பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு

0 137

நபீலா இக்பால்

2025 பெப்­ர­வரி 10 –13 வரை ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் “பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து பாகு­பா­டு­க­ளையும் ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வில், இலங்­கையின் மீளாய்வு தொடர்­பாக இலங்கை அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.

பெண்­கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு (WAN) எனும் அரச சார்­பற்ற நிறு­வ­னத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இலங்கை அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களின் ஒரு பங்­கேற்­பா­ள­ராக 9வது கால­கட்ட CEDAW மீளாய்வில் கலந்து கொண்­டது மிகவும் மகிழ்ச்­சி­க­ர­மான உணர்­வாக இருந்­தது. இந்த மீளாய்வில் ஒரு சிவில் சமூ­க­மாக எமக்கு இருந்த பொறுப்பின் அடிப்­ப­டையில் இலங்­கையின் முன்­னேற்­றங்­களை மீளாய்வு செய்­வ­தற்கு உதவும் வகையில் பல வாரங்கள் ஓய்­வின்­றிய உழைப்பில் நிழல் அறிக்கை ஒன்­றினை தயார் செய்­தி­ருந்தோம். அதே நேரம் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தயார்­ப­டுத்­த­லின்­றிய அறிக்­கை­ போ­லல்­லாது நாங்கள் மிகுந்த தயார்­ப­டுத்­த­லு­ட­னேயே சென்­றி­ருந்தோம்.

பல­வா­றான எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் நான் எனது பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருந்­தாலும் யதார்த்­தத்தில் எனக்கு கிடைத்த அனு­பவம் உண்­மையில் சற்று வித்­தி­யா­ச­மா­னது. இலங்­கையில் புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்கம் எமது உரி­மைகள் குறித்து மிகவும் கரி­ச­னை­யுடன் தமது திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வார்கள் என்ற நம்­பிக்கை, நான் உட்­பட அனை­வ­ருக்கும் இருந்­தது. ஆனால் பெண்கள் சிறு­வர்கள் மற்றும் இல­குவில் பாதிப்­ப­டை­யக்­ ­கூடிய மக்­க­ளுக்­கான கொள்­கைகள் தொடர்பில் தாம் வெற்றி பெற்­ற­தாக கூறும் தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம், இது­வரை மிகக் குறைந்த அக்­க­றை­யி­னையே இது தொடர்பில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக எனக்கு உணர்த்­தி­யது. மேலும் இவ் அர­சாங்கம் செல்லும் பாதை எமது நாட்டின் எதிர்­காலம் தொடர்­பான பல்­வேறு கேள்­வி­க­ளையும் என்னுள் எழுப்­பி­யது.

தற்­போ­தைய இலங்கை அர­சாங்­க­மா­னது ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் இணைந்த உடன்­ப­டிக்கை ஒன்றின் அறிக்­கை­யிடல் செயல்­மு­றையில் பங்­கு­பற்றும் முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும். CEDAW மாநாட்டின் கீழ் இலங்­கையின் பொறுப்­புகள் மற்றும் செயற்­பா­டுகள் உலகின் பல்­வேறு பகு­தி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெண் உரி­மைகள் தொடர்பில் உயர் தகை­மை­களை கொண்ட 23 சுயா­தீன நிபு­ணர்­களின் குழுவால் மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்­றது. இலங்கை 1981 ஆம் ஆண்டு CEDAW உடன்­ப­டிக்­கை­யினை ஏற்றுக் கொண்டு ஒப்­ப­மிட்­ட­தி­லி­ருந்து பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை களைதல் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை நிறு­வ­னத்­திற்கு பொறுப்­புக்­கூ­று­வ­தற்கும், அறிக்­கை­யி­டு­வ­தற்கும் அரசு என்ற ரீதியில் கட­மைப்­பட்­டுள்­ளது. 2017 ஆம் ஆண்டு இறு­தி­யாக இடம் பெற்ற மீளாய்வின் பின்னர் கொவிட்-19 கார­ண­மாக தாம­தித்­தி­ருந்த அறிக்­கை­யிடல் செயல் முறை­யா­னது இம்­முறை 9 ஆவது காலப்­ப­ரு­வத்தில் இடம்­பெறும் CEDAW குழு­விற்­கான அறிக்­கை­யி­ட­லாகும்.

