மெத்திகா பங்கேற்கவிருந்த நிகழ்வை இரத்துச் செய்வது குறித்து ஆலோசனை

அவரது பெயரை நீக்குவதாக உப வேந்தரும் தெரிவிப்பு

0 43

கிழக்கு பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்கு எதிர்ப்­புகள் எழுந்­ததைத் தொடர்ந்து குறித்த நிகழ்வை இரத்துச் செய்­வது குறித்து பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் ஆலோ­சித்து வரு­வ­தாக தெரிய வரு­கி­றது.

கிழக்கு பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே உரை­யாற்ற அழைக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு சிரேஷ்ட வைத்­தி­யர்­களும் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களும் வேண்­டு­கோள்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். குறிப்­பாக இலங்கை மருத்­து­வர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ருவைஸ் ஹனீபா,யாழ் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி முரளி வல்­லி­பு­ர­னாதன் உட்­பட பலர் இது தொடர்பில் தமது கரி­ச­னையை கிழக்குப் பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே இது தொடர்பில் இன்­றைய தினம் இடம்­பெ­ற­வுள்ள பல்­க­லைக்­க­ழக கவுன்சில் கூட்­டத்தில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இந்­நி­கழ்ச்­சியை இரத்துச் செய்­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதிகம் உள்­ளது எனவும் இதன் ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரான பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஒருவர் தெரி­வித்தார்.

மெத்­திகா விதா­ன­கேவின் பின்­புலம் குறித்து அறி­யாத நிலை­யி­லேயே இந்­நி­கழ்­வுக்கு அவர் அழைக்­கப்­பட்­ட­தா­கவும் தற்­போது அவர் பற்­றிய விப­ரங்கள் கிடைத்­துள்­ளதால் நிகழ்ச்­சியை இரத்துச் செய்­வதே பொருத்­த­மா­னது என ஏற்­பாட்­டா­ளர்கள் கரு­து­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே கலா­நிதி முரளி வல்­லி­பு­ர­னாதன் அனுப்பி மின்­னஞ்­ச­லுக்கு பதி­ல­ளித்­துள்ள கிழக்கப் பல்­க­லைக்­க­ழக உப வேந்தர் பேரா­சி­ரியர் வீ.கன­க­சிங்கம் இது தொடர்பில் இம்­மா­நாட்டை ஏற்­பாடு செய்­துள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தின் விஞ்­ஞான பீடத்­திற்கு தாம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர்கள் இந்­நி­கழ்ச்சி நிர­லி­லி­ருந்து மெத்­தி­காவின் பெயரை நீக்­கு­வார்கள் என தாம் நம்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

எதிர்­வரும் நவம்பர் 28 ஆம் திகதி கிழக்கப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ‘பிராந்­திய சவால்­களை சமா­ளிப்­பதில் விஞ்­ஞான ரீதி­யான அணு­கு­மு­றைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் இதில் சிறப்பு பேச்­சா­ள­ராக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மெத்­திகா விதா­னகே அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இல­ங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் எரிக்­கப்­பட வேண்டும் என்ற ஆதா­ர­மற்ற விஞ்ஞான ஆய்வினை சமர்ப்பித்ததன் மூலம் இது தொடர்பில் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்ட வழிகாட்டல்களைப் புறந்தள்ளவும் காரணமாக அமைந்த மெத்திகா விதானகே இந்நிகழ்வுக்கு அழைக்கப்படக் கூடாது என கல்விச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.