பாது­காப்பு தரப்பு கூறும் கல்­முனை குழு ‘சுப்பர் முஸ்­லிமா’?

கிழக்கின் பல இடங்களில் விசாரணைகள் ஆரம்பம்

0 99

எப்.அய்னா

” கிழக்கு மாகா­ணத்தை மைய­மாகக் கொண்ட அடிப்­ப­டை­வாத‌ குழுவைப் பற்­றிய தக­வல்கள் மட்­டுமே உள்­ளன. இது குறித்த தக­வல்­களை உள­வுத்­துறை மற்றும் பாது­காப்புப் படை­யினர் தேடி வரு­கின்­றனர். இப்­போ­தைக்கு, பாது­காப்புப் படை­யினர் இது குறித்து விழிப்­புடன் இருக்­கி­றார்கள் என்­பதை மட்­டுமே நாங்கள் கூற முடியும்.”

இது அமைச்­ச­ரவை பேச்­சாளர், அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ, அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் கேள்­விக்கு பதி­ல­ளித்து தெரி­வித்த கருத்தாகும்.

முஸ்­லிம்­களின் ரமழான் நோன்பு ஆரம்­பித்­துள்ள பின்­ன­ணியில், கிழக்கில் குறிப்­பாக கல்­முனை பகு­தியில் அடிப்­ப­டை­வாத போதனைகள் சில இடங்­களில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த நேரத்தில் இத்­த­கைய ஒரு செய்தி பொது வெளிக்கு வந்­தமை முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் அச்ச நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏனெனில் நாட்டில் இதற்கு முன்னர் நடந்­துள்ள விட­யங்கள், முஸ்லிம் சமூ­கத்­தினை சந்­தேகக் கண்­கொண்டு பார்க்க ஏது­வான விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே இத்­த­கைய அச்ச நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.
உண்­மையில், இந்த சூழலில் இத்­த­கைய செய்தி, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பா­லவின் ஊடா­கவே பொது வெளிக்கு வந்­தி­ருந்­தது. கடந்த வார இறுதி ஆங்­கில பத்­தி­ரிகை ஒன்­றுக்கு அவர் அளித்த தக­வல்கள் ஊடாக அது வெளிப்­பட்­டி­ருந்­தது.

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் மக்­க­ளி­டையே தீவி­ர­வாத சித்­தாந்­தங்­களைப் பரப்­பு­வ­தற்­கான முயற்­சிகள் குறித்து அர­சாங்­கத்­திற்கு புல­னாய்வுத் தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக அந்த பத்­தி­ரி­கைக்கு பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால தெரி­வித்­தி­ருந்தார்.

அரச உளவுச் சேவை (SIS) மற்றும் இரா­ணுவ உளவுத்துறை ஆகிய இரண்­டிற்கும் கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் இந்த அறிக்­கைகள் தெரிய வந்த­தாக‌ அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

சில மத நட­வ­டிக்­கை­க­ளுக்­கான இடங்­களில் நடத்­தப்­பட்ட கண்­கா­ணிப்­புகள், குறிப்­பாக சிறு­வர்களுக்கு தீவி­ர­வாத சித்­தாந்­தங்­கள் புகுத்­தப்­ப­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக விஜே­பால குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த தீவி­ர­வாத சித்­தாந்­தங்கள் இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கு முர­ணா­னவை என்று அவர் கூறினார்.

“இது­போன்ற செயல்­பா­டு­களில் பெரும்­பா­லா­னவை கல்­முனைப் பகு­தி­யி­லி­ருந்து பதி­வா­கி­யுள்­ளன. மேலும் அரச உளவுச் சேவை மற்றும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வுகள் இந்த நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணிப்­பதை அதி­க­ரித்­துள்­ளன. நாட்டில் மீண்டும் தீவி­ர­வாதம் மற்றும் இன­வெறி பர­வு­வதை நாங்கள் அனு­ம­திக்க மாட்டோம். இது­போன்ற பிரச்­சி­னை­களை முளை­யி­லேயே கிழித்­தெ­றிய நட­வ­டிக்கை எடுப்போம்,” என்று அமைச்சர் ஆனந்த விஜே­பால குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆம், உண்­மையில் இவர்கள் குறிப்­பிடும் இந்த அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் குழு­வினர் யார் என ‘விடி­வெள்ளி’ ஆராய்ந்­தது.

