சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு

0 120

ஆய்வுகளின் முடிவுகள்
சமூக ஊட­கத்தின் உள­வியல் பாதிப்பு என்­பது ஒருவர் செல­விடும் நேரத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏற்­ப­டு­வ­தில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்­ள­டக்கம், அவர்­க­ளது சமூக வலைத்­தளச் செயல்­பா­டுகள், சக நண்­பர்­க­ளு­ட­னான ஊடாட்டம், தமது அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்­ப­யிற்சி என பல ஏனைய கார­ணி­களில் தாக்கம் செலுத்­து­கின்­றன. இதனால், சமூக ஊட­கத்தில் ஒவ்­வொ­ரு­வரும் வித்­தி­யா­ச­மான தாக்­கங்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். தனிப்­பட்­ட­வர்­களின் பலம், பல­வீனம் என்­ப­வற்றை பொறுத்து அவர்­களில் உள­வியல் தாக்கம் ஏற்­ப­டு­கின்­றது. ஒர்பன் (Orben) மற்றும் நண்­பர்கள் மேற்­கொண்ட ஆய்­வொன்றில் 2022 பொது கலா­சாரம், பரம்­பரை, வர­லாற்று, மற்றும் பொரு­ளா­தார நிலை என்­ப­னவும் இதில் தாக்கம் செலுத்­து­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இன்ஸ்­டா­கிராம், யூடியூப், டிக்டோக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக தளங்கள், சிறு­வர்­களின் வளர்ச்­சியின் இயல்­பான பகு­தி­யாக உள்ள சமூ­கத்­தொ­டர்­பா­ட­லுக்கு வழி ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கின்­றன. சமூக ஊட­கங்கள் குறிப்­பாக தொற்­றுநோய் போன்ற கொடிய நோய்­களால் பாதிக்­கப்­பட்டு அல்­லது பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தனி­மைப்­பட்டு வாழும் காலத்தில் தனி­மையை போக்­கி­யுள்­ளன. எனினும் அவை கவலை, மனச்­சோர்வு அறி­கு­றிகள் மற்றும் உடல்­வாகு பற்­றிய கவ­லைகள் உள்­ளிட்ட மன­நலப் பிரச்­சி­னை­க­ளுடன் அதிக அளவில் இணைக்­கப்­பட்­டுள்­ளன என அமெ­ரிக்க உள­வி­யல் சங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

Riehm மற்றும் நண்­பர்கள் 2015 மேற்­கொண்ட ஆய்­வு­களில் அதிக சமூக வலைத்­தளப் பாவனை பத­க­ளிப்பு மற்றும் மன அழுத்தம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது.

ஏனைய ஆய்­வுகள் பல இதன் தாக்கம் கல்­லூரி மாண­வர்­க­ளி­டையே அதிகம் காணப்­ப­டு­வதை உறுதி செய்­கின்­றன. ஹண்ட் (Hunt) மற்றும் நண்­பர்கள் (2018) மேற்­கொண்ட ஆய்வு முக்­கி­ய­மா­ன­தொரு கண்­டு­பி­டிப்­பினை வெளி­யிட்­டுள்­ளது. இவர்கள் கல்­லூரி ஒன்றில், ஆய்­வுக்­காக எடுத்துக் கொண்ட மாண­வர்­களின் சமூக ஊட­கப் பாவ­னையை வாரம் ஒன்­றுக்கு முப்­பது நிமி­டங்­களால் குறைத்­தனர். இதனை மூன்று வாரங்­க­ளுக்கு தொடர்ந்து செய்­தனர். பின்னர் மாண­வர்­களின் மன­நலம் தொடர்­பான மதிப்­பீ­டு­களை மேற்­கொண்­டனர். சமூக ஊடகப் பாவ­னைக்­காக வழங்­கப்­பட்ட நேரம் குறையக் குறைய மாண­வர்கள் மன அமை­தியை அதிகம் உணர்ந்­த­­மையை அவ­தா­னித்­தார்கள். மற்­று­மொரு ஆய்வுக் கட்­டுரை (Allocott et al, 2020) கல்­லூரி மாண­வர்­களின் சமூக வலைத்­த­ளத்தை நான்கு வாரங்­க­ளுக்கு முடக்­கி­விட்ட பின்னர் அதா­வது மாண­வர்கள் ஒரு மாத கால­மாக எந்த சமூக ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்­தாமல் விட்ட பின்னர் அவர்­கள் வெளிப்­ப­டுத்­திய மன­நலன் மிக உய­ரிய மட்­டத்தில் காணப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது. எனவே, சமூக ஊட­கங்­க­ளி­லி­ருந்து முற்­றாக வில­கி­யி­ருக்க முடி­யா­விட்டால் மிகப் பலனளிக்கக் கூடிய விட­யங்­க­ளுக்கு மாத்­திரம் நேரம் குறிப்­பிட்டு அவற்றைப் பயன்­ப­டுத்­து­வது சிறந்­தது.

