நோன்பு துறக்கும் நேரத்தில் ஒரு நிமிடத்தை அதிகரிக்குக

முஹர்ரம் முதல் புதிய தொழுகை நேரசூசி என்கிறது உலமா சபை

0 22

(எஸ்.என்.எம்.சுஹைல்)
சூரியன் மறையும் நேரம் சற்று தாம­த­மா­வது குறித்து அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ரமழான் மாத நோன்பு துறக்கும் நேரத்தை ஒரு நிமிடம் தாம­தப்­ப­டுத்­து­மாறு அறி­வித்­துள்­ளது.

அத்­துடன், எதிர்­வரும் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் முதல் திருத்­தப்­பட்ட புதிய தொழுகை நேர அட்­ட­வ­ணை­ ஒன்றை வெளி­யிட எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

இத­னி­டையே, நோன்பு துறக்கும் நேர மாற்றம் தொடர்­பாக கடந்த திங்­க­ளன்று அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா விசேட அறி­விப்­பொன்றை விடுத்­தி­ருந்­தது. அதன் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பிறைக் குழு செய­லாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம் புர்ஹான் ஆகியோர் விடுத்­தி­ருந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது,
எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்­த­மனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்­னைய ஆலிம்­களால் உரு­வாக்­கப்­பட்டு, பின்னர் அல்-­ஆலிம் அப்துல் ஸமத்­தினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தொழுகை நேர அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டையில், தற்­போ­து­வரை அமுலில் இருந்து வரு­கின்­றது.

இந்­நி­லையில், புவி­யியல் மாற்­றங்கள் பாதைகள் விஸ்­த­ரிப்பு மற்றும் உயர் மாடிக் கட்­டி­டங்கள் அதி­க­ரிப்பு போன்ற கார­ணங்­களால் சில நாட்­களில் மஃரிப் தொழு­கையின் அதான் சொல்­லப்­படும் நேரத்தில் சூரியன் தென்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.
எனவே, குறித்த விட­யத்தை மக்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்­காக, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் ஹஸ­னிய்யா அரபுக் கல்­லூ­ரியும் இணைந்து பல முயற்­சி­களை மேற்­கொண்டு தற்­போது இறுதிக் கட்­டத்தில் உள்­ளது.
ஆகவே, கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பகு­தி­களில் இருப்­ப­வர்கள் மஃரிப் தொழு­கையின் அதானை கலண்­ட­ரி­லுள்ள நேர சூசியில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நேரத்­துடன் ஒரு நிமி­டத்தைக் கூட்டி அந்­நே­ரத்தில் அதான் சொல்லி நோன்பு துறக்­கு­மாறு அனை­வ­ரையும் கேட்­டுக்­கொள்­கிறோம் என குறித்த அறி­விப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு திடீ­ரென நேர மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டமை தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரா­மி­திடம் விடி­வெள்ளி வின­வி­யது.

இதற்கு பதி­ல­ளித்த அவர், பிர­தா­ன­மாக நோன்பு காலங்­களில் சூரிய அஸ்­த­மனம் குறித்து முஸ்லிம் மக்கள் அதிக அக்­கறை செலுத்­து­வ­துண்டு. இதன்­படி, அண்மைக் கால­மாக மஃரிப் தொழு­கைக்­கான அதான் கூறப்­பட்ட பின்னர் சில செக்­கன்கள் வானில் சூரியன் தென்­ப­டு­வ­து­ கு­றித்து அவ­தா­னிக்­கப்­பட்டு அது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­விடம் தெரி­விக்­கப்­பட்­டது. இதன்­ப­டியே மேற்­கு­றித்த அறி­விப்பை உலமா சபை வெளி­யிட்­டது.

எனினும், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் ஹஸ­னிய்யா அரபுக் கல்­லூ­ரியும் இணைந்து கடந்த நான்கு வரு­டங்­க­ளாக சில ஆய்­வு­களை மேற்­கொண்­டி­ருந்­தது. இதன்­படி சூரிய அஸ்­த­மனம் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே, 1990 களில் இது­போன்ற பிரச்­சினை எழுந்­தது. இதன்­போது, அல்-­ஆலிம் அப்துல் ஸமத் மற்றும் ஹஸ­னிய்யா அரபுக் கல்­லூரி என்­பன நாட்டின் பல பகு­தி­க­ளிலும் மேற்­கொண்ட ஆய்வின் அடிப்­ப­டையில் நாட்டை 40 வல­யங்­க­ளாக பிரித்து தொழுகை நேர அட்­ட­வ­ணையை தயா­ரித்­தனர். எனினும், அப்­போது எடுக்­கப்­பட்ட ஏக தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் மூன்று வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு தொழுகை நேர அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி, கிழக்கு பிராந்­தியம், வடக்கு பிராந்­தியம் மற்றும் மேற்குப் பிராந்­தி­யத்­திற்­கென தொழுகை நேர அட்­ட­வ­ணைகள் வெளி­யா­னது. பருவ மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப 4 தொடக்கம் 7 நிமிட வித்­தி­யா­சங்கள் இப்­பி­ராந்­தி­யங்­க­ளுக்­கி­டையே இருந்­து­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், இன்­றுள்ள தொழி­நுட்ப முன்­னேற்றம் மற்றும் புதிய செய­லி­களை பயன்­ப­டுத்­து­வ­தன்­மூலம் வானியல் தொடர்­பான அறிவை அனை­வரும் இல­கு­வாக பெறக்கூடி­ய­தாக உள்­ளது. அத்­தோடு, 30 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக நாட்டின் மேற்குப் பகு­தியில் இருந்­த­தை­விட தற்­போது உயர்ந்த கட்­ட­டங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே, சூரியன் மறை­வதை அவ­தா­னிப்­பதில் சில மாற்­றங்­களை காண முடிந்­துள்­ளது.

இதற்­க­மைய கடந்த பெப்­ர­வரி மாதம் 6 ஆம் திகதி தெஹி­வளை பள்­ளி­வா­சலில் தொழுகை நேரம் தொடர்­பான மாநா­டொன்று நடத்­தப்­பட்­டது. இதில் இவ்­வி­டயம் குறித்து உல­மாக்­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கும் தெளி­வூட்­டப்­பட்­டது.
இவ்­வி­டயம் மிகவும் நிதா­ன­மாக கையா­ளப்­பட வேண்­டி­ய­தொன்­றாக காணப்­பட்­ட­மை­யினால் விட­யத்தை மக்கள் மயப்­ப­டுத்­தி­விட்டு எதிர்­வரும் முஹர்ரம் மாதத்­துடன் அறி­மு­கப்­ப­டுத்த எதிர்­பார்த்­தி­ருந்தோம். எனினும், இந்த நோன்பு துறக்கும் நேரம் குறித்து மக்கள் மிக அவதானமாக செயற்பட்டு உலமா சபைக்கு தெரியப்படுத்தினர். சில செக்கன்கள் மாற்றம் காணப்பட்டமையினால் நாம் திடீரென இவ்வாறு நோன்பு துறப்பதற்கான புதிய அட்டவணையை அறிமுகப்படுத்தினோம்.

இதுவிடயமாக இலங்கையிலுள்ள வானவியல் சாஸ்திரம் கற்ற உலமாக்கள், அதிகாரிகள் இதனுடன் தொடர்புபட்ட அரச, அரச சர்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். எனவே, எதிர்வரும் முஹர்ரம் மாதத்துடன் புதிய தொழுகை நேரத்தை அறிமுப்படுத்தவுள்ளோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.