குருகொட பாடசாலைக்கு ஒதுக்கிய நிதி திரும்பிச் செல்லாது ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டமை தவறா?

அதிபர் நியமனத்தில் தலையீடுகள் இடம்பெறவில்லை என்கிறார் ஹலீம்

0 25

அக்­கு­றணை குரு­கொட பாட­சா­லைக்கு ‘அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை’ திட்­டத்தின் கீழ் ஒதுக்­கப்­பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்­பட்­ட­போது, அதனை அரு­கி­லுள்ள ஏனைய முஸ்லிம் பாட­சா­லைகளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்­தமை எந்த விதத்தில் தவ­றாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அத்­தோடு, நல்லாட்சி அர­சாங்க காலத்தில் அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூ­ரியின் அதிபர் நிய­மன விவ­கா­ரத்தில் தான் எவ்­வி­த­மான தலை­யீ­டு­களும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் தெரி­வித்தார்.

கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரியாஸ் பாரூக் பாட­சா­லைகள் விவ­கா­ரத்தில் முன்னாள் அமைச்சர் ஹலீம் அர­சியல் செய்­த­தாக குற்றம் சாட்­டி­யி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே முன்னாள் அமைச்சர் ஹலீம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 1994 இற்கு பிறகு அக்­கு­ற­ணையில் பெரும்­பா­லான பாட­சா­லை­க­ளுக்கு கட்­ட­டங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. அக்­கு­றணை சாஹிரா கல்­லூ­ரிக்கு மீலாத் நிதி ஒதுக்­கீட்டின் கீழ் ரவூப் ஹக்­கீமால் கட்­ட­ட­மொன்று வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இது தவிர அக்­கு­றணை பகு­தி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­களின் அபி­வி­ருத்­தி கேள்­விக்­கு­றியா­கி­யி­ருந்­தது. அனைத்து பாட­சா­லை­க­ளிலும் இடப்­பற்­றாக்­குறை பெரும் பிரச்­சி­னை­யா­கவே இருந்­தது.

இந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் பிறகு அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­யா­வசர் ஆகி­யோரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது, அப்­போ­தைய பிர­தமர் ‘நாம் பெரும் திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்­க­வுள்ளோம், அத்­திட்­டத்­திற்குள் உள்­வாங்கி இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும்’ என வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

நாங்கள் ஏற்­க­னவே இவ்­வா­றான கோரிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த ­நி­லையில், நல்­லாட்சி அர­சாங்கம் ‘அருகில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இந்த திட்­டத்­தின்­படி, ஒரு பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட இரண்டு பாட­சா­லை­கள் அபி­வி­ருத்தி செய்­யப்­படும் என கூறப்­பட்­டி­ருந்­தது. அந்த இரண்டு பாட­சா­லை­க­ளுக்கும் தலா 250 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதில் குரு­கொட பாட­சா­லை மற்­றும் துனு­வில பகு­தி­யி­லுள்ள பாட­சா­லை என்பன உள்­வாங்­கப்­பட்­டன.

குரு­கொட பாட­சா­லைக்கு புதிய கட்­ட­டங்கள் அமைப்­ப­தற்கு காணி இல்­லாத நிலைமை காணப்­பட்­டது. எனினும், அப்­பா­ட­சா­லை­யி­லுள்ள பழைய கட்­ட­டத்தை உடைத்­து­விட்டு கட்ட முடியும் என பிர­தேச மக்கள் ஆலோ­சனை வழங்­கினர். அப்­போது, அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை திட்­டத்தின் அதி­கா­ரி­யொ­ரு­வரை குரு­கொட பாட­சா­லைக்கு அழைத்­து­வந்து அங்­குள்ள நிலை­மை­களை அவ­ருக்கு எடுத்­துக்­கூற நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். கிராம மக்­களின் விருப்­பப்­படி பழைய கட்­ட­டத்தை உடைத்து புதிய கட்­ட­டத்தை கட்டும் நட­வ­டிக்கை குறித்து அவரை தெளி­வூட்­டினேன். இதன்­போது, குறித்த அதி­காரி, இந்த இடத்தில் 3 மாடி கட்­ட­ட­மொன்றை மாத்­தி­ரமே அமைக்க முடியும். அதற்­கான நிதியை மாத்­திரம் ஒதுக்கி, மீதி நிதி­ மீளப் பெறப்­படும் என தெரி­வித்தார்.

