ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் தெரிவு

0 92

(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலை­வ­ராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக கலீலுர் ரஹ்மான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் கொழும்பில் கூடிய கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போதே இந்த வரு­டத்­துக்­கான புதிய நிர்­வாக உறுப்­பி­னர்கள் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது.

அதன் பிர­காரம் தெரிவு செய்­யப்­பட்ட புதிய நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுக்­கான அங்­கீ­காரம் நேற்று மரு­தா­னையில் உள்ள குப்­பி­யா­வத்தை சன­ச­மூக மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தேசிய மாநாட்டில் வழங்­கப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டது.

அதன் பிர­காரம் சிரேஷ்ட தலைவர் பஷீர் சேகு­தாவூத், செய­லாளர் கலீலுர் ரஹ்மான், பொரு­ளாளர் எச்.எம்.ஹக்கீம், தேசிய அமைப்­பாளர் எம்.பி.காதர், தவிசாளர் மெள­லவி ஐ.எம். மிப்ளால், பிரதித் தலை­வர்­க­ளாக அக்பர் அலி, ஹக்கீம் ஷரீப் ஆகியோர் உட்­பட கட்­சியின் உயர் பீட உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதில் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவுத் உரை­யாற்­று­கையில்,
சுதந்­தி­ரத்­துக்கு பின்னர் எமது நாட்டை பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளுமே ஆட்சி செய்து வந்­தன. இதில் சிறு­பான்மை கட்­சி­க­ளாக தமிழ் கட்­சிகள் மொழியை முன்­வைத்தும் முஸ்லிம் கட்­சிகள் மார்க்­கத்தை சொல்­லியும் அர­சியல் செய்து வந்­தன. ஆனால் இந்த அனைத்­தையும் பின்­தள்­ளி­விட்டு கட­வுளே இல்­லாத ஒரு கட்சி 159 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றது.

ஒரு சிறிய கட்சி பிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் தோற்­க­டித்­து­விட்டு ஆட்­சிக்கு வரு­வ­தற்கு காரணம், பிர­தான கட்­சி­களின் மீதுள்ள மக்­களின் விரக்­தி­யாகும். பாரா­ளு­மன்ற தேர்­தலில் யாழ்ப்­பா­ணத்தில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு ஒரு ஆச­னமும் கிடைக்­க­வில்லை. தேசிய மக்கள் சக்தி 3 ஆச­னங்­களை வெற்­றி­கொண்­டி­ருப்­பது பாரிய விட­ய­மாகும். பழைய அர­சியல் கலா­சாரம் அங்கு தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. என்­றாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நிலை­மை­யை இன்னும் இரண்டு மாதங்கள் செல்­லும்­போது தெரிந்­து­கொள்ள முடி­யு­மாகும்.

ஏனெனில் நாங்கள் வாக்­க­ளித்து அர­சாங்­க­த்தை தெரி­வு­செய்­தாலும் அர­சாங்­கத்தை வழி­டத்­து­வது இந்­தியா, சீனா, ஜப்பான் போன்ற சர்­வ­தேச நாடு­க­ளாகும். எமது நாடு அமைந்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­ன­தொரு கேந்­திர முக்­கி­யத்­து­வ­மான இடத்­தி­லாகும். குறிப்­பாக திரு­கோ­ண­மலை துறை­முகம் இயற்கை துறை­மு­க­மாகும். எந்­தப்­பெ­ரிய கப்­பலை வேண்­டு­மா­னாலும் அங்கு கொண்­டு­செல்­லலாம். அதனால் அந்­நா­டு­களின் பாது­காப்பு கருதி இந்த துறை­மு­கத்தை கைப்­பெற்­றிக்­கொள்ள இந்த நாடு­க­ளி­டத்தில் போட்­டித்­தன்மை இருந்து வரு­கி­றது. மேலும் முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் கட்­சி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வாக்­கப்­பட்­டது. கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக அது இருந்து வந்­தது. ஆனால் தற்­போது அது உரு­வாக்­கப்­பட்ட நோக்கம் தெரி­யாமல் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. அத­னாலே தற்­போது கொழும்­பையும் கிழக்கு மாகா­ணத்­தையும் இணைத்து ஐக்­கிய சமா­தான கூட்­டணி கட்சி உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இளை­ஞர்­களை இலக்­கா­கக்­கொண்டே நாங்கள் செயற்­பட வேண்டும்.

அத்­துடன் ஈஸ்டர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வமும் முஸ்லிம் சமூ­கத்தை உல­க­ளா­விய ரீதியில் வெறுப்­ப­டையச் செய்ய திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லாகும். குண்­டு­களை வெடிக்க வைத்­த­வர்­க­ளுக்கு குண்டு தொடர்பில் எந்த அறிவும் இல்லை என்­பது அவர்களின் செயற்பாடுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.