முதல் அம்­ச­மாக, இலங்­கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சரோஜா சாவித்­திரி போல்ராஜ் தமது அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை CEDAW மீளாய்வு குழு­வி­ன­ருக்கு தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டார். அவ­ரது அறி­முக உரை சிறப்­பா­ன­தாக இருந்­தது. அமைச்சர் ஒரு சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த பெண். அதிலும் குறிப்­பாக தொழி­லாளர் வர்க்­கத்தைச் சேர்ந்த ஒரு தாய், சமூக ஆர்­வலர், தொழிற்­சங்­க­வாதி. மிக முக்­கி­ய­மாக, தெற்­கி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர். இவ்­வா­றான பின்­பு­லத்தைக் கொண்ட மகளிர் சிறுவர் விவ­கார அமைச்­சரை இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச அறிக்கை ஒன்றை சமர்ப்­பிப்­ப­தற்­காக அனுப்­பி­யது இதுவே முதல் தட­வை­யாகும். இதன் மூலம் CEDAW குழு உறுப்­பி­னர்கள் உண்­மையில் மிகவும் கவ­ரப்­பட்­டார்கள். அவ­ரது முன்­வைப்பின் ஆரம்பம் மிகவும் உறு­தி­யாக இருந்­தது ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக விரைவில் பல்­வேறு தளர்­வுகள் தோன்ற ஆரம்­பித்­தன.

அமைச்­சர் நடை­மு­றைக்கு ஏற்ற ஒரு­வ­ராக தோன்­றினார். தனது பயணம் நீண்­டது என்றும் பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார். தனது அறிக்­கை­யினை நிறுத்தி, நிதா­ன­மாக வாசித்தார். இயல்­பா­கவே அதில் உண்­மைத்­தன்மை இருந்­தது. ஆனால் அவ­ரது குழுவில் இருந்த மற்­ற­வர்­களின் வெளிப்­ப­டுத்­து­கை­யா­னது, முழு­மை­யாக உண்மை தன்மை வாய்ந்­தது என்று சொல்­வ­தற்­கில்லை. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பிர­தி­நிதி மிகவும் மெது­வா­கவே பேசினார். அவ­ரது முன்­வைப்­பா­னது, அதிகம் குற்­ற­வியல் சட்டம் தொடர்­பா­கவே இருந்­தது. CEDAW அரச மீளாய்வு நேர வரை­ய­றை­யா­னது உடன்­ப­டிக்­கையின் உப­வி­திகள் தொடர்பில் கலந்­தா­லோ­சிப்­ப­தற்கு ஐந்து மணித்­தி­யா­லங்கள் என வரை­ய­றைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் முதல் சில மணித்­தி­யா­லங்கள் உடன்­ப­டிக்கை உப­வி­தியின் 1 மற்றும் 2 தொடர்பில் மட்­டுமே விடை­ய­ளிப்­ப­தற்கு நேரம் செல­வ­ழிக்­கப்­பட்டு காலம் இழுத்­த­டிக்­கப்­பட்­டது. இவ் உப­வி­தி­க­ளா­னவை பாகு­பா­டு­க­ளுக்­கான வரை­வி­லக்­க­ணங்­க­ளையும், பாகு­பா­டு­களை ஒழிப்­ப­தற்­கான அரசின் கட­மைகள் தொடர்­பி­லுமே ஆலோ­சிக்கும் ஒரு விட­ய­மாகும். இது நேரத்தை வீண­டிக்கும் அர­சாங்­கத்தின் ஒரு தந்­தி­ரோ­பாய உத்­தி­யாக இருக்­கலாம் என்று சபையில் பலர் கிசு­கி­சுத்ததை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­தது. அமர்வு நிறை­வ­டைந்­ததன் பின்னர், நான் CEDAW அமைப்பின் உறுப்­பி­னர்­களை சந்­தித்த பொழுது, அவர்கள் அனை­வரும் ஒரே விட­யத்தை கூறி­னார்கள். அதா­வது, நாங்கள் இன்னும் மேல­தி­க­மான சில கேள்­வி­களை தொடுக்க எத்­த­னித்த பொழுது, உங்­க­ளது அர­சாங்கம் அதற்கு நேர­டி­யாக பதில் அளிப்­பதில் ஆர்வம் காட்­ட­வில்லை என்­பதே அது.

