ஹஜ் குழுவின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுமா?

0 115

றிப்தி அலி

அரச ஹஜ் குழுவின் செயற்­பா­டு­களில் ஹஜ் முகவர் சங்­கங்­களும் அதிக செல்­வாக்குச் செலுத்தி வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அரச ஹஜ் குழு­விற்­கான தனி­யான அலு­வ­ல­க­மொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்­கப்­பட்­டது. இந்த அலு­வ­லகம் ஹஜ் முகவர் சங்­கங்­களின் நிதி­யு­த­வி­யி­லேயே அமைக்­கப்­பட்­டது.

இந்த விடயம் அப்­போது பாரிய விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­யி­ருந்­தது. அது மாத்­தி­ர­மல்­லாமல், கடந்த 2023ஆம் ஆண்டு ஹஜ் தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பியா சென்ற இலங்கை தூதுக் குழு­விற்­கான விமான டிக்­கெட்கள், ஹஜ் முகவர் சங்­க­மொன்றின் தலை­வரின் முகவர் நிறு­வ­னத்­தி­னாலேயே கொள்­வ­னவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. குறித்த ஹஜ் முகவர் சங்­கத்தின் தலை­வரும் இந்த தூதுக்­கு­ழு­வுடன் சவூதி அரே­பியா சென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­ற­மையின் கார­ண­மாக ஹஜ் குழு மீது முஸ்­லிம்கள் நம்­பிக்கை இழந்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தினை அடுத்து புதிய ஹஜ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஹஜ் குழுவின் மீது இலங்கை முஸ்­லிம்கள் அதிக நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். எனினும், இந்த ஹஜ் குழுவின் செயற்­பா­டு­க­ளிலும் ஹஜ் முகவர் சங்­கங்கள் அதிக செல்­வாக்குச் செலுத்தி வரு­கின்ற விடயம் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

புதிய ஹஜ் குழுவின் ஊடக சந்திப்பு கடந்த ஜன­வரி 31ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இந்த வருடம் ஹஜ் கட­மைக்­காக செல்ல எதிர்­பார்த்­துள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு ஹஜ் குழு மற்றும் திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால செயற்­பா­டுகளை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த ஊடக சந்திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இதற்­கான அழைப்­புகள் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்­கத்தின் தலை­வ­ரான எம்.ஆர்.எம். றிஸ்­மி­யி­னா­லேயே ஊடகங்களுக்கு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுலார், திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்­பாளர் என். நிலோபர் மற்றும் கணக்­காளர் எஸ்.எல்.எம். நிப்ராஸ் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் பங்­கேற்­றி­ருந்­தனர் என திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

எனினும், ஹஜ் முகவர் சங்­க­மொன்றின் தலை­வ­ருக்கு மிகவும் நெருக்­க­மான ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வரும் இந்த ஊடக மாநாட்டின் அதிதிகள் தரப்பில் அமர்ந்­தி­ருந்­ததை புகைப்­ப­டங்கள் வாயி­லாக காண முடிந்­தது.

ஹஜ் முகவர் சங்­க­மொன்றின் தலை­வ­ரினால் விடுக்­கப்­பட்ட இந்த அழைப்பின் கார­ண­மாக அவரினால் தெரிவு செய்யப்பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ரமே குறித்த ஊடக சந்திப்பு தொடர்பில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் கார­ண­மாக ஹஜ் விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அறிக்­கை­யிட்டு வரு­கின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களும் ஊடக நிறு­வ­னங்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, அரச ஹஜ் குழுவின் தலை­வ­ருடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லிற்­க­மை­வா­கவே அகில இலங்கை ஹஜ் முகவர் சங்­கத்தின் தலை­வ­ரான எம்.ஆர்.எம். றிஸ்­மி­யினால் இந்த ஊடக மாநாட்­டுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தாக திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

ஊடக மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்­வ­தற்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உள்ள நிலையில் ஹஜ் முகவர் சங்­கத்தின் ஊடாக குறித்த ஊடக சந்திப்புக்கான அழைப்­பிதழ் அனுப்­பப்­பட்­டமை குறித்து கேள்வி எழுவதில் நியாயமிருக்கிறது.

அதே­வேளை, இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஹஜ் முகவர் சங்­கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் மற்றும் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்­கத்தின் தலைவர் எம்.ஆர்.எம். றிஸ்மி ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன் ஊடாக ஹஜ் குழுவின் தீர்­மா­னங்­களில் ஹஜ் முகவர் சங்­கங்கள் தலை­யீடு செய்­கின்றன என்­பது தெளிவாகிறது. இதே­வேளை, அகில இலங்கை ஹஜ் முகவர் சங்­கத்தின் தலை­வரின் அழைப்பில் ஊட­க­வி­ய­லாளர் பங்­கேற்ற இந்த ஊடக மாநாட்­டுக்கு 11,167 ரூபா செலவு ஏற்­பட்­டுள்­ளது. குறித்த செலவு ஹஜ் குழுவின் அனு­ம­தி­யுடன் ஹஜ் நிதி­யி­லி­ருந்து திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது போன்று எதிர்­கா­லத்தில் ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்கள் தலையீடு மேற்கொள்ளுமாயின், ஹஜ் குழு மீதுள்ள நம்பிக்கையினை இலங்கை முஸ்லிம்கள் இழக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதனால், ஹஜ் முகவர் சங்கங்களின் தலையீடுகள் மற்றும் செல்லாக்குகள் எதுவுமின்றி ஹஜ் குழுவின் பணிக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.