அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட காரணிகள்

0 67

வரக்காமுறையூர் ராசிக்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்

இலங்கை ஜன­நாய சோச­லிஷ குடி­ய­ரசின் ஒன்­தா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் எதிர்­பா­ராத திருப்பு முனை­க­ளோடு நிறைவு பெற்­றி­ருக்­கி­றது. இந்த நாட்­டிலே முதல் தட­வை­யாக மிகவும் அமை­தி­யான முறையில் நடை­பெற்ற ஒரு தேர்­த­லாக இதைப் பார்க்க முடி­கி­றது.

எனினும் இந்த தேர்தல் முடிவு ஏற்­ப­டுத்­திய அதிர்­வ­லை­களும் அதிர்ச்­சி­களும் பழம்­பெரும் அர­சி­யல்­வா­தி­களை ஆட்டம் காண வைத்­தி­ருக்­கி­றது. அர­சி­யலில் ஆழ்ந்த அறிவு ஞானமும், அனு­ப­வமும் பெற்ற எட்­டா­வது ஜனா­தி­ப­தி­யு­டனும் அர­சியல் குடும்ப பின்­ன­ணியில் பிறந்து வளர்ந்து பல்­வேறு மூத்த அர­சியல் தலை­வர்­க­ளோடு ஒன்­றி­ணைந்து பய­ணித்து துறை­சார்ந்த அறிவைப் பெற்­ற­வ­ரு­டனும் போட்­டி­யிட்டு சாதா­ரண ஒருவர் வெற்றி பெறு­வ­தென்­பது ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­ய­தாகும்.

இலங்­கைக்­குள்ளும் வெளி­யேயும் யாரும் இப்­ப­டி­யொரு முடிவை எதிர்­பார்க்­கா­த­போதும் வாக்­காள பெரு­மக்கள் ஒரு­மித்து எடுத்த முடிவு இலங்­கையை புரட்டிப் போட்­டி­ருக்­கி­றது. கடைசி வரை எதிர்வு கூற முடி­யாமல் மக்கள் அனை­வரும் குழம்­பிய நிலை­யில்தான் வாக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. ஆனால் ஒட்­டு­மொத்த மக்­களும் மாற்­றத்தை வேண்­டியே பய­ணித்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை தேர்தல் முடி­வுகள் உணர்த்­தி­விட்­டன. இதையும் தாண்டி இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் மக்­க­ளுக்கும், அர­சியல் கட்­சி­க­ளுக்கும், அர­சியல் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும், இது­வரை ஆட்­சி­செய்த தலை­வர்­க­ளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்­களை போதித்­து­விட்டு சென்­றி­ருக்­கி­றது. அவற்றை ஒவ்­வொன்­றாக தொகுத்து பார்ப்­பதே ஏற்­பு­டை­ய­தாகும்.

இதை­விட இன்­னொரு தெரி­வுக்கு
சந்­தர்ப்பம் இல்­லாமை
இந்த தேர்­த­லிலே போட்­டி­யிட்­ட­வர்­களுள் மூன்று வேட்­பா­ளர்கள் மட்­டுமே பிர­தா­ன­மா­ன­வர்­க­ளாக இருந்­தார்கள். அதில் முத­லா­மவர் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, அடுத்­தவர் சஜித் பிரே­ம­தாஸ, மூன்­றா­ம­வர்தான் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க. இவர்கள் மூவ­ரையும் ஒப்­பு­நோக்­கு­கின்­ற­போது ரணில் விக்­ர­ம­சிங்க ஆழ்ந்த அர­சியல் புல­மையும், அனு­ப­வமும் கொண்­டவர் மாத்­தி­ர­மன்றி இக்­கட்­டான ஒரு சூழ்­நி­லையில் நாட்டை மீட்­டெ­டுத்­தவர். ஆனால் மக்கள் அவரைப் பார்த்­த­தை­விட அவ­ரோடு சுற்றி இருந்­த­வர்­க­ளையே நோக்­கி­னார்கள். அதனால் அவரை நிரா­க­ரித்­தார்கள்.

