திருமண வயதை வரையறுப்பது சகல சமூகங்களுக்கும் அவசியம்

0 80

இலங்­கையில் பொது­வான திரு­மண வய­தெல்­லையை நிர்­ண­யிப்­பது தொடர்பில் பாரா­ளு­மன்ற பெண் உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம் கவனம் செலுத்­தி­யுள்ள விவ­காரம் அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் இது­பற்­றிய கதை­யா­டல்கள் பல்­வேறு தளங்­க­ளிலும் இடம்­பி­டித்­துள்­ளன.

பாரா­ளு­மன்ற பெண் உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம் அதன் தலை­வியும் அமைச்­ச­ரு­மான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலை­மையில் கடந்த வாரம் கூடி­ய­போது, இலங்­கையில் திரு­மண வயது எல்­லையை திருத்­து­வது தொடர்­பாக அவர் தனது யோச­னையை முன்­வைத்­துள்ளார்.

இலங்­கையில் தற்­பொ­ழுது அமு­லி­லுள்ள பல்­வேறு திரு­மண சட்­டங்­க­ளுக்கு அமைய காணப்­படும் திரு­மண வயது எல்­லையை பொது எல்­லை­யாகக் கொண்­டு­வ­ரு­வ­தற்குத் தேவை­யான திருத்­தத்தை மேற்­கொள்ள சிவில் சமூகம் மற்றும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரின் முன்­மொ­ழி­வு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும், அதன் ஊடாக ஒன்­றி­யத்தின் மூலம் இறுதிப் பரிந்­து­ரையை வழங்­கு­வ­தற்கும் இதன்­போது முன்­மொ­ழி­யப்­பட்­ட­தாக அறிய முடி­கி­றது.

இலங்­கையில் சிறுவர் திரு­ம­ணங்கள் அனைத்து சமூ­கங்­க­ளிலும் பர­வ­லாக இடம்­பெ­று­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்­தில்தான் அதி­க­ளவு சிறுவர் திரு­ம­ணங்கள் நடப்­ப­தாக ஊட­கங்­களும் இன­வாத சக்­தி­களும் பிர­சாரம் செய்த போதிலும் உண்மை அது­வல்ல. இலங்­கையில் பெரும்­பான்மை மக்கள் மத்­தி­யி­லேயே சிறுவர் திரு­ம­ணங்கள் அதிகம் இடம்­பெ­று­வதை இலங்கை புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­க­ளத்தின் தர­வுகள் காண்­பிக்­கின்­றன.
இத் தர­வு­க­ளின்­படி, சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே சிறுவர் திரு­ம­ணங்கள் அதி­க­மாக உள்­ளன. சிங்­கள பதிவுத் திரு­ம­ணங்­களில், 15-–19 வய­து­டைய தனி­ந­பர்­க­ளி­டையே 62,630 திரு­ம­ணங்­களும், 15 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் சம்­பந்­தப்­பட்ட 2,200 திரு­ம­ணங்­களும் நடந்­துள்­ளன. தமிழ் பதிவுத் திரு­ம­ணங்­களில், 15-–19 வய­து­டை­ய­வர்­க­ளி­டையே 9,396 திரு­ம­ணங்­களும், 15 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் சம்­பந்­தப்­பட்ட 372 திரு­ம­ணங்­களும் நடந்­துள்­ளன. முஸ்லிம் சமூ­கத்தில், 15-–19 வய­து­டைய தனி­ந­பர்­க­ளி­டையே 11,916 திரு­ம­ணங்­களும், 15 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் சம்­பந்­தப்­பட்ட 471 திரு­ம­ணங்­களும் நடந்­துள்­ளன.

