ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?

0 132

எம்.ஆர்.எம். வசீம்

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வதை தவிர்த்து தகனம் செய்­தமை தொடர்பில் விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில், கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை தகனம் செய்­வ­தற்கு அப்­போது இருந்த அர­சாங்கம் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டி­ருந்­தது. அர­சாங்­கத்தின் இந்த தீர்­மா­னத்­துக்கு எதி­ராக பாரிய எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அர­பு­நா­டு­களின் தூது­வர்கள் ஒன்­றி­ணைந்து இந்த நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு வெளி­வி­வ­கார அமைச்சு ஊடாக அப்­போது இருந்த ஜனா­தி­ப­தியை கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். என்­றாலும் அது நடைபெறவில்லை.

அதே­நேரம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ரான குற்­றப்­பத்­தி­ரத்­திலும் இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த அறிக்­கையில், கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களின் மர­ணச்­ச­டங்­கு­களை மேற்­கொள்­வ­தற்கு ஏற்­ப­டுத்­தி­யுள்ள தடைகள் கார­ண­மாக முஸ்லிம் மற்றும் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.

அத்­துடன் கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு சென்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னமும் விஞ்­ஞான அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தல்ல. ஜெனிவா தீர்­மா­னத்தின் மூலம் மனித உரிமை பேரவை இலங்கை அர­சாங்­கத்­திடம் வேண்­டிக்­கொள்­வது, இது­தொ­டர்பில் பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை மேற்­கொண்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்­பான குற்­றங்கள் ஏற்­பட்­டி­ருந்தால், அவர்­க­ளுக்கு எதி­ராக தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் அர­சாங்கம் முன்னாள் சுகா­தார பணிப்­பாளர் நாய­கத்தை தற்­போதைய சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மித்­துள்­ளது. வைத்­தியர் ஹசித்த பெரேரா கொவிட் தொற்று நிபுணர் குழுவில் இருந்­தவர். இவர்­க­ளுக்கு எதி­ராக எந்த விசா­ர­ணையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கோரிக்­கைக்­க­மைய அர­சாங்கம் இந்த இரண்டு நபர்­க­ளுக்கும் மனித உரி­மையை மீறி செயற்­பட்­ட­மைக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­குமா என கேட்­கிறேன்.

இந்த விட­யத்தில் நாங்கள் மிகவும் பாதிக்­கப்­பட்­ட­துடன் இது சர்­வ­தேச மட்­டத்தில் கதைக்­கப்­பட்ட விட­ய­மாகும். அத­னாலே இது­தொ­டர்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரு­கிறேன். இந்த விட­யத்தில் முஸ்லிம் மக்கள் மாத்­திரம் அல்ல. கத்­தோ­லிக்க மக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். கொவிட்டில் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை மாலை தீவுக்கு அனுப்­பு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­த­வர்கள் இங்கே இருக்­கி­றார்கள். அவர்கள் தற்­போதும் பத­வி­களை வகித்து வரு­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு எதிராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­ப­துடன் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள் மற்றும் நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கு நியா­யத்தை நிலை­நாட்ட வேண்­டி­யதன் தேவைப்­பாடு மற்றும் பொது மக்­களின் கோரிக்­கை­களை கருத்­திற்­கொண்டு அர­சாங்க தரப்­பினர் இழைத்­துள்ள பார­தூ­ர­மான தவ­று­களை விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை இப்­பா­ரா­ளு­மன்றம் நிய­மிக்க வேண்­டு­மென பிரே­ரிக்­கிறேன் என்றார்.

பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்து ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­று­கையில், கொவிட் தொடர்பில் உலக சுகா­தார அமைப்பு வெளி­யிட்­டி­ருந்த வழி­காட்­டலை அனைத்து நாடு­களும் பின்­பற்­றின. யாரும் அதனை மறுக்­க­வில்லை. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அப்­போது இருந்த ஆட்­சி­யா­ளர்கள் உலக சசு­கா­தார அமைப்பின் வழி­காட்­டலை ஏற்­றுக்­கொள்ள மறுத்­ததன் மூலம் பாரிய குற்­றத்தை செய்த ஆட்­சி­யா­ளர்­க­ளாக வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்­ளனர். அதனை யாராலும் மறைக்க முடி­யாது. ஏனெனில் இந்த தீர்­மானம் திட்­ட­மிட்டு, பழி­வாங்கும் நோக்கில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும்.
அத்­துடன் இந்த நட­வ­டிக்கை குறிப்­பிட்ட ஒரு மக்கள் இனத்தை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டது அல்ல. தகனம் மற்றும் அடக்கம் என்­பது ஒரு மதத்­துக்கு மாத்­திரம் உரித்­தான விட­ய­மல்ல. ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பட்­டி­யலை எடுத்­துப்­பார்த்தால் தமிழ், முஸ்லிம், சிங்­கள, கிறிஸ்­தவ இனத்­த­வர்­களின் பெயர்கள் காணப்­ப­டு­கின்­றன. அதனால் இது எமது நாட்டு மக்­களின் இன குழு­மத்தின் மத கலா­சார நம்­பிக்கை உரி­மையை மதிக்­காமல் எடுத்த தீர்­மா­ன­மாகும். அதனால் அந்த அர­சாங்கம் எடுத்த இந்த தீர்­மானம் தெரிந்­து­கொண்டு எடுத்­ததா அல்­லது தெரி­யாமல் எடுத்­ததா என்­பதை நாங்கள் அனை­வரும் தெரிந்­து­கொள்ள வேண்டும்.

அதனால் இது­தொ­டர்பில் தேடிப்­பார்க்க நம்­ப­கத்­தன்மை மிக்க விசா­ரணைக் குழு­வொன்று அவ­சி­ய­மாகும். அதற்கு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்து விசா­ரணை மேற்­கொள்­வதே பொருத்­த­மாகும். பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு யாரை வேண்­டு­மா­னாலும் விசா­ர­ணைக்கு அழைக்க முடியும். அத்­துடன் இந்த சம்­ப­வத்­துக்­காக முன்னாள் ஜனா­தி­பதி மன்­னிப்பு கோரினார். அவர் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­காக இதனை செய்தார். அர­சி­யல்­வா­திகள் தவறு செய்­த­தாலேயே முன்னாள் ஜனா­தி­பதி மன்­னிப்பு கோரினார்.ஆனால் இதில் இருந்த அரச அதி­கா­ரி­களும் இந்த விட­யத்தில் இருந்து அப்­போது இருந்த அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்கி வந்­தார்கள். தற்­போ­துள்ள சுகா­தார அமைச்சின் செய­லா­ளரே அன்று கோட்­ட­பாய ராஜபக்ஷ் அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்ட நிபு­ணர்­கு­ழுவின் தீர்­மா­னங்­களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்கும் ஊடக பேச்­சா­ள­ராக இருந்து வந்தார். அவர் இந்த விட­யத்தை தெரிந்­து­கொண்டு செய்­தாரா அல்­லது தெரி­யாமல் செய்­தாரா என்­பதை நாங்கள் தெரிந்­து­கொள்ள வேண்டும்.
அதனால் இது­தொ­டர்­பான உண்மை நிலையை அறிந்­து­கொள்ள விசா­ரணை மேற்­கொள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்­பினர் விசேட வைத்­திய நிபுணர் நிஹால் அபே­சிங்க உரை­யாற்­று­கையில்,
முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பிரே­ர­ணையில் தொழில்­நுட்ப விடயம் தொடர்பில் எங்­க­ளுக்கு மாற்று கருத்து இல்லை. அதனை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். என்­றாலும் அப்­போ­தைய அர­சாங்­கத்தின் கொள்கை ரீதி­யான தீர்­மானம் கார­ண­மா­கவே கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை தகனம் செய்­வது என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இந்த நட­வ­டிக்கை அர­சாங்­கத்தின் அர­சியல் தேவைப்­பாட்டை கருத்­திற்­கொண்டு எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மா­கவே எமக்கு தோன்­று­கி­றது.