அதே­போன்று சஜித் பிரே­ம­தாஸ அவர்­களும் நல்­ல­தொரு அர­சியல் பின்­பு­லத்தைக் கொண்­டவர். பல­த­ரப்­பட்ட அர­சியல் ஜாம்­ப­வான்­க­ளோடு பய­ணித்­தவர். அந்த இடத்தில் மக்கள் அவரைப் பார்க்­க­வில்லை. அவ­ரோடு சேர்ந்­தி­ருந்­த­வர்­க­ளைத்தான் பார்த்­தார்கள். இந்த இரு­வ­ருக்கும் வாக்­க­ளித்தால் மீண்டும் நாம் சுரண்­டப்­ப­டுவோம் என்­பதை உணர்ந்து கொண்­டார்கள். இந்­நி­லையில் வேறு தெரி­வொன்று இருக்­க­வில்லை. நலவோ, கெடு­தியோ அது­வ­ரைக்கும் எந்த கொள்ளைக் கூட்­டத்­து­டனும் சக­வாசம் வைக்­காத ஒரே நபர் தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் என்­பதை உணர்ந்த மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளித்­தார்கள். அவர் வெற்­றி­பெற வேண்டும் என வாக்­க­ளித்த மக்­க­ளை­விட தங்கள் வாக்­கு­களை கறை­ப­டி­யாத ஒரு­வ­ருக்கு வழங்க வேண்டும் என்ற சிந்­த­னையில் வாக்­க­ளித்த மக்­களே அதிகம். எனவே நல்­லவர் ஒரு­வரும் கெட்­டவர் நாற்­பது பேரும் சேர்ந்து கூட்­டணி அமைத்து இனியும் இந்த நாட்டு மக்­களை ஏமாற்ற முடி­யாது என்ற பாடத்தை இந்த தேர்தல் போதித்­தி­ருக்­கி­றது.

குடும்ப ஆட்சி, பரம்­பரை
ஆட்­சியை ஏற்­காமை
முன்­னெப்­போதும் இல்­லாத அள­வுக்கு குடும்ப மற்றும் பரம்­பரை ஆட்­சியால் இலங்கை சின்­னா­பின்­னப்­பட்­டி­ருந்­தது. தாம் நாட்டு மக்­களால் நிரா­க­ரிக்­கப்­படும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இன்­னொரு பிர­தான கட்­சியில் சேர்ந்து தனது இருப்பை தக்­க­வைத்துக் கொள்­வது மட்­டு­மல்­லாது தண்­ட­னை­க­ளி­லி­ருந்தும் தப்­பித்­துக்­கொள்ளச் செய்­கி­றார்கள். நல்­ல­வர்­களின் நிழலில் வாழ்ந்­து­கொண்டு தனது வங்­கு­ரோத்து அர­சி­யலை மீள கட்­டி­யெ­ழுப்ப நினைப்­ப­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல அவர்­களை இணைத்­துக்­கொள்ளும் நல்ல அர­சியல் தலை­வர்­க­ளையும் நாம் நிரா­க­ரிப்போம் என்­பதை இந்த தேர்­த­லிலே மக்கள் சொல்­லாமல் சொல்லி இருக்­கி­றார்கள்.

