வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இறுக்கமாக்கப்பட வேண்டும்

0 68

நாட்டில் கடந்த சில வாரங்­க­ளாக வீதி விபத்­துக்கள் அதி­க­ரித்து வரு­வ­தையும் அதன் மூல­மாக உயி­ரி­ழப்போர் மற்றும் காய­ம­டை­வோரின் எண்­ணிக்­கைகள் அதி­க­ரித்து வரு­வ­தையும் ஊடக செய்­திகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.
இலங்கை பொலிஸ் போக்­கு­வ­ரத்து திணைக்­கள தர­வு­க­ளின்­படி கடந்த ஐந்து ஆண்­டு­களில், மர­ணத்தை ஏற்­ப­டுத்தக் கார­ண­மான 11,581 வீதி விபத்­துகள் இலங்­கையில் பதி­வா­கி­யுள்­ளன. இந்த விபத்­து­களில் மொத்­த­மாக 12,140 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் 33,259 க்கும் மேற்­பட்டோர் நிரந்­த­ர­மாக ஊன­முற்­றுள்­ளனர்.

பொலிஸ் போக்­கு­வ­ரத்து தலை­மை­யக புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, 2020 முதல் 2024 நவம்பர் 30 வரை, நாட்டில் 117,970 போக்­கு­வ­ரத்து விபத்­துகள் நடந்­துள்­ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிக எண்­ணிக்­கை­யி­லான 24,589 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இந்தக் கால­கட்­டத்தில், சிறு காயங்­களை ஏற்­ப­டுத்­திய 44,440 விபத்­துகள் நடந்­துள்­ளன.

நவம்பர் 30, 2024 வரை­யான நில­வ­ரப்­படி, 515 அரச பேருந்து விபத்­துகள் மற்றும் 1,490 தனியார் பேருந்து விபத்­துகள் உட்­பட 2,005 பொதுப் போக்­கு­வ­ரத்து பேருந்து விபத்­துகள் நடந்­துள்­ள­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்துப் பிரிவு தர­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்தக் காலக்­கட்­டத்தில், அரச பேருந்­துகள் விபத்­து­களில், 50 உயி­ரி­ழப்­பு­களும் தனியார் பேருந்து விபத்­து­களில் 148 உயி­ரி­ழப்­பு­களும் நடந்­துள்­ளன.

நமது நாட்டில் நோய்கள் மற்றும் முதுமை கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­க­ளுக்கு அடுத்த இடத்தில் வரு­டந்­தோறும் வீதி விபத்­து­க­ளி­னா­லேயே அகால மர­ணங்கள் சம்­ப­விக்­கின்­றன. அண்­மையில் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவும் வீதி விபத்­துக்­களில் தினமும் சரா­ச­ரி­யாக 7 பேர் மர­ணிப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். இத­னால்தான் பெறு­ம­தி­மிக்க மக்­களின் உயிர்­களைப் பாது­காக்கும் நோக்கில் வீதி விபத்­துக்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ரான சட்­டங்­களை இறுக்­க­மாக்­கு­வது இந்த திட்­டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். எந்­த­வி­த­மான எதிர்ப்­புகள் வந்த போதிலும் விபத்­துக்­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை கைவிடப் போவ­தில்லை என தற்­போது அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. வீதி விதி­களை மீறு­ப­வர்­களைக் கண்­ட­றிய கொழும்பு மாந­க­ரெங்கும் சிசி­ரிவி கமெ­ராக்கள் மூலம் கண்­கா­ணிப்­புகள் தீவி­ரப்­பட்­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் சில தினங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வாறு விதி­களை மீறிய 12 ஆயிரம் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

சுகா­தார அமைச்சின் மற்­று­மொரு தர­வுக்­க­மைய, ஒவ்­வொரு வரு­டமும் 12 ஆயிரம் பேர் இலங்­கையில் விபத்­துக்­களால் மர­ணிக்­கின்­றனர். இதற்­க­மைய ஒவ்­வொரு 90 நிமி­டங்­க­ளிலும் 2 பேர் விபத்­துக்கள் மூலம் தமது உயிரைப் பறி கொடுக்­கின்­றனர். இவ்­வாறு உயி­ரி­ழப்­ப­வர்­களில் அதி­க­மானோர் 15 முதல் 44 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்­க­ளாவர் என்றும் சுகா­தார அமைச்சு தெரி­விக்­கி­றது.
இவ்­வாறு உயி­ரி­ழப்போர் மற்றும் காய­ம­டை­வோ­ருக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காக தமது அமைச்சு வரு­டாந்தம் பாரிய தொகை பணத்தைச் செல­வி­ட­வேண்­டி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­விக்­கி­றது.

