மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும்

பதில் பொலிஸ்மா அதிபருக்கு உலமா சபை கடிதம்

0 24

(எஸ்.என்.எம்.சுஹைல், எம்.வை.எம்.சியாம்)
கெக்­கி­ராவ, மடா­டு­கம பிர­தே­சத்­தி­லுள்ள கைல­பத்­தா­னயில் மெள­லவி ஒருவர் மீது பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தாக்­குதல் மேற்­கொண்ட சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொதுச்­செ­ய­லாளர் அர்க்கம் நூரா­மித்­தினால் பதில் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி ப்ரியந்த வீர­சூ­ரி­ய­வுக்கு கடந்த வாரம் மேற்­கு­றித்த கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அக் கடித்­ததில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
மடா­டு­கம, கைல­பத்­தான பிர­தே­சத்தில் உள்ள உண­வ­கத்­துக்கு முன்­பாக பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ஹொரவ்­பொத்­தானை அங்­கு­னாச்சி பள்­ளி­வா­சலின் பேஷ் இமாம் மீது கடு­மை­யாக தாக்­குதல் நடத்­திய காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கி­றது.

அத்­துடன் தாக்­கு­த­லுக்கு இலக்­கான குறித்த மௌலவி எமது சபையின் உறுப்­பினர் என்­ப­துடன் அவர் இந்த விடயம் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு எம்­மிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­நி­லையில் இந்த விடயம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜம்­இய்­யத்துல் உல­மாக சபை சார்­பாக நாம் கோரிக்கை விடுக்­கிறோம்.

தாக்­கு­த­லுக்கு இலக்­கான மௌலவி ஹொரவ்­பொத்­தானை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வெளி­யே­றி­யுள்­ள­தா­கவும் இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்­பான அதி­காரி மத­மொன்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு­வரை காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக தாக்­குதல் மேற்­கொள்­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு தகுந்த சட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கு­மாறும் அந்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குறித்த கடி­தத்­திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி ப்ரியந்த வீர­சூ­ரிய, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு பதில் கடி­தத்­தையும் அனுப்பி வைத்­துள்ளார்.

அதில், இவ்­வி­டயம் தொடர்­பாக பொலிஸ் தரப்பு கவனம் செலுத்தி வரு­கி­றது. அத்­தோடு, சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் தாங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­த­தற்கு அமை­வாக உரிய விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.