புல்மோட்டையில் நடந்தது என்ன?

0 14

புல்­மோட்­டை­யி­லி­ருந்து
றிப்தி அலி

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நாங்கள் விவ­சாயம் செய்து வரு­கின்ற காணி­களை ‘தொல்­பொருள்’ என்ற பெயரில் சுவீ­க­ரிக்க முயற்­சிகள் இடம்­பெற்று வரு­வ­தாக புல்­மோட்டைப் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 38 வய­தான ஜெய்­னு­லாப்தீன் புஹாரி தெரி­வித்தார்.

“இதன் பின்­ன­ணியில் இப்­பி­ர­தே­சத்தில் வசிக்­கின்ற பனா­முரே தில­க­வங்க தேரர் செயற்­ப­டு­கின்றார்” என அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

எனது தாயா­ரிற்கு சொந்­த­மான ஐந்து ஏக்கர் காணியில் கடந்த பல வரு­டங்­க­ளாக விவ­சாய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்றேன். இதற்­காக அர­சாங்­கத்­தினால் உரம் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் விவ­சாயம் பாதிக்­கப்­பட்­ட­மைக்­காக 53 ஆயிரம் ரூபா நஷ்­ட­ஈடும் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக புஹாரி குறிப்­பிட்டார்.

கிழக்கு மாகா­ணத்தின் எல்லைப் பிர­தே­ச­மான புல்­மோட்­டையில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்­களம் ஆகிய இனத்­த­வர்கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றனர். திரு­கோ­ண­மலை மாவட்ட ஊட­க­வி­ய­லாளர் ஹஸ்பர் ஏ. ஹலீ­முடன் மேற்­கொண்ட கள விஜ­யத்தின் போது இதனை நேர­டி­யா­கவே அவ­தா­னிக்க முடிந்­தது.

குச்­ச­வெளி பிர­தேச சபை மற்றும் பிர­தேச செய­லகம் ஆகி­ய­வற்றின் எல்­லைக்­குட்­பட்ட இந்தப் புல்­மோட்டை பிர­தேச மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை நீண்ட கால­மாக எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் எவரும் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு நிரந்தத் தீர்­வினை பெற்றுத் தர முன்­வ­ர­வில்லை என அப்­பி­ர­தேச மக்கள் கவலை வெளி­யிட்­டனர். இதில் பிர­தா­ன­மான ‘காணிப் பிரச்­சினை’ தொடர்ச்­சி­யாக காணப்­பட்டு வரு­கின்­றது.

நாட்டில் இடம்­பெற்ற 30 வருட கால யுத்தம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் வாழ்ந்த மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். யுத்தம் நிறை­வ­டைந்­ததை அடுத்து இவர்கள் தமது சொந்தப் பிர­தே­சங்­க­ளுக்கு மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளனர்.
இந்த மக்­களின் பிர­தான ஜீவ­னோ­ப­ாய­மான விவசாயத்­தினை முன்­னெ­டுக்­கின்ற சம­யத்தில் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் நெருக்­க­டி­களை கடந்த பல வரு­டங்­க­ளாக எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை ‘தொல்­பொருள் காணி’ என்று தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் அடை­யா­ளப்­ப­டுத்த முயற்­சிக்­கின்ற சந்­தர்ப்­பத்­தி­லேயே பொது­மக்­க­ளுக்கும் இத்­தி­ணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன.

இதன் பின்­ன­ணியில் அரி­சி­மலை ஆர­ணி­யத்தின் சேனா­ச­னா­தி­பதி பனா­முரே தில­க­வ­ங்ச தேரர் உள்­ள­தாக அப்­பி­ர­தேச மக்கள் தொடர்ச்­சி­யாக குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

இவ்­வாறு ‘தொல்­பொருள் காணி’ என்று அடை­யா­ளப்­ப­டுத்த முயற்­சிக்­கின்ற காணி­களில் ஒன்று தான் புஹாரி பரா­ம­ரித்து வரு­கின்ற அவ­ரு­டைய தாய­ரான பௌசியா உம்­மாவின் பெய­ரி­லுள்ள காணி­யாகும்.