CEDAW குழுவின் அறிக்­கை­யாளர், அர­சாங்­கத்­தினால் விதிக்­கப்­படும் மர­ண­தண்­டனை தீர்ப்­புகள் குறித்தும், குறிப்­பாக மரண தண்­டனை சட்டம் தொடர்பில் பூரண அறி­வற்ற பெண்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக வழங்­கப்­படும் மரண தண்­டனை தீர்ப்­புகள் தொடர்­பிலும் பெண்­க­ளினால் இழைக்­கப்­படும் குற்­றங்கள் தொடர்பில் தனி­யான தக­வல்கள் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றதா என்­பது தொடர்­பிலும் வின­வினார். இதற்கு பதில் அளித்த இலங்கை அர­சாங்கம், இலங்­கையில் மரண தண்­டனை தீர்ப்­புகள் வழங்­கப்­பட்­டாலும் 1976 ஆம் ஆண்டு முதல் மரண தண்­ட­னை­யினை அமுல்­ப­டுத்தும் முறைமை ஒழிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தனர்.

அர­சாங்கம் பதி­ல­ளிக்க தவ­றிய முக்­கி­ய­மான ஒரு கேள்வி என்­ன­வென்றால், இலங்­கையின் நீதி­மன்­றங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் இது­வரை 8 பெண்­க­ளுக்கு மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. மனித உரி­மை­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணி­களின் நிழல் அறிக்­கை­யொன்றில் 2023 ஆம் ஆண்டில் இலங்கை நீதி­மன்­றங்கள் 2 பெண்கள் உட்­பட 101 பேருக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. ஆனால் இது­வரை மரண தண்­ட­னை­யினை எதிர்­நோக்­கி­யுள்ள நபர்­களின் மொத்த இற்றைப் படுத்­தப்­பட்ட எண்­ணிக்­கை­யினை நீதி அமைச்சு வெளி­யி­ட­வில்லை. இருப்­பினும், ஜன­வரி 2024 வரையான புள்ளிவிபரங்களின்­படி 1187 பேர் இது­வரை மரண தண்­டனை கைதி­க­ளாக சிறையில் உள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இந்த எண்­ணிக்­கையில், பாலின அடிப்­ப­டை­யி­லான தர­வுகள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. CEDAW மீளாய்வு குழு­வி­னரால் கோரப்­பட்ட தக­வல்கள் அர­சாங்­கத்­தினால் முற்­றாக வழங்­கப்­ப­ட­வில்லை. மரண தண்­ட­னை­யினை எதிர்­நோக்கி தாம் தூக்­கி­லி­டப்­ப­டுவோம் என்ற அச்­சத்தில் இருக்கும் நபர்­களின் நிலைமைகள் தொடர்­பிலும் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் மற்றும் சிறு­பான்மை குழுக்­களின் தனியார் சட்­டங்­க­ளினை திருத்­து­வது தொடர்பில் அறிக்­கை­யாளர் கேள்வி தொடுத்­த­போது மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சின் செய­லாளர் கண்டிச் சட்­டத்­தினை சீர்­தி­ருத்­து­வது தொடர்பில் மாத்­தி­ரமே விவ­ரித்தார். முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் அறிக்­கை­யாளர் மீண்டும் கேள்வி தொடுக்கும் வரை அவரால் எது­வித பதில்­களும் அளிக்­கப்­ப­ட­வில்லை.
அறிக்­கை­யா­ளரின் இந்த கேள்­வி­யா­னது, பிழை­யான புரி­த­லுக்­குட்­பட்டு பல உள்ளூர் செய்தி பத்­தி­ரி­கை­களில் வெளி­யி­டப்­பட்டு, முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்ட சீர்­தி­ருத்தம் தொடர்பில் பேசு பொரு­ளாக மாறி­யது.

