முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் சிறந்த வியூகம் எது?

0 62

றிப்தி அலி

நாட்டின் 9ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க தெரி­வு­செய்­யப்­பட்­டதை அடுத்து சிறு­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் அவ­ரு­டைய கட்­சி­யான தேசிய மக்கள் சக்தி பிர­பல்­ய­ம­டைந்­துள்­ளது.

இதனால், எதிர்­வரும் நவம்பர் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்­தியில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தொழி­ல­தி­பர்கள், புத்­தி­ஜீ­விகள், வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் இளை­ஞர்கள் என முஸ்லிம் சமூ­கத்­திலுள்ள பல்­வேறு தரப்­பினரும் தயா­ராகி வரு­கின்­றனர்.

கடந்த செப்­டம்பர் 21ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் மக்­களின் கணி­ச­மான வாக்­குகள் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­விற்கு கிடைத்­துள்­ளதை வாக்களிப்பின் முடிவுகள் காண்பிக்கின்றன. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 2019 மற்றும் 2024 ஜனாதிபதி தேர்தல்களில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வாக்குகளின் ஒப்பீட்டை இங்குள்ள அட்டவணையில் காணலாம்.

குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் போன்ற கட்­சி­களின் கோட்டை என வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற தொகு­தி­களில் அநுர குமார திசா­நா­யக்­க­விற்கு பாரி­ய­ளவில் வாக்­குகள் கிடைத்­துள்­ளன.

இந்த தொகு­தி­களில் கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­ருக்கு கிடைத்த வாக்­கு­களை விட 150, 200 சத­வீத வாக்­குகள் அதி­க­மாக இந்த முறை கிடைத்­துள்­ளன.

இதன் மூலம் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் முஸ்லிம் மக்கள் இல்லை என்ற செய்தி முழு உல­கிற்கும் சொல்­லப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்மை மக்­க­ளுடன் இணைந்து முஸ்லிம் மக்­களும் ஜனா­தி­ப­தியைத் தெரி­வு­செய்­துள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே பாரா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. கடந்த பாரா­ளு­மன்­றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் காணப்­பட்­டனர். இவர்­களில் பெரும்­பா­லா­னோ­ரினால் முஸ்லிம் சமூ­கத்­துக்கோ அல்­லது அவர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்த மக்­க­ளுக்கோ எந்­த­வித நன்­மையும் கிடைக்­க­வில்லை.

குறிப்­பாக ‘விஸ்ஸ எபா’ என்ற லேபலை அணித்­தி­ருந்த தௌபீக் எம்.பி அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்தார். அதே போன்று 20க்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் எம்.பிக்கள் அனை­வரும் பலவந்த ஜனாஸா எரிப்பின் போது வாய்­மூடி மௌனி­யாக இருந்­தனர். இது போன்ற விட­யங்­களை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் இதே எண்­ணிக்­கை­யான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்­களா என்­பது கேள்­விக்­கு­றியாக மாறி­யுள்­ளது. எதிர்க்­கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள பிளவே இதற்­கான பிர­தான கார­ண­மாக உள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகியோர் பெற்ற வாக்­கு­களை இணைத்தால் அநுர குமார திசா­நா­யக்க பெற்ற வாக்­குளை விட அதி­க­மான வாக்­கு­க­ளையே அவர்கள் பெற்­றுள்­ளனர்.
இவர்கள் இரு­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட்டால் ஜனா­தி­ப­தியின் கட்­சிக்கு பாரிய சவா­லாக அமையும். அவ்­வா­றில்­லாமல், எதிர்க்­கட்­சிகள் பல்­வேறு தரப்­புக்­க­ளாக பிரிந்து கேட்டால் தேசிய மக்கள் சக்­தியின் வெற்றி வாய்ப்பே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

இதே நிலை தான் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு, நசீர் அஹமட், அலி சாஹிர் மௌலானா, காதர் மஸ்தான் மற்றும் எஸ்.எம். முஷாரப் எனப் பிரிந்து போட்­டி­யிட்டால் எந்தப் பய­னு­மில்லை. மாறாக முஸ்­லிம்­களின் வாக்­குகள் சிதறும் என்­பது மட்டும் நிச்­சயம்.

இதே­வேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் நீண்ட கால­மாக பேணப்­பட்டு வரு­கின்­ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­களை இல்­லா­ம­லாக்­கவும் சில முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
குறித்த பிர­தே­சங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தினைச் சேர்ந்த புதி­ய­வர்கள் வர வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. ஆனால், புதி­ய­வர்கள் என்ற கோசத்தின் ஊடாக தற்­போ­துள்ள எண்­ணிக்­கையில் மாற்றம் ஏற்­ப­டுத்தக் கூடாது.

அநுர குமார திசா­நா­யக்க ஆட்­சிக்கு வந்­த­வுடன் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைகள் எல்­லா­வாற்­றிற்கும் தீர்வு கிடைத்து விட்­டது என்று அர்த்­த­மல்ல. எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பிரச்­சி­னைகள் ஏற்­படும் போது அதற்காக குரல்­கொ­டுக்கக் கூடி­ய­வர்­களை கட்­டாயம் நாம் பாரா­ளு­மன்றம் அனுப்ப வேண்­டி­யுள்­ளது.

கடந்த காலங்­களில் சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்­டாய ஜனாஸா எரிப்பு, ஈஸ்டர் தற்­கொலை தாக்­குதல், பொரு­ளா­தார நெருக்­கடி போன்ற சம­யங்­களில் சமூகத்திற்காக குரல்­கொ­டுத்­த­மை­யினை ஒரு­போதும் மறக்க முடி­யாது. இதனால் சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடுத்த பாரா­ளு­மன்­றத்­திற்கும் தேவை­யா­க­வுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில்தான் சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் தேசிய மக்கள் சக்தி கள­மி­றங்­க­வுள்­ளது.

இதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் போட்­டி­யி­டு­வ­தற்கு அதிக ஆர்­வத்­தினை வெளி­யிட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இந்த இரண்டு மாகா­ணங்­க­ளிலும் குறைந்தது ஆறு ஆச­னங்­களை அக்­கட்சி எதிர்­பார்க்­கின்­றது. இந்த மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் சிறு­பான்­மை­யினர் செறிந்து வாழும் மாவட்­டங்­களில் சில பிர­தி­நி­தித்­து­வங்­களை பெறவும் அக்­கட்சி முயற்­சித்து வரு­கின்­றது.

இதனால், இம்­மு­றைய ஜனா­தி­பதித் தேர்தல் போன்று பாரா­ளு­மன்றத் தேர்­தலும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ள­துடன் பல­முனைப் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட மாற்றம் போன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிலும் மாற்றம் ஏற்­பட வேண்டும் என இளை­ஞர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். எவ்வாறாயினும், இந்த புதுமுகங்கள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் பொருத்தமானவர்களாக அமைய வேண்டும்.

மாறாக முன்­னைய காலங்­களைப் போன்று பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை சூடாக்­கு­ப­வர்­க­ளாக இருந்தால் மீண்டும் தோல்­வி­ய­டை­வது முஸ்லிம் சமூ­க­மே­யாகும்.

இதனால், தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள அலையில் அள்­ளுண்டு போகாமல் நிதா­ன­மாக சிந்­தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது. இதனால், முஸ்லிம் சமூகத்தினை எதிர்காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள எம்.பிக்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.