கம்மன்பில சொல்வது உண்மையா?

0 7

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள்  தொடர்பில் பல்­வேறு விட­யங்கள்  அவ்­வப்­போது, பல­ராலும் முன் வைக்­கப்­பட்டு வரும் நிலையில்  கடந்த திங்­க­ளன்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை குழு ஒன்றின் அறிக்கை எனக் கூறி சில விட­யங்­களை வெளிப்­ப‌­டுத்­தி­யி­ருந்தார்.  இதனை தொடர்ந்து இவ்­வி­டயம் சமூ­கத்தின் மத்­தியில் இரு வேறு கருத்­துக்­களின்  கீழ் விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்பில் முதலில் கிடைத்த புல­னாய்வுத் தகவல், அது தொடர்பில் அதி­கா­ரிகள் எடுத்த நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் எனும் அடிப்­ப­டையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் ஓய்­வு­பெற்ற மேல் நீதி­மன்ற‌ நீதி­பதி யஜ­யகி டி அல்விஸ்  தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

இந்­திய புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் வழங்­கிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள், மட்­டக்­க­ளப்பு -வவு­ண­தீவில் இடம்­பெற்ற கொலைச் சம்­ப­வங்­க­ளுடன் புலிகள்  அமைப்பு தொடர்­பு­பட்­டுள்­ளமை தொடர்பில் இரா­ணுவ புல­னாய்வு பணிப்­பாளர் சபையின் வெளிக்­கொ­ணர்வு குறித்தும் இந்த குழு­வினால் விசா­ரணை செய்­யப்­பட்­டன.

இந்த நிலையில் இக்­கு­ழுவின் அறிக்கை கடந்த 2024 செப்­டம்பர் மாதம் 14 ஆம் திகதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­போது இக்­கு­ழுவின் அறிக்கை என கூறி அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்ள உதய கம்­மன்­பில, அவ்­வ­றிக்­கையின் 43 ஆவது பக்­கத்தை மேற்கோள்காட்டி, முன்னாள் சி.ஐ.டி. பிர­தா­னியும் தற்­போ­தைய பொது மக்கள்  பாது­காப்பு அமைச்சின் செய­ல­ரு­மான ஓய்­வு­பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன மீது சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­துள்ளார்.

குறிப்­பாக ரவி சென­வி­ரத்ன தாக்­கு­தலை தடுக்­காமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்­டி­யவர் எனவும், அவரை உட­ன­டி­யாக பதவி விலக்க வேண்டும் எனவும் ஜயகி டி அல்­விஸின் அறிக்­கையை மைய­பப்­டுத்தி உதய கம்­மன்­பில விட­யங்­களை முன் வைத்து வரு­வ­துடன், ஷானி அபே­சே­க­ரவின் மீள் இணைப்­பையும் அவர் விமர்­சித்­துள்ளார்.

உண்­மையில் நீதி­பதி ஜயகி டி அல்விஸ் குழுவின் அறிக்­கையில், கம்­மன்­பில கூறு­வதை போல ரவி சென­வி­ரத்ன மீது குற்­ற­வியல் குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கருதி ( உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அவ்­வ­றிக்கை வெளி­யி­டப்­ப­டா­மையால் இவ்­வெ­டுகோள் எடுக்­கப்­ப­டு­கின்­றது) அக்­குற்­றட்­சாட்­டுக்கள் தொடர்பில் பார்க்­கலாம்.

அதா­வது 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி,  அரச உளவுச் சேவை பிர­தானி நிலந்த ஜய­வர்­தன  தேசிய உளவுச் சேவை பிர­தானி சிசிர மெண்­டி­ஸுக்கு, அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் பூஜித்­துக்கு ஒரு  சஹ்ரான் கும்­பலின் தாக்­குதல்  குறித்து எழுத்து மூலம் ஒரு தக­வலை பகிர்ந்­தி­ருந்தார். அந்த கடி­தத்தை சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக அப்­போது இருந்த‌ ரவி சென­வி­ரத்­ன­வுக்கும் அவர் பிரதி செய்­தி­ருந்தார்.

