கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு தமிழ் – முஸ்லிம்கள் பேசி தீர்வு பெறலாம்

பாராளுமன்றத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

0 25

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
கல்­முனை பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் அழுத்தி கதைப்­பதன் மூலம் மாத்­திரம் தீர்த்­துக்­கொள்ள முடி­யாது. மாறாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றாக அமர்ந்து, அர­சாங்­கத்தின் அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்கு நிரந்­தர தீர்­வொன்றை காண­வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற 2025 வரவு செலவுத் திட்­டத்தின் பொது நிர்­வாக, மாகாண சபைகள், மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிதி ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்,
கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தொடர்­பாக தமிழ் அர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களும் பலரும் சபை­யிலும் சபைக்கு வெளி­யிலும் பல தட­வைகள் கதைத்­தி­ருக்­கின்­றனர். இந்த பிர­தேச செய­லக விவ­கா­ரத்தில் 90களில் அமைச்­ச­ரவை அனு­மதி கொடுக்­கப்­பட்­டது. ஏன் இது­வரை செய்­யப்­ப­ட­வில்லை. 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த விடாமல் அர­சி­யல்­வா­திகள் தலை­யீடு செய்­கி­றார்கள். அதனால் இது இடம்­பெ­று­வ­தில்லை என்­றெல்லாம் குறை கூறப்­ப­டு­கி­றது.

உண்­மைக்கு புறம்­பான இந்த விடயம் தொடர்பில் இதன் உண்மை தன்மை தொடர்பில் விளக்­க­ம­ளிக்க வேண்டும். இந்த விவ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் தமிழ் அர­சுக்­கட்­சி­யி­னரும் பல­த­ட­வைகள் எங்­க­ளுக்குள் கலந்­து­ரை­யாடி தீர்த்­துக்­கொள்ள முயற்­சித்­தி­ருக்­கிறோம். இது ஓர் எல்லைப் பிரச்­சினை சம்­பந்­த­மான விவ­காரம் மாத்­தி­ர­மல்ல, 29 கிராம சேவகர் பிரி­வுகள் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் ஊடாக வரு­கின்­போதும் அதே அள­வி­லான பிர­தேச செய­லக பிரி­வுகள் முஸ்லிம் பிரி­வு­க­ளிலும் அடங்­கு­கி­றது.

ஆனால் 29 கிராம சேவகர் பிரி­வுகள் இருக்­கத்­தக்­க­தாக 70 சத­வீ­த­மான நிலப்­ப­ரப்பு இந்த தமிழ் பிர­தேச செய­ல­கத்­துக்குள் இருக்­கின்ற கார­ணத்­தி­னால்தான் பாரிய எதிர்ப்­புக்கள் அந்த பிர­தே­சத்­துக்கு முஸ்லிம் மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கி­றது. இது­தொ­டர்பில் ஒரு எல்லை பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்­வ­தற்­காக இந்த கிராம சேகவர் பிரி­வுகள் சம்­பந்­த­மான மீள் நிர்­ணயம் ஒன்றை செய்ய வேண்டும் என்ற விவ­காரம் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்டு அது சம்­பந்­த­மான சில விதப்­பு­ரை­களும் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

இது­தொ­டர்பில் அம்­பாறை செய­லக மட்­டத்­திலும் தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழு­வி­னாலும் இது சம்­பந்­த­மான விவ­கா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எல்­லை­களை எங்கு, எவ்­வாறு பிரிப்­பது என்­பதில் பிணக்­குகள் இருக்­கின்­றன. இதனை நாங்கள் பேசித்­தீர்த்­துக்­கொள்ள வேண்டும். இது இரண்டு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பாரிய பிரச்­சி­னை­யாக மாறாமல், இதனை தீர்த்­துக்­கொள்­வ­தற்கு நாங்கள் அன்று ஆக்­க­பூர்­வ­மான தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்தோம். கடந்த அர­சாங்க காலத்தில் வஜிர அபேர்த்­தன அமைச்­ச­ராக இருந்த காலத்­திலும் இது சம்­பந்­த­மாக நாங்கள் கலந்­து­ரை­யாடி இதற்கு தீர்­வு­காண முடி­யுமா என முயற்­சித்­த­போதும் அது பலன்­த­ர­வில்லை. அது­தொ­டர்பில் நாங்கள் கவ­லை­ய­டை­கிறோம்.

இருந்­தாலும் இதை பலாத்­கா­ர­மாக பாரா­ளு­மன்­றத்தில் அழுத்தி கதைப்­பதன் மூலம் மாத்­திரம் தீர்த்­துக்­கொள்ள முடி­யாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றாக அமர்ந்து, அர­சாங்­கத்தின் அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்கு நிரந்­தர தீர்­வொன்றை காண­வேண்டும். மாறாக பாரா­ளு­மன்­றத்தில் ஆக்­ரோ­ஷ­மான முறையில் கதைப்­பதன் மூலம் மாத்­திரம் முடி­வுக்கு வரு­கின்ற விடயம் அல்ல.

அதே­நேரம் நிலத்­தொ­டர்­பற்ற முறையில் ஒரு பிர­தேச செய­லகம் ஒரு பிர­தே­சத்தை நிர்­வாகம் செய்ய முடி­யாது. நிலத்­தொ­டர்­பற்ற வகையில் அந்த நிர்­வாகம் கல்­மு­னையில் அவ்­வாறு அமை­ய­வேண்டும் என தமிழ் தரப்பில் அது விரும்­பப்­ப­டு­கின்­ற­போது, அதே­போன்று நிலத்­தொ­டர்­பற்­ற­வ­கையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இருக்­கின்ற கோர­ளைப்­பற்று மேற்கு பிர­தே­சத்தில் கோர­ளைப்­பற்று மத்­திக்கு சொந்­த­மாக ஏற்­க­னவே எல்லை நிர­ணய சபையால் நிர­ண­யிக்­கப்­பட்டு ஜயந்­தி­யாய, ரிதீ­தென்ன போன்ற கிரா­மங்கள் மாத்­திரம் இன்று நிலத்­தொ­டர்­பற்­ற­வ­கையில் இணைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது வேண்­டு­மென்று ஒரு அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்ற விட­யத்­துக்கு மாத்­தி­ர­மாக, ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்டு ஒரு ஆணைக்­கு­ழுவும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அது சம்பந்தமான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்த்து வருகின்றனர், 11 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கலாக இருக்கின்ற இந்த கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது.

இந்த பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்களப்பு அரச நிர்வாகம் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்வது மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.