ஊழல்­வா­தி­களை வீட்­டுக்கு அனுப்ப
இலங்கை சுதந்­திரம் அடைந்­த­தி­லி­ருந்து இன்­று­வரை ஊழல் என்ற பொறிக்குள் அகப்­பட்­டி­ருக்­கி­றது. பொதுத் துறை நிர்­வாகம் மேல் மட்­டத்­தி­லி­ருந்து கீழ்­மட்டம் வரை ஊழல்­வா­தி­களால் சூழப்­பட்­டி­ருக்­கி­றது. மேல்­மட்டம் ஊழல் செய்­கின்­ற­போது கீழ் மட்­டத்­தி­லுள்ள ஊழல்­களை ஒழிக்க முடி­யாது. ஊழலை ஒழிப்­ப­தாகச் சொல்லி ஆட்­சிக்கு வரு­ப­வர்கள் அத்­தனை பேரும் அவர்­களின் பாது­கா­வ­லர்­க­ளாக மாறி­வி­டு­கி­றார்கள். இந்த ஊழல் கடைசி கால்­நூற்­றாண்­டிலே இலங்­கையை பெரும் பொரு­ளா­தார சிக்­க­லுக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. எனவே கடைசி சந்­தர்ப்­ப­மாக ஊழ­லற்ற ஒரு தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வதன் மூலம் ஊழல்­வா­தி­க­ளுக்கு ஒரு மரண பயத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார்கள்.

இன­வாத, மத­வாத
அர­சி­ய­லுக்கு எதி­ராக
2015, 2019 ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இன­வாதம் மத­வாதம் முக்­கி­ய­மான கருப் பொரு­ளாக இருந்­தது. ஒரு இனத்தை இன்­னொரு இனத்தின் மீது தூண்­டி­விட்டு அல்­லது பெரும்­பான்மை சுகோ­த­ரர்­களை மூளைச் சல­வைக்கு உட்­ப­டுத்தி வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டிக்கும் மிக மோச­மா­ன­தொரு அர­சியல் கலா­சாரம் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தது. தமது கொள்­கைகள் தோல்வி அடை­கின்­ற­போது இன­வாதம் கையி­லெ­டுக்­கப்­பட்டு ஆட்­சியைப் பிடிக்கும் அநா­க­ரிகம் அண்மைக் காலம் வரை இருந்­தது. ஆனால் இன­வாதம் மத­வாதம் கடந்து சகல இனங்­க­ளையும் இணைக்கும் அவர்கள் அனை­வ­ரையும் சம­மாக மதிக்கும் ஒரு­வரை இனங்­கண்டால் அவரின் பின்­புலம் பார்க்­காது தலை­வ­ராக்­குவோம் என்ற ஒரு செய்­தி­யையும் இந்த ஜனா­தி­பதி தேர்தல் போதித்­தி­ருக்­கி­றது.

ஏமாற்­றமும் துரோ­கமும்
இது­வரை காலமும் நாட்­டுக்கு நல்­லது நடக்கும் என்ற நம்­பிக்­கையில் இரு கட்­சி­க­ளுக்கு அல்­லது அவர்­களின் கூட்­ட­ணி­க­ளுக்கு மக்கள் வாக்­க­ளித்து இருக்­கி­றார்கள். சுமார் எழு­பத்­தைந்து ஆண்­டு­க­ளாக இந்த மக்­க­ளுக்கு ஒரு மூன்­றா­வது தெரி­வுக்கு சந்­தர்ப்பம் இருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒரு வாய்ப்பு உரு­வா­கு­வதை இரண்டு பிர­தான கட்­சி­களும் விரும்­ப­வில்லை. பரம்­ப­ரை­யாக காத்து வந்த கட்­சி­யையும் சின்­னத்­தையும் தூக்கி வீசி­விட்டு புதிய கூட்­ட­ணியைத் தோற்­று­வித்து இரு தரப்­பி­னரே மாறி மாறி ஆட்­சிக்கு வந்­தார்கள். இதனால் மக்­களும் சுல­ப­மாக ஏமாற்­றப்­பட்­டார்கள். மக்கள் தெளிவு பெற்றால் மூன்­றா­வது ஒரு சக்­தியை முத­லா­வது இடத்­திற்கு கொண்­டு­வர முடியும் என்­பதை இந்த தேர்தல் நிரூ­பித்­தி­ருக்­கி­றது.