இதன்­போது பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு, கல்­மு­னையை தள­மாக கொண்டு இயங்கும், 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் தடை செய்­யப்­பட்­டுள்ள ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு குறித்து சிறப்பு விசா­ரணை ஒன்­றினை இந்த நாட்­களில் முன்­னெ­டுத்து செல்­வதை அறிய முடிந்­தது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் ச‌ட்­டத்தின் 27 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆக்­கப்­பட்­டுள்ள கட்­ட­ளைகள் பிர­காரம், 2223/3 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக சுப்பர் முஸ்லிம் உள்­ளிட்ட 11 முஸ்லிம் அமைப்­புக்கள் தடை செய்­யப்­பட்­டன.

இந்த தடை பட்­டி­ய­லா­னது 2023 ஆம் ஆண்டு ஜூலை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ஊடாக திருத்­தப்பட்­டது. அதன்­படி இந்த தடை பட்­டி­யலை சவா­லுக்கு உட்­ப­டுத்தி நீதி­மன்றம் சென்ற 5 அமைப்­புக்கள் அந்த பட்­டி­யலில் இருந்து நிபந்­த­னை­யுடன் நீக்­கப்பட்­டன. ஆனால் சுப்பர் முஸ்லிம் அமைப்பு தொடர்ச்­சி­யாக தடைப் பட்­டி­யலில் இருந்து வரு­கின்­றது.

உண்­மையில் சுப்பர் முஸ்லிம் சிந்­தனை இந்­நாட்டு மக்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பிர­தான நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகிச் செல்லும் நிலை காணப்­ப­டு­வதால், இது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் அச்சம் காணப்­ப­டு­கின்­றது என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை கடந்த 2021 மார்ச் மாதம் தெரி­வித்­தி­ருந்­தது. இது தொடர்பில் அப்­போது விடி­வெள்­ளியும் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

‘சுப்பர் முஸ்லிம் ­சிந்­தனை இலங்­கை­யிலும் சில­ரிடம் பரவி வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஆகவே, வழி­த­வ­றிய இச்­சிந்­தனை தொடர்­பான விட­யங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­தையும், அவற்றை பிர­சாரம் செய்­வ­தையும் முற்­றாக தவிர்ந்து கொள்­ளு­மாறு சகல முஸ்­லிம்­க­ளையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது’ என அப்­போது உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே 2021 ஏப்ரல் மாதம் அவ்­வ­மைப்பு தடை செய்­யப்­பட்­டது.
அவ்­வாறு தடைப் பட்­டி­யலில் உள்ள அவ்­வ­மைப்பின் செயற்­பா­டுகள் இப்­போது கல்­மு­னை­யிலும் கிழக்கின் மேலும் சில இடங்­க­ளிலும் தலை தூக்­கி­யுள்­ளமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக நோன்பை அண்­மித்து, அவ்­வ­மைப்பின் கொள்கை பிரச்­சா­ரங்கள் அதி­க­ரித்­துள்­ளமை உளவுத் துறை­யி­னரால் கண்­கா­ணிக்­கப்பட்ட நிலையில், அந்த நட­வ­டிக்­கைகள் பயங்­க­ர­வா­தத்தை நோக்கி செல்­வதை தடுக்­கவும், அத்­த­கைய சிந்­த­னைகள் பர­வு­வதை தடுக்­கவும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

மருத்­துவ பட்­ட­தாரி ஒரு­வரால் தலைமை தாங்­கப்­படும் இந்த அமைப்பின் சிந்­த­னைகள் இஸ்­லா­மிய மைய நீரோட்­டத்தில் இருந்து விலகிச் செல்­வ­தாக உள்­ள­தாக ஜம்இய்­யதுல் உலமா சபையும் தீர்­ம­ானித்­துள்ள பின்­ன­ணியில், இத்­த­கைய அமைப்­புக்­களின் நட­வ­டிக்கை தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் கிழக்கில் அடிப்­ப­டை­வாத போதனை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக கூறப்­படும் சுப்பர் முஸ்லிம் தடை செய்­யப்­பட்ட அமைப்பு மற்றும் அதன் செயற்­பா­டுகள் தொடர்பில் சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் ஊடாக சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.கே.எஸ். பெரேராவின் கட்டுப்பாட்டில் இது தொடர்பில் சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

இதற்காக கல்முனை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறப்பு விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக உளவுத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்ற‌து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.