ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு

மட்டக்களப்பில் மரம்; திகாமடுல்லயில் மயிலும் தனித்து போட்டி பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் நேரடி களமிறக்கம்

0 58

வேட்பு மனுத்­தாக்­க­லுக்­கான இறுதி தினம் நாளை என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யலை பூர்த்தி செய்­வதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கி­ன்றன. இந்­நி­லையில் முஸ்லிம் கட்­சிகள் பலவும் பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­டணி சேர்ந்தும் சில மாவட்­டங்­களில் தனித்து கள­மி­றங்­க­வுள்­ளன.

அத்­தோடு, பிர­தான கட்­சி­க­ளிலும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் நேர­டி­யா­கவும் போட்­டி­யி­டு­வ­தற்­காக வேட்பு மனுவில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் புதிய முகங்கள் இம்முறை களமிறக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யிலும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி ஊடாக சில மாவட்­டங்­களில் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளனர். அந்­த­வ­கையில், கம்­பஹா மாவட்­டத்தில் முனீர் முழப்பர் மௌல­வியும் கொழும்பு மாவட்­டத்தில் டாக்டர் ரிஷ்வி சாலி ஆகி­யோரும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

அத்­தோடு, கண்டி மாவட்­டத்தில் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த றிபாய் மற்றும் கம்­ப­ளையைச் சேர்ந்த பஸ்மின் ஆகியோர் வேட்­பு­ம­னுவில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் இரு வேட்­பா­ளர்­களும் குரு­நாகல் மாவட்­டத்தில் ஒரு வேட்­பா­ளரும் கள­மி­றங்­க­வுள்­ளனர்.

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அக்­க­ரைப்­பற்றை சேர்ந்த ரமீஸ், சம்­மந்­து­றையைச் சேர்ந்த ரிஷாட் புஹாரி மற்றும் ஒலுவிலை சேர்ந்த சுல்தான் சத்தார், சாய்ந்­த­ம­ருதை சேர்ந்த ஆதம்­பாவா ஆகி­யோரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காத்­தான்­கு­டியை சேர்ந்த பிர்தௌஸ் நளீமி, ஓட்­ட­மா­வ­டியைச் சேர்ந்த நியாஸ் ஹாஜியார் ஆகி­யோரும் போட்­டி­யி­டு­கின்­றனர். அத்­துடன், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூதூரைச் சேர்ந்த சப்ரான், கிண்ணியாவைச் சேர்ந்த ராபிக் ஆகி­யோரும் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்­ளனர்.

ஐக்­கிய மக்கள் சக்தி
இது இவ்­வா­றி­ருக்க ஐக்­கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்­டத்தில் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் ஆகி­யோரும் கேகாலை மாவட்­டத்தில் கபீர் ஹாஷிமும் கண்டி மாவட்­டத்தில் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இம்ரான் மகரூப் போன்றோர் போட்­டி­யி­டு­கின்­றனர். அத்­துடன், களுத்­துறை மாவட்­டத்தில் இப்­திகார் ஜெமீலும் பதுளை, பொலன்­ன­றுவை, இரத்­தி­ன­புரி, மாத்­தளை, காலி மற்றும் மாத்­தறை உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளிலும் தலா ஒவ்­வொரு முஸ்லிம் வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

புதிய ஜன­நா­யக கூட்­டணி
ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யகக் கூட்­ட­ணியில் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள், பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்து வெளி­யே­றிய உறுப்­பி­னர்கள் மற்றும் கடந்த பொதுத் தேர்­தலில் சுயா­தீன வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளித்த பலரும் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

இந்த கூட்­ட­ணியில் தேசிய காங்­கிரஸ் இணைந்து போட்­டி­யி­டு­வ­தாக அக்­கட்­சியின் உப­த­லைவர் உது­மா­லெப்பை தெரி­வித்தார். அம்­பாறை மாவட்­டத்தில் அதன் தலைவர் அதா­வுல்லாஹ் போட்­டி­யி­டு­வ­துடன், மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் கட்சி சார்­பான வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு, இந்த கூட்­ட­ணியில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நஸீர் அஹமட் மற்றும் அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் மட்­டக்­க­ளப்­பிலும் அப்­துல்லாஹ் மஹ்ரூப் திரு­கோ­ண­ம­லை­யிலும், முஸர்ரப் அம்­பா­றை­யிலும் போட்­டி­யி­ட­வுள்­ளனர். மேலும், அநு­ரா­த­பு­ரத்தில் இஷாக் ரகுமான், வன்­னியில் காதர் மஸ்­தானும் போட்­டி­யி­ட­வுள்­ளனர். அஸாத்­சாலி கொழும்­பிலும் ஜெய்­னு­லாப்தீன் லாபிர் ஹாஜியார் கண்­டி­யிலும் போட்­டி­ட­வுள்­ளனர்.

முஸ்லிம் காங்­கிரஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியில் இணைந்து எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்கு முகம் கொடுக்­க­வுள்­ள­தாக அக்­கட்­சியின் செய­லாளர் தெரி­வித்தார். அத்­தோடு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்து போட்­டி­யிட இருப்­ப­தா­கவும் கூறினார்.

கண்டி மாவட்­டத்தில் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீமும் புத்­தளம், திரு­கோ­ண­மலை, திகா­ம­டுல்ல, குரு­நாகல், கம்­பஹா, புத்­தளம் மற்றும் களுத்­துறை மாவட்­டங்­க­ளிலும் மு.கா. வேட்­பா­ளர்கள் ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியின் தொலை­பேசி சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மக்கள் காங்­கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்­பாறை மாவட்டத்­தில தனித்து கள­மி­றங்­க­வுள்­ள­தாக அக்­கட்­சியின் தவி­சாளர் அமீர் அலி தெரி­வித்தார். அத்­தோடு, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, வன்னி, யாழ்., குரு­நாகல் மாவட்­டங்­களில் ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியில் போட்­டி­யி­டு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. மேலும், கண்டி, கொழும்பு மாவட்­டங்­களில் தமது கட்சி வேட்­பா­ள­ருக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், புத்­தளம் மாவட்­டத்தில் கூட்­ட­ணியில் போட்­டி­யி­டு­வதா அல்­லது தனித்து போட்­டி­யி­டு­வதா போட்டியிடுவதா என்ற இழுபறி நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய கட்சிகள்
நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது. அத்­தோடு, சமூக நீதிக்­கட்­சி­யா­னது ஐக்­கிய கூட்­டணி ஊடாக உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளது. அதன் தலைவர் நஜா­மு­ஹம்மத் கொழும்பில் போட்­டி­யி­ட­வுள்ளார்.

அத்­தோடு, புத்­தளம் மற்றும் சம்­மந்­துறை பகு­தி­களில் சுயேட்சை அணி­களை கள­மி­றக்­கு­வது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. எனினும், தற்­போது அதன் செயற்­பா­டுகள் தேக்கமடைந்துள்ளமை அவதானிக்க முடிகிறது.- VIdivelli

Leave A Reply

Your email address will not be published.