2020 மார்ச் மாதத்­தி­லேயே சுகா­தார சேவை பணிப்­பாளர் கொவிட் நிபுணர் குழுவை நிய­மித்தார். இதில் பல்­வேறு துறை­களை சேர்ந்த 14 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர். இந்த நிபு­ணர்கள் குழு மார்ச் 27 ஆம் திகதி வெளி­யிட்டு இருந்த கொவிட் வழி­காட்­டலில் கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்தல் அல்­லது தகனம் செய்தல் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. உலக சுகா­தார அமைப்பும் தகனம் அல்­லது அடக்கம் என்றே பிரே­ரித்து இருந்­தது. அந்­தப்­பி­ரே­ர­ணை­யையே நிபு­ணர்கள் குழுவும் பிரே­ரித்து இருந்­தது. அதன்­பின்னர் 2020 ஏப்ரல் முதலாம் திகதி சுற்­று­நி­ருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அதில் தகனம் மாத்­திரம் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஏப்ரல் 11 ஆம் திகதி சுகா­தார அமைச்சு தகனம் மாத்­திரம் எனத்­தெ­ரி­வித்து வர்த்­த­மானி அறி­வித்­த­லையும் வெளி­யிட்­டி­ருந்­தது. குறித்த வர்த்­த­மானி அறி­விப்­புக்கு பின்­னரே எமது நாட்டில் தகனம் செய்யும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இது அர­சியல் நோக்­கத்­திற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட செயல் என்­பது தெளி­வா­கி­றது.

மே 26 ஆம் திக­தியே இது தொடர்­பி­ல் கலந்­து­ரை­யாட விசேட நிபுணர் குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்­த­கு­ழு­வுக்கு ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் இலத்­தி­ர­னியல் தொடர்பில் நீண்­ட­கா­ல­மாக ஆய்வு செய்து வந்த பேரா­சி­ரியர் ஒருவர் நிய­மிக்­க­ப்பட்டார். அவர் நிலத்­தடி நீரில் கொவிட் தொற்று உள்­வாங்க முடியும் என்ற கருத்தை தொடர்ந்து வெளி­யிட்டு வந்தார். இந்த கருத்து கார­ண­மா­கவே கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை தகனம் செய்யும் தீர்­மா­னத்­துக்கு வந்­தி­ருக்­கலாம். இந்த கருத்தை அர­சி­யல்­வா­திகள் தங்­களின் தேவைக்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். உண்­மையில் இது தான் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இது மாத்­திரம் அல்­லாமல் இந்த நிபு­ணர்கள் குழு­வினால் பல பிழை­யான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. இதற்கு எதி­ராக நாங்கள் கருத்து தெரி­வித்த போதும் அர­சாங்கம் அதனை ஏற்­றுக்­கொள்­வில்லை. தகனம் செய்­வ­தற்கு எதி­ராக நானும், தொற்று நோய் தொடர்­பான பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் உம் எதிர்ப்பு தெரி­வித்த போதும் அர­சாங்கம் அவரை கண்டு கொள்­ள­வில்லை.

கோட்­ட­பாய ராஜ­பக்ஷ கொவிட் தொடர்பில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள அன்று செய­லணி அமைத்­தி­ருந்தார். அந்த செய­லணி அனைத்து தீர்­மா­னங்­க­ளிலும் தலை­யிட்டு வந்­தது. அவர்­களின் தீர்­மா­னங்­க­ளையே அதி­கா­ரிகள் சுற்­று­நி­ரூ­ப­மாக வெளி­யிட்டு வந்­தனர். சில­வேளை இந்த அதி­கா­ரி­களும் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கலாம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் உதுமா லெப்பை உரை­யாற்­று­கையில்,
கொவிட் மர­ணித்­த­வர்­களை அடக்­கலாம், எரிக்­கலாம் என உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­தி­ருந்த நிலையில், எமது ஜன­சாக்­களை எரிப்­ப­தற்கு எந்த கார­ணமும் இல்லை. அடக்­கு­வ­தற்­கான உரி­மையை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்க வேண்டும் என உலக முஸ்லிம் தலை­வர்­களும் வேண்­டுகோள் விடுத்­தனர். என்­றாலும் அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலையில் ‘ இலங்கை அர­சாங்­கத்தின் பைத்­தி­யக்­கா­ரத்­தனம்’ என்றே முஸ்லிம் தலை­வர்கள் இந்த அர­சாங்­கத்­துக்கு தெரி­வித்­தனர்.

கொவிட் மரணம் தொடர்பில் உலகில் 182 நாடுகளில் ஒரே மாதி­ரி­யான சம்­ப­வமும் இலங்­கையில் மாத்­திரம் மிகவும் கொடூ­ர­மான சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. உண்­மையில் முஸ்­லிம்­களை பொறுத்­த­மட்டில் இது பாரிய அநி­யா­ய­மாகும். அன்று எதிர்க்­கட்­சியில் இருந்­த­வர்கள் தற்­போ­தைய ஜனா­தி­பதி, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் உட்­பட அனை­வரும் இதற்­கான போரா­டி­னார்கள். இதற்­காக நன்றி தெரி­விக்க கட­மைப்­பட்­டுள்ளேன்.

