இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: பிரதிவாதி – ‍ சட்ட மா அதிபர் ஒரே நிலைப்பாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்

0 146

எப்.அய்னா

பொது­பல சேனா அமைப்பின் செயலாளர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரை பிணையில் விடு­விக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று முன் தினம் (25) உத்­த­ர­விட்­டது.

அதன்­படி, கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி, ஞான­சார தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணை­யிலும், தலா 1 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான‌ இரண்டு சரீரப் பிணை­யிலும் விடு­விக்க உத்­த­ர­விட்டார்.

தண்­ட­னைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­துள்­ளதால், தன்னை பிணையில் விடு­விக்கக் கோரி, ஞான­சார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசா­ரித்த பின்னர், கொழும்பு உயர் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார்.
ஞான­சார தேரர் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள சீராய்வு மனு, நேற்று முன் தினம் (25) கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் நீதிவான் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­துடன் 1500 ரூபா அப­ரா­தமும் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு கடந்த ஜன­வரி 9 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் பசன் அம­ர­சே­ன‌வால் அறி­விக்­கப்­பட்­டது. குறித்த தீர்ப்பு ஏற்­க­னவே மூன்று முறை ஒத்தி வைக்­கப்­பட்ட நிலையில் கடந்த ஜன­வரி 9 ஆம் திகதி, தீர்ப்­ப­றி­விப்­ப­தற்­காக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு முன்­னைய வழக்கு திக­தியில் மன்றில் ஞான­சார தேரர் ஆஜ­ரா­காமல் இருந்த போதும், ஜன­வரி 9 ஆம் திகதி பிர­தி­வா­தி­யான ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞான­சார தேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்தது.

கடந்த 2016 ஜூலை 8, அன்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்­பான அறிக்கை மத நல்­லி­ணக்­கத்தை மீறு­வ­தா­கவும், அதன்­படி, குற்­ற­வியல் சட்­டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் இழைக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“கடந்த 2016 ஜூலை 8 ஆம் திகதி அன்று கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் பிர­தி­வா­தி­யான ஞான­சார தேரர் தெரி­வித்த சில கருத்­துக்கள் முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கை­களை அவ­ம­தித்­த­தாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பின் விதிகள் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ) பிரிவின் படி, மத நம்­பிக்­கை­களைப் புண்­ப­டுத்தும் வகையில் செயற்பட முடி­யாது. முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கைகள் அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை பிர­தி­வாதி தொடர்­பு­டைய ஊடக மாநாட்டில் வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊடாக‌ தெளி­வாகத் தெரி­கி­றது. அந்த கருத்­துக்கள் அலட்­சி­யத்தால் செய்­யப்­பட்­டவை அல்ல, மாறாக பிர­தி­வா­தியால் வேண்­டு­மென்றே வெளி­யி­டப்­பட்­டன என்­பதும் தெளி­வா­கி­றது. அதன்­படி, பிர­தி­வாதி வேண்­டு­மென்றே தொடர்­பு­டைய இந்த குற்­றத்தைச் செய்­த­தாக வழக்கு விசா­ர­ணையில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி, பிர­தி­வா­திக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நியா­ய­மான சந்­தே­கத்­திற்கு இட­மின்றி முறைப்­பாட்­டாளர் தரப்பால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் பிர­தி­வா­தியை குற்­ற­வாளி என இந்த நீதி­மன்றம் தீர்­மா­னிக்­கின்­றது.’ என நீதிவான் பசன் அம­ர­சேன தீர்ப்­ப­றி­வித்து குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து பிர­தி­வாதி சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி காமினி அல்விஸ், இந்த முடிவை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன் முறை­யீட்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்­தி­ருந்தார்.

இம்­மனு தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைக்க எதிர்ப்­பார்ப்­ப­தாக ஆரம்­பத்தில் சட்ட மா அதிபர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் நேற்று முன்தினம் இம்­மனு விசா­ர­ணைக்கு வந்த போது, ஞான­சார தேரர் சார்­பாக சட்­டத்­த­ரணி சஞ்­சய ஆரி­ய­தாச மற்றும் சட்­டத்­த­ரணி இரேஷ் சென­வி­ரத்ன ஆகி­யோ­ருடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி காமினி அல்விஸ், நீதிவான் நீதி­மன்­றத்தால் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­பட்ட ஒரு பிர­தி­வாதி பிணை கோரி மேன்­மு­றை­யீடு செய்யும் போது, ​​பிணைச் சட்­டத்தின் 19(2) இன் கீழ் மட்­டுமே அவர் பிணையில் விடு­விக்­கப்­பட முடியும் என்று நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார்.

அதன்­படி, ஒரு பிர­தி­வா­திக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களின் தீவி­ரத்­தன்மை மற்றும் அவ­ரது முந்­தைய நடத்­தையின் அடிப்­ப­டையில் மட்­டுமே பிணை விண்­ணப்­பத்தை பரி­சீ­லிக்க முடியும்.

இருப்­பினும், அந்த சட்டப் பிரிவை கணக்கில் எடுத்­துக்­கொள்­ளாமல் பிணை வழங்க எந்த விஷேட கார­ணி­களும் இல்லை என்று கூறி, கொழும்பு மேல­திக நீதிவான் பிணை வழங்க மறுத்­தது முற்­றிலும் சட்­டத்­திற்கு எதி­ரா­னது என்று சட்­டத்­த­ரணி அல்விஸ் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது மேன்­மு­றை­யீட்­டுக்கு உட்­பட்ட ஒரு பிர­தி­வா­திக்கு பிணை வழங்­கும்­போது, ​​ஒரு நீதிவான் பிணைச் சட்­டத்தின் பிரிவு 19(2) ஐ மட்­டுமே கணக்கில் எடுத்­துக்­கொள்ள வேண்டும் என்று சட்­டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்­பினும், விஷேட கார­ணிகள் எதுவும் இல்லை என்று கூறி, பிர­தி­வா­தியின் பிணை விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்த நீத­வானின் முடிவு, சட்­டத்­தின்­படி வழங்­கப்­பட்ட உத்­த­ரவு அல்ல என்று அரச சட்­ட­வா­தியும் கூறினார். அதனால் தகுந்த உத்­த­ரவைப் பிறப்­பிக்­கு­மாறு நீதி­மன்­றத்தை அவர் கோரினார்.

முன் வைக்­கப்­பட்ட விடயங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.