அளுத்கம, பேருவளை வன்முறைகள் குறித்த 5 மனுக்கள்: விசாரணைகள் நிறைவு

எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக நான்கு வார கால அவகாசம் தீர்ப்புக்கான மனுவை திகதியின்றி ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

0 151

(எப்.அய்னா)
அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதன்­படி, மனு தொடர்பில் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­க­ளுக்கு நான்கு வாரங்கள் கால அவ­காசம் வழங்­கி­யுள்ள உயர் நீதி­மன்றம், அதன் பின்னர் தீர்ப்பு அறி­விப்­ப­தாக குறிப்­பிட்டு, தீர்ப்­புக்­காக மனுவை திக­தி­யின்றி ஒத்தி வைத்­துள்­ளது.

நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட‌ தலை­மை­யி­லான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்­படை உரிமை மீறல்கள் மனுக்கள் நேற்று முன் தினம் விசா­ரணை செய்­யப்­பட்டு நிறைவு செய்­யப்­பட்­டன.

இம்­ம­னுவில் க‌டந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமி­டங்­களும் ஆற்­றிய உரை (அப­ச­ரண உரை) ஏற்­க­னவே உயர் நீதி­மன்றில் காணொ­ளி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அக்­கா­ணொ­ளியின் திரை வசன அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­ப­தி­ வி­சா­ரணை ஆணைக் குழு, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை நீதி­மன்றில் சமர்ப்­பிக்க உயர் நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்னம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கின்­ற‌னர்.

பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான‌ பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மாலி கரு­ணா­நா­யக்க ஆஜ­ரா­கின்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி தர்­கா­நகர் அதி­கா­ரி­கொட, வெலி­பிட்­டிய, சீனன் வத்த, பேரு­வளை, துந்­துவ, வெலிப்­பன்னை உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் பதி­வா­கின. இந்த வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தவ­றி­யதன் ஊடாக தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர், அப்­போ­தைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அப்­போ­தைய பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை கட்­டளைத் தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்­ளியூ.சி.என். ரண­வன, அபோ­தைய சட்டம் ஒழுங்கு செய­லாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்­லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நிய­மிக்­கப்­பட்ட பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட 9 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

குறித்த வன்­முறை கார­ண­மாக 48 வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இருவர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும், 80 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் (சூட்டுக் காயங்கள் உட்­பட), 17 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­ட­தா­கவும், 2248 முஸ்­லிம்கள் உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்­த­தா­கவும், 79 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் சேத­மாக்­கப்­பட்­ட­தா­கவும் (17 வர்த்­தக நிலை­யங்கள் முற்­றாக அழிப்பு) மனு­தா­ரர்கள் தமது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கு­மாறும், வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டை­யோ­ருக்கு, அதற்கு காரணமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.