இணைய உலகில் குழந்தை வளர்ப்பு

வாய்ப்­பு­களும் சவால்­களும்

0 107

நவீன ஊட­கங்­களின் வரு­கை­யோடு சமூக ஊட­கங்­களின் பயன்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு தனி நபரும் சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். குடும்­பங்கள் தோறும் சமூக ஊட­கத்தின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. குடும்­பத்தின் பெய­ரி­லான சிறு சமூக வலைப்­பின்னல் குழு­மங்­களும் பயன்­பாட்டில் பெரு­கி­யுள்­ளன. குடும்­பத்தில் இடம்­பெறும் சிறிய விட­யங்­க­ளையும் தமது குழு­மங்­களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் அதி­க­ரித்து வரு­கின்­றது. கோவிட் தொற்­றுக்குப் பின்னர் சிறு­வர்­களின் கல்வி, பொழு­து­போக்கு, சமூகத் தொடர்­பாடல் முறை­களில் அடிப்­ப­டை­யான சில மாற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன. இவை பெரும்­பாலும் இணைய உல­கிற்கு பரி­மாற்றம் பெற்­றுள்­ளன. சிறு­வர்கள் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக டிஜிட்டல் கரு­வி­களை பயன்­ப­டுத்தும் தேவை முன்னர் இல்­லா­த­வாறு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இவ்­வா­றான சூழலில், சிறு­வர்கள் டிஜிட்டல் கரு­வி­களை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன.

டிஜிட்டல் கரு­வி­களில் இயல்­பா­கவே உள்ள ஈர்ப்பு சக்­தியும் கவர்ச்­சியும் சிறு­வர்கள் ஓய்­வாக இருக்­கின்ற சகல நேரங்­க­ளிலும் அவற்றை பயன்­ப­டுத்த தூண்­டு­கின்­றன. ஓய்­வாக இருக்­கின்ற அல்­லது கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்ற சிறு­வர்கள், தம்மை மறந்து சமூக ஊடக உல­கிற்குள் ஈர்க்­கப்­ப­டு­கின்­றார்கள். அந்த உலகில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்கள் பற்­றியே அவர்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இது அவர்­களின் கட்­டுப்­பாட்டை மீறி நடக்­கின்ற ஒரு விஷயம். நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து அல்­லது உற­வி­னர்­க­ளி­ட­மி­ருந்து ஏதா­வது பின்­னூட்­டங்கள் வந்­தி­ருக்­கின்­ற­னவா, அல்­லது குறுந்­த­க­வல்கள் கிடைத்­தி­ருக்­கின்­ற­னவா என்­பன பற்­றிய எண்­ணங்கள் அவர்­களின் கவ­னத்தை அடிக்­கடி திசை திருப்­பு­கின்­றன. தம்மை அறி­யாமல் சமூக ஊடக உல­கத்தில் ஏதோ ஒரு முக்­கி­ய­மான சம்­பவம் இடம்­பெற்று விட்­டதோ என்ற அச்­சத்தில் சிறு­வர்கள் கவ­னத்தை இழந்து விடு­கி­றார்கள். இந்த நிலை இலத்­தி­ர­னியில் கரு­வி­களின்பால் அவர்­களை அதிகம் ஈர்த்­தெ­டுக்­கின்­றது.

இது ஒவ்­வொரு குடும்­பங்­க­ளிலும் ஒரு பிரச்­ச­னை­யாக மாறி வரு­கி­றது. எனினும் துரி­த­மாக இடம்­பெற்று வரும் இந்த மாற்றம் குழந்தை பரா­ம­ரிப்பின் போது பெற்றோர் வெளிக் காட்ட வேண்­டிய அன்பு, கருணை, விட்டுக் கொடுப்பு, சகிப்­புத்­தன்மை, பாராட்­டுதல் போன்­ற­வற்றில் எந்த வித­மான மாற்­றங்­க­ளையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. சிறு­வர்­களில் டிஜிட்டல் கரு­விகள் ஏற்­ப­டுத்­து­கின்ற அதீத மாற்றம் பெற்­றோர்­களின் இயல்பில் மாற்­றங்­களை கொண்­டு­வர முடி­யாது என்­பது இணைய உள­வி­ய­லா­ளர்­களின் கருத்­தாக உள்­ளது. டிஜிட்டல் கரு­வி­களின் அதீத பயன்­பாட்­டுக்கு முன்­னரும் பின்­னரும் பெற்­றோ­ருக்கும் குழந்­தை­க­ளுக்­கு­மான உறவு நட்பு, நம்­பிக்கை, ஆற்­றுப்­ப­டுத்­துதல், சகிப்­புத்­தன்மை போன்ற பல்­வேறு விழு­மி­யங்­களால் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் எந்த மாற்­றங்­களும் இடம்­பெற முடி­யாது. இத்­த­கைய விழு­மி­யங்­களில் மிகவும் முக்­கி­ய­மா­னது பெற்­றோ­ருக்கும் குழந்­தை­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெ­று­கின்ற அன்பின் அடிப்­ப­டையில் அமை­யப்­பெறும் திறந்த தொடர்­பா­ட­லாகும்.

