காஸா பள்ளத்தாக்கில் மீண்டும் இஸ்ரேல் இனப்படுகொலை

404 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு; 562 பேர் படுகாயம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறியது

0 10

(எம்.ஐ.அப்துல் நஸார்)
காஸா பள்­ளத்­தாக்கில் நேற்­று­முன்­தினம் இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 404 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­ப­ட்­டுள்­ள­தோடு 562 பேர் படுகாய­ம­டைந்­துள்ளனர்.

இந்த தாக்­குதல் மூலம் இரண்டு மாதங்கள் நீடித்த யுத்த நிறுத்­தத்தை இஸ்ரேல் மீறி­யுள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

‘பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பலர் தொடர்ந்தும் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்­டுள்­ளனர். அவர்­களை மீட்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன’ என அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை காஸா பள்­ளத்­தாக்கில் வான்­வழித் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது. இது பலஸ்­தீன குழு­வான ஹமா­ஸுடன் கடந்த ஜன­வரி 16 ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட யுத்த நிறுத்­தத்தின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட மிகப்­பெ­ரி­ய தாக்­கு­த­லாகும்.

இஸ்­ரே­லிய தாக்­கு­தல்கள் கார­ண­மாக பல குடும்­பங்கள் முழு­மை­யாகக் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக காஸா அரசு ஊடக அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது, நோயா­ளர்­காவு வண்­டிகள் மற்றும் சிவில் பாது­காப்பு குழுக்­களால் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரையும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குக் கொண்டு வர முடி­ய­வில்லை எனவும் அரசு ஊடக அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

‘இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு இரா­ணு­வத்­திற்கு கொலை, அழிவு மற்றும் இனப்­ப­டு­கொலை ஆகி­ய­வற்றின் மொழியை மட்­டுமே அறிந்­தி­ருக்­கின்­றன என்­பதை இந்த மிரு­கத்­த­ன­மான படு­கொ­லைகள் மீண்டும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன’ என்று அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காஸாவில் தொடர்ந்து படு­கொ­லை­களை மேற்­கொள்­வதும் எல்லைக் கட­வை­களை மூடு­வதும் 2.4 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பலஸ்­தீன மக்­களின் அடிப்­படை தேவை­களை இழக்கச் செய்­வதும் அங்கு மனி­தா­பி­மான நெருக்­க­டியை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

செயற்­பா­டற்ற நிலையை முடி­வுக்குக் கொண்­டு­வந்து, காஸாவில் இடம்­பெறும் இந்த படு­கொ­லை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க உட­ன­டி­யாக செயல்­பட வேண்டும் என ஐ.நா.பாது­காப்புக் சபை மற்றும் மனித உரி­மைகள் குழுக்கள் உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்தை அரசு ஊடக அலு­வ­லகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இஸ்­ரே­லிய இரா­ணுவம், இந்த தாக்­கு­தல்கள் அதா­வது உயி­ருடன் இருக்கும் மற்றும் இறந்த அனைத்து பண­யக்­கை­தி­க­ளையும் விடு­விப்­பது உட்­பட. அர­சியல் தலை­வர்­களால் நிர்­ண­யிக்­கப்­பட்ட போர் நோக்­கங்­களை அடை­வ­தற்­காக ஹமாஸை இலக்கு வைத்து தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக இஸ்ரேல் தெரி­வித்­தது.
இஸ்­ரே­லிய அர­சாங்கம் யுத்த நிறுத்த உடன்­ப­டிக்­கை­யினை மீறி காஸா மீது போரை அறி­வித்­துள்­ள­தாக ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது.

‘இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­ஜமின் நெதன்­யாகு மற்றும் சியோ­னிச ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஆகியோர் ஒப்­பந்­தத்தை மீறி­ய­தற்கும் முறி­ய­டிப்­ப­தற்கும் முழு­மை­யாக பொறுப்­பேற்க வேண்டும் என நாங்கள் கோரு­கிறோம்’ என்று அது ஒரு தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

யுத்த நிறுத்தம் அமுலில் இருந்­த­போ­திலும், காஸாவில் உள்ள உள்ளூர் அதி­கா­ரிகள் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தால் கிட்­டத்­தட்ட தினமும் நெருக்­கு­தல்­களை எதிர்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தனர்.

ஒக்­டோபர் 2023 தொடக்கம் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்கள் கார­ண­மாக 48,500 க்கும் மேற்­பட்ட பலஸ்­தீன மக்கள் கொல்­லப்­பட்­டனர், அவர்­களில் பெரும்­பாலோர் பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளாவர், இத் தாக்­கு­தல்­காளல் காஸா பகு­தி இடி­பா­டு­க­ளாக மாறியுள்ளது.

காஸாவில் மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்காக நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்வதற்கான பிடியாணைகளை வெளியிட்டது.

இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு இனப்படுகொலை வழக்கினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.