முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது?

கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் சர்வேஸ்வரன்

0 222

முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்­டத்­து­றையில் நாட்டம் காட்­டு­கின்­றனர். எதிர்­கா­லத்தில் அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்­களால் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ஏ. சர்­வேஸ்­வரன் கேள்வி எழுப்­பினார்.

உஸ்தாத் மன்சூர் எழு­திய இஸ்­லா­மிய ஷரீஆ யதார்த்­தமும் பிர­யோ­கமும் எனும் நூல் வெளி­யீட்டு நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு பேரா­சி­ரியர் சர்­வேஸ்­வரன் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அதி­க­மான முஸ்லிம் பிள்­ளைகள் என்­னிடம் சட்டக் கல்வி பயில்­கி­றார்கள். அதிலும் ஆண் பிள்­ளை­களை விட பெண் பிள்­ளை­களே அதி­க­மாக சட்டம் படிக்­கி­றார்கள். அவர்கள் எதிர்­கா­லத்தில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக வரக் கூடிய வாய்ப்­புக்கள் உள்­ளன. தமது அறிவின் கார­ண­மாக அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக வர முடியும் என்றால் ஏன் அவர்கள் காதி நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என்ற கேள்வி என்­னிடம் இருக்­கி­றது. எனவே நாம் காலத்­திற்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.