சிறு­வர்கள் இணைய உலகில் பிர­வே­சித்து அதி­க­மான நேரத்தை செல­வி­டு­கின்ற போதும் பிள்­ளை­களின் கல்வி குடும்ப உறவு, பொழு­து­போக்கு, மார்க்­கம்-சார் கட­மைகள் என்­ப­ன­வற்றில் அவ­தா­னிக்கத்தக்க மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. சிறு­வர்­களின் கல்வி மட்ட அடைவு பாதிக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளது கிர­கித்தல் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. பொறுப்புக் கூறு­கின்ற கட­மை­யி­லி­ருந்து சிறு­வர்கள் விலகி நடக்க நேரி­டு­கின்­றது. சிலபோது சிறு­வர்கள் கோப­ம­டை­வதும் உண்டு. குடும்ப உற­வு­களை பேணிக் கொள்­வது அவர்­க­ளுக்கு சிர­ம­மாக இருக்க முடியும். உடன்­பி­றந்­த­வர்­க­ளு­டனும் பெற்­றோ­ரு­டனும் மனம் விட்டு பேசு­வதில் இருந்து அவர்கள் விலகி இருப்­பார்கள். எனினும், இணைய உள­வி­ய­லா­ளர்­களின் கருத்­து­க­ளுக்கு ஏற்ப, தொழில்­நுட்­பத்தின் விளை­வாக சிறு­வர்­களின் வாழ்வில் ஏற்­ப­டு­கின்ற எந்த ஒரு மாற்­றத்தின் கார­ண­மா­கவும் பெற்­றோ­ருக்கும் குழந்­தை­க­ளுக்கும் இடை­யி­லான உறவைப் பலப்­ப­டுத்­து­கின்ற விழு­மி­யங்­களில் எத்­த­கைய மாற்­றங்­களும் ஏற்­ப­டுத்த முடி­யாது.

எனினும், டிஜிட்டல் உலகில் பிள்­ளை­களை வழி நடத்தும் பெற்றோர் இயல்­பா­கவே நம்­மிடம் உள்ள, பெற்­றோர்­க­ளுக்கே உரித்­தான விழு­மி­யங்­களை மிகுந்த அவ­தா­னத்­து­டனும் அதிக அள­விலும் பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை முன்னர் ஒரு­போதும் இல்­லா­த­வாறு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இணைய உலகில் சிறு­வர்­களை வழி­ந­டத்­து­கின்ற பெற்­றோ­ருக்கு இருக்க வேண்­டிய முக்­கி­ய­மான இரண்டு பண்­பு­களில் ஒன்று நேர்த்­தி­யான, நேர்-­நி­லை­யான தொடர்­பாடல். இரண்­டா­வது குழந்­தைகள் மீதான நம்­பிக்கை. குழந்­தைகள் தமது கட்­டுப்­பாட்­டு­களை மீறி இணைய கரு­வி­களை பயன்­ப­டுத்­து­கின்ற போதும் தமது சமூக கட­மை­களை தவறி விடு­கின்ற பொழுதும் அதனை இயல்­பான ஒரு பருவ மாற்­ற­மாக கரு­து­வ­தற்கு பதி­லாக சிறு­வர்­களை காவ­லா­ளிகள் போல சந்­தேகக் கண் கொண்டு கூர்ந்து நோக்­கு­வது அடிப்­ப­டை­யான பல பிரச்­சி­னை­களை தோற்­று­விக்க கார­ண­மாக அமையும்.