அந்த உரை­யாடல் இவ்­வாறு இருந்­தது.
அறிக்­கை­யாளர்: “முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் 2022 ஆம் ஆண்டு திருத்­தப்­பட்­டது. ஆனால் அதன் உள்­ள­டக்­க­மான திரு­மணம், விவா­க­ரத்து, மற்றும் பெண்­களை பாதிக்கும் வாரிசு சொத்­து­ரிமை தொடர்பில் பல்­வேறு வேண்­டு­கோள்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன. புதி­தாக சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்டு இவ் விட­யங்­களை மறு­சீ­ர­மைப்­பது தொடர்பில் ஏதேனும் திட்டம் உள்­ளதா?”

(முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் 2022 ஆம் ஆண்டு திருத்­தப்­ப­ட­வில்லை. உண்­மையில் இச்­சட்­ட­மா­னது மிக அரி­தா­கவே திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. ஒரு ஸ்பானிய அறிக்­கை­யா­ள­ராக ஒரு நாட்டின் குறிப்­பிட்ட ஒரு விடயம் பிழை­யாக விளங்கிக் கொள்­ளப்­பட முடியும். ஆனால் அர­சாங்கம் அவரது தவறான புரிதலை திருத்­த­வில்லை. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சீர்­தி­ருத்தம் செய்­வது தொடர்பில் கடந்த 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக பல்­வேறு பெண்கள் அமைப்­பு­களால் பல கோரிக்­கை­களும் வேண்­டு­கோள்­களும் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சீர்­தி­ருத்தம் தொடர்­பான வரைவு அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் இது­வரை சட்­ட­மூ­ல­மாக தாக்கல் செய்­யப்­ப­டா­மலே உள்­ளது.)

ஐ.நா. அறிக்கையாளரின் கருத்துக்கு பதிலளித்த அராசங்க பிரதிநிதி, ‘‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட சீர்­தி­ருத்தம் என்­பது விவா­தத்­திற்கும், ஆலோ­ச­னைக்கும், கலந்­து­ரை­யா­ட­லுக்கும் உட்­பட்ட ஒரு விட­ய­மாக நீண்­ட­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது. ஏனெனில் இது கலா­சார உரி­மைகள் தொடர்­பு­படும் ஒரு விட­ய­மாகும். பிரே­ரிக்­கப்­படும் புதிய சட்ட திருத்­தங்­க­ளா­னது இச்­சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஒரு வச­தி­யான சூழ்­நி­லையை உரு­வாக்­கவும் இந்த சட்டச் சீர்­தி­ருத்­தங்­களை அவர்கள் மீது திணிக்­காமல், சிறந்த சம­நி­லையை கண்­ட­றிந்து அவர்­க­ளா­கவே மாற்­றங்­களை நோக்கி நகர்­வ­தற்­கு­ரிய ஒரு முயற்­சி­யையும் அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது’’ என்றார்.

