வினாத்தாள் கசிந்த விவ­காரம்: புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மீண்டும் நடக்­குமா?

0 60

2024 ஆம் ஆண்­டுக்­கான தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவ­காரம் பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்கள் மற்றும் பெற்­றோர்கள் மத்­தியில் மிகுந்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் இந்த விவ­காரம் தொடர்பில் கடந்த திங்­கட்­கி­ழமை மஹ­ர­க­மவில் உள்ள தேசிய கல்வி நிறு­வ­கத்தின் திட்­ட­மிடல் பிரிவின் பணிப்­பாளர், குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
சந்­தே­க­நபர் கடு­வெல நீதவான் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து, ஒக்­டோபர் 7ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதவான் உத்­த­ர­விட்டார்.

57 வய­து­டைய சந்­தேக நபர் குறித்த வினாத்­தா­ளி­லி­ருந்த பல கேள்­வி­களை வெளியில் கசி­ய­விட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

பரீட்­சையின் வினாத்தாள் கசிந்­துள்­ள­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறப்­பட்­டதை அடுத்து, பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்­த­நி­லையில், முதற்­கட்ட விசா­ரணை அறிக்கை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்­த­நி­லையில், செப்­டெம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்­பெற்ற தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­கான வினாத்தாள் திருத்தும் நட­வ­டிக்­கைகள், தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை மீண்டும் நடத்­து­வதா இல்­லையா என்­பது குறித்து சம்­பந்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் முடி­வுகள் மற்றும் பரிந்­து­ரை­களின் அடிப்­ப­டையில் இந்த முடிவு எடுக்­கப்­படும் என அமைச்சின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் அடங்­கிய மாதிரி வினாத்­தாளை அலவ்வ பிர­தே­சத்தைச் சேர்ந்த ஆசி­ரியர் ஒருவர் சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றி­யதை அடுத்தே இந்த விவ­காரம் வெளியில் தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து பரீட்­சையின் வினாத்­தாளைப் புகைப்­படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாட­சாலை அதி­பரும் ஆறு ஆசி­ரி­யர்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்சை திணைக்­களம் தெரி­வித்­தி­ருந்­தது. இதனை தொடர்ந்தே தற்­போது, மஹ­ர­க­மவில் உள்ள தேசிய கல்வி நிறு­வ­கத்தின் திட்­ட­மிடல் பிரிவின் பணிப்­பாளர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதனிடையே வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த பிரத்தியேக வகுப்பாசிரியர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

குரு­நாகல் பிர­தே­சத்தில் வசிக்கும் 49 வய­து­டைய பிரத்­தி­யேக வகுப்­பா­சி­ரி­யரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த பிரத்­தி­யேக வகுப்­பா­சி­ரியர் சட்­டத்­த­ரணி ஊடாக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தில் முன்­னி­லை­யான போதே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் கடு­வெல நீதவான் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புல­மைப்­ப­ரிசில் வினாத்­தாளில் இருந்து மூன்று வினாக்­களை நீக்கி அனைத்து மாண­வர்­க­ளுக்கும் அந்த மூன்று வினாக்­களின் மதிப்­பெண்­களை சம­மாக வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எனினும் இதற்கு பெற்­றோர்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டனர். கடந்த 18 ஆம் பரீட்சை திணைக்­க­ளத்தின் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து பெற்­றோர்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விவ­காரம் இம்­முறை பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளையும் பெற்­றோர்­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாண­வர்கள் இந்தப் பரீட்­சைக்­காக இரவு பக­லாக கற்றல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த நிலையில் இவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­பட்­டுள்­ளமை விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

இப் பரீட்­சையை மீண்டும் நடாத்­து­வ­தாயின் அது மாண­வர்­க­ளையும் பெற்­றோர்­க­ளையும் ஆசி­ரி­யர்­க­ளையும் சிர­மத்தில் தள்ளும் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இப் பரீட்சை சிறார்­களை கடுமையான மன அழுத்தத்தினுள் தள்ளுவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் பரீட்சையை கல்வி அமைச்சு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் இடம்பெற்றதுடன், 323,879 பரீட்சார்த்திகள் அதில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.