நாடு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டமை
இலங்கை வள­ம­மிக்க ஒரு நாடு. ஒரு காலத்தில் இலங்­கையை போல் ஆவ­தற்கு கனவு கண்ட சிங்­கப்பூர் இன்று விருத்­தி­ய­டைந்த நிலையில் காணப்­ப­டு­கி­றது. ஆனால் இன்று எமது நாடு பொரு­ளா­தார, கலா­சார ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்த ஒரு நாடாக மாறிச் செல்­கி­றது. நாட்­பு­றமும் கடலால் சூழப்­பட்ட ஒரு நாட்­டி­லி­ருந்து கொண்டு ஒரு மீன் டின்­னுக்கு அடுத்த நாட்­டிலே கையேந்­து­கின்றோம். அந்­த­ள­வுக்கு எமது பொரு­ளா­தாரத் திட்­டங்கள் நலி­வ­டைந்து போயி­ருக்­கின்­றன. இதற்கு பிர­தான காரணம் அர­சியல் ரீதி­யான கொள்­ளை­களே. அபி­வி­ருத்தித் திட்­டங்கள் என்ற பெய­ரிலும் வீதி அபி­ருத்­தித்தி என்ற அடிப்­ப­டை­யிலும் வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கவர்தல் என்ற போர்­வை­யிலும் நாட்டின் சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன. இதன் விளை­வாக பொரு­ளா­தார ரீதியில் இலங்கை பெரும் நெருக்­க­டியை சந்­திந்­தது. இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து தாய் நாட்டை மீட்­டெ­டுத்த ஒரு அர­சியல் ஞானியைக் கூட மக்கள் நிரா­க­ரித்து இருக்­கி­றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவரைச் சூழ்ந்­தி­ருந்த அர­சியல் கொள்ளைக் காரர்­களே அதற்கு காரணம். எனவே கொள்­ளை­ய­டிப்­ப­வர்­களை மட்­டு­மல்ல கொள்­ளை­யர்­களை பாது­காக்க நினைக்கும் அல்­லது அவர்­க­ளுக்கு உதவி செய்யும் அத்­தனை பேரும் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வர்கள் என்­பதை இந்த தேர்தல் தெளி­வாக சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

சம்­பள உயர்வை விட
நாட்டு நலனே உயர்­வா­னது
இந்த தேர்­த­லிலே முன்­னெப்­போதும் இல்­லாத அள­வுக்கு அரச ஊழி­யர்­களின் சம்­பள உயர்­வுக்­கான வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. இறு­தி­யாக இருந்த அமைச்­ச­ரவை சம்­பள உயர்­வுக்­கான அனு­ம­தியை தங்­கு­த­டை­யின்றி வழங்­கி­யி­ருந்­தது. கடந்த காலங்­களில் அரச ஊழி­யர்கள் குறிப்­பாக அதிபர், ஆசி­ரி­யர்கள் சம்­பள முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்­கான கோரிக்­கை­களை முன்­வைத்து வேலை நிறுத்தப் போராட்­டங்­க­ளையும் நடாத்தி இருந்­தார்கள். இந்த நிலையில் பெரும்­பான்­மை­யான அரச ஊழி­யர்கள் தேசிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளித்து அர­ச­துறை மறு­சீ­ர­மைப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

தங்கள் வாழ்­வா­தா­ரத்தைத் தீர்­மா­னிக்கும் சம்­பள உயர்­வை­விட நாட்டில் வாழும் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் நன்மை ஏற்­படும் விதத்தில் பொரு­ளா­தார மாற்றம் ஏற்­பட வேண்டும். கடன் சுமை, விலை­மட்டம் குறைந்து நாடு முழு­மை­யான அபி­வி­ருத்­தியை அடைய வேண்டும் என்ற பரந்த எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்கள். நாங்கள் சம்­ப­ளத்தை விடவும் அதை­விட நாட்டை அபி­வி­ருத்தி நோக்கி முன்­னெ­டுத்துச் செல்லுக் கூடிய ஊழ­லற்ற, இன­வாதம் மத­வாதம் இல்­லாத ஒரு தலை­வரை விரும்­பு­கிறோம் என்­பதை உல­கிற்கு எடுத்துச் சொல்லி இருக்­கி­றார்கள்.