பதின்ம வயது திரு­ம­ணங்­க­ளினால் ஏற்­படும் இள வயது கருத்­த­ரிப்­புகள், பாட­சாலை இடை­வி­ல­கல்கள் போன்­ற­வற்றை ஏற்­றுக்­கொள்­கி­றோமா? அல்­லது பெண்கள் தம் சொந்த திரு­மண ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட முடி­யாத, பல­தார திரு­ம­ணத்தில் ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள தெளி­வற்ற அதி­கா­ரங்­க­ளினால் முஸ்லிம் பெண்கள், குழந்­தை­களை ஆத­ர­வற்­ற­வர்­க­ளாக மாற்­று­கின்ற கட்­டாய திரு­ம­ணங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கி­றோமா? சமூ­கங்­க­ளுக்கு திரு­ம­ணத்­திற்­கான மிகக்­கு­றைந்த வய­தெல்­லையை அரசு அமுல்­ப­டுத்­து­கின்­றதா? அல்­லது சிறு­வர்­களை பாது­காக்­கின்ற சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றதா? என்ற கேள்­வி­க­ளுக்கு அரசின் பதில்; தாம் அனைத்து சமூ­கங்­க­ளுக்­கு­மான குறைந்த திரு­மண வய­தெல்­லையை தீர்­மா­னிப்­பது தொடர்பில் இன்னும் கலந்­து­ரை­யா­டல்கள் நடாத்­து­கின்றோம் என்­ப­தா­கவே இருந்­தது. ஆகவே அர­சாங்கம் சமூ­கங்­களில் இந்த விட­யங்கள் தொடர்பில் பொருத்­த­மான, வச­தி­யான சூழ்­நி­லைகள் உரு­வா­கா­விட்டால், புதிய சட்­டங்­களை அமல்­ப­டுத்­தாது அப்­ப­டியே விட்டு விடப் போகின்­றதா? முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­ப­டுமா அல்­லது குறைந்த வய­­தெல்­லையை மாத்­திரம் தீர்­மா­னிப்­பதில் இந்த முயற்­சிகள் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டுமா?

இங்கு குறிப்­பி­டத்­தக்க பிரச்­சினை என்­ன­வென்றால் இவ்­வா­றான பதில்­களை நாங்கள் எந்த அர­சாங்­கத்­திடம் இருந்தும் எதிர்­பார்க்க முடியும். ஆனால் தேசிய மக்கள் சக்­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பெண்­க­ளுக்கு வலு­வூட்டும், அதி­காரம் அளிக்கும், குழந்­தை­களை பாது­காக்கும் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் ஆட்சி அமைத்த, பல தரப்­பட்ட பெண்­களை அங்­கத்­த­வர்­க­ளா­கவும் கொண்ட தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஏன் இதற்கு பொருத்­த­மான பதில்­களை அளிக்க முடி­யாது போனது? இவர்­களின் பதில்­களில் நாம் திருப்தி அடைய முடி­யா­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள Statutory Rape (பராயமடையாதவருடன் வயது வந்தவர் உறவு கொள்தல்) தொடர்­பா­கவும், அதில் முஸ்லிம் சிறு­மி­களின் பாது­காப்புக் குறை­பாடு தொடர்­பா­கவும் அரச பிர­தி­நி­திகள் குழு­விடம் கேள்­விகள் தொடுக்­கப்­பட்ட போது, மீளாய்வின் இறுதி பத்து நிமி­டங்­களின் போதும் அதன் பின்னர் எழுப்­பப்­பட்ட தொடர் கேள்­வி­க­ளுக்கும் அவர்­களால் நேர­டி­யாக பதில் அளிக்க முடி­ய­வில்லை. குறிப்­பாக Statutory Rape தொடர்­பான சட்­ட­மா­னது, முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் சட்­ட­பூர்­வ­மாக திரு­மணம் செய்து தம் கண­வ­ருடன் குடும்ப உறவில் ஈடு­படும் 16 வய­திற்­குற்­பட்ட சிறு­மி­க­ளுக்கு பொருந்­தாது. இது பாலியல் வன்­கொ­டுமை செய்த ஒரு குற்­ற­வா­ளியை தண்­டிப்­பதில் இருந்து பாது­காத்து சமூக அழுத்தம் கார­ண­மாக வன்­கொ­டுமை செய்­த­வ­ரையே திரு­மணம் செய்து கொள்ளும் துர்ப்­பாக்­கிய நிலை­மையை ஏற்­ப­டுத்­து­கி­றது. சட்­டத்தில் உள்ள ஒரு பாரிய இடை­வெ­ளி­யையும் குறை­பாட்­டையும் இந்­நி­லைமை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பிர­தி­நிதி , திரு­மண சட்­டங்­களில் செய்ய வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் பரி­சீ­ல­னையில் உள்­ள­தா­கவும் ஆனால் அதற்கு நிறைய சவால்­களை எதிர் நோக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் தொடர்ந்து வலி­யு­றுத்திக் கொண்­டி­ருந்தார். வச­தி­யான சூழ்­நி­லை­க­ளையும், கலா­சாரம் மற்றும் சமூ­கத்தில் உள்ள சமத்­து­வ­மற்ற சட்­டங்­க­ளையும் நியா­யப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த இலங்கை பிர­தி­நி­தி­களின் கருத்­துக்­களை செவி­ம­டுத்­துக்­கொண்­டி­ருந்த மீளாய்வு குழுவின் தலை­வரும் ஒரு முஸ்லிம் பெண்­ம­ணி­யு­மா­கிய திரு­மதி நஹ்லா ஹைதர் எல் அத்தால், தனது மௌனத்தை கலைத்து மீளாய்வு தொடர்­பான அவரின் இறுதி வார்த்­தை­களை கூறி முடித்த பொழுது , அது இலங்கை அரச பிரதி நிதி­க­ளுக்கு மிகவும் சங்­க­ட­மான ஒரு சூழ­லாக இருந்­தது.