சிறுவர் திருணம் எனும்­போது சிறு­மி­களைப் பற்றி மட்­டுமே நாம் சிந்­திக்­கிறோம். எனினும் ஆண் சிறார்­களின் திரு­ம­ணங்­களும் சமூ­கத்தில் கரி­ச­னைக்­கு­ரி­யவை. யுனி­செப்பின் கூற்­றுப்­படி, இன்று உயி­ருடன் இருக்கும் 156 மில்­லியன் ஆண்கள் 18 வய­துக்கு முன்பே திரு­மணம் செய்து கொண்­ட­வர்­க­ளாவர். இள வயதுத் சிறு­வர்கள் மற்றும் சிறு­மிகள் இரு­வ­ரையும் பாதிக்­கி­றது. அது சமூ­கத்தில் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு வித்­தி­டு­கி­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வரை இள வயதுத் திரு­மணம் எனும் போது முஸ்­லிம்­களை நோக்­கியே விரல் நீட்­டப்­ப­டு­கி­றது. இஸ்­லா­மிய சம­யத்தில் திரு­மண வயது வரை­ய­றுக்­கப்­ப­ட­வில்லை என்ற விவ­கா­ரத்தை மாத்­திரம் முன்­னி­றுத்­தியே இந்த முன்­கற்­பிதம் நிகழ்­கி­றது. எனினும் இங்கு இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் கத்­தோ­லிக்கம் உள்­ளிட்ட பல்­வேறு மதப் பின்­ன­ணியைச் சேர்ந்த இள­வ­ய­தினர் மத்­தி­யிலும் இந்த வகைத் திரு­ம­ணங்கள் நிகழ்­கின்­றன.

இலங்­கையில் சகல சமூ­கங்கள் மத்­தி­யிலும் சிறுவர் திரு­ம­ணங்கள் அதி­க­ரிப்­ப­தற்கு பல முக்­கிய கார­ணிகள் பங்­க­ளிக்­கின்­றன. தாய்­மார்கள் பெரும்­பாலும் வீட்டு வேலைக்­காக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு செல்லல், தங்கள் மகள்­களை வீட்­டி­லேயே விட்டுச் செல்­வதால் அவர்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­கு­தற்­காக திரு­மணம் செய்து வைத்தல், வறு­மை­யி­லி­ருந்து மீள திரு­ம­ணத்தை ஒரு வழி­மு­றை­யாகப் பயன்­ப­டுத்­துதல் என பல கார­ணிகள் பெண்­களை இள­வ­யது திரு­ம­ணங்­க­ளுக்குத் தள்­ளு­கின்­றன. கல்வி வாய்ப்­புகள் இல்­லா­ததும் இள வயது திரு­ம­ணங்­க­ளுக்கு பங்­க­ளிக்­கி­றது, ஏனெனில் கல்­விக்­கான அணுகல் குறை­வாக உள்ள பெண்கள் திரு­ம­ணத்தை மட்­டுமே தங்கள் ஒரே வழி என்று நம்­பி­யி­ருக்க வாய்ப்­புள்­ளது.

இருப்­பினும் முஸ்­லிம்­களின் திரு­மண வயதை 18 ஆக வரை­ய­றுப்­ப­தற்கு கடந்த காலங்­களில் பல்­வேறு இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன. ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு­வி­னரும் 18 வய­தையே தமது பரிந்­து­ரையில் முன்­வைத்­தி­ருந்­தனர். அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் 18 வயதை ஏற்றுக் கொள்­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி சகல சம­யத்­த­வர்­க­ளையும் பாதிக்கும் இந்த இள வயது திரு­மணம் தொடர்பில் தெளி­வான ஒரு நிலைப்­பாட்டை எட்­டு­வது காலத்தின் தேவை­யாகும். இது தொடர்பில் பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம் குறிப்­பிட்­டுள்­ள­து­போன்று சகல தரப்­பி­ன­ரதும் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இது விட­யத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் பொறுப்­பு­வாய்ந்­த­வர்­களும் தமது நிலைப்­பா­டு­களை சமர்ப்­பிக்க முடியும். இது விட­ய­மாக உலமா சபையின் பிர­தி­நி­திகள் உட­ன­டி­யா­கவே அமைச்சர் சாவித்­திரி போல்­ராஜை சந்­தித்து விளக்­க­ம­ளித்­தி­ருப்­பது வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையற்ற விமர்சனங்களை பொது வெளியில் முன்வைப்பதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து விளக்குவதே சமயோசிதமான அணுகுமுறையாகும். அந்த வகையில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு கருத்து முரண்பாட்டுக்குரிய விடயத்தையும் முஸ்லிம் சமூகம் நிதானமாக அணுக முற்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களின் உதவியோடு முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாத்தினதும் நிலைப்பாடுகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட வேண்டும். அதன் மூலமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.