இளைஞர், யுவ­திகள், புத்தி ஜீவிகள் இணைந்தால் எதையும் மாற்­றலாம்
இது­வரை காலமும் இல்­லாத அள­வுக்கு நாட்டின் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் புத்தி ஜீவி­களும் ஒன்­று­பட்டு சிந்­தித்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களின் ஒட்டு மொத்த கருத்­துக்­களை செவி­ம­டுக்­கின்­ற­போது தேசிய மக்கள் சக்­தியின் வெற்­றிக்­காக சிந்­தனை ரீதி­யான ஒரு புரட்­சி­யையும் அர்ப்­ப­ணிப்­பையும் செய்­தி­ருக்­கி­றார்கள். இன­வாத பேச்­சுக்­களால் கவ­ரப்­பட்டு, தூண்­டப்­பட்டு எதிர்த் திசையில் பய­ணித்­த­வர்கள் சரி­யான பாதைக்கு திரும்பி மாற்­றத்­திற்­கான ஒரு தலைமை வேண்டும் என்­பதை உணர்ந்து அதை தீய சக்­தி­க­ளுக்கு உணர்த்­தியும் இருக்­கி­றார்கள். இளை­ஞர்­களும் யுவ­தி­களும் புத்தி ஜீவி­களும் சிந்­தனா சக்­தி­யு­டனும் இதய சுத்­தி­யு­டனும் இணைந்தால் ஒரே நாளில் ஐந்து இலட்­சத்தை ஐம்­பது இலட்­ச­மாக்­கலாம் என்­பதை உலக மக்­க­ளுக்கு உணர்த்தி இருக்­கி­றார்கள்.

சிறு­பான்மை கட்­சி­களின்
தலை­வர்கள்
எமது நாட்­டிலே செயற்­ப­டு­கின்ற சில சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு தமது மக்கள் எப்­போதும் தாம் சொல்­வ­தையே கேட்­பார்கள் என்­ற­தொரு எண்ணம் வேரூன்­றி­யி­ருந்­தது. தொன்று தொட்டு நாங்கள் சொல்­வ­தைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கர்­ஜிப்­பது உண்டு. ஆனால் சில பிர­தே­சங்­களில் இந்த தேர்தல் அதை பொய்­யாக்கி விட்­டது. சிறு­பான்­மை­யினர் செறிந்து வாழு­கின்ற பிர­தே­சங்­களில் அவர்கள் சொல்­வதைக் கேட்­டாலும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் பரந்து வாழு­கின்ற பிர­தே­சங்­களில் அவர்­க­ளது கருத்­துக்கள் எடு­ப­ட­வில்லை என்­பதை இந்த தேர்தல் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. மக்­களை ஏமாற்றி அர­சியல் நாட­க­மாடும் கட்சித் தலை­வர்­க­ளுக்கு இந்த தேர்தல் ஒரு சாட்டை அடி­யாகும்.

இப்­ப­டியே வெவ்­வேறு கோணங்­களில் சிந்­திக்­கின்­ற­போது நடந்து முடிந்த இந்த தேர்­த­லா­னது பல­வேறு பாடங்­களை போதித்­து­விட்டுச் சென்­றி­ருக்­கி­றது. 42 வீத­மான மக்கள் மாறி­னாலும் இன்னும் 58 வீத­மான மக்கள் மாறாமல் இருக்­கி­றார்கள் என்­பதை எடுத்துக் காட்டும் இந்த தேர்தல் இனி இன­வாதம் செல்­லு­ப­டி­யா­காது என்­பதை வலி­யு­றுத்­தி­விட்டு சென்­றி­ருக்­கி­றது. அதே­போன்று 4.3 மில்­லியன் வாக்­கு­களைப் பெற்­ற­வ­ரி­னதும் 2.2 மில்­லியன் வாக்­கு­களைப் பெற்­ற­வ­ரி­னதும் உதவி எப்­போது வேண்­டு­மா­னாலும் தேவைப்­ப­டலாம் என்­ப­தையும் சொல்லி இருக்­கி­றது.

