ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மையினரின் வகிபாகமும்

0 16

சாப்தீன் மீரா

இலங்கை அர­சி­யலில் பல்­வேறு திருப்­பங்­களை ஏற்­ப­டுத்தி வரும் ஜனா­தி­பதித் தேர்தல் ஆடு­க­ள­மா­னது, இந்த நாட்டின் வர­லாற்­றிலே என்­று­மில்­லா­த­வாறு மக்கள் மய­மாகி காட்­டாற்று வெள்ளம் போல் கரை புரண்­டோ­டு­கி­றது.
பெரும்­பான்மை இன சகோ­த­ரர்­களின் வாக்­கு­களே தீர்­மானம் மிக்க பிர­தான சக்­தி­யாக திகழ்­கின்ற போதிலும், இம்­முறை தேர்­த­லா­னது மும்­முனைப் போட்­டி­யாக மாறியுள்ளப­டியால், சிறு­பான்மை இன மக்­களின் பங்­க­ளிப்பும் அனு­ச­ர­ணையும் கடந்த காலங்­களை விடவும் அதிக முக்­கி­யத்­துவம் மிக்­க­வை­யாக உள்­ளது.

இந் நிலை­யிலே தான் இந்த நாட்­டிலே வாழு­கின்ற சிறு­பான்மை இன முஸ்­லிம்­களும் சகோ­தர இனத் தமி­ழர்­களும் எவ்­வி­த­மான வகி­பா­கங்­களை எடுத்­துக்­கொள்ளப் போகின்­றனர் என்­பது பற்­றிய அவ­தானம் அர­சியல் அரங்­கிலே உற்று நோக்­கப்­பட்டு வரு­கி­றது.

கடந்த காலங்­க­ளிலே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக திட்­ட­மி­டப்­பட்டு அரங்­கேற்­றப்­பட்டு வந்த இன மோதல்­களும் அட்­டூ­ழி­யங்­களும் அநி­யா­யங்­களும் புறக்­க­ணிப்­பு­களும் விவா­திக்­கப்­பட்டு, அதன் சாதக பாதக நிலை­மைகள் ஆரா­யப்­பட்டு, தீர்­மானம் நிறை­வேற்றும் பட­லங்கள் பல்­வேறு சிறு­பான்மை இனக்­கு­ழு­மங்­க­ளி­னாலும் அல்­லது பல்­வேறு சிறு­பான்மை இனக் கட்­சி­க­ளி­னாலும் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

எது எப்­படி இருப்­பினும், இந்த நாட்­டிலே வாழு­கின்ற சிறு­பான்­மை­யினர் பன்­னெ­டுங்­கா­ல­மாக “இலவு காத்த கிளி போல” எதிர்­பார்த்துக் காத்துக் கொண்­டி­ருந்த கொள்கை, கோட்­பாட்டு உரி­மை­களை இவர்­களில் யார் வென்­றாலும் அள்ளிக் கொடுத்து விடப் போவ­தில்லை என்­பதே பட்­ட­றிவு கற்றுத் தந்த பாட­மாகும்.

இவர்கள் மூவ­ரி­டமும் இன­வாதம் கடு­க­ளவும் இல்­லை­யென இல­குவில் நிரூ­பித்து விட முடி­யாது. அவை ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு கூடிக் குறைந்து இருக்­க­லாமே ஒழிய ஒட்­டு­மொத்த இன­வாதம் இவர்­க­ளது இத­யங்­களில் இல்லை என எவ­ராலும் அறு­தி­யிட்டுக் கூறி­விட முடி­யாது. பர­வா­யில்லை இருக்­கட்டும். எந்த ஒரு மனி­த­னி­டமும் தன் இனத்தின் மீதான பற்று ஆழ்­ம­னதில் இருக்­கத்தான் செய்யும். இருக்­கட்டும்.

அது இனப்­பற்­றாக இருக்கும் வரை பிரச்­சனை இருக்­காது. அதுவே தீவிர இன­வா­த­மாக மாறி அர­சியல் இயந்­தி­ரத்­திற்குள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற பொழுதே இனத்­து­வேஷம் தழைத்­தோங்கி விடு­கி­றது. பின்னர் படிப்­ப­டி­யாக விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்து சிறு­பான்மை இனங்­களைக் குறி வைத்துத் தாக்­கு­வ­தற்­காக கையி­லெ­டுக்கும் ஆயு­த­மாக அது பரி­ண­மிக்­கி­றது. அதுவே, பின்னர் இன முறு­க­லையும் இனப் பிரச்­சி­னை­க­ளையும் நாட்­டிலே தோற்­று­வித்து விடு­கி­றது.

