அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்

பிரதியமைச்சர் முனீர் முளப்பர் குற்றச்சாட்டு

0 17

(எம்.வை.எம்.சியாம்)
விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்­சர்­க­ளுக்கு கப்பம் வழங்­கி­ய­வர்­களே கடந்த காலங்­களில் ஹஜ் குழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­திய பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்பர், நாம் தகு­தி­யுள்­ள­வர்­களை ஹஜ் குழுவில் நிய­மித்­துள்ளோம் எனவும் தெரி­வித்தார்.

மத விவ­கார அமைச்­சுக்கு ஒதுக்­கப்பட்ட நிதி ஒதுக்­கீடு தொடர்­பி­லான குழு­நிலை விவாதம் பாரா­ளு­மன்றில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தி­ய­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
இந்த நாட்டில் இதற்கு முன்னர் என்ன நடந்­தது என்­பதை தேடிப்­பார்க்­கு­மாறு இங்கு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­வர்­க­ளிடம் நாம் சவால் விடுக்­கிறோம். விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ருக்கு கப்பம் வழங்­கி­ய­வர்­களே கடந்த காலங்­களில் ஹஜ் குழுவில் நிய­மிக்­கப்­பட்­டனர்.

ஆனால் நாம் முதற்­த­ட­வை­யாக தகு­தி­யா­ன­வர்­களை இந்தக் குழுவில் நிய­மித்­துள்ளோம். அவர்­க­ளுக்கு எம்­முடன் அர­சியல் பிணைப்பு இல்லை. அவர்கள் எமக்கு எந்­த­வித உதவி ஒத்­தாசை வழங்­க­வில்லை. இதன் ஊடாக ஹஜ் வணக்க வழி­பாட்டை சிறந்த முறையில் மேற்­கொள்­வ­தற்­கான கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்ளோம்.

அதே­போன்று கடந்த காலங்­களில் நிய­மிக்­கப்­பட்ட வக்பு சபையின் உறுப்­பி­னர்­க­ளு­ட­னயே தற்­போது எமக்கு வேலை செய்ய வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. எம்மால் இந்த குழுவை மாற்றி அமைத்­தி­ருக்க முடியும். ஆனால் நாம் கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களை போன்று செயற்­ப­ட­வில்லை.

அவர்கள் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி தமக்கு நெருக்­க­மா­ன­வர்­களை கொண்டு வக்பு சபையை நிரப்­பி­னார்கள். ஆனால் எமக்கு அவ்­வாறு செய்ய வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. வள­மான நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது உய­ரிய நோக்­க­மாகும். நாட்டின் அனைத்து கட்­ட­மைப்பும் சிறப்­பாக செயல்­பட வேண்டும்.
அக்­க­ரைப்­பற்று, நற்­பிட்­டி­முனை மற்றும் காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்­களில் அர­சியல் செய்­தது யார்? பள்­ளி­வா­சல்­களில் அர­சியல் செய்யும் தரப்­பினர் எமக்கு அர­சியல் பாடம் கற்­பிக்க முயற்­சிக்­கி­றார்கள்.

தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­காக இந்த நாட்டில் “எமது பள்­ளி­வா­ச­லுக்கு வாருங்கள்- கலா­சா­ரத்தை பகிர்ந்து கொள்வோம்” (Welcome to my masjith) எனும் வேலைத்­திட்­டத்தை நாமே முன்­னெ­டுத்தோம். அப்­போது ஒரே ஒரு பள்­ளி­வா­சலில் மாத்­தி­ரமே அர­சியல் தலை­யீடு காணப்­பட்­டது. இங்கு உரை­யாற்­றிய உறுப்­பினர் ஒரு­வ­ருடன் தொடர்­புபட்ட பள்­ளி­வா­ச­லி­லேயே அந்த அர­சியல் தலை­யீடு காணப்­பட்­டது என்­பதை நாம் இங்கு நினைவு படுத்­து­கிறோம்..

தற்­போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் அண்­மித்­துள்­ளது. சமூ­கத்தை குழப்ப வேண்டும். இதனை பயன்­ப­டுத்தி தாம் அர­சியல் இலா­பத்தை அடைய வேண்டும் என்­ப­தற்­கா­கவே மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் பற்றி விமர்­சிக்­கி­றார்கள்.

இந்­த ­நாட்டில் புதிய சட்­டங்கள் உரு­வாக்­கப்­ப­டு­மாயின் அதனை சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே தீர்­மானம் எடுக்­கப்­படும் என அமைச்சர் தெளி­வாக கூறிப்­பிட்­டி­ருந்தார். எனினும் இங்­குள்ள சிலர் மீண்டும் மீண்டும் ஊட­கங்­களை பயன்­ப­டுத்தி மக்­களை தவ­றாக வழி­ந­டத்த முயற்­சிக்­கின்­றனர்.

சிலர் இன்று ஊட­கங்­க­ளுக்கு முன்னால் வந்து பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்பது தமக்கு தெரியும் எனக் கூறுகின்றனர். ஆனால் எமது மக்கள் அதற்கு ஒருபோதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் என்பது உறுதி என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.