நாட்டில் பாதைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ள­மை­யா­னது வாக­னங்கள் வேக­மாகப் பய­ணிக்க வழி­ச­மைத்­துள்­ளது. பாதைகள் சீரா­க­வுள்­ளன என்­பது வேக­மாகப் பய­ணிப்­ப­தற்­கான அனு­ம­தி­யல்ல. அதி வேகப் பாதைகள் தவிர, ஏனைய பாதை­களில் 60 கி.மீ. வேகத்­திற்கு குறை­வா­கவே வாக­னங்கள் பய­ணிக்க வேண்டும் என்­பது விதி­யாகும். எனினும் தூரப் பய­ணங்­களில் ஈடு­படும் பஸ் வண்­டி­களும் ஏனைய வாக­னங்­களும் 100 கி.மீ. வேகத்தில் கூட செல்­வதை நாம் அவ­தா­னிக்­கிறோம். போக்­கு­வ­ரத்துப் பொலிசார் சேவையில் ஈடு­ப­டு­கின்ற போதிலும் அவர்கள் கூட இலஞ்சம் பெற்றுக் கொண்டு இவ்­வா­றான சார­திகள் தொடர்ந்தும் இதே தவறை இழைப்­ப­தற்கு அனு­ம­திக்­கின்­றனர்.
வீதி சட்ட ஒழுங்­கு­களை மீறுதல், மது­பானம் மற்றும் போதை­வஸ்­துக்­க­ளுடன் வண்­டி­யோட்­டுவோர், உரிய அனு­மதி இல்­லாமல் வாக­னத்தில் பொது­மக்­களை ஏற்­றுதல், தான்­தோன்றித் தன­மான வேகம் போன்ற பாரிய குற்­றங்கள் பேரம் பேசிப் பெறப்­படும் இலஞ்­சங்­களால் நியா­யப்­படும் நிலை­யி­னையும் அவர்கள் தண்­ட­னை­களில் இருந்து தப்­பித்துக் கொள்­வ­த­னையும் காண்­கின்றோம். இப்­பா­ரிய கொடிய குற்­றங்­களைப் புரிவோர் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் தண்­ட­னை­களில் இருந்து தப்­பிக்கக் கூடாது.

அர­சாங்கம் மற்றும் அதி­கா­ரிகள் இது விட­யத்தில் கடு­மை­யாக இருக்க வேண்டும். இல்­லாது போனால் இவ்­வா­றான விபத்­துக்கள் தொடர்ந்து கொண்­டே­யி­ருக்கும்

நாட்டின் அபி­வி­ருத்­தியில் வீதிச் சட்ட அமு­லாக்கம், சட்­டத்தின் முன் எவரும் சமன், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்­லாத காவல்­து­றைகள் என்­பன அடிப்­ப­டை­யா­ன­வை­க­ளாகும். அவையே இன்­றைய காலத்தின் தேவைகள்.
இவ்­வ­கை­யான பரி­தாப விபத்­துக்கள் எதிர்­கா­லத்தில் தவிர்க்­கப்­பட வேண்­டு­மானால், இத­னோடு சமன், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்­லாத காவல்­து­றைகள் என்­பன அடிப்­ப­டை­யா­ன­வை­க­ளாகும். அவையே இன்­றைய காலத்தின் தேவைகள்.

இவ்­வ­கை­யான பரி­தாப விபத்­துக்கள் எதிர்­கா­லத்தில் தவிர்க்­கப்­பட வேண்­டு­மானால், இத­னோடு சம்­பந்­தப்­பட்ட சக­ல­ரதும் கூட்­டி­ணைந்த ஒத்­து­ழைப்­புக்கள் அத்­தி­ய­வ­சி­ய­மாகும். சாரதி, சக பய­ணிகள், வீதி பாது­காப்பு காவல்­துறை, பொது மக்கள், அரச சட்டம், அதனை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரிகள் அனை­வரும் தம் பங்­க­ளிப்­பினை சரி­யாக செய்­வதன் மூலமே இது சாத்­தி­ய­மாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.