தெஹிவளை மீலாத் வித்தியாலயத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்

0 85

றிப்தி அலி

தெஹிவ­ளை மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் நீண்ட கால­மாகக் காணப்­பட்டு வரு­கின்ற இடப்பற்­றாக்­குறை பிரச்­சினை இன்று பூத­ாக­ர­மாக மாறி­யுள்­ளது.
இப்­பா­ட­சா­லையின் மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்­கான அடிப்­படை வச­தி­க­ளின்றி தவிக்­கின்­றனர். 1952 ஆம் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தப் பாட­சாலை பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது.

மொரட்­டுவை முதல் கொம்­பனி வீதி வரை­யான சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்­திற்குள் காணப்­ப­டு­கின்ற ஒரே­யொரு முஸ்லிம் கலவன் பாட­சாலை இது­வே­யாகும்.
தெஹி­வளை பிர­தே­சத்­தினைச் சூழ சுமார் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் மாண­வர்கள் உள்­ளனர். முன்­னணி பாட­சா­லை­களில் அனு­மதி கிடைக்­காத மாண­வர்­களும், சர்­வ­தேச பாட­சா­லையில் அனு­ம­திக்க வசதியற்ற மாண­வர்­க­ளும் இப்பாடசாலையை நாடுவது வழ­மை­.

மேல் மாகாண சபையின் நிர்­வா­கத்தின் கீழுள்ள இந்தப் பாட­சா­லையில் தரம் 1 முதல் உயர் தரம் (கலைப் பிரிவு) வரை மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.
சுமார் ஒன்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்தப் பாட­சா­லையில் 52 மாண­வர்கள் மாத்­தி­ரமே கல்வி கற்றுள்­ளனர். இந்த எண்­ணிக்கை தற்­போது 600ஆக அதி­க­ரித்­துள்­ளது.
சுமார் 23 பேர்ச் காணியில் அமை­யப்­பெற்­றுள்ள இந்தப் பாட­சா­லையில் குறித்த 600 மாண­வர்­களும் ஒரே நேரத்தில் கல்வி கற்க முடி­யாத இடப் பற்­றாக்­குறை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது. இதற்கு தற்­கா­லிக தீர்­வொன்­றினை வழங்கு­வ­தற்கு மேல் மாகாண கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­தது.

இதற்­க­மைய, தெஹி­வளை பிர­தே­சத்­தி­லுள்ள கர­கம்­பிட்­டிய சுமங்க வித்­தி­யா­ல­யத்தில் தெஹி­வளை மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் சில வகுப்பறைகளின் கல்வி நட­வ­டிக்­கை­களை அடுத்த ஒரு வரு­டத்­திற்கு மேற்­கொள்­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
இது தொடர்பில் எழுத்து மூல­மான அறி­விப்பு மேற்­கொள்­ளப்­பட்­டதை அடுத்து இப்­பா­ட­சா­லையின் அபி­வி­ருத்தி சங்­கத்தின் முயற்­சி­யினால் சேக­ரிக்­கப்­பட்ட 30 இலட்சம் ரூபா பணத்தில் சுமங்க வித்­தி­யா­ல­யத்தின் கட்­டிடத் தொகு­தி­யொன்று புன­ர­மைக்­கப்­பட்­டது.
அத்­துடன் மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் மேசைகள் மற்றும் கதி­ரைகள் ஆகி­யன சுமங்க வித்­தி­யா­ல­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த ஜன­வரி 30ஆம் திகதி கல்வி நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

எனினும், குறித்த ஒரு தரப்­பினர் இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் கல்வி நட­வ­டிக்­கை­களை சுமங்க வித்­தி­யா­ல­யத்தில் முன்னெடுக்கும் பணி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டது.
இதே­வேளை, இப்­பா­ட­சா­லை­யி­லி­ருந்து சுமங்க வித்­தி­யா­ல­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்ட மேசைகள் மற்றும் கதி­ரைகள் இன்னும் மீளப் பெறப்­ப­ட­வில்லை. இதனால், மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் மாண­வர்­க­ளுக்குத் தேவை­யான கதி­ரைகள் மற்றும் மேசை­க­ளின்றி நிலத்தில் கல்வி கற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் குறித்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் மேல் மாகாண கல்வி அமைச்சு சில நட­வ­டிக்­கைகளை எடுத்­துள்­ளது. இதற்­க­மைய, களு­போ­வில வைத்­தி­ய­சாலை வீதி­யி­லுள்ள ஆசியர் வள நிலை­யத்­தினை இப்­பா­ட­சா­லையின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு வழங்க இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, இப்­பா­ட­சா­லையின் விவ­காரம் தொடர்பில் தெஹி­வளை பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது சிவில் அமைப்புக்களின் கடமையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.