இன்னும் மாகாண ரீதி­யா­கவும் மாவட்ட ரீதி­யா­கவும் மக்கள் பிரிந்தே இருக்­கி­றார்கள். நாடு என வரு­கின்­ற­போது இனம் என்றே சிந்­திக்­கி­றார்கள். இந்­நிலை மாற வேண்­டு­மானால் சகல இனத்­தையும் சம­மாக நடத்­து­கின்ற பார­பட்­ச­மற்ற தலை­மைத்­துவம் ஒன்று தோற்­று­விக்­கப்­படல் வேண்டும். இதை புதிய ஜனா­தி­பதி செய்வார் என 42 வீத­மான மக்கள் நம்­பி­னாலும் 58 வீத­மான மக்கள் அதை நம்­ப­வில்லை. பல்­லினக் கலா­சாரம் ஊடு­ருவி காணப்­படும் இந்த நாட்­டிலே இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்­வையும் சம­வாய்ப்­பு­க­ளையும் புதிய ஜனா­தி­பதி கட்டி எழுப்ப வேண்டும். இன்று தூய்­மை­யான ஒரு மனி­த­ராகப் பார்க்­கப்­படும் புதிய ஜனா­தி­பதி அவர்கள் எமது தாய்த்­திரு நாட்டை தூய்­மைப்­ப­டுத்­துவார் என சகல இன மக்­களும் எதிர்­பார்க்­கின்­றனர்.

ஆனால் இது அவ்­வ­ளவு இல­கு­வா­ன­தொரு பணி­யல்ல. உட­ன­டி­யாக ஒரு பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனக்­கான பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்டும். ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மக்கள் கொடுத்த அதே ஆத­ரவை பொதுத் தேர்­த­லிலும் கொடுப்­பார்­களா? தனித்து ஒரு அர­சாங்­கத்தை தோற்­று­விக்க முடி­யுமா? என்­ப­தெல்லாம் புதிய ஜனா­தி­ப­தியின் முன்னால் இருக்கும் கேள்­வி­க­ளாகும். அது மாத்­தி­ர­மன்றி நாட்டைக் கொள்ளை அடித்­த­வர்கள், தவ­றி­ழைத்­த­வர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்­களா? என்­றெல்லாம் மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கி­றார்கள்.

தேசிய மக்கள் சக்­தி­யினால் தனித்து செயற்­பட்டு இந்த நாட்டை அபி­வி­ருத்­தி­யின்பால் இட்­டுச்­செல்ல முடி­யுமா? அல்­லது ஏனைய கட்­சி­க­ளி­லுள்ள தூய்­மை­யான அர­சி­யல்­வா­தி­க­ளையும் இணைத்துக் கொண்டு பய­ணிக்க வேண்­டுமா என்­ப­தையும் புதிய ஜனா­தி­பதி தீர்­மா­னிக்க வேண்டும். அதே­நேரம் தேசிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளித்­த­வர்கள் அனை­வரும் அந்த கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளல்லர். பல்­வேறு கட்­சி­களில் இருந்து கொண்டே மாற்­றத்தை வேண்டி வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளார்கள். அவர்­களை தக்க வைத்­துக்­கொள்­வ­தோடு புதி­ய­வர்­க­ளையும் கவர்­வ­தி­லேயே தேசிய மக்கள் சக்­தியின் எதிர்­காலம் தங்­கி­யுள்­ளது. இதற்­காக புதிய ஜனா­தி­பதி அவர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த சவால்கள் தொடர்பில் இன்னொரு கட்டுரையில் ஆராய்வோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.