Saiphoo & Vahedi ( 2021) ஆகியோர் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்­டாகிராம் ஆகிய தளங்கள் 11 வய­திற்கு குறை­வான சிறு­வர்­களை இணையத் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு இட்­டுச்­செல்­கின்­றன.

தீமை விளை­விக்கக் கூடிய இணை­ய­த­ளங்­களைப் பார்­வை­யி­டுவதால் அதிக உளப்­பா­திப்பு ஏற்­ப­டு­கின்­றது. சமூக ஊட­கங்­க­ளிலும் அவ்­வா­றுதான். பல சமூக ஊடக உள்­ள­டக்­கங்கள் ஆபத்­தா­னவை. தர்க்க சிந்­த­னையை பாதிக்­க­கூ­டி­யவை. அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை. அவற்றில் உள நலனை பாதிக்­கக்­கூ­டிய உள்­ள­டக்­கங்கள் இல­வ­ச­மா­கவும் இல­கு­வா­கவும் கிடைக்­கின்­றன. ஒரு கிளிக்கின் மூலம் நூற்­றுக்­க­ணக்­கான ஆபத்­தான உள்­ள­டக்­கங்கள் கண்­முன்னே தோன்­று­கின்­றன. நாம் அதிகம் எதனை தேடு­கின்­றோமோ அத்­த­கைய உள்­ள­டக்­கங்கள் எம்மேத் தேடி வரு­கின்­றன. எந்த முயற்­சியும் இல்­லாமல் எமது சமூக ஊடகச் சுவர்­களில் வந்து எமக்­காக காத்­தி­ருக்­கின்­றன. முதலில் சிறு­வர்­களும் இளை­ஞர்­களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூ­க ­ஊ­டக உள்­ள­டக்­கங்கள் சிறு­வர்கள் தம்மைத் தாமே துன்­பு­றுத்தத் தூண்­டு­கின்­றன. சில சமூக ஊட­கங்கள் சிறு­வர்கள் தம்மை தாமே துன்­பு­றுத்திக் கொள்­வதை திட்­ட­மிட்டு தூண்­டி­வி­டு­வ­தாக பல ஆய்­வுகள் கரு­து­கின்­றன. சில­போது தற்­கொலை முயற்­சி­க­ளுக்கு இட்டுச் செல்­வ­தா­கவும் அறி­யப்­பட்­டுள்­ளது. உடல்­வாகு தொடர்­பான சிக்­க­லான சிந்­த­னை­களை சிறு­வர்கள் இடையே விதைப்­பதன் மூலம் மற்­ற­வர்­க­ளுடன் தம்மை எப்­போதும் ஒப்­பிட்டுப் பார்க்க தூண்­டு­கின்­றன. இது சிறு­வர்­க­ளி­டையே அதிக தாழ்வுச் சிக்­கலை ஏற்­ப­டுத்­து­கின்­றது. மன உளைச்­சலை மேற்­கி­ளப்­பு­கின்­றது. தம்மை பற்றி சிறு­வர்கள் குறைத்து மதிப்­பி­டு­வதை தூண்­டு­கின்­றது.

