத்தில் பரப்பும் இழிச்­செ­யலை இஸ்ரேல் கையாண்டு வரு­கி­றது. இந்த செயல்கள் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் கீழ் இனப்­ப­டு­கொ­லைக்கு சம­மா­னது என அறிக்கை கூறு­கி­றது.

போர்­களின் போது பெண்கள் மீது நடத்­தப்­படும் பாலியல் கோரத்­தாண்­ட­வங்கள் காஸாவில் அதன் உச்­சத்தை தொட்­டுள்­ளது. பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்­மு­றை­களை இஸ்ரேல் தனது போர் ஆயு­த­மாக மாற்­றி­யி­ருக்­கி­றது. பலஸ்­தீன மக்­களை இன­அ­ழிப்பு செய்­வ­தற்­கா­கவே இஸ்ரேல் இப்­போரை தொடங்­கி­யது என்­பதை ஐ.நா-வின் இவ்­வ­றிக்கை மாற்று கருத்­து­க­ளுக்கு இட­மின்றி நிரூ­பித்­துள்­ளது.

ஆனால், ஐ.நா. உள்­ளிட்ட உலக அமைப்­பு­களும் நாடு­களும் இஸ்­ரேலின் மனி­த­நே­ய­மற்ற நட­வ­டிக்­கை­களை தண்­டிக்க வக்­கற்­றுபோய் அறிக்­கை­களை மட்­டுமே வெளி­யிடும் பொம்­மை­க­ளாக உள்ளன. ஆகவே, பலஸ்தீன மக்களுக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலை பணிய வைக்க மக்கள் போரட்டங்களை கட்டியெழுப்ப வேண்டிய கடமை பரந்துபட்ட உழைக்கும் மக்களான நமக்கு உள்ளது.
நிகழ்காலத்தில் இருண்ட நகரமாக மாற்றப்பட்டிருக்கும் காஸாவை மீட்க மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கட்டியமைப்போம்! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.