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­கா­கவே எமது ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. அவ்­வாறு இல்­லாமல் வேறு கார­ணங்கள் இல்லை. முத­லா­வ­தாக நீர்­கொ­ழும்பு புகா­ரியின் ஜனாஸா எரிக்­கப்­பட்ட போது நான் எனது உத்­தி­யோ­க­பூர்வ கடித தலைப்பில் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு கடி­த­மொன்றை எழு­தினேன். அதன் பிர­தியை இந்த பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்­ப்பிக்­கிறேன். அதில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இந்த விட­யத்தை செய்ய வேண்டாம் என வலி­யு­றுத்தி இருந்தேன். அர­சாங்­கத்தில் இருந்த பேரா­சி­ரியர் ஒரு­வரும் இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்­டி­ருந்தார். ஆனால் யாரு­டைய பேச்­சையும் கேட்­காமல் கோட்­டா­பய ராஜ­பக்ஷ இந்த அநி­யா­யத்தை செய்தார்.

எனவே இவ்­வா­றான அநி­யாயம் இதற்கு பிற­கா­வது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல. யாருக்கும் இடம் பெறாமல் இருப்­ப­தற்கு இது தொடர்பில் பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு அமைத்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் அத்­துடன் கொவிடில் மர­ணத்­தி­வர்­களின் பெயர் பட்­டி­யலை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிக்­கு­மாறு முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் சுகா­தார அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். ஆனால் இது­வரை சமர்ப்­பிக்­க­வில்லை. அதற்கு என்ன கார­ணமோ தெரி­ய­வில்லை என்றார்.

ஆளுங்­கட்­சியின் உறுப்­பினர் எம்.ஏ.அஸ்லம் உரை­யாற்­று­கையில்,ரவூப் ஹக்­கீமின் பிரே­ர­ணையை முழு மன­துடன் ஏற்­றுக்­கொள்­கிறோம். உலக சுகா­தார அமைப்பு எமது நாட்டில் பல வைத்­திய நிபு­ணர்கள் அர­சாங்­கத்­துக்கு தெரி­வித்த போதும் 189 நாடுகள் அன்று நல்­ல­டக்­கத்­துக்கு அனு­மதி கொடுத்­தி­ருந்த போதிலும் எமக்கு பாரிய அநி­யாயம் இடம்­பெற்­றது. இந்த அநி­யா­யத்தை இந்த நாட்டில் வாழும் எந்­த­வொரு முஸ்­லிம்­களும் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள். இதனை மறக்க முடி­யாத சம்­ப­வ­மாக நாங்கள் காணு­கின்றோம். இந்த தீர்­மானம் நிச்­ச­ய­மாக அர­சியல் நோக்­கத்­துக்­காக எடுக்­கப்­பட்­ட­தாகும். கோவிட் மரணம் மாத்­தி­ர­மல்ல. ஈஸ்டர் தாக்­குதல் சம்­பவம் உள்­ளிட்ட அனைத்து சம்­ப­வங்­களுக்கும் அர­சியல் நோக்­கமே கார­ண­மாகும். அர­சியல் இலா­பத்­திற்­காக இன்னும் என்ன செய்ய போகி­றார்­களோ தெரி­யாது.

