முஸ்லிம் மக்களுக்காக பேசியவர்கள் நாங்களே

ஓட்டமாவடியில் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

0 11

(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நாங்கள் பல்­லா­யிரக் கணக்­கான வீடு­களை அமைத்துக் கொடுத்­துள்ளோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பிற்­பாடு கோட்­டா­பய ஜனா­தி­ப­தி­யானார் அதனால் எங்­களால் ஆரம்­பிக்­கப்­பட்ட வீட்டு திட்டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டன என்று ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிர­ம­தாச தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரேம­தா­சவை ஆத­ரித்து ஓட்­ட­மா­வடி அமீர் அலி விளை­யாட்டு மைதா­னத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசு­கையில்,
நான் உறு­தி­யாக கூற விரும்­பு­கிறேன் எதிர்­வரும் 21 ஆம் திகதி முழு இலங்­கை­யையும் வெல்­லுவோம் வென்­றதன் பின்னர் இந்தப் பகு­தியில் காணப்­ப­டு­கின்ற அனைத்து வீடு­க­ளையும் செய்து தருவோம்.

அது மாத்­தி­ர­மல்ல காணி இல்­லாமல், வீடு இல்­லாமல் காணப்­படும் அனை­வ­ருக்கும் கம் உதாவ திட்­டத்தின் கீழ் வீடுகள் தருவோம் என்­பதை தெரி­வித்துக் கொள்­கின்றேன். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏரா­ள­மான இளை­ஞர்கள் தொழில்­வாய்ப்­பின்றி காணப்­ப­டு­கி­றார்கள்.

ஒவ்­வொரு பிர­தேச செய­ல­கங்கள் தோறும் உற்­பத்தி தொழில் பேட்­டை­களை உரு­வாக்கி இளை­ஞர்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­பினை வழங்கி அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­கான திட்­டங்­களை உரு­வாக்­கி­யுள்ளோம்.
அதன் மூலம் தகவல் தொழி­நுட்பம், ஆங்­கில அறிவு, கணனி மேம்­பாடு போன்­ற­வற்றை உரு­வாக்கி அனைத்து இளை­ஞர்­க­ளுக்கும் வாழ்­வா­தா­ரத்தில் பாரிய புரட்­சியை உண்டு பண்­ணுவோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சுமார் 361 பாட­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் நாங்கள் ஸ்மார்ட் பாட­சா­லை­க­ளாக எதிர்­கா­லத்தில் உரு­வாக்­க­வுள்ளோம்.

அதே­போல, அதி­க­மான வைத்­தி­ய­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன அந்த வைத்­தி­ய­சா­லை­க­ளையும் ஸ்மார்ட் வைத்­தி­ய­சா­லை­க­ளாக ஆக்­க­வுள்ளோம்.
கல்­வியில் ஒரு வித்­தி­யா­சத்தை, புரட்­சியைக் கொண்டு வர­வுள்ளோம். சுகா­தார துறையில் ஒரு மேம்­பாட்டைக் கொண்டு வர­வுள்ளோம்.

பாட­சாலை சமூ­கத்தை நிச்­ச­ய­மாக மேம்­ப­டுத்­துவோம். சுகா­தார துறையில் காணப்­படும் பிரச்­சி­னை­களை நிச்­ச­ய­மாக தீர்த்து வைப்போம்.
இந்த நாட்டில் வாழக்­கூ­டிய இனங்கள், ஜாதிகள், மதங்­களை கடந்து அனைத்து மக்­க­ளையும் நாங்கள் நேசிக்­கின்றோம். கடந்த காலங்­களில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு விரோ­த­மாக பாரிய அநீதி நிகழ்ந்­தது.

கொரோனா உடல்கள் தகனம் செய்­யப்­படும் போது அதற்கு பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் எதிர்ப்பு தெரி­வித்து அது தொடர்­பாக பேசி­ய­வர்கள் ஐக்­கிய மக்கள் சக்­தி­யினர் என்­பதை சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.
அந்தக் கால கட்­டத்தில் ரணில் விக்­ரம சிங்­கவும், அநுர குமார திஸா­நா­ய­கவும் அந்த இடத்தை விட்டு பாய்ந்து சென்று விட்டார்கள். இன்று அவர்கள் இனங்களிடையே ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

இந்த நாட்டில் காணப்படும் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் ஆகிய அனைத்து மக்களுடைய ஒற்றுமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் பாடுபடக் கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.