Holland மற்றும் Triggemann (2016) மேற்­கொண்ட ஒரு ஆய்வு பெரிதும் சிந்­திக்க தூண்­டு­கின்­றது. இவர்கள் ஊட­கங்கள் உள நலனை பாதிக்கும் விதம் பற்றி மேற்­கொள்­ளப்­பட்ட சுமார் 20 ஆய்­வு­களை வாசித்த பின்னர், சமூக ஊட­கங்கள் சிறு­வர்­க­ளி­டையே உடல் பற்­றிய தவ­றான மதிப்பீட்டை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் ஆபத்­தான உணவுப் பழக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளனர். பல ஆய்­வுகள் சிறு­மிகள் சமூக ஊட­கங்கள் மூலம் நிற, இன, சமய, பால்­நிலை வித்­தி­யா­சங்­களை அடிப்­ப­டை­யா­கக கொண்ட எதிர்ப்­பேச்­சுக்­களை சந்­திப்­ப­தா­கவும் இவை பிள்­ளை­களின் சுய நம்­பிக்கை, கௌரவம், தற்­து­ணிவு என்­ப­ன­வற்றைப் பாதிப்­ப­தா­கவும் அறிய முடி­கின்­றது. எனவே, இத்­த­கைய உள­நலன் பாதிப்­புகள் பற்றி வீடு­களில் பேசப்­பட வேண்டும்.

சிறு­வர்கள் மீது பாலியல் ஆர்வம் கொண்­ட­வர்கள் சிறு­வர்­களை கவர்ந்­தி­ழுக்கும் பொறி­யாக சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இணை­ய­த­ளத்தில் சிறு­வர்­களின் புகைப்­ப­டங்­களை சேக­ரிப்­பது, அவற்றை விற்­பனை செய்­வது, சிறு­வர்கள் மீது பாலியல் நாட்டம் கொண்­ட­வர்­க­ளுக்கு தக­வல்­களை பெற்றுக் கொடுக்­கின்­றனர். சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி சில இணைய வேட்­டை­யா­ளர்கள் சிறு­வர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டி அவர்கள் மீது அக்­க­றையும். அன்பும் காட்­டு­வ­தாக பாவ­னையை செய்து அவர்­களை பாலியல் நாட்­டத்­திக்கு தூண்­டு­ப­வர்கள். இத்­த­கை­ய­வர்கள் சிறு­வர்­களைத் தேடும் இட­மாக சமூக ஊட­கங்கள் உள்­ளன. இலங்­கையில் இது பற்­றிய ஆய்­வுகள் குறை­வாக இருந்­தாலும் இப்­பி­ரச்­சினை உலக அளவில் நடப்­பதை காணாமல் போன மற்றும் துஷ்பிர­யோகம் செய்­யப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான சர்­வ­தேச நிலையம், இன்­டர்நெட் வாட்ச் பவுண்டேஷன் ஆகிய நிறு­வ­னங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

அள­வுக்­க­தி­க­மான சமூக ஊடகப் பாவனை தூக்­க­மின்­மையை அல்­லது தூக்கம் சீரற்­றுப்­போகும் நிலையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. சீரான உறக்கம் உள மற்றும் உடல் வளர்ச்­சிக்கு இன்­றி­ய­மை­யா­தது. Alonzo மற்றும் நண்­பர்கள் (2019) சமூக ஊட­கத்தின் தீமைகள் பற்றி மேற்­கொள்­ளப்­பட்ட 42 ஆய்­வு­களை பகுப்­பாய்வு செய்த பின் அதீத சமூக ஊடகப் பாவனை உறக்­க­மின்மை, தூக்கம் குறை­வ­டைதல், மன உளைச்சல் போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பி­டு­கின்­றனர்.

வீட்டில் இரவு உணவு உட்­கொண்ட பின்னர் உறக்­கத்­திற்கு செல்லும் சிறு­வர்­களும் வயது முதிர்ந்­த­வர்­களும் உறக்­கத்தை முறித்து சமூக ஊட­கங்­களை பாவிப்­பது ஆபத்­தா­னது. இவற்­றுடன் கிர­கித்தல் குறை­பாடு டிஜிட்டல் கரு­வி­களைப் பிரிந்­தி­ருக்க முடி­யாத நிலை என்­ப­னவும் அதீத சமூக ஊடகப் பாவ­னையின் விளை­வாகும்