இந்த உளவுத் தக­வலை, ரவி சென­வி­ரத்ன கண‌க்கில் கொள்­ள­வில்லை, குண்டு வெடிக்கும் வரை அந்த தகவல் அவர் மேசையில் அப்­ப­டியே கிடந்­தது என கூறி, அவரும்  தாக்­கு­த­லுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வாதத்தை கம்­மன்­பில, அல்விஸ் குழுவின் அறிக்­கையை முன்­னி­றுத்தி கொண்டு வரு­கின்றார். எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் குறித்த விசா­ரணை செய்யும் நிறு­வ­னத்­துக்கு பொறுப்­பாக ரவி சென­வி­ரத்ன செயற்­ப­டு­வது விசா­ர­ணை­களை பாதிக்கும் என்­பது கம்­மன்­பி­லவின் கூற்­றாகும்.

உண்­மையில், இந்த விடயம் ஜயகி அல்விஸ் குழு புதிய விட­ய­மாக பார்த்­தி­ருந்­தாலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரித்த பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு,  நீதி­யரசர் ஜனக் டி சில்வா தலை­மை­யி­லான ஆணைக் குழு, உயர் நீதி­மன்றின் 12 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் என பல இடங்­களில் விவா­திக்­கப்­பட்ட விட­யமே இவ்­வி­ட­ய­மாகும்.

அவரில் வெளி­ப்படுத்­தப்­பட்ட தக­வல்கள் படி, 2019 ஏப்ரல் 8 ஆம் திகதி, சர்­வ­தேச பொலி­ஸாரின் மாநாட்­டுக்­காக ரவி சென­வி­ரத்ன இலங்­கையில் இருந்து பிரான்ஸின் லியோன் நக­ருக்கு சென்­றுள்ளார். இந்த விடயம் அரச உளவுச் சேவை பிர­தானி நிலந்­த­வுக்கு தெரி­யாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்­கையில் ரவி சென­வி­ரத்­னவின் பெய­ருக்கு ‘ அதி இர­க­சி­ய­மா­னது’ என குறிப்­பிட்டு இக்­க­டிதம் பிரதி செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு­வ­ரு­டைய பெய­ருக்கு நேர­டி­யாக இத்­த­கைய கடி­தங்கள் வரும் போது பதில் கட­மை­களை முன்­னெ­டுப்போர் அவற்றை பார்க்­க­மாட்­டார்கள். இதுவே அரச சேவையில் உள்ள நடை­மு­றை­யாகும்.

அப்­படி இருக்­கையில் நிலந்த ஜய­வர்­தன, ரவி சென­வி­ரத்ன இல்லை என தெரிந்தும் அவர் பெய­ருக்கு கடி­தத்தை பிர­தி­யிட்­டது சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­ற‌து.

இது ஒரு புறம் இருக்க, சி.ஐ.டி.யின் விடயப் பரப்பு பிர­காரம், பொலிஸ் மா அதி­பரால் உத்­தரவி­டாது ஒரு விடயம் தொடர்பில் விசா­ரணை செய்ய முடி­யாது. அரச உளவுச் சேவை பிர­தானி ஒரு கடி­தத்தை பிரதி செய்­த­மைக்­காக தனி­யாக விசா­ர­ணை­களை, பொலிஸ் மா அதிபர் கூறாது சி.ஐ.டி.யால் ஆரம்­பிக்க முடி­யாது.

எனினும், அப்­போதும் இந்த உளவுத் தகவல் பயன்­பட முடி­யு­மான இரு விசா­ர­ணைகள் சி.ஐ.டி. வசம் இருந்­தன. ஒன்று மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­காரம். மற்­றை­யது வவு­ண­தீவு பொலி­சாரின் கொலை.

இந் நிலையில் 13 ஆம் திகதி பிரான்­ஸி­லி­ருந்து நாடு திரும்பும் ரவி சென­வி­ரத்ன, 14, 15 ஆம் திக­திகள்  விடு­முறை நாட்கள் என்­பதால் அதன் பின்னர் 16 ஆம் திகதி அலு­வ­லகம் சென்­றுள்ளார். இதன்­போதே 9 ஆம் திகதி நிலந்த ஜய­வர்­தன பிர­தி­யிட்ட கடிதம் அவ­ருக்கு கிடைத்­துள்­ளது.

