நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு

0 18

தொழிற்­ப­யிற்சி அதி­கார சபையின் அம்­பாறை மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் கெடு­பி­டி­களை பிர­யோ­கிப்­ப­தா­கவும் மதக் கட­மை­களை நிறை­வேற்ற தடை விதிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டு நிந்­தவூர் மாவட்ட தொழிற்­ப­யிற்சி நிலைய மாண­வர்கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலையில், கல்­வி­ய­மைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவ­சர விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்­துள்ளார்.

இது தொடர்­பாக இன்னும் மூன்று வாரங்­களில் (அதா­வது தேர்­த­லுக்குப் பிறகு) விசா­ரணைக் குழு­வொன்றின் ஊடாக முழு­மை­யான விசா­ரணை நடத்தி அந்த விசா­ரணை அறிக்­கையின் பிர­காரம் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக மாண­வர்­க­ளுக்கும் ஊழி­யர்­க­ளுக்கும் அமைச்சர் வாக்­கு­றுதி அளித்­துள்ளார்.

இந்த கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசல் காசிம், அதி­கார சபை தலைவர் எஸ்.குமார் ராஜ­பக்ச மற்றும் நிந்­தவூர் பெரிய பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஏ.எம்.றஸீன் உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களும் கலந்து கொண்­டனர்.

இவ் அதி­கா­ர­ச­பை­யினால் நிந்­தவூர் மாவட்ட அலு­வ­ல­கத்­திற்கு பிரதிப் பணிப்­பா­ள­ராக அண்­மையில் இடம்­மாற்றம் செய்­யப்­பட்ட பிரதிப் பணிப்­பாளர், மாண­வர்கள் மீது கெடு­பி­டி­களை பிர­யோ­கிப்­ப­தா­கவும் தொழு­கைக்கு பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­வ­தற்கு கூட தடை விதிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டு துண்­டுப்­பி­ர­சுரம் ஒன்று வெளி­யா­கி­யி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து மாண­வர்கள் கடந்த வாரம் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­துடன் குறிப்­பிட்ட அதி­கா­ரியை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­மாறும் கோரி­யி­ருந்­தனர்.

இதே­வேளை, மேற்­படி மேல­தி­கா­ரியின் கடு­மை­யான நிர்­வாகச் செயற்­பா­டு­களால் தாம் மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும், மாவட்­டத்தின் கற்­பித்தல் முன்­னேற்றம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மாவட்­டத்தில் பணி­பு­ரியும் உத்­தி­யோ­கத்­தர்­களும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இந்த அமை­தி­யின்­மை­யை­டுத்து, இது தொடர்­பான உண்மை நிலை­வ­ரத்தை கண்­ட­றி­வ­தற்­காக கல்­வி­ய­மைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த, நிந்­தவூர் மாவட்ட தொழிற்­ப­யிற்சி வளா­கத்­திற்கு வரு­கை­தந்த போதே, 3 வாரங்­களில் தீர்வு தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இவ்­வி­வ­காரம் நிந்­தவூர் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், சமூக நல்­லி­ணக்­கத்தை பேணாத இந்த மேல­தி­கா­ரிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­துக்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் முன்­வைக்­கப்­பட்­டன.

மேலும், இதனைப் பயன்­ப­டுத்தி வேறு தரப்­புகள், தனி­ந­பர்கள் இவ்­வி­ட­யத்தை தமது சுய இலா­பத்­திற்­காக பயன்­ப­டுத்தக் கூடாது எனவும், வாக்­கு­று­தி­ய­ளித்தன் பிர­காரம் தீர்வு தரப்­பட வேண்டும் என்­ப­தையும் சமூக ஆர்­வ­லர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்தப் பின்னணியில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் எனத் தெரியாத சூழலில், கல்வி அமைச்சர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இப்பிரச்சினைக்கு தாம் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மாணவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.