மஹர பள்ளியை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்

அரசாங்கத்திடம் முஜிபுர் வேண்டுகோள்

0 17

மஹர சிறைச்­சா­லையில் மூடப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வா­சலை அந்த பிர­தேச மக்கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­து­வற்கோ அல்­லது அந்த பிர­தே­சத்தில் பள்­ளி­வாசல் ஒன்றை அமைப்­ப­தற்கு பொருத்­த­மான காணி ஒன்றை வழங்­குவ­தற்கோ அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் 2025 வரவு செலவுத் திட்­டத்தின் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு மற்றும் சுற்­றாடல் அமைச்­சு­களின் நிதி ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

மகர சிறைச்­சா­லையில் 122 வரு­டங்கள் பழை­மை­வாய்ந்த முஸ்லிம் பள்­ளி­வாசல் ஒன்று இருந்து வரு­கி­றது. பிரித்­தா­னிய கால­னித்­து­வ­வா­தி­களால் இந்த சிறைச்­சா­லையை அமைக்­கும்­போது சிறைச்­சாலை வளா­கத்­துக்­குள்ளே இந்த முஸ்லிம் பள்­ளி­வா­சலும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த பிர­தேச மக்கள் தங்­களின் மத நட­வ­டிக்­கை­க­ளுக்கு இந்த பள்­ளி­வாசலை பயன்­ப­டுத்தி வந்­தார்கள். என்­றாலும் 2019 இல் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து, பாது­காப்பு காரணம் கருதி இந்த பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளது.

கடந்த கோட்­டாய ராஜபக்ஷ, ரணில் விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்தில் இது­தொ­டர்பில் நாங்கள் அவர்­க­ளிடம் தெரி­வித்த போது, பாது­காப்பு கார­ண­மாக இதனை வழங்க முடி­யாது, இதற்கு மாற்­றீ­டாக அந்த பிர­தேச மக்­களின் மத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அங்கு காணி துண்டு ஒன்றை வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தார்கள்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ்வே இந்த சபையில் அதனை தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இது­வரை அது இடம்­பெ­ற­வில்லை. அதனால் அந்த பிர­தேச மக்கள் தங்­களின் மத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள மிகவும் சிர­மப்­ப­ட்டு வரு­கின்­றனர்.
அதனால் அர­சாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி, அந்த மக்கள் மகர சிறைச்­சா­லையில் இருக்கும் பள்­ளி­வாசலை தொடர்ந்து பயன்படுத்துவற்கோ அல்லது அந்த பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான காணி ஒன்றை வழங்கோ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.