இவ்­வா­றான நிலையில் மிகுதி நிதி மீண்டும் திரும்பிச் செல்­வதை தடுப்­ப­தற்­காக அதனை அக்­கு­றணை பாலிகா, நீரல்ல பாட­சாலை, பங்­கொல்­லா­மட பாட­சாலை, கசா­வத்தை பாட­சாலை (அதன்­வே­லைகள் தற்­போது நடை­பெ­று­கி­றது) அக்­கு­றணை சாஹி­ரா­வுக்கு விடுதி என பிரித்­துக்­கொ­டுத்து அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தோம். மீத­மான நிதி திரும்பிச் செல்­லாது அதனை எமது பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­க­ளுக்கே பயன்­ப­டுத்­தினோம். இதனால், எமது ஆட்­சி­யின்­போது எல்லா பாட­சா­லை­க­ளுக்கும் கட்­டடம் கிடைக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இந்த கால­கட்­டத்தில் மத்­திய மாகாண முத­ல­மைச்­ச­ராக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வரே இருந்தார். எனவே, இந்த பாட­சா­லை­களை மத்­திய அரசால் செய்ய முடி­யாது, மாகாண சபைக்கே தரப்­பட வேண்டும் என முரண்­பா­டொன்று தோற்­று­விக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், எமது பட்­டி­ய­லின்­படி இந்த நிதி முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கே செல்ல வேண்டும் என நான் வலி­யு­றுத்­தி­யிருந்தேன். அதன்­ப­டியே, குறித்த நிதிகள் எமது பாட­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டன.

எமது பிர­தேச பாட­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­களை நான் முறை­கே­டாக பயன்­ப­டுத்தி எனது வீட்டை கட்­டு­வ­தற்கோ எனது தனிப்­பட்ட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கோ பயன்­ப­டுத்தி ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­ட­வில்­லையே. மக்கள் வரிப்­ப­ணத்தால் ஒதுக்­கப்­பட்ட அந்த நிதி மக்­க­ளுக்­காக பயன்­ப­டுத்த வலி­வ­குத்­துள்ளேன். இது எந்த வகையில் தவ­றாகும்.

மக்கள் பணத்தை நான் சூறையா­ட­வில்லை என்றும் அதனை மக்­க­ளுக்­காக பயன்­பெற வழிவகுத்தேன் என்றும் பாரா­ளு­மன்­றத்தில் வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரியாஸ் பாரூக்­கிற்கு நன்றி கூறு­கின்றேன்.

அருகில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை திட்­டத்தின் நிதி தேசிய பாட­சா­லை­க­ளுக்கு ஒதுக்க முடி­யாது என்ற நிபந்­தனை இருந்­தது. இதனால் அஸ்ஹர் பாட­சாலை கட்­ட­டத்­திற்கு நிதி ஒதுக்க முடி­யாமல் போனது எனக்கு வருத்­த­ம­ளித்­தது. அத்­தோடு, அதிபர் மாற்­றப்­பட்ட விடயம் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரியாஸ் உய­ரிய சபையில் வரவு செல­வு­திட்ட உரை­யின்­போது பேசி­யி­ருந்தார்.

அன்று இக்பால் அதிபர், பதில் அதி­ப­ரா­கவே கட­மை­யாற்­றிக்­கொண்­டி­ருந்தார். தேசிய பாட­சா­லைக்­கான தகைமை அப்­போது அவ­ருக்கு இருக்­க­வில்லை என தெரி­விக்­கப்­பட்­டது. இந்நிலையில் இன்னொரு அதிபர் அப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார். பதில் கடமையில் இருந்தவரின் தகைமையை விட புதிதாக நியமனம் பெற்றுவந்த அதிபரின் தகைமை அதிகமாக காணப்பட்டது. எனவே, அப்போது அதிபர் பதவி மாற்றம் இடம்பெற்றது. அத்தோடு, பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதுபோல் எனது உறவுக்காரர், அதாவது மச்சான் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த முரண்பாடான கருத்து குறித்து அவர் இன்னும் தெளிவான விளக்கங்களை பெற்று பாராளுமன்றத்தில் கதைக்க வேண்டும் என ஹலீம் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.