இவ்­வா­றான நாச­கார அர­சியல் சித்து விளை­யாட்­டு­களை அர­சியல் கட்சித் தலை­மை­களின் ஆத­ரவு பெற்ற ஏனைய அணிகள் அல்­லது குழுக்கள் நிறை­வேற்றி வந்­தாலும் அவையும் அந்தத் தலை­மை­களின் தீவி­ர­வாத செயல்­க­ளா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது. கடந்து வந்த பாதை நெடு­கிலும் இவ்­வி­த­மான துரோகச் செயல்­களால் சிறு­பான்­மை­யினர் வதைக்­கப்­பட்­டுள்­ளமை வெள்­ளிடை மலை போல் மக்கள் மனங்­களில் ஊச­லாடிக் கொண்­டுதான் இருக்­கின்­றன.

எனவே, அகக்கண் பார்வை கொண்டு உற்று நோக்கி தொலை நோக்­கு­ணர்வு திற­னு­டை­ய­வர்­க­ளாக சிறு­பான்மை இனத் தலை­மைகள் சிந்­திக்கக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

தற்­போ­தைய நிலை­யிலே இம்­மூ­வ­ரி­ட­மி­ருந்தும் இன­வாத பிர­தி­ப­லிப்­புக்கள் இல்­லை­யா­யினும் அல்­லது குறை­வா­கினும் அல்­லது குறைந்­த­பட்ச இனப்­பற்று மாத்­தி­ரமே காணப்­ப­டு­கி­றது என எடுகோள் கரு­தி­னாலும், எதிர்­கா­லத்தில் இவர்­க­ளது நிலை எவ்­வாறு மாறலாம் என ஊகித்துக் கொண்டு உறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுத்து அந்த வேட்­பா­ளரின் பின்னால் அணி­தி­ரள்­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

ஏனெனில், இன்­றைய கால­கட்­டத்து சமூக அர­சியல் பின்­ன­ணி­யிலே இன­வாத அர­சியல் வெற்றி பெறாது என்­பது தான் தற்­போது தரித்து நிற்கும் அர­சியல் சுற்றுச் சுழற்சி புள்­ளியில் அள­வீடு செய்­யப்­ப­டு­கின்ற கரு­துகோள். இருப்­பினும், இன்னும் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் இன­வாத அர­சி­ய­லில்­லாது வெல்ல முடி­யாது என்ற நிலை தோன்­றலாம். அத­னையே கடந்த 70 ஆண்­டு­கால வர­லா­றுகள் படிப்­பி­னை­யாக எமக்கு எடுத்­துக்­காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.

எனவே, அவ்­வா­றான ஒரு நிலைமை எதிர்­கா­லத்தில் தோன்­று­கின்ற பொழுது ஒருவர் இன­வா­தத்தைத் தொடங்கி அர­சியல் காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பிக்­கின்ற வேளை, மற்­ற­வர்­களும் அதில் பங்கு போட்டுக் கொள்­கின்ற அல்­லது போட்டி போட்டு இன­வாத சவா­ரியில் முந்­திக்­கொள்ள முண்­டி­ய­டிக்­கின்ற நிலைமை தோன்­றலாம். இதுவும் எமக்கு புடம் போடப்­பட்ட வர­லாற்றுப் பாடமே.

எனவே, அவ்­வா­றா­ன­தொரு எதிர்­கால நிலைமை தோன்­று­கின்ற பொழுதும், இன­வாத நிகழ்ச்சி நிரலை அல்­லது தீவிர இன­வாத கொள்­கையை கையி­லெ­டுக்க முற்­பட மாட்­டா­ரெனக் கருதும் ஒரு வேட்­பா­ளரை இனங்­கண்­டு­கொள்ள முடி­யு­மாயின் அதுவே மிக உன்­னத தெரி­வாகும்.

அதனை விடப் பொருத்­த­மான வேறொரு தெரிவு இருக்க முடி­யாது. அதுவே சிறு­பான்­மை­யி­னரின் பாது­காப்பு அர­ணாக நாளை தோற்றம் பெறும். அவ்­வா­றான தலை­மைத்­து­வத்தை இனங்­கண்டு கொண்டு பய­ணிப்­பதே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பயன் மிக்­க­தா­கவும் பாது­காப்புக் கவ­ச­மா­கவும் அமையும்.

அதுவே ஒரு சிறந்த தற்­காப்பு உணர்­தி­ற­னு­டைய அர­சியல் பய­ண­மாகும்.
எனவே, தமிழ் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் சமூக சிந்­த­னை­யா­ளர்­களும் கல்­வி­மான்­களும் புத்­தி­ஜீ­வி­களும் இளைஞர் அணி­யி­னரும் ஓர­ணியில் திரண்டு பாமர மக்­களை வழிப்­ப­டுத்தி ஊழ­லில்­லாத சம­தர்ம தேசமொன்றைக் கட்டி எழுப்ப இன்றே புறப்படுவோம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.