அவ­சரத் தேவை
சமூக ஊட­கங்கள் உள நலனைப் பாதிக்கும் விதம் பற்றி அறிய மேலும் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை. அவற்றின் தீமைகள் இப்­போதே நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே, பெற்­றோரின் மேற்­பார்வை இல்­லாத சமூக ஊட­கப்­பா­வனை ஆபத்­தா­னது. மேற்­பார்வை என்­பதை பொலிஸ்­கா­ரரைப் போல தவறு விடும்­வரை உற்றுப் பார்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தல்ல. மாறாக, கண்­டிப்­புடன் கூடிய வழி­காட்­டலை வழங்­குதல். குழந்­தைகள் எவ்­வ­ளவு நேரம் சமூக விட­யங்­களை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள், எவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள், யாருடன் நட்­பினை பேணிக் கொள்­கின்­றார்கள் தமது அடை­யா­ளத்­தையும் கருத்­துக்­க­ளையும் எவ்­வாறு வெளிப்­ப­டுத்­துகின்­றார்கள் என்­பதை அறிந்­தி­ருக்­காத பெற்றோர் எப்­போது வேண்­டு­மா­னாலும் துக்­க­க­ர­மான செய்­தியை சந்­திக்­கலாம். Wall Street Journal மேற்­கொண்ட புல­னாய்வு அறிக்­கை­யொன்று அதிர்ச்­சி­க­ர­மான தக­வலை வெளிப்­ப­டுத்தி உள்­ளது. அதா­வது, பேஸ்புக் நிறு­வனம் சிறு­வர்கள் தமது தொழில்­நுட்­பத்தின் வாயி­லாக உள­நலன் பாதிப்­புக்கு உட்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தை அறிந்தும் அந்த உண்­மையை அந்­த­ரங்­க­மாக மறைத்து வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தாகும். சமூக ஊடக நிறு­வ­னங்­களால் நடத்­தப்­பட்ட உள்­ளக ஆய்­வு­களின் மூலம் இன்ஸ்­டா­கிராம் உடல் தோற்றம் பற்­றிய தாழ்வு மனப்­பான்­மையை தூண்­டி­வி­டு­வது அறி­யப்­பட்­டுள்­ளது. எனினும் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் அது தொடர்பில் போதிய பொறுப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்­த­வில்லை. மேலும் இப்­பு­ல­னாய்வு அறிக்கை சமூக ஊட­கங்கள் சிறு­வர்­க­ளி­டையே பதட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வதை உறுதி செய்­துள்­ளது. பல உள்­ளக அறிக்­கைகள் டிக் டாக் போன்ற வலைத்­த­ளங்கள் பயங்­க­ர­மான சமூக விரோத செயல்­க­ளுக்கு இட்டுச் செல்­கின்­றன. பேஸ்­புக்கை பொறுத்­த­வரை உல­களா­விய ரீதியில் இரண்டு தசம் எட்டு பில்­லியன் மக்கள் இதனைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். இதன் மூலம் இக்­கம்­பனி பாரிய வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றது. கொலம்பிய பல்கலைகள் சங்கத்தின் பேராசிரியர்களான Deborah Glasofer மற்றும் Glaude Mellins ஆகியோர் சமூக ஊடகங்கள் சிறுவர்களிடம் தீங்கு விளைவிக்கக்கூடிய நடத்தைகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்த பின்னரும் அவற்றை நீக்குவதற்கு சமூக ஊடகக் கம்பனிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.

சமூக வலைத்­த­ளங்கள் மீள­வ­லி­யு­றுத்தும் தன்­மையை கொண்­டன. இந்த மீள­வ­லி­யு­றுத்தும் தொழில்­நுட்பம் எமது மூளையில் உள்ள ரிவார்ட் (வெகு­மதி) மையத்தை இயங்க வைக்­கின்­றன. எமது மூளை­யி­லி­ருந்து எம்மை களி­யூட்டும் இர­சா­யன பதார்த்­தத்தை – டோபர்­மென்­களை தோற்­று­விக்­கின்­றன. இது பாலி­யலில் மிகை­யு­ணர்வு மற்றும் ஆரோக்­கி­ய­மான சமூக உறவு என்­ப­வற்றின் போதும் வெளிப்­ப­டு­கின்­றன. இணை­ய­தள பாவ­னையின் போது நாம் இணை­யத்­த­ளத்தில் எவ்­வ­ளவு மூழ்­கி­வி­டு­கின்றோம் என்­பதைப் பொறுத்து வெவ்­வேறு அள­வு­களில் வெளிப்­ப­டு­கின்­றன. இதனால் சிறு­வர்­களும் முதி­ய­வர்­களும் சிற்­றின்­ப­ம­டை­கின்­றனர். சமூக ஊடகப் பாவனையின் போது போதையுணர்வை அனுபவிக்கின்றனர்.

(தொடரும்)

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.