ஜனா­ஸாக்கள் எரிந்த நெருப்பில் குளிர்­காயும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள்

0 145

றிப்தி அலி

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் 16 நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இவ்­வா­றான நிலையில் பிரச்­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் சூடு­பி­டித்­துள்­ளன.
கடந்த 2019 இல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் போது சிறு­பான்­மை­யி­னரை எதி­ரி­க­ளாகக் காண்­பித்தே தேர்தல் பிரச்­சா­ரங்கள் இடம்­பெற்­றன. எனினும், இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இன­வாதம் ஒரு பிர­சாரப் பொரு­ளாக அமை­யா­ததைக் காண­மு­டி­கி­றது. பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் இன­வாதக் கதை­களை இனியும் கேட்­ப­தற்குத் தயா­ரில்லை.

இதனால், பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காணல் மற்றும் ஊழல் மோச­டி­களை இல்­லா­தொ­ழித்தல் போன்ற திட்­டங்­க­ளுக்கே இலங்கை மக்கள் முக்­கி­யத்­துவம் வழங்கி வரு­கின்­றனர்.

அது போன்று, கொரோனா வைரஸ் பரவல் காலப் பகு­தியில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் பல­வந்­த­மாக மேற்­கொள்­ளப்­பட்ட ஜனாஸா எரிப்பு விவ­கா­ரமும் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் தேர்தல் மேடை­களில் முக்­கிய பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

கடந்த வாரங்­களில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகியோர் கிழக்கு மாகா­ணத்­திற்­கான விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். இதன்­போது, கொவிட் தொற்று கார­ண­மாக பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட முஸ்லிம் ஜனா­ஸாக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருந்தார். அதே­வேளை, ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு உடந்­தை­யாக இருந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் அறி­வித்­தி­ருந்தார்.

இதற்கு ஒரு­படி மேல் சென்று, ஜனாஸா எரிப்புத் தொடர்பில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்­க­வுள்­ள­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வு­ட­னான சந்­திப்பின் போது ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராப­ஜ­பக்ஷ நாட்டை விட்டு தப்­பி­யோ­டி­யதை அடுத்து ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யான ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்சிக் காலம் தற்­போது 2 வரு­டங்­களை பூர்த்தி செய்­துள்­ளது. இந்தக் காலப் பகு­தியில் பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு அவ­ரு­டைய அர­சாங்கம் மன்­னிப்புக் கோரி­யதைத் தவிர வேறு எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட அறி­விப்­புக்­க­ளா­கவே நஷ்­ட­ஈடு வழங்கல் மற்றும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்கு நிய­மனம் போன்­ற­வற்­றினை இலங்கை மக்கள் பார்க்­கின்­றனர்.
கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிரச்­சார மேடை­களில் ஈஸ்டர் தற்­கொலை தாக்­குதல் தொடர்­பான முறை­யான வேண்டும் என்ற கோரிக்கை முக்­கிய இடம்­பி­டித்­தி­ருந்­தது.எனினும், கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யா­கிய பின்னர் இந்த விடயம் கிடப்பில் போடப்­பட்­டது. அவர் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்தும் கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை.

இது போன்ற நிலையே பல­வந்த ஜனாஸா எரிப்­புக்கு நீதி வழங்­கு­வ­தாக கூறப்­படும் வாக்­கு­று­தி­க­ளுக்கும் நடக்­குமோ என மக்கள் அங்­க­லாய்­கின்­றனர். பல­வந்த ஜனாஸா எரிப்பின் பின்னால் நின்று முஸ்­லிம்­களைப் பழி­வாங்­கிய ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் தற்­போது ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வாக பிர­சா­ரத்தில் ஈடு­ப­டு­வதும் அவர்­களை மேடையில் வைத்துக் கொண்டே ஜனா­தி­பதி இவ்­வா­றான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வதும் வேடிக்­கை­யாகும்.

