உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உண்மைகளையும் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் வலியுறுத்து

0 35

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
தேர்தல் காலங்­களில் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்றி பிர­தா­ன­மாக பேசப்­பட்­டது. இந்த தாக்­கு­தலால் அர­சியல் மாற்றம் மாத்­தி­ர­மல்ல, சமூக கட்­ட­மைப்­பிலும், இனங்­க­ளுக்­கி­டையிலான உறவிலும் மாற்றம் ஏற்­பட்­டது என்­பதை ஜனா­தி­பதி நன்கு அறிவார். ஆகவே குண்­டுத்­தாக்­கு­தலின் உண்­மை­யையும், பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யையும் அர­சாங்கம் வெளிப்­ப­டுத்த வேண்டும் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையிலேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

77 ஆவது சுதந்­திர தினத்தை கொண்­டா­டி­யுள்ளோம். நாட்டு மக்கள் அனை­வரும் சுதந்­தி­ர­மாக வாழ்­கி­றார்­களா, சுதந்­தி­ரத்­துக்கு தடை­யாக காணப்­பட்ட விட­யங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை ஆராய வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் ஜனா­தி­பதி கடந்த காலங்­களில் குறிப்­பிட்டார்.

நடை­முறை அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள், பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்கள், அமைச்­ச­ர­வையின் அதி­கா­ரங்கள் பற்றி பல விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. சாதக மற்றும் பாதக விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் பேசிய தரப்­பி­னர்கள் இன்று 159 பெரும்­பான்மை பலத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காமல் இருப்­பது கேள்­விக்­கு­ரி­யது.

இந்த அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் குறிப்­பிடும் கருத்­துக்கள் தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக பேசப்­ப­டு­கின்­றன. கொவிட் காலத்தில் தம்­மிக்க பானத்தை பரு­கினால் கொவிட் -19 வைரஸ் தொற்­றாது என்று குறிப்­பி­டப்­பட்­டது. அத்­துடன் ஆற்றில் முட்­டி­களும், சட்­டி­களும் போடப்­பட்­டன. அதைப்­போன்றே தற்­போ­தைய அர­சாங்க தரப்­பி­னரும் பேசு­கி­றார்கள்.

சந்­தையில் அரிசி தட்­டுப்­பாடு தீவி­ர­ம­டைந்­துள்­ளது. வீட்டில் வளர்க்கும் பிரா­ணி­க­ளுக்கு உணவு வழங்­கு­வதால் அரிசி தட்­டுப்­பாடு ஏற்­பட்­ட­தா­கவும், கோழி­க­ளுக்கு அரிசி தீவ­ன­மாக வழங்­கு­வதால் முட்­டையின் கரு வெள்ளை நிற­மாக மாறி­யுள்­ள­தா­கவும் அர­சாங்க தரப்­பினர் குறிப்­பி­டு­கி­றார்கள். மாறு­பட்ட கருத்­துக்கள் பேசப்­ப­டு­கின்­றன. ஆனால் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

மறு­புறம் தேங்காய் சம்­ப­லுக்கும், தேங்காய் பால் எடுப்­ப­தற்கும் தேங்­காய்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் சந்­தையில் தேங்­காய்க்­கான தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள். மக்­க­ளுக்கு ஏதா­வ­தொன்றை குறிப்­பிட வேண்டும் என்­ப­தற்­காக இவ்­வாறு குறிப்­பி­டு­கி­றார்­களா அல்­லது மக்­களை ஏமாற்­று­கி­றார்­களா என்­பது தெரி­ய­வில்லை.

காட்டில் உள்ள அணில்கள் சந்­தோ­ச­மாக இருக்கும் வழி­மு­றை­களை அமைச்சர் ஒருவர் குறிப்­பி­டு­கிறார். ஆனால் மக்கள் சந்­தோ­ச­மாக வாழ்­வ­தற்­கான திட்­டங்கள் ஏதும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. வெள்ளப் பெருக்­கினால் கிழக்கு மாகாணம் உட்­பட பெரும்­பா­லான பகு­தி­களில் விளை­நி­லங்கள் சேத­ம­டைந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இது­வ­ரையில் நிவா­ரணம் கிடைக்கப் பெற­வில்லை.

அர­சாங்கம் இன்றும் எதிர்க்­கட்­சியை சாடியே அர­சியல் செய்­கி­றது. கடந்த காலங்­களில் நாங்கள் எரி­பொருள் விலைச்­சூத்­தி­ரத்­தையும், இறக்­கு­மதி வரி­யையும் இரத்துச் செய்­வ­தாக குறிப்­பி­ட­வில்லை. சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்­காக நாங்கள் பொய்­யு­ரைக்­க­வில்லை. அர­சாங்­கத்­துக்கு முழு­மை­யான அதி­காரம் உள்­ளது. ஆகவே கடந்த காலங்களில் குறிப்பிட்டதை முறையாக செயற்படுத்தலாம்.

தேர்தல் காலங்­களில் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்றி பிர­தா­ன­மாக பேசப்­பட்­டது. இந்த தாக்­கு­தலால் அர­சியல் மாற்றம் மாத்­தி­ர­மல்ல, சமூக கட்­ட­மைப்­பிலும் இனங்­க­ளுக்­கி­டையில் மாற்றம் ஏற்­பட்­டது என்­பதை ஜனா­தி­பதி நன்கு அறிவார். ஆகவே குண்­டுத்­தாக்­கு­தலின் உண்­மை­யையும், பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.