இக்­கா­ணியை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான பேர்மிற் உத்­த­ரவுப் பத்­திரம் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பௌசியா உம்­மாவின் தந்­தை­யான தாவூது முஹம்­ம­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் அக்­கா­ணியின் உரி­மை­யா­ள­ராக பௌசியா உம்மா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இக்­கா­ணிக்­கான பதிவில் 1959ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை தனி­ந­பர்­களின் பெயர்­களே காணப்­ப­டு­கின்­றமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. குறித்த காணி­யினை துப்­பு­ரவு செய்து விவ­சாய நட­வ­டிக்கையில் ஈடு­ப­டு­வ­தற்­கான அனு­மதி பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக வன இலாகா திணைக்­க­ளத்­திடம் பெறப்­பட்­டுள்­ளது என புஹாரி கூறி­கின்றார்.

அத்­துடன் இக்­காணி “தொல்­பொருள் காணி அல்ல” என தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் குச்­ச­வெளி பிர­தேச செய­லா­ள­ருக்கு கடந்த 2021 ஜன­வரி மாதம் எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதே­வேளை, குறித்த காணிக்கு அரு­கி­லுள்ள ஆற்­றி­லி­ருந்து மண் அகழ்­விற்­கான அனு­மதி புவி­யியல் அளவை சுரங்­கங்கள் பணி­ய­கத்­தினால் புஹா­ரிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் வன இலாகா திணைக்­க­ளத்தின் மனு­விற்­க­மைய குறித்த காணிக்குள் புஹாரி உள்­ளிட்ட பலர் நுழை­வ­தற்கு குச்­ச­வெளி நீதி­மன்­றத்­தினால் தடை விதிக்­கப்­பட்­டது.

இதற்கு எதி­ராக திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்­றத்தில் புஹா­ரி­யினால் மேன் முறை­யீடு செய்­யப்­பட்­டது. இதன்­போது, 2021ஆம் திகதி ஜுலை 20ஆம் திகதி குச்­ச­வெளி நீத­வா­னினால் குற்­ற­வியல் நடை­முறைச் சட்­டக்­கோவை 124 இன் கீழ் ஆக்­கப்­பட்ட கட்­ட­ளை­யா­னது குறித்த வழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யினால் வலு­வி­ழந்­துள்­ள­தாக மன்றில் 2022ஆம் ஆண்டு செப்­டம்பர் 09ஆம் திகதி தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் இந்த வரு­டத்­திற்­கான பெரும்­போக விவ­சாய நட­வ­டிக்­கை­யினை புஹாரி ஆரம்­பித்த போது ‘தொல்­பொருள் காணி’ எனக் குறிப்­பிடும் கல்­லொன்று இவ­ரு­டைய காணியில் போடப்­பட்­டுள்­ளது.

இதற்கு எதி­ராக புல்­மோட்டை பொலிஸ் நிலை­யத்தில் அவ­ரினால் முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் குறித்த காணியில் நெற் பயிர்ச் செய்­கை­யினை ஆரம்­பித்த போது பனா­முரே தில­க­வங்ச தேர­ரினால் கடு­மை­யான எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­துடன் விவ­சாய நட­வ­டிக்­கைக்கு இடை­யூறும் விளை­விக்­கப்­பட்­டது.

இதற்கு எதி­ரா­கவும் புல்­மோட்டை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டதை அடுத்து இது தொடர்­பான விசா­ர­ணை­களை பொலிஸார் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இதன்­போது, “என்­னையும் தேர­ரையும் நெற் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட வேண்டாம் பொலிஸார் உத்­த­ர­விட்­டனர்” என புஹாரி தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும், பொலி­ஸாரின் உத்­த­ர­வினை மீறி சுமார் 82 ஏக்கர் காணியில் தற்­போது தேரர் நெற் பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டுள்ளார் என அவர் குற்­றஞ்­சாட்­டினார். இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கும் அறி­வித்தும் எந்தப் பயனும் கிடைக்­க­வில்லை எனவும் புஹாரி கூறினார்.