நஹ்லா ஹைதர் தெரி­வித்­த­தா­வது: ” எனது நாட்டின் (லெபனான்) அனு­பவம், எனது சமூ­கத்தின் பன்­மு­கத்­தன்மை, இந்த விடயம் தொடர்பில் தற்­போது கருத்­துக்­களை எழுதும் முற்­போக்­கான சிந்­த­னை­யுள்ள இஸ்­லா­மிய அறி­ஞர்கள் மற்றும் முஸ்லிம் நாடு­களில் இருந்து உரு­வாகும் பல்­வேறு நல்ல மாற்­றங்கள் கார­ண­மாக அவற்றின் பெறு­ம­தியை உணர்ந்து அனை­வரின் நம்­பிக்கை சுதந்­தி­ரத்தை மதிக்கும் அதே­வேளை, ஆண்­களை விடுத்து ஒரு நாட்டின் பெண்கள் மற்ற பெண்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் சம­மாக நடாத்­தப்­ப­டாத இந்­நி­லையை நோக்­க­ வேண்டும்” என்றார்.

பெண் மனித உரிமை பாது­கா­வ­லர்­களை (WHRD) அரசு நடத்­து­ம் விதம் தொடர்பில் நேபா­ளத்தைச் சேர்ந்த குழு உறுப்­பினர் கேள்வி எழுப்­பினார். குறிப்­பாக நிதி வழங்­க­லுக்­கான கட்­டுப்­பா­டுகள், பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தியை பெறுதல், அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை கட்­டா­ய­மாக பதிவு செய்தல் தொடர்­பிலும் இக்­கேள்­விகள் தொடுக்­கப்­பட்­டன. மோதல் நடை­பெறும் பகு­தி­க­ளிலும் அதனை சுற்­றி­யுள்ள பரப்­பிலும் உள்ள பெண் செயற்­பாட்­டா­ளர்கள் அரச அதி­கா­ரி­க­ளினால் பல்­வேறு கண்­கா­ணிப்­பு­க­ளுக்கும், நெருக்­கு­வா­ரங்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றார்கள். குழு உறுப்­பி­னரின் இக் கேள்­வி­யா­னது, பெண்­ணு­ரிமை காவ­லர்­களை பாது­காக்க அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என்­ப­தா­க­வி­ருந்­தது. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பிர­தி­நிதி இதற்கு பதி­ல­ளிக்­கையில்; பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மி­யற்­று­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­படும் சட்­ட­மூ­லங்­களை, சவா­லுக்­குட்­ப­டுத்தும் காலக்­கெ­டு­வா­னது 7 நாட்­க­ளி­லி­ருந்து 14 நாட்­க­ளாக நீடிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் இது அரசு சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தினால் உறு­தி­யாகப் பின்­பற்­றப்­படும் ஒரு பொறி­முறை என்றும் தெரி­வித்தார். இந்த பதி­லா­னது, அரங்கில் இருந்த அனைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளி­டையே ஒரு அதிர்ச்­சி­யான பெரு­மூச்சை வெளிப்­ப­டுத்­தி­யது. மேலும், வெளிவிவ­கார அமைச்சின் பிர­தி­நிதி பதில் அளிக்­கையில், இலங்­கையில் ஒரு சுறு­சு­றுப்­பான சிவில் சமூ­கம் இருப்­ப­தா­கவும் பயங்­க­ர­வா­தத்­திற்­கான நிதி உதவி மற்றும் பணத் தூய்­மை­யாக்கல் குறித்து தாங்கள் கரி­சனை கொள்­வதால் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான செய­லகம் அதன் செயல்­மு­றை­களை நெறிப்­ப­டுத்த உத­வு­கின்­றது என்றும் தெரி­வித்தார். இல­குவில் பாதிப்­ப­டையக் கூடிய சமூ­கங்­க­ளுடன் நேர­டி­யாக களத்தில் பணி புரியும் பெண் உரிமை பாது­கா­வ­லர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்புபடுத்தி ஒரு சர்­வ­தேச அரங்கில் கூறு­வது பொருத்­த­மான பதில் அல்ல.