பெற்றோர் இணைய உலகில் அதிக நேரத்தை செல­விடும் சிறு­வர்­களை வழி­ந­டத்­து­கின்ற பொழுது இணை­ய­தள கரு­விகள் முற்­றிலும் ஆபத்­தா­னவை என்­கிற மன­நி­லையில் இருந்து விடு­ப­டுதல் வேண்டும். இணைய உலகம் சிறு­வர்­களின் கல்வி சமூக பொரு­ளா­தார மேம்­பாட்டில் சிறந்த தாக்­கங்­களை ஏற்­ப­டுத்த முடியும் என்­கிற நம்­பிக்கை பெற்­றோர்­க­ளிடம் இருக்க வேண்டும். துர­திஷ்­ட­வ­ச­மாக அநே­க­மான பெற்றோர் சிறு­வர்­களின் இணை­ய­தள பாவ­னையை நெறிப்­ப­டுத்­து­கின்ற இய­லு­மையை கொண்­டி­ருப்­ப­தில்லை. குழந்­தை­களை நெறிப்­ப­டுத்­து­வதில் இது ஒரு பாரிய சவா­லாக உள்­ளது. எனினும் தமது கல்வி அறிவு, தொழில்­நுட்ப அறிவு என்­ப­வற்­றுக்­கப்பால் குழந்­தை­களை இணைய உலகில் வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்று எண்­ணு­கிற ஒவ்­வொரு பெற்­றோரும் அது சார்ந்த தொழில்­நுட்ப அறி­வினை கொண்­டி­ருப்­பது மிகுந்த முக்­கி­ய­மா­ன­தாகும்.

ஒவ்­வொரு தாயும் தந்­தையும் தமது பிள்ளை பயன்­ப­டுத்­து­கின்ற இலத்­தி­ரனியல் கரு­வி­களில் தமது ரக­சி­யங்­களை பேணிக் கொள்­கின்ற முறை, நேர் -நிலை­யான அடை­யா­ளத்தை பேணிக் கொள்­கின்ற இய­லுமை, சிறு­வர்கள் இணைய உலகில் மதிக்­கின்ற பாதத்­த­டங்கள், அதா­வது அவர்கள் இணை­ய­த­ளங்­களில் பிர­வே­சித்து மேற்­கொள்­கின்ற சகல கரு­மங்கள் பற்­றிய பதி­வுகள், சிறு­வர்­களின் இணைய பாது­காப்பு என்­பன பற்­றிய பிர­யோக ரீதி­யான அறி­வினை வழங்கக் கூடிய ஆற்றல் ஒவ்­வொரு பெற்­றோ­ருக்கும் இருப்­பது முக்­கி­ய­மாகும். முதன் முதலில் இலத்­தி­ர­னியல் கரு­வி­களை குழந்­தை­க­ளுக்கு பெற்றுக் கொடுக்கும் பெற்றோர் அக்­க­ரு­விகள் பிள்­ளை­களின் வாழ்வில் ஏற்­ப­டுத்­து­கின்ற நேர் நிலை­யான மாற்­றங்­க­ளுக்கு அப்பால் குழந்­தை­களின் வாழ்வில் ஏற்­ப­டுத்தக் கூடிய தீமைகள் பற்­றிய பொறுப்பு தமக்கும் உண்டு என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். இலத்­தி­ர­னியல் கரு­வி­களை பெற்றுக் கொடுப்­ப­தோடு மாத்­தி­ர­மல்­லாது குழந்­தைகள் அக்­க­ரு­வி­களை பயன்­ப­டுத்­து­கின்ற வேளை­களில் அவர்­க­ளு­டைய இணைய உல­கிலும், அதற்கு வெளி­யிலும் எத்­த­கைய மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன என்­பது பற்­றிய கூர்­மை­யான அவ­தானம் பெற்­றோர்­க­ளிடம் இருக்க வேண்டும். எனவே சம­கா­லத்தில், இணைய உல­கிற்கு சிறு­வர்­களை வழி­ந­டத்தும் பெற்றோர் பாது­காப்­பு­டனும் பொறுப்­பு­டனும் அவ்­வு­லகில் தமது நடத்­தை­களை பேணிக் கொள்­கின்ற வழி­காட்­ட­லையும் வளங்­க­ளையும் சிறு­வர்­க­ளுக்கு பெற்றுக் கொடுப்­பது பெற்­றோரின் கட­மை­யாகும்.