இதே­வேளை, புஹா­ரி­யினால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற காணிக்கு அரு­கி­லுள்ள காணியில் நெற் பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்ட விவ­சா­யி­க­ளான நகீப் மற்றும் சாதீக் ஆகிய இருவர் கடந்த 8ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

தொல்­பொருள் காணியில் நெற் பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரி­லேயே இவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­வேளை, குறித்த குற்­றச்­சாட்டின் கீழ் இன்னும் சிலரை கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில், கடந்த 12ஆம் திகதி சனிக்­கி­ழமை புல்­மோட்டை பிர­தே­சத்­தி­லுள்ள பொன்­மலைக் குடா கிரா­மத்­தி­லுள்ள முஸ்லிம் மைய­வா­டியில் ஜனா­ஸா­வினை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கும் குறித்த தேரர் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார்

பொன்­மலைக் குடா, சபா நகர் மற்றும் வீரந்­தீவு ஆகிய மூன்று கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக சபா ஜும்ஆப் பள்­ளி­வாசல் மற்றும் றிபாய் பள்­ளி­வாசல் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன. இந்த மூன்று கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­யவே இந்த மையா­வ­டியில் காணப்­ப­டு­கின்­றது என பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

1811ஆம் ஆண்டு முதல் இப்­பி­ர­தே­சத்தில் மக்கள் வாழ்ந்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இது­வரை சுமார் ஆறு ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள இந்த மையவா­டி­யினைச் சுற்றி முஸ்லிம் மக்­களே வாழ்ந்து வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த காணியில் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­யக்­கூ­டாது என குறித்த தேரர் தெரி­வித்து வரு­கின்றார். புல்­மோட்டை ஜம்­இய்­யதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் சம்­மேளனம் இந்த விட­யத்தில் தலை­யீட்­டினை மேற்­கொண்­டது.

இதனால் தேரரின் எதிர்ப்­பி­னையும் மீறி, பொலி­ஸாரின் அனு­ம­தி­யுடன் குறித்த ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்பட்டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதற்கு எதி­ராக தேரர் தற்­போது புல்­மோட்டை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இதே­வேளை, “தொல்­பொருள் காணி என்ற பெயரில் எங்­க­ளு­டைய காணி­களை பனா­முரே தில­க­வங்க தேரர் சுவீ­க­ரித்து வரு­கின்றார்” என பத­விய சிறி­புர பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 53 வய­தான ஜீ.ஜீ.எச். ஜய­வீர தெரி­வித்தார்
இங்­குள்ள பிர­தேச மக்­க­ளுக்கும், அரச அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­யாமல் உயர் மட்­டத்­தி­லுள்ள செல்­வாக்­கினைப் பயன்­ப­டுத்தி அவர்­களின் அனு­ம­தி­யு­டனே இது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த சுவீ­க­ரிப்­புக்கு தேவை­யான வர்த்­த­மானி அறி­வித்­தல்­களும் உரிய திணைக்­க­ளங்­க­ளினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இது தொடர்பில் இப்­பி­ர­தேச மக்­க­ளுடன் எந்­த­வித கலந்­து­ரை­யா­டலும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என ஜய­வீர குற்­றஞ்­சாட்­டினார்.

யுத்த நிறை­விற்கு பின்னர் இப்­பி­ர­தே­சத்­திற்கு வந்த தேரர் பன்­சலை அமைக்கும் போர்­வையில் பொது மக்­களின் காணி­களை கொள்­ளை­ய­டித்து அவ­ருக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு வழங்கி வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து பௌத்­தத்­தினை பாது­காக்க வேண்டும் என்று இவர் எழு­தி­யுள்ள புத்­த­கத்தின் ஊடாக பணம் சம்­பா­தித்து வரு­கின்றார். இதன் ஊடாக இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­யினை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக அவர் கூறினார்.

இதனால் இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து குறித்த தேர­ரினை வெளி­யேற்ற வேண்டும். அத்­துடன் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் பாது­காப்பு வாபஸ் பெறப்­பட வேண்டும் என ஜய­வீர கோரிக்கை விடுத்தார்.