இதே­வேளை, ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­ட­வில்லை; ஜனாஸா பெட்­டி­களே எரிக்­கப்­பட்­டன என அக்­காலப் பகு­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த வட மேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் கூறி­யிருந்தார். இந் நிலையில் நசீர் அஹ­மடின் ஏற்­பாட்டில் அவ­ரது சொந்த ஊரான ஏறா­வூரில் இடம்­பெற்ற தேர்தல் பிரச்­சார கூட்­டத்­தி­லேயே பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

அப்­படி என்றால், எரிக்­கப்­பட்ட ஜனா­ஸாக்­க­ளுக்கா அல்­லது எரிக்­கப்­பட்ட ஜனாஸா பெட்­டி­க­ளுக்கா நஷ்­ட­ஈடு வழங்கப் போகி­றார்கள் என்ற கேள்வி மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

இது தொடர்பில் ஏறா­வூரில் இடம்­பெற்ற கூட்­டத்­தி­லேயே குறித்த அர­சி­யல்­வா­தி­க­ளிடம் மக்கள் கேள்வி கேட்­டி­ருக்க வேண்டும். பொய்­களைக் கூறி மக்­களை ஏமாற்றும் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கேள்வி கேட்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக எமது நாட்டு மக்கள் மாற வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

இதே­வேளை, தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள கட­வுச்­சீட்டு நெருக்­க­டிக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி அண்­மையில் பகி­ரங்க மன்­னிப்­பொன்­றினை அர­சாங்கம் சார்பில் கோரி­யி­ருந்தார்.

குறித்த கட­வுச்­சீட்டு விவ­காரம் அமைச்சர் அலி சப்­ரியின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள வெளி­வி­வ­கார அமைச்­சுடன் தொடர்­பு­பட்­ட­தல்ல. இவ்­வா­றான நிலை­யி­லேயே அவ­ரினால் பகி­ரங்க மன்­னிப்பு கோரப்­பட்­டி­ருந்­தது. எனினும், அமைச்சர் அலி சப்ரி அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த காலத்­தி­லேயே பல­வந்த ஜனாஸா எரிப்பு இடம்­பெற்­றது. உண்­மையில் அன்றே அவர் தனது எதிர்ப்பை வெளி­யிட்டு பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தி­ருக்க வேண்டும் அல்­லது அதற்­காக பகி­ரங்க மன்­னிப்­பா­வது கோரி­யி­ருக்க வேண்டும். எனினும் தனது சமூ­கத்தைப் பாதித்த ஒரு விட­யத்­திற்­காக எந்­த­வித மன்­னிப்பும் கோராத அமைச்சர் அலி சப்ரி, திடீ­ரென கட­வுச்­சீட்டு விட­யத்­திற்கு மன்­னிப்புக் கோரி­யுள்­ள­மை­யா­னது அவ­ரது இரட்டை நிலைப்­பாட்­டையே காண்­பிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

இவர் போன்றே, பல­வந்த ஜனாஸா எரிப்பின் போது பெட்டிப் பாம்­பாக அடங்­கி­யி­ருந்து விட்டு இன்று வந்து கபன் துணிப் போராட்­டத்­தினை விமர்ச்­சிக்­கின்றார் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஏ.எல்.எம். அதா­உல்லா.