மூன்று வய­திற்கு குறைந்த குழந்­தை­களை பொறுத்­த­வரை அவர்கள் நேர­டி­யாக இலத்­தி­ர­னியில் கரு­வி­களின் பயன்­பாட்­டுக்கு உட்­ப­டு­வ­தில்லை என்றே அனு­மா­னிக்க வேண்டி இருக்­கி­றது. எனினும் பச்­சிளம் குழந்­தை­க­ளையும் ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தற்­காக பெற்றோர் இலத்­தி­ர­னியல் கரு­வி­களின் துணையை நாடு­வது பெரு­வா­ரி­யாக நடக்­கின்ற ஒரு விட­ய­மாக இருக்­கி­றது. இது ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல. ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் மூன்று வய­துக்கு குறைந்த சிறு­வர்­க­ளுக்கு இலத்­தி­ர­னியல் கரு­வி­களில் இருந்து வெளிப்­ப­டு­கின்ற திரை வெளிச்சம் ஆபத்­தா­னது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­யதுப் பிரி­வினை சேர்ந்த சிறு­வர்­க­ளுக்கு நேர­டி­யாக இலத்­தி­ரனியல் கரு­வி­களின் திரை­களை காட்­டு­வது, இணை­ய­த­ளங்­களில் உள்­ள­டக்­கங்­களை அவர்­களின் பார்­வைக்கு நேர­டி­யாக கொண்டு செல்­வது தீங்கு விளை­விக்க கூடி­யது என்­பதை வலி­யு­றுத்திக் கூறு­கின்ற உலக சுகா­தார நிறு­வனம் குழந்­தைகள் ஐந்து வய­தினை அடை­கின்ற வரை பௌதீக ரீதி­யான, உடல் இயக்­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய செயற்­பா­டு­களில் பெற்றோர் பிள்ளைகளை ஈடு­ப­டுத்து­வது சிறந்­தது என்­ப­தையும் பரிந்­துரை செய்­கி­றது.
சில பெற்றோர் தமது சிறு பிள்­ளை­களின் மழலைப் புகைப்­ப­டங்­க­ளையும் வீடியோ காட்­சி­க­ளையும் உற­வி­னர்­க­ளு­டனும் பொது­வெ­ளியில் உள்ள ஏனை­ய­வர்­க­ளு­டனும் பகிர்ந்து கொள்­வ­துண்டு. தமது சந்­தோ­ஷத்தின் மேலீட்டால் பெற்றோர் இவ்வாறு செய்ய முடியும். இது பல்வேறு வழிகளில் ஆபத்தானதாக அமைய முடியும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக வருகின்ற பொழுது அவர்களின் இணையதள பாதத்தடத்தினை இது காட்டிக் கொடுக்கிறது. அவர்களின் அடையாளம் சார்ந்து இருக்க வேண்டிய தனிப்பட்ட விடயங்களை இவை காட்டிக் கொடுக்கின்றன. எனவே குழந்தைகளின் புகைப்படங்களை மிக சாதாரணமாக இணை­ய­த­ளத்தில் வெளி­யி­டு­கின்ற பெற்றோர், பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும்.

நான்கு வயதை அடைந்த ஒரு குழந்தை கண்­டிப்­பாக இலத்­தி­ற­னியில் கரு­வி­களின் பயன்­பாட்­டையும் அக்­க­ரு­விகள் கொண்­டி­ருக்­கின்ற பல்­வேறு விண்­ணப்­பங்­க­ளையும் பயன்­ப­டுத்தி இருக்க முடியும் அல்­லது கேள்­விப்­பட்­டி­ருக்க முடியும். சில பெற்றோர் கைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக தொலைக்­காட்­சியை பார்­வை­யி­டு­வது ஆபத்­தா­ன­தல்ல என கரு­து­கின்­றனர். இங்கு எந்த கருவி ஆபத்­தா­னது என்­பது ஒரு பிரச்­சனை அல்ல. ஆனால், எவ்­வ­ளவு நேரம் சிறு­வர்கள் இல்­லத்­த­ர­ணியில் கருவிகளில் தமது கண்களை பறிகொடுக்கிறார்கள் என்பதே முக்கியமானது.
(தொடரும்…)

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.