புல்­மோட்டை பிர­தே­சத்தில் தற்­போது ஏற்­பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­க­விற்கு கடிதம் எழு­தியதாக தெரி­வித்த அவர், இப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள காணி­க­ளுக்கு 1800ஆம் ஆண்­டி­லி­ருந்து பிரித்­தா­னிய உறுதி காணப்­ப­டு­கின்­றது. எனினும் அடாத்­தாக இப்­ பி­ர­தே­சத்­தி­லுள்ள 82 ஏக்கர் காணி­யினை குறித்த தேரர் அடாத்­தாக பிடித்­துள்ளார் என திரியாய் விவ­சாய சம்­மே­ளத்தின் தலைவர் என். மாணிக்க நட­ராஜா தெரி­வித்தார்.
“குறித்த காணி­களை தேர­ருக்கு விரும்­பிய வெளிப் பிர­தே­ச­த்தவர்­க­ளுக்கு குத்­தகைக்கு வழங்­கி­யுள்ளார். இதனால் இப்­பி­ர­தேச மக்கள் கடு­மை­யாக கஷ்­டப்­ப­டு­கின்­றனர்” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

சங்­கத்­திற்கும் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் தெரி­யாமல் தேரர் பச­ளை­களை பெற்று வரு­கின்றார் எனவும் விவ­சாய சம்­மே­ளத்தின் தலைவர் கூறினார்.

“குறிப்­பிட்ட சில அரச உத்­தி­யோ­கத்­தர்கள் எங்­க­ளுக்கு அநீதி இழைத்­துள்­ளனர். இதற்கு அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். காணி சுவீ­க­ரிப்பின் ஊடாக இன்­னு­மொரு யுத்­தத்­திற்கு இந்தத் தேரர் வழி­ய­மைக்­கின்றார். இதன் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து குறித்த தேரரை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்­டும்” என்று அவர் கோரிக்கை விடுக்­கின்றார்.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தொல்­பொருள் மர­பு­ரி­மை­களை முகாமை செய்­வ­த­ற்கான ஜனா­தி­பதி செய­லணி ஒன்று முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் காலப் பகு­தியில் நிய­மிக்­கப்­பட்­டது.

இந்த குழுவின் உறுப்­பி­ன­ராக அரி­சி­மலை ஆர­ணி­யத்தின் சேனா­ச­னா­தி­பதி பனா­முரே தில­க­வ­ங்ச தேரரும் உறுப்­பி­ன­ராவார். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகா­ணங்­களின் மற­்றும் தமன்­க­டுவ பிர­தே­ச­த்­தின பிர­தம சங்­க­நா­யக்­க­வா­கவும் இவர் செயற்­ப­டு­வ­தாக குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் நிரா­க­ரித்த பனா­முரே தில­க­வ­ங்ச தேரர், சட்ட ரீதி­யா­கவே இக்­கா­ணி­களை விகா­ரை­க­ளுக்­காக பெற்­றுள்ளேன் என்றார்.

“அரிசி மலைப் பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக சமயக் கடமையில் ஈடுபட்டு வருகின்றேன். இங்குள்ள சிலர் காணிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களே எனக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என தேரர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் காணி என்ற அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே தனக்கு கீழுள்ள விகாரைகளுக்கு இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘‘நான் ஒருபோதும் பலாத்காரமாக காணி பிடிக்கவில்லை. கிராம சேவகர், பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஊடாகவே இக்காணிகளை விகாரைகள் பெற்றுள்ளன’’ எனவும் பனாமுரே திலகவங்ச தேரர் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி மலை ஆரணியத்திற்கு முன்பாக உள்ள காணியில் முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்ய வந்த போது நான் தடுத்தேன். இது விகாரைக்கு சொந்தமான காணி என்பதனாலேயே இதனைச் செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு நான் வந்த பின்னர் இந்த காணியில் முதற் தடவையாக நல்லடக்கம் இடம்பெற்றுள்ளது. மயான பூமிக்கு பிரதேச சபையின் அனுமதி அவசியம். எனினும், இந்த காணியினை மயானமாக பயன்படுத்த இதுவரை பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை எனவும் தேரர் கூறினார்.

இங்கு நான் எல்லாப் பணிகளையும் சட்ட ரீதியாகவே செய்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.