என்­றாலும் இவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் இடம் பெறாத வகையில் நங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். இந்த நாட்டில் சிறு­பான்மை மக்கள் யாருக்கும் அநீதி ஏற்­ப­டாது என்ற உறு­தி­மொ­ழியை நாங்கள் வழங்­கு­கிறோம். ரவூப் ஹக்­கீமின் பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் நிச்­ச­ய­மாக நாங்கள் கவனத்திற்­கொள்வோம் என்றார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பினர் எம்.எஸ்.நளீம் உரை­யாற்­று­கையில்,
ரவூப் ஹக்­கீமின் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் அனு­ம­திக்க வேண்டும் என கேட்­டுக்­கொள்­வ­தோடு, இந்த அர­சாங்­கமும் இதனை ஏற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு அமைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். கடந்த அர­சாங்­கத்தில் இந்த அநி­யா­யத்தை செய்­த­வர்கள் மெத்­திக்கா விதா­னகே என்ற பேரா­சி­ரியை கையில் வைத்துக் கொண்டு 20 நாள் குழந்­தை­யையும் விட்டு வைக்­காமல் ஒட்டு மொத்த முஸ்­லிம்­களின் மன­தையும் நோக­டித்துள்­ளனர். 30 வரு­டங்கள் ஆட்சி செய்­வ­தாக வந்த இந்த அர­சாங்கம் இரண்­டரை வரு­டங்கள் கூட தாக்குப் பிடிக்­காமல் நாட்டை விட்டே ஓட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொண்டதற்கு அமைய அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மக்கள் கொவிட் மர­ணங்கள் அடக்கம் செய்­வ­தற்­காக 17 ஏக்கர் காணி­களை வழங்­கி­னார்கள். அங்கு முஸ்லிம்களினது மாத்­திரம் அல்ல அனைத்து இன மக்­களின் ஜனா­சாக்­களும் அடக்கம் செய்ய இட­ம­ளிக்­கப்­பட்­டது.

மேட்டு நில பயிர்ச்­செய்கை மேற்­கொண்ட நிலத்­தையே வழங்­கி­யி­ருந்­தார்கள். ஆனால் அந்த மக்­களின் காணிக்­காக வேறு காணியோ நிவா­ர­ணமோ இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. மஜ்மா நகர் மக்­க­ளுக்கு ஒரு பாட­சாலை இல்லை. 350 குடும்­பங்கள் வாழும் பிள்­ளை­க­ளுக்­காக உட­ன­டி­யாக ஒரு பாட­சாலை அமைத்துக் கொடுக்க பட­வேண்டும். கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு அங்­குள்ள மாண­வர்கள் 10 கிலோ­மீட்­டர்கள் வரை பய­ணிக்க வேண்டி இருக்­கி­றது. எனவே அந்த மக்­களின் காணி­க­ளுக்கு அர­சாங்கம் நிவா­ர­ணத்தை வழங்க வேண்டும் என்றார்.

இறுதியாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்து உரயைாற்றுகையில்,
கோட்டபய ராஜபக்ஷவின் காலத்தின் போது தான் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தான் கோட்டபய ராஜபக்ஷ நாங்கள் தான் நன்றாக செய்தோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையான நடவடிக்கைகளை எழுக்கவில்லை. 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள். இறந்தவர்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டன.

கொவிட் தொற்று தாக்­கத்தின் போது அர­சியல் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டதால் பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டன. சுகா­தா­ரத்­துறை அமைச்சு முறை­யாக செயற்­பட்­டதால் உயி­ரி­ழப்­புக்­களை ஒப்­பீட்­ட­ளவில் குறைத்துக் கொள்ள முடிந்­தது. தவ­றான அர­சியல் தீர்­மா­னத்தால் முஸ்லிம் சமூ­கத்­தினர் எதிர்­கொண்ட நெருக்­க­டி­களை நாங்கள் நன்கு அறிவோம். அதன் தாக்கம் இன்றும் செல்­வாக்குச் செலுத்­து­கி­றது.

இதனால் தான் மக்கள் அந்த அர­சாங்­கத்தை வீழ்த்தி புதிய அர­சாங்­கத்தை தோற்­று­வித்­தார்கள். முறை­யான கார­ணிகள் ஏது­மில்­லாமல் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் ஜனா­சாக்கள் தகனம் செய்­யப்­பட்­ட­மைக்கு எதிர்க்­கட்­சியில் இருக்கும் போது எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.

அர­சியல் தேவை­க­ளுக்­காக சமூக குழுக்­களின் மத உரி­மை­களை நாங்கள் மறுக்­க­வில்லை.கடந்த அர­சாங்­கத்தின் தவ­றான தீர்­மானம் மற்றும் அழுத்­தங்­க­ளினால் சுகா­தா­ரத்­துறை அமைச்சின் அதி­கா­ரிகள் ஒரு­சில தவ­றான தீர்­மா­னங்­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்­துள்­ளார்கள். இந்­நி­லைமை எதிர்­வரும் காலங்­களில் ஏற்­ப­டாது.
கோட்­ட­பய ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தின் தவறான தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.