‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’

-ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுகுமா அரசு?

0 30

நா.தனுஜா

‘எம்­மீது குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­ட­துடன், ஒடுக்­கு­மு­றை­களும் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. நாம் தப்­பிச்­செல்­வ­தற்கு எமக்­கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம், ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் என்­பன எப்­போதோ மூடப்­பட்­டு­விட்­டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இய­லு­மான விதத்தில் எமக்கு உத­வுங்கள். இல்­லா­விடின் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் இயங்­கி­வரும் பிறி­தொரு நாட்­டுக்கு எம்மை அனுப்­பி­வை­யுங்கள்.’

பெரும் எண்­ணிக்­கை­யானோர் அக­தி­க­ளாக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு மண்­ணி­லி­ருந்து கண்­ணீ­ரு­டனும், தழு­த­ழுத்த குர­லு­டனும் ஒலிக்­கி­றது ரோஹிங்­கிய அக­தி­களின் குரல்.
2024 டிசம்பர் 19 ஆம் திகதி காலை முல்­லைத்­தீவு கடற்­ப­ரப்பில் அவ­தா­னிக்­கப்­பட்ட மியன்­மாரைச் சேர்ந்த 115 ரோஹிங்­கிய அக­தி­களை ஏற்­றிய படகு, மறுநாள் 20 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்பில் மீட்­கப்­பட்­டது. அப்­ப­ட­கி­லி­ருந்த அக­திகள் 20 -–23 ஆம் திகதி வரை திரு­கோ­ண­ம­லையில் உள்ள பாட­சா­லை­யொன்றில் தங்­க­வைக்­கப்­பட்டு, 23 ஆம் திகதி முதல் இப்­போது வரை முல்­லைத்­தீவு விமா­னப் ­ப­டைத்­த­ளத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அத்­தோடு முதலில் கப்­பலில் இருந்த 12 பணி­யா­ளர்கள் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவர்­களும் தற்­போது முல்­லைத்­தீவு விமா­னப்­ப­டைத்­த­ளத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆக, இந்த ரோஹிங்­கிய அக­திகள் இலங்கைக் கடற்­ப­ரப்பில் மீட்­கப்­பட்டு ஒரு ­மா­த­காலம் கடந்­தி­ருக்கும் நிலையில், அடுத்­த­ கட்­ட­மாக அவர்­களை என்ன செய்­வது என்­பது குறித்து அர­சாங்கம் இன்­னமும் தீர்­மானம் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை. சில வாரங்­க­ளுக்கு முன்னர் அவர்­களை மீண்டும் மியன்­மா­ருக்குத் திருப்­பி­ய­னுப்ப உத்­தே­சித்­தி­ருப்­ப­தா­கவும், அத­னைத்­தொ­டர்ந்து அவர்கள் ஆட்­க­டத்­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளா என்ற தேசிய பாது­காப்பு கோணத்தில் ஆரா­ய­வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜ­ய­பா­லவை மேற்­கோள்­காட்டி செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இருப்­பினும் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற விவா­தத்­தின்­போது, ரோஹிங்­கிய அக­தி­களைத் திருப்­பி­ய­னுப்­பு­வது குறித்து எந்­த­வொரு தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் அறி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் மியன்­மா­ரி­லி­ருந்து இலங்­கையை வந்­த­டைந்த ரோஹிங்­கிய அக­திகள் மற்றும் வெளி­நா­டு­களில் வாழும் நாடற்ற ரோஹிங்­கி­யர்கள் தொடர்பில் தெளி­வூட்டும் வகையில் ‘ரோஹிங்­கி­யர்கள் என்போர் யாவர்?’ எனும் தலைப்­பி­லான கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்று சமூக, சமய நடு­நி­லையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகி­ய­வற்றின் ஏற்­பாட்டில் கடந்த திங்­கட்­கி­ழமை (27) கொழும்பில் அமைந்­துள்ள சமூக, சமய நடு­நி­லை­யத்தில் நடை­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலின் தொடக்­கத்தில் உரை­யாற்­றிய மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ரான ருக்கி பெர்­னாண்டோ, இலங்கை கடற்­ப­ரப்பில் ரோஹிங்­கிய அக­திகள் மீட்­கப்­பட்­டமை முதல் அவர்கள் தற்­போது முல்­லைத்­தீவு விமா­னப்­ப­டைத்­த­ளத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை வரை விரி­வாக விளக்­க­ம­ளித்­த­துடன், அனைத்­து­லக மனித உரிமைகள் பிர­க­ட­னத்தின் 14 ஆவது சரத்தின் பிர­காரம் அவர்­க­ளுக்­கு­ரிய பாது­காப்பு அளிக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­தினார்.