தர்கா நகர் வன்­முறை முதல் பல­வந்த ஜனாஸா எரிப்பு வரை­யான காலப் பகு­தியில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக இடம்­பெற்ற பல வன்­முறைச் சம்­ப­வங்­களின் போது வாய்­மூடி மௌனி­யாக இருந்­த­துடன் மாத்­தி­ர­மல்­லாமல் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினை ஆத­ரித்து வந்­தமை உல­க­ம­றிந்த உண்­மை­யாகும்.
இவ்­வா­றான நிலையில் கபன் துணிப் போராட்­டத்­தினை கொச்­சைப்­ப­டுத்தும் வித­மாக கடந்த சனிக்­கி­ழமை சம்­மாந்­து­றையில் நடந்த கூட்­டத்தில் முன்னாள் அமைச்சர் அதா­உல்லா உரை­யாற்­றி­யி­ருந்தார்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்­தினை கைவிட்ட சம­யத்தில் இரண்டு சிங்­கள சகோ­த­ரர்கள் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் முன்­வந்து கொழும்பு – 07 பொர­ளை­யி­லுள்ள கனத்தை மயா­னத்தின் வேலி­களில் வெள்ளைத் துணி­களை கட்­டினர். இதுவே நாட­ளா­விய ரீதியில் கபன் துணிப் போராட்­ட­மாக மாறி­யது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு அலி­சாஹிர் மௌலானா இதனை நாட­ளா­விய ரீதியில் கொண்­டு­சென்றார். இதன் ஊடாக பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு எதி­ராக மாற்று சமூ­கத்­த­வர்­களின் ஆத­ரவு கிடைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவற்­றை­யெல்லாம் மறந்­து­விட்டு இன்று வந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அதா­உல்லா தேர்தல் மேடை­களில் வீராப்பு பேசு­கின்றார். பல­வந்த ஜனாஸா எரிப்­பினை மேற்­கொள்ள வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக இருந்த முன்னாள் சுகா­தார அமைச்சர் பவித்ரா தேவி வன்­னி­யா­ராச்சி இன்று யாருடன் இருக்­கின்றார் என்­ப­தா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அதா­உல்­லா­விற்கு தெரி­யுமா?

இவர் போன்றே, முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் ஜனா­தி­ப­தியின் தேர்தல் பிரா­சர மேடை­களில் பொய்­களைக் கூறித் திரி­கின்றார். முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் இவர் முன்­வைத்த 14 கோரிக்­கை­களில் 12க்கு தீர்­வு­களை கிடைத்­துள்­ள­தாக சம்­மாந்­து­றையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் இவர் கூறி­யுள்ளார். ஆனால், தீர்வு கிடைத்த 12 விட­யங்­களை என்­ன­வென்று அவர் கூற மறந்­து­விட்டார். அதே கூட்­டத்தில் பங்­கேற்ற முஸ்லிம் சிவில் அமைப்பின் தலை­வ­ரொ­ருவர், இது முற்­றிலும் பொய் என்­ற­துடன், 14 கோரிக்­கை­களில் ஒன்றும் கூட இன்று வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்றார்.

கொழும்­பினைத் தள­மாகக் கொண்ட அர­சி­யல்­வா­தி­க­ளான அலி சப்ரி மற்றும் அசாத் சாலி ஆகியோர் இது­வரை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வான ஒரு கூட்­டத்­தி­னைக்­கூட கொழும்பில் ஏற்­பாடு செய்­ய­வில்லை.

இவ்­வா­றான நிலையில், ஏனை­ய­வர்­க­ளினால் கிழக்கு மாகா­ணத்தில் ஏற்­பாடு செய்யும் கூட்­டங்­களில் பங்­கேற்று பொய்­களைக் கூறி ஜனா­தி­ப­தி­யிடம் மார்க்ஸ் போடும் பணி­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இவ்­வா­றன நிலை­யி­லேயே நல்­ல­டகம் செய்தல், தகனம் செய்தல் உரிமைச் சட்­ட­மூ­லத்­தினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க அமைச்­ச­ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் பிரகாரம், உயிரிழந்த நபரின் விருப்பத்திற்கேற்ப அவரது உடலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவொரு சிறந்த முயற்சியாகும்.

எப்போதே மேற்கொண்டிருக்க வேண்டிய இந்த விடயத்தினை தற்போதைய தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையானது ஜனாஸா எரிப்பு விவகாரத்தையும் ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் மேடைகளில் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்தத் தேர்தலில் சிறந்த பாடம் புகட்ட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். இல்லாவிடில் மத நம்பிக்கை மற்றும் கொள்கையினை மீறி தங்களின் சுயலாபத்திற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளே பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு துணைபோனதைப் போன்றதொரு நிலமை எதிர்காலத்தில் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இருக்கப் போவதில்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.