ஜெனி­வா­வுக்கு செல்­வ­தற்கு முன்பு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் அர­சாங்கம் எது­வி­த­மான சந்­திப்­பு­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. உண்­மையில் இதற்கு முந்­தைய அரச பிர­தி­நி­திகள் சிவில் சமூ­கத்­து­டனும் நிழல் அறிக்­கை­களை தயார் செய்யும் அமைப்­பு­க­ளு­டனும் குறைந்­த­பட்சம் இறுதி நேர சந்­திப்­பு­க­ளை­யா­வது மேற்­கொண்டு ஆலோ­ச­னை­களை பெற்­றி­ருந்­தார்கள். ஆனால் துர­திஸ்­ட­வ­ச­மாக இம்­முறை நிழல் அறிக்­கை­களை சமர்ப்­பித்த மற்றும் CEDAW குழு உறுப்பினர்களுக்கு தொடராக விளக்கம் அளித்து வந்த பெண்களின் குழுக்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகளை முதன்முறையாக ஜெனிவாவிலேயே சந்தித்தனர். அரசாங்கத்தின் இவ்வாறான தயார்படுத்தல் நிலை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தங்களுடைய உள்ளடங்கலான தன்மை மற்றும் கீழ்மட்ட தரப்பினருடனான ஆலோசனைகள் தொடர்பில் மிகவும் பெருமையாக பிரசாரம் செய்தனர் . இந்தச் சமன்பாட்டில் சிவில் சமூகங்கள், பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்படவில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. குறிப்பாக, அரசாங்கம் தமது செயற்பாடுகளை முறையாக நிறைவேற்றாத இடங்களில் அதனை நிவர்த்தி செய்யும் பங்காளராக அரச சார்பற்ற நிறுவனங்களே காணப்படுகின்றன.

மதிப்பீட்டு மீளாய்வின்போது தெரிவிக்கப்பட்ட பல அரச பிரதிநிதிகளின் பதில்களானது, முந்தைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம் நிறுவப்பட பிரேரிக்கப்பட்டுள்ள “தேசிய பெண்கள் ஆணைக்குழு” எனும் இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. மேலும் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு சிவில் சமூகத்தின் பலமான ஆதரவு தேவைப்படுகின்றது. இந்த அரசாங்கம் உண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று விரும்பினால், அவர்களின் செயற்பாட்டு வட்டத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அது மட்டுமல்லாது தங்களது சேவைகளையும் உதவிகளையும் வழங்கும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கடமையாற்ற வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

அண்மையில் நிறைவடைந்த CEDAW அமர்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மற்றவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் மாற்றுக் குரல்களுக்கு தடையாக இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுமளவுக்கு தெளிவான கேள்விகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.