அது­மாத்­தி­ர­மன்றி கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய நீதி­ய­மைச்சர் ஹர்­ஷன நாண­யக்­கார, ரோஹிங்­கி­யர்கள் என்போர் அவர்­க­ளது சொந்த நாட்டில் மிக­மோ­ச­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் ஓர் இனக்­கு­ழுமம் என்­பதை ஏற்­றுக்­கொண்­டமை குறித்து மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­திய ருக்கி பெர்­னாண்டோ, எனவே ரோஹிங்­கிய அக­திகள் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு அமை­வாகச் செயற்­ப­டு­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­தமை தமக்கு ஓர­ளவு ஆறு­த­ல­ளிப்­ப­தாகக் குறிப்­பிட்டார்.

அத­னைத்­தொ­டர்ந்து ரோஹிங்­கிய அக­திகள் நாட்டை வந்­த­டைந்த வேளையில், அவர்­க­ளிடம் பிராந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட நேர்­கா­ணல்கள் ஆங்­கில உப­த­லைப்­புக்­க­ளுடன் திரை­யி­டப்­பட்­டன.

அந்­நேர்­கா­ணல்­களில் பேசிய அக­திகள், மியன்­மாரில் தமக்கு எதி­ராக நடாத்­தப்­படும் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்தும், ஒடுக்­கு­மு­றை­க­ளி­லி­ருந்தும் தப்பி, தாம் தொடர்ந்து இடம்­பெ­யர்ந்­து­கொண்­டே­யி­ருப்­ப­தா­கவும், பாது­காப்­புத்­தேடிச் செல்­வ­தற்கு ஒரு இடமும் இல்­லாமல் இலங்­கையை வந்­த­டைந்­த­தா­கவும் குறிப்­பிட்­டனர். அத்­தோடு தமது நாட்டில் இயங்­கி­வந்த ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம் மற்றும் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் என்­பன மூடப்­பட்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டிய அவர்கள், ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் இயங்­கு­நி­லையில் உள்ள ஏதே­னு­மொரு நாட்­டுக்குத் தம்மை அனுப்­பி­வைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டனர்.

அது­மாத்­தி­ர­மன்றி தமது நாட்டில் தம்­மீது குண்­டுத்­தாக்­கு­தல்­களும், துப்­பாக்­கிச்­சூடும் நடாத்­தப்­ப­டு­வ­த­னா­லேயே தாம் அவற்­றி­லி­ருந்து தப்பி இங்கு வந்­த­தாகக் கண்­ணீ­ருடன் கூறிய அவர்கள், மாறாக தாம் எவ்­வித தவறும் இழைக்­க­வில்லை என்­றனர்.

அதே­வேளை இக்­க­லந்­து­ரை­யா­டலில் நிகழ்­நிலை முறைமை ஊடாக இணைந்­து­கொண்ட பிர­பல ரோஹிங்­கிய அர­சியல் செயற்­பாட்­டா­ளரும், சுதந்­திர ரோஹிங்­கியா கூட்­டி­ணைவு எனும் அமைப்பின் ஸ்தாப­க­ரு­மான நே சான் வின், மியன்­மாரில் ரோஹிங்­கி­யர்­க­ளுக்கு எதி­ராக நீண்­ட­கா­ல­மாகப் பிர­யோ­கிக்­கப்­பட்­டு­வரும் ஒடுக்­கு­மு­றைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பகிர்ந்­து­கொண்டார்.

‘ரோஹிங்­கி­யர்கள் நாடற்­ற­வர்கள் அல்லர். மாறாக அவர்கள் மியன்­மாரின் அரக்கான் பகு­திக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளாவர். மியன்­மாரில் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் உள்­ளக மோதல்­களால் பெரும் எண்ணிக்கையானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் இலங்­கையில் தஞ்­ச­ம­டைந்த ரோஹிங்­கிய அக­தி­களை அர­சாங்கம் மீண்டும் திருப்­பி­ய­னுப்­பக்­கூ­டாது. மாறாக அவர்­க­ளது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்’ என நே சான் வின் வலி­யு­றுத்­தினார்.
ஆக, புலம்­பெ­யர்வை வர­லா­றா­கக்­கொண்ட, அக­தி­களின் வலி அறிந்த தேசத்தில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்கும் ரோஹிங்­கிய அக­திகள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் இன்­னமும் தீர்­மானம் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­டாத நிலையில், இவ்­வி­வ­கா­ரத்தை ‘தேசிய பாது­காப்பு’ எனும் கோணத்­துக்கு சமாந்­த­ர­மாக மனிதாபிமான ரீதியில் அணுகவேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.