எனினும் அக்­க­டி­தத்தை அவர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்பின் பின்­ன­ரேயே முன்­கூட்­டிய திக­தி­யிட்டு தனக்கு கீழ் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பி­ய­தாக கம்­மன்­பில, அல்விஸ் அறிக்­கையை வைத்து சந்­தேகம் எழுப்­பு­கின்றார்.

எனினும் இவ்­வி­டயம் பல கட்­டங்­களில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன.  குறிப்­பாக ரவி சென­வி­ரத்ன 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி இது தொடர்பில் கடி­தத்தை தனக்கு கீழ் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு குறிப்­பிட்டு அனுப்­பி­யுள்­ள­துடன், உரிய அதி­கா­ரி­க­ளுக்கு தொலை­பே­சியில் அழைத்து முன்­னெ­டுக்­க­ப்படும் விசா­ர­ணை­களை துரி­த­ப்ப­டுத்­தவும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இது தொடர்பில் நடந்த குற்­ற­வியல் விசா­ர­ணையில், ரவி சென­வி­ரத்­னவின் அலு­வ­ல­கத்தில் அப்­போது சேவை­யாற்­றிய  பிரி­யங்கா சுதர்­ஷனி (8326) தனக்கு 16 ஆம் திக­தியே, ரவி சென­வி­ரத்ன குறித்த கடி­தத்தை பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கைய­ளிக்க அறி­வு­றுத்­தி­ய­தையும், தான் விடு­மு­றையில் செல்லும் அவ­ச­ரத்தில் அதனை கைய­ளிக்­காது சென்று, விடு­முறை ரத்­தான பின்னர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அலு­வ­லகம் வந்து அதனை கைய­ளித்­த­தா­கவும் வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, தாக்­கு­தலை தடுக்­காமை தொடர்பில் உயர் நீதி­மன்­ற‌மோ, ஆணைக் குழுக்­களோ  ரவி சென­வி­ரத்­னவை பொறுப்புக் கூற வேண்­டி­ய­வ­ராக காண­வில்லை.

ஜயகி டி அல்விஸ் குழு­வா­னது ரவியை பொறுப்புக் கூற வேண்­டி­ய­வ­ராக பார்ப்­பது ஏன் என சற்று ஆழ‌­மாக பார்க்க வேண்டும்.

ஜயகி டி அல்விஸ்,  தற்­போ­தைய  பயங்­க­ர­வாத புல­னா­ய்வு பிரிவின் பணிப்­பா­ளரின் உற­வினர் என கூறப்­ப‌­டு­கின்­ற‌து. பயங்­க­ர­வாத சம்­பவம் ஒன்று குறித்த விசா­ர­ணைக்கு அவ்­வி­சா­ரணைப் பிரிவின் உற­வினர் ஒரு­வரை நிய­மித்­தமை  சில முரண்­பாட்டு நில­மை­களை ஏற்­ப­டுத்தும்,

அடுத்து, ரவி சென­வி­ரத்ன, ஷானி அபே­சே­கர ஆகிய இரு­வரை தேர்தலுக்கு முன்னர் ரணில் தரப்பும்,  சஜித் தரப்பும் தம் பக்கம் ஈர்க்க, பதவி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அழைத்தும் அவர்கள் செல்லாது தேசிய மக்கள் சக்தி முகாமில் அவர்கள் இணைந்தனர். இதனை தொடர்ந்தே இந்த ஜயகி அல்விஸ் ஆணைக் குழு நியமிக்கப்பட்டது.

எனவே, இக்­குழு ரவி சென­வி­ரத்­னவை இலக்கு வைத்­தது என ஒரு குற்­ற‌ச்­சாட்டு உள்­ளது.

எது எப்­ப­டியோ, கம்­மன்­பில புதிய வெளிப்­ப‌­டுத்­த­லாக முன் வைத்த விடயம் ஒன்றும் புதிய விட­ய­மல்ல. ஏற்­க­னவே பல இடங்­களில் சான்­றுகள் ஊடாக ஆரா­யப்­பட்டு உண்மை நிலை வெளி­ப்ப­டுத்­தப்­பட்ட விட­யமே அது. அவ்­வா­றி­ருக்­கையில் மீண்­டு­மொ­ரு­முறை அதனை தூக்கிப் பிடிக்க எடுக்­கப்­ப‌டும் நட